Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெய ஜெயா சரணம் . ஜெயா ஏமாற்றிவிட்டால் குட்டி கரணம்

Featured Replies

அன்பர்களே . எது எப்படியாயினும் சில உண்மைகளை நான் கூற விழைகிறேன்.

1. ஈழ ஆதரவு நிலை அம்மா எடுத்து இருக்காவிட்டாலும் அவர்தான் வெற்றி பெற்று இருப்பார் . ஏனெனில் ஏற்கனவே அங்கே பாமக, மதிமுக இரண்டும் உள்ளது மேலும் மின்சார பிரச்னை அதிகமாக பாய்கின்றது

2. நான் பல முறை சொல்லிவிட்டேன் . இன்றும் சொல்கிறேன் . அம்மா என்றுமே புலிகளை ஆதரித்தது இல்லை . இன்றும் ஆதரிக்க வில்லை . அதை தெளிவாக புரிந்துகொள்ளவும்.

3. ராணுவத்தை அனுப்பி ஈழம் அமைப்பேன் என கூறுகிறார் தவிர புலிகளை ஆதரித்து ஈழம் அமைப்பேன் என கூறவில்லை.

4. நாளை வென்றால் கூட புலிகளை இவர் ஆதரிக்க மாட்டார் . இவரின் கொள்கைப்படி ஈழ எதிர்ப்பு வேறு , புலி எதிர்ப்பு வேறு . இவரின் புலி எதிர்ப்பை ஈழ எதிர்ப்பாக திரித்து விட வேண்டாம் .

5. வென்றபின் ராணுவத்தை அனுப்பி மிச்சம் உள்ள புலிகளை முதலில் அழிப்பேன். பின்னர் ஈழம் அமைப்பேன் என்று கூட கூறுவார். கேட்டுத்தான் ஆக வேண்டும் . வேறு வழியில்லை.

6. பிறரை போல உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டு மாட்டிக்கொள்ளாமல் தெளிவாகவே இருக்கிறார் . இந்திய இறையாண்மை போன்று எழும்பும் கேள்விகளுக்கு கூட உடனே அம்புபோல பதில் வருகிறது .

7. இப்போது இவர் வார்த்தை மாற வாய்ப்புகள் இல்லவே இல்லை . மத்தியில் கூட்டணி அமைக்க வேண்டும் . கலைஞரை கவிழ்க்க வேண்டும் . மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் . உள்ளாட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் . திமுக வை அளிக்க வேண்டும் . பின் ஈழ விவகாரத்தில் பாமக, மதிமுக வுக்கு உள்ள செல்வாக்கை உடைக்க வேண்டும் . சந்தடி சாக்கில் விஜயகாந்த் வளர கூடாது . இன்னும் நிறைய வேலை இவருக்கு உள்ளது . இதற்கு உள்ள ஒரே வழி ஈழ பிரச்னையை விடாது கெட்டியாக பிடிப்பது தான்.

8. ரவிசங்கர் கொடுத்த சிடி பார்த்து மனம் திருந்தினார் . ஆம் இருக்கலாம் . ஒரு நாள் துக்ளக் சோவை அவரிடம் விடுங்கள் . மறுநாள் ஈழத்தில் உள்ள அனைவரும் தீவிரவாதிகள் என்று கூட அறிக்கை விடுவார் . யார் சொல்லியும் கேட்காதோர் சிலர் சொல்லி கேட்பது வழக்கமே .

9. மிக முக்கியமான விஷயம் . இப்படி அம்மாவை பற்றி குழப்பி திமுக வென்று விட்டால் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு கிடைத்த வெற்றி என கூறிக்கொண்டு நேரடியாகவே நம் உறவுகளை குண்டு போட்டு கொல்வார்கள் இதாலிய காங்கிரஸ். நினைவிருக்கட்டும் .

10. ஈழ பிரச்னை தேர்தலில் எதிரொலிக்காது என ஏற்கனவே கலைஞர் கூறியுள்ளார் . இந்த சமயத்தில் அம்மா வெல்லவில்லைஎன்றால் ஈழ விஷயம் பின்னர் தமிழக அரசியலில் பத்தோடு ஒன்றாகி விடும் . ஜாக்கிரதை

துரோகிகளை நம்பினோம் , கயவர்களை நம்பினோம் , பிற இனத்தவர்களை நம்பினோம் , உலகத்தை நம்பினோம் , இந்தியாவை நம்பினோம் , இரோப்பிய நாடுகளை நம்பினோம் , இன்னும் ஒரு முறை இவரையும் நம்புவோம் . வேறு வழியில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்கும் ஒருமுறை முயற்சித்தால் நன்று.

எம்மக்கள் எங்களிடம் உள்ள துரொகிகளினால் தான் இவ்வளவு நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

தற்போது பதவியில் இருக்கிறவருக்கு கவிதை, கேள்வி பதில் மட்டுமே தெரியும்.

சிங்களவன் எப்படி உலகத்தில் உள்ள எல்லோரையும் தன்கையில் போட்டு வைத்திருக்கிறானோ, அதுபோல் நாமும் எம் பலத்தை காட்ட வேண்டும்.

ஒன்று மட்டும் உண்மை

தமிழர்கள் எவ்வளவுதான் வால் பிடித்தாலும் சிங்களவனாக மாற முடியாது மாறவும் விட மாட்டான்.

