Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை வழக்கை மூடுகிறது இந்திய அரசு!

Featured Replies

ராஜீவ் கொலை வழக்கை மூடுகிறது இந்திய அரசு!

கொழும்பு: பிரபாகரன் ‘கொல்லப்பட்டதாகவும்’, அவரது டிஎன்ஏ மேப்பிங் மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு தயாரித்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளதாகவும், இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவிட இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அதிகாரிககள் எம்கே நாராயணன், மேனன் ஆகியோர் கொழும்பில் அறிவித்துள்ளனர்.

கொழும்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இருவரும் மேலும் கூறியதாவது:

“இலங்கை அரசு பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. அதுகுறித்த டிஎன்ஏ சோதனை அறிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அதிபர் ராஜபக்சே தருவதாகக் கூறியுள்ளார்.

இந்த சான்றிதழ்கள் வந்ததும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவிடுவோம். பிரபாகரன் மீது இந்தியாவில் மேலும் பல வழக்குகள் உள்ளன. அவை அனைத்தையும் முடிக்க இந்த சான்றிதழ்கள் உதவும். அதற்கான நடைமுறைகளை இந்தியா தொடங்கிவிட்டது”, என்று கூறினர் நாராயணன் மற்றும் சிவசங்கர் மேனன்.

வன்னிப் போர்க்களப் பகுதியில் உண்மை நிலையைக் கண்டறிய சர்வதேச பத்திரிகையாளர்களை எப்போது அனுமதிப்பார்கள் என்ற கேள்விக்கு, “அங்கே நிலைமைகளைச் சரிசெய்த பிறகு இலங்கை அரசே அதுகுறித்து அறிவிக்கும்” என்றனர்.

வன்னிப் போர்க்களத்தில் இப்போது ஆயிரக்கணக்கான தமிழர் உடல்கள் சிதைந்தும், குற்றுயிரும் குலையுயிருமாகவும் கிடக்கின்றன. பல கிலோமீட்டா் பரப்பளவுக்கு பிணவாடையும், சிங்கள ராணுவம் வீசிய ரசாயண குண்டுகளின் கோர தாக்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச பார்வையாளர்கள் வருவதற்குள் அங்குள்ள தமிழர் பிணங்களை உருத்தெரியாமல் அழிக்கும் பணியில் மும்முரமாக உள்ளது இலங்கை ராணுவம். இதற்காக புல்டோசர்கள் வைத்து அனைத்தையும் அகற்றும் வேலையில் இறங்கியுள்ளனர் சிங்கள வீரர்கள்.

இவற்றை முடித்த பிறகு ராஜபக்சே அழைக்கும்போதுதான் தமிழர் பகுதிக்கு யாரும் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் மீறி போர்ப் பகுதிக்குச் செல்வோம் என எந்த நாடு கோரினாலும், அங்கு ஏராளமான கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், என்ன நடந்தாலும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் ராணுவம் கூறுவதால், யாரும் போக பயப்படும் நிலை உள்ளது.

ENVAZHI

Edited by BLUE BIRD

சர்வதேச பார்வையாளர்கள் வருவதற்குள் அங்குள்ள தமிழர் பிணங்களை உருத்தெரியாமல் அழிக்கும் பணியில் மும்முரமாக உள்ளது இலங்கை ராணுவம். இதற்காக புல்டோசர்கள் வைத்து அனைத்தையும் அகற்றும் வேலையில் இறங்கியுள்ளனர் சிங்கள வீரர்கள்.

இவர்கள் வீரர்கள் அல்ல...தாயின் இரத்ததினை கூட குடிக்க விரும்பும் காட்டேரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பை மூடிட்டு புலிகள் மீதான தடை எடுங்கள். கோப்பு மூடிய பின்னும் தடையை நீடிக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான கொலையாளிகளுக்கு இப்பதான் நிம்மதி??????????

மானம் கெட்ட வேலை தான் அந்த சிங்கள ராணுவ வீரர்கள் செய்கிறார்கள். கன்னி வெடிகள் என்று பொய் சொல்லி, அங்கே தமிழ் இனத்தையே கூண்டோடு அழிக்கும் பாதகம் நடந்து கொண்டு இருக்கிறது. எங்கள் அரசு, பாகிஸ்தான் தீவிரவாதம், நக்சல் என்ற கோணத்தில் நம் இயக்கத்தை பார்க்க தூண்ட படுகிறார்கள். இதை அரசுக்கு புரிய வைக்க வேண்டிய தமிழ் அரசியல் வா(வியா)திகளோ தன் குடும்பத்திர்காக பதவி பேரம் பேசுகின்றனர். பிறகு எவ்வாறு நமக்கு உரிமை கிடைக்கும்?

மானம்கெட்ட அரசியல் வா(வியா)திகள் ஆட்சியில் இருகோமே என்ற வேதனை உடன் எழுதுகிறேன்.

இந்தியனும்,சிறீ லங்கனும் சுப்பராக தான் ஆட்டம் ஆடுறாங்கப்பா............. (உலக கோமாளி நாடுகளின் பார்வையாளர் பக்கம் இருந்து பார்க்கும் ஒருவன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறப்புச் சான்றிதழ் சிங்களத்தில் எழுதப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாடகங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசுக்கு புலிகளின் தலமைப்பீடமும், அவர்களின் போராட்டமும்தான் இன்றுவரை பிரச்சனையாக இருந்தது என்று யாராவது நம்பினால் அவர்களை என்னவென்று சொல்லி நோக? இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையில் தமிழர் சிங்களவனின் சொல் கேட்டு இருக்க வேண்டும் இல்லையேல் அழிய வேண்டும். புலிகள் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, இதுதான் அதன் நிரந்தர நிலைப்பாடு. இன்று நடந்தது என்னவென்றால், தமிழீழ மக்கள் மேல் சிங்களப் பாசிச அரசால் நடத்தப்பட்டுவந்த கொலைகளுக்கு எதிர்ப்புச் சக்தியாக இருந்த புலிகளியக்கத்தை இந்தியா அழித்துவிட்டது. ஆக தமிழரை எந்த காப்பரணும் இல்லாமல் இன்று சிங்கள அரக்கனிடம் முன்னால் நிறுத்தி அதன் இச்சையைத் தீர்த்துக்கொள்கிறது. அதற்காக புலிகள் மீதான் தடையை நீக்கவேன்டும் என்பதெல்லாம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.