Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்சவுடன் விருந்துண்டு தமிழர்களின் இன அழிவைக் கொண்டாடிய இந்தியத் தூதுவர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான மற்றும் விடுதலைப்புலிகளுடனான இந்திய - சிறீலங்கா கூட்டுப் போர் முடிவடைந்ததை அடுத்து சிறீலங்காவுக்கு சோனியா காங்கிரஸ் அரசின் பிரதிநிதிகளாகச் சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சிறீலங்கா சிங்கள இனவாதித் தலைவன் மகிந்த ராஜபக்சவை அவனின் இல்லத்தில் சந்தித்து அவனிட்ட அறுசுவை விருந்துண்டு மகிழ்ந்ததுடன் தமிழர்களை போரில் அழித்ததற்கு பாராட்டும் பத்திரமும் வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமன்றி விருந்தின் போது ஊடகங்களுக்கு காட்ட கொசிப்பாக தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கல்.. சுயாட்சி போன்ற விடயங்கள் பேசப்பட்டதாகவும் அதை ராஜபக்ச வலக் காதால் கேட்டு இடக் காதால் வெளிவிட்டுவிட வேண்டும் என்றும் இந்திய தூதர்கள் வினயமாகக் கேட்டுக் கொண்டனராம்.

மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்த இந்த விருந்துபசாரத்தின் போது சிறீலங்கா அரசின் பரிசாக பிரபாகரனின் மரணச்சான்றிதழை இந்திய பிராந்திய வல்லரசிடம் தர உத்தியோகபூர்வமாகக் கேட்கப்பட்டுள்ளதாம்.

செய்தி மூலம்:

ராஜபக்சே-நாராயணன் பேச்சு: பிரபாகரன் மரண சான்றிதழ் கேட்கும் இந்தியா

கொழும்பு: கொழும்பு வந்த இந்தியத் தூதர்களான எம்.கே.நாராயணன், எஸ்.எஸ். மேனன் ஆகியோருக்கு அதிபர் ராஜபக்சே காலை விருந்தளித்து உபசரித்தார். அவருடன், இந்தியத் தூதர்கள் தமிழர்களின் மறு வாழ்வு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையின் பின்னணியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும், வெளியுறவுத்துறை செயலாளர் மேனனும் கொழும்பு சென்றுள்ளனர்.

இன்று காலை அவர்கள் இருவரும் அதிபர்[^] ராஜபக்சேவை அவரது வீட்டிற்கு செனறு சந்தித்தனர். அப்போது ராஜபக்சே இரு இந்தியத் தூதர்களுக்கும் விருந்தளித்தார்.

பின்னர் தமிழர்களின் புனர்வாழ்வு, அதிகாரப்பகிர்வு, சுயாட்சி உள்ளிட்டவை குறித்து விருந்து சாப்பிட்டபடியே மேனனும், நாராயணனும், ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினர்.

அகதிகளாக இருக்கும் தமிழர்களுக்கு என்னென்ன உதவிகளை வழங்க வேண்டும், பாதுகாப்பு[^] நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை நடத்தினார்கள்.

இந்தியா ரூ. 500 கோடி நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளது. அவற்றை தமிழர்களுக்கு வினியோகிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்களாம்.

இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மறு சீரமைப்புக்காக தரும் பெரும் நிதியுதவிக்கும், பிற உதவிகளுக்கும் தாங்கள் நன்றிக் கடன் பட்டிருப்பதாக ராஜபக்சே, நாராயணன், மேனனிடம் தெரிவித்தார்.

மரணச் சான்றிதழ் கேட்கும் இந்தியா:

அதேபோல பிரபாகரன் மரணம் குறித்த மரணச் சான்றிதழ் (டெத் சர்டிபிகேட்) ஒன்றைத் தருமாறும் ராஜபக்சேவிடம் இந்தியத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த சான்றிதழ் தேவைப்படுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளதாம்.

thatstamil.com

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்த இந்த விருந்துபசாரத்தின் போது சிறீலங்கா அரசின் பரிசாக பிரபாகரனின் மரணச்சான்றிதழை இந்திய பிராந்திய வல்லரசிடம் தர உத்தியோகபூர்வமாகக் கேட்கப்பட்டுள்ளதாம்.