தமிழ்பைத்தியம், உங்கள் அலசல் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள். என்றாலும் இதுபற்றி கூறுவது என்றால்.. நண்பர் டங்குவார் அண்மைய பதிவு ஒன்றில் எழுதியதை திரும்பவும் இங்கு எழுதுவது நல்லது:

அதாவது, தற்போது தமிழர்கள் கொள்ளிக்கட்டையில் எது நல்லது எது கூடாதது என்று பார்த்துக்கொண்டு இருக்கும் நிலமையில் இருக்கின்றார்கள். இரண்டுமே கொள்ளிக்கட்டைகள்தான். நல்லதாக இருந்தாலும், கூடாததாக இருந்தாலும் இவை தமிழினத்தை எரித்து சாம்பராக்கவே பயன்படப்போகின்றது.

சோனியா தோல்வி அடைந்தால் ஈழத்தில் உடனடி அழிவை தடுத்து நிறுத்தமுடியும். ஜெயா வெற்றி பெற்றால் ஈழத்தில் நீண்டகால அழிவை தடுத்து நிறுத்துவது கடினமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய காலகட்டத்தில் ஜெயலலிதா அம்மையாரை பற்றயும் அவரது பிரகடனங்கள் பற்றயும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது ,தற்போதைய அவரின் பிரகடனத்தை பற்றி நான் கதைக்க விரும்பவில்லை ஆனால் அவரின் முன்னைய செயற்ப்பாடுகள் ஈழத்துக்கு ஈழத்து மக்களுக்கு ஈழத்து போராளிகளுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ஆனால் அன்றைய நிலையில் தமிழகத்தில் தற்போது இருக்கும் ஆதரவு சூழ்நிலை காணப்படவில்லை அத்தோடு அம்மா அவர்கள் தனது அரசியலையும் கவனத்தில் கொள்ளவேண்டும் ஆகவேதான் அவை வெளிப்படுத்தப்படவில்லை ஆனால் இவை எவ்வளவு உண்மை என்று நிச்சயமாக கூறமுடியும் பல காரணங்களால் இன்னும் விளக்கமாக கூறமுடியவில்லை. ஆனால் இவை எல்லாம் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்களால் வெளிக்கொண்டுவரப்படும் அதுவரையும் காத்திருங்கள்.தற்போது கூட ஈழத்துக்கு அம்மா என்ன இதுவரையும் செய்தார் என்று சொல்லி வாக்கு கேட்கமுடியும் ஆனால் அதை அவர் விரும்பவில்லை போல் இருக்கின்றது அதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கல்லாம் அதாவது தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் எழுச்சி தேர்தலை எவ்வளவு பாதிக்கும் என்று யாராலும் உறுதியாக கூறமுடியாது ஆகவே அவர் தான் ஈழத்துக்கு ஆதரவானவர் என்று வெளிக்காட்டிய பின்பும் வெற்றி பெறவில்லை என்றால் அடுத்துவரும் தேர்தல்களில் அது எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பாக போகலாம் ஆகவே அவரின் முன்னெச்சரிக்கையான செயற்பாடு நன்று. தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளில் குறிப்பிடப்படவேன்டியர் இருவர் ஒருவர் நெடுமாறன் ஐயா இவர் வெளிப்படையாக எல்லாவற்ரையும் செய்பவர் அடுத்து ஜெயா அம்மையார் இவர் எல்லாவற்ரையும் மறைமுகமாக செய்பவர்

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய காலகட்டத்தில் ஜெயலலிதா அம்மையாரை பற்றயும் அவரது பிரகடனங்கள் பற்றயும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது ,தற்போதைய அவரின் பிரகடனத்தை பற்றி நான் கதைக்க விரும்பவில்லை ஆனால் அவரின் முன்னைய செயற்ப்பாடுகள் ஈழத்துக்கு ஈழத்து மக்களுக்கு ஈழத்து போராளிகளுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ஆனால் அன்றைய நிலையில் தமிழகத்தில் தற்போது இருக்கும் ஆதரவு சூழ்நிலை காணப்படவில்லை அத்தோடு அம்மா அவர்கள் தனது அரசியலையும் கவனத்தில் கொள்ளவேண்டும் ஆகவேதான் அவை வெளிப்படுத்தப்படவில்லை ஆனால் இவை எவ்வளவு உண்மை என்று நிச்சயமாக கூறமுடியும் பல காரணங்களால் இன்னும் விளக்கமாக கூறமுடியவில்லை. ஆனால் இவை எல்லாம் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்களால் வெளிக்கொண்டுவரப்படும் அதுவரையும் காத்திருங்கள்.தற்போது கூட ஈழத்துக்கு அம்மா என்ன இதுவரையும் செய்தார் என்று சொல்லி வாக்கு கேட்கமுடியும் ஆனால் அதை அவர் விரும்பவில்லை போல் இருக்கின்றது அதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கல்லாம் அதாவது தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் எழுச்சி தேர்தலை எவ்வளவு பாதிக்கும் என்று யாராலும் உறுதியாக கூறமுடியாது ஆகவே அவர் தான் ஈழத்துக்கு ஆதரவானவர் என்று வெளிக்காட்டிய பின்பும் வெற்றி பெறவில்லை என்றால் அடுத்துவரும் தேர்தல்களில் அது எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பாக போகலாம் ஆகவே அவரின் முன்னெச்சரிக்கையான செயற்பாடு நன்று. தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளில் குறிப்பிடப்படவேன்டியர் இருவர் ஒருவர் நெடுமாறன் ஐயா இவர் வெளிப்படையாக எல்லாவற்ரையும் செய்பவர் அடுத்து ஜெயா அம்மையார் இவர் எல்லாவற்ரையும் மறைமுகமாக செய்பவர்

ஒம் மாமா

சரியா சொன்னீங்கள் ...

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.