Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப்போர் நடந்த பாதுகாப்பு வலயப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயமே இல்லை:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதியாக உக்கிர மோதல் இடம்பெற்ற பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளதை தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், அப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையே காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக விமானத்தில் சென்றவேளை மோசமாகச் சேதமடைந்த கூடாரங்களையும், கருகிய வாகனங்களையும், மரங்களையும் தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:

தமிழ் மக்களின் துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அவர்கள் அரசின் தலைவர்களுடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய நல்லிணக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்று நாங்கள் கருதுகிறோம்.

இதன்மூலம் மாத்திரமே தமிழ்மக்களினதும், ஏனைய சிறுபான்மையினரினதும் நியாயபூர்வமான அபிலாஷைகளுக்குத் தீர்வு காணலாம்.

வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது

வெற்றியென்பது அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும்.

மோதலால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்தவர்கள் பலரை இழந்த தமிழ்ச் சமூகத்தின் துயரங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இராணுவ வெற்றியென்பது இந்த நாட்டின் வரலாற்றில் தீர்க்கமான விடயமென்பதில் சந்தேகமில்லை.

இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் முடிவுகளே நாடு எப்படி முன்னோக்கி நகரலாம் என்பதை தீர்மானிக்கும்.

மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக கடந்த வியாழக்கிழமை ஹெலிக்கொப்டரில் சென்றவேளை அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதை கண்டோம்.

தரையில் முற்றிலும் எரிந்த நிலையில் வாகனங்கள் காணப்பட்டன. மரங்கள் கருகியிருந்தன. கூடாரங்கள் மோசமாகச் சேதமடைந்திருந்தன.

எங்களால் எந்த மக்களையும் காணமுடியவில்லை. மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் எவற்றையும் முற்றாக காணமுடியாதமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றார்.

நன்றி தமிழ்வின்

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதியாக உக்கிர மோதல் இடம்பெற்ற பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளதை தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், அப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையே காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக விமானத்தில் சென்றவேளை மோசமாகச் சேதமடைந்த கூடாரங்களையும், கருகிய வாகனங்களையும், மரங்களையும் தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:

தமிழ் மக்களின் துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அவர்கள் அரசின் தலைவர்களுடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய நல்லிணக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்று நாங்கள் கருதுகிறோம்.

இதன்மூலம் மாத்திரமே தமிழ்மக்களினதும், ஏனைய சிறுபான்மையினரினதும் நியாயபூர்வமான அபிலாஷைகளுக்குத் தீர்வு காணலாம்.

வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது

வெற்றியென்பது அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும்.

மோதலால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்தவர்கள் பலரை இழந்த தமிழ்ச் சமூகத்தின் துயரங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இராணுவ வெற்றியென்பது இந்த நாட்டின் வரலாற்றில் தீர்க்கமான விடயமென்பதில் சந்தேகமில்லை.

இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் முடிவுகளே நாடு எப்படி முன்னோக்கி நகரலாம் என்பதை தீர்மானிக்கும்.

மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக கடந்த வியாழக்கிழமை ஹெலிக்கொப்டரில் சென்றவேளை அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதை கண்டோம்.

தரையில் முற்றிலும் எரிந்த நிலையில் வாகனங்கள் காணப்பட்டன. மரங்கள் கருகியிருந்தன. கூடாரங்கள் மோசமாகச் சேதமடைந்திருந்தன.

எங்களால் எந்த மக்களையும் காணமுடியவில்லை. மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் எவற்றையும் முற்றாக காணமுடியாதமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றார்.

நன்றி தமிழ்வின்

நிர்வாகத்தின் அறிவிப்பை மேலே பார்க்க

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நீங்கள் அடிச்ச கூத்து தானே

பிறகென்ன

அநியாயச்சாவு எங்கடை சனங்களுக்கு

எத்தனை மாவீரர்கள்

சாமிக்கும் கண்ணில்லாமைப்போச்சு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் விதிகளை மீறிய போரில் போரின் இலக்கை அரசாங்கமானது அடையவில்லை என்பது யதார்த்தம்.