மரணச் சான்றிதழ் கேட்கும் இந்தியா:

அதேபோல பிரபாகரன் மரணம் குறித்த மரணச் சான்றிதழ் (டெத் சர்டிபிகேட்) ஒன்றைத் தருமாறும் ராஜபக்சேவிடம் இந்தியத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

சில காலங்களின் பின் தலைவர் பிரபாகரன் மக்கள் மத்தியில் தோன்றும் போது , பொய்ச் சான்றிதழ் மயிந்த தந்து விட்டார் ........, என்று சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கும் முன்னேற்பாட்டுடன் தான் யோனியா சொல்லி தாராயணன் கேட்டிருப்பார் .

இந்த கூறு கெட்ட ஜென்மங்களை நினைத்து அழுவதா , சிரிப்பதா ?

kirukkanunga intha matti malayathanungaolada thollaya poochuda, thalavar sollatum, appuram pathukkalam intha mutta pasangala

  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களுக்கு முன்பு , கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற நாராயணனை ,

பண்டாரநாயக்க நினைவு மண்டபத்திலிருந்து , அவர் படுத்திருந்த விடுதி வரை செல்ல ஒரு வாகனமோ , ஆகக் குறைந்தது ஒரு சைக்கிளோ கொடுக்காமல் .......

பொடி நடையில் வந்து படுத்த நாராயணன் கேட்டவுடன் , சிங்களம் கொடுத்துடுமாக்கும் .

இந்தியாவின் நாத்தம் பிடிச்ச அரசியலில் , எம் உறவுகள் தான் அழிந்து விட்டனர் . :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து வந்துள்ள இந்த இரு நக்கற்பொறுக்கிகளும் சோனியாவின் பழிவாங்கல் திட்டத்தை அமுல்நடத்தி தமிழர்களை இனக்கொலைசெய்வதற்கென்றே அதிகாரம் வழங்கப்பட்டவாகள். இந்தியாவின் இந்த இனக்கொலைத் திட்டத்தை நான் முன்பும் எழுதியபோது யாழ்க் களம் அதை அப்போதைக்கப்போது உடனடியாக அகற்றியபடியே இருந்தது. இப்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இருந்தும் தேசியத்தலைவனின் ஒரு மயிரையும் பிடுங்க முடியவில்லை. அவரது வாரிசையும் நடேசன் புலித்தேவன் உட்பட்ட மாவீரர்களையும் நயவஞ்சகமாகக் கொன்றுள்ளார்கள். ஏழுகோடித் தமிழர்களின் இனமானம் காக்கப் புறப்பட்ட தலைவனைப் பயங்கரவாதியாக்கி அவரைக் கற்பனையில் கொன்று எப்படியாவது ஒரு மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு பைலை மூடிவிடுவதைத்தவிர வேறு வழியில்லை. தமிழனின் பிரவகித்து நிற்கும் விடுதலை நெருப்பை இவர்களால் அழிக்கவேமுடியாது. இப்போது தலைவரைக் கொன்றுவிட்டதாக அண்டப் புழுகு விடும் இவர்கள் தமிழரின் பிரச்சனைக்கு நியாயமான தீர்வைத் தந்தேயாகவேண்டும். அல்லாவிடில் தேசியத் தலைவனின் தலைமையில் மீண்டும் போராட்டம் வெடிக்கும். அதுவரை தலைவனுக்கு ஓய்வுகொடுத்து புலம்பெயர் தேசத்ததிலுள்ள உறவுகள் தொடர்ந்து எம்மண்ணின் மீட்சிக்காகப் போராடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பைலை அவசரமாக மூடி விடுவதற்கு காரணம் வடிவாய் விசாரிக்கப் போனால் பல தலைகள் உருளும்.முதலுக்கே மோசாமாயிடும்.வீரப்பனைக் குளோஸ் பண்ணி பைலைக் குளோஸ் பண்ணின மாதிரி தலைவரைகை; கொலை பண்ணி பைலைக் குளோஸ் பண்ண நினைக்கினம். எவ்வளவோ பண்ணினவை இதைப் பண்ண மாட்டினமா? தலைவரின் அடையாள அட்டை செய்தவைக்கு மரண சான்றிதள் கொடுப்பது பெரிய வேலையா? என்ன செய்யிறதெண்டாலும் நவம்பர் 27 இற்கு முதல் செய்யுங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.