புலிகளை அழிப்பது என்ற பெயரில் மக்களையும் ஒட்டு மொத்தமாக அழித்து தமிழினத்தை முண்டமாக்கி இருக்கின்றார்கள்.

தொடர்ந்து இந்நாடகம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது. பான் கின் மூன் வருகைக்காக தயாரிக்கப்பட்ட முகாமிற்கு அவர் விஜயம் செய்திருப்பார். அவருடைய சொல் வரும்போது பாருங்கள்.

போருக்குரிய விதிகள் புலிகளுக்கே. எமது சார்பான அரசாங்கத்திற்கு அல்ல என்பதைப் போர் நடந்தபோது சர்வதேசத்தின் கண்டனங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளவும்.

61 ஆண்டு காலமாக தமிழனை ஏமாற்றிய சிங்களம் இன்று சர்வதேசத்தையும் ஏமாற்றி தமிழனை இனப்படுகொலை செய்துள்ளது ஏதோ உண்மைதான். (சிலவேளை சர்வதேசம் ஏமாந்ததது போல் நடித்திருக்கவும் கூடும்) காலம் பதில் சொல்லும்.

நண்பன் போல் நடித்து தமிழனின் குரல்வளையை நெருக்கிய எரிக்சொல்கைம் மீண்டும் தலை நுழைக்கின்றான். கவனம்! கவனம்!!

தமிழனுக்காக குரல் கொடுத்தவர்கள் தமிழகமக்களும் மற்றும் தமிழ் மக்களும் தவிர வேறு யாரும் கிடையாது. தமிழன் இன்று தனித்த தனியான ஒரு இனம். தலைவரும் எவருடைய ஆதரவிலும் வளரவில்லை. தமிழன் தனித்துவமான தமிழனாக வாழ பல பரிமாணங்களை முன்னெடுத்துச் செல்வேண்டிய காலகட்டம். எல்லாவற்றையும் விடுத்து அப்பரிமாணத்திற்கு அத்திவாரம் இடுவோம். நடந்தது நடந்து முடிந்தவையாகவும், நடப்பவை நல்லபடியாக அத்திவாரம் இடுவது ஒவ்வொரு தமிழனின் பணியாகும். உங்களை அணுகும் ஒவ்வொருவரையும் எந்த இனத்தவன் ஆனாலும் இனம் கண்டு கதையுங்கள். (எங்கள் பிரச்சனை பற்றி) பணத்திற்கு சோரம் போகாதீர்கள். அழிந்துவிட்ட தமிழ் மக்களை ஈடு செய்ய

தொனை தேவை

நிர்வாகத்தின் அறிவிப்பை மேலே பார்க்க

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்

உண்மையான , யதார்த்தத் தன்மையுடைய செய்திகளுக்கு யாழ் இணையம் அனுமதியளிக்கும் என நம்புகின்றேன் நிழலி.

என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

விஐய்(நம்பியார்) எனும் வில்லனே உண்மையை ஒத்துக்கொண்டிருக்கும்போது... அப்படியான விடயங்கள் எங்களுக்கு நன்மைதான். வரவேற்போம்.

நிர்வாகத்தின் அறிவிப்பை மேலே பார்க்க

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்

ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக விமானத்தில் சென்றவேளை மோசமாகச் சேதமடைந்த கூடாரங்களையும், கருகிய வாகனங்களையும், மரங்களையும் தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:

நாங்கள் கடந்த மூன்று மாதமாக எத்தனையோ கோரிக்கைகளையும் , கண்டன ஊர்வலங்களையும் ஐ.நா.வுக்கு தெரிவித்தும் வெறும் கவலையையை மட்டுமே தெரிவித்து வந்த இவர்கள் இப்போ எல்லாம் முடிந்த பின் விமானத்தில் பார்த்து எமக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை . இனியும் தப்பிய மக்களுக்கு ஆக வேண்டியதை பார்க்கட்டும் , அல்லது வாயை பொத்திக் கொண்டு இருக்கட்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.