Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் பிள்ளையானை வீழ்த்த இலங்கை அரசு,கருணா சதி - வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாண முதல்வரும் பிள்ளையான்குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் இலங்கையில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் இலங்கை அரசின் அமைச்சரும் கருணாகுழுவின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனும் சிங்கள அமைச்சர்கள் சிலரும் இணைந்து பிள்ளையானுக்கு எதிரான திட்டம் தீட்டிய நிலையிலேயே அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் நாட்டில் இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்தி பிள்ளையானின் கட்டுப்பாட்டில் உள்ள அவரது அலுவலகங்களை தமது பொறுப்பில் கொண்டுவர முரளிதரன் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன் அங்கமாக பிள்ளையான் இல்லாத நிலையில் பிள்ளையானின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மட்டக்களப்பு முதல்வர் சிவகிதா பிரபாகரனை தம்முடன் இணையுமாறு மிரட்டி இணையவைத்துள்ளார்.

அத்துடன் பிள்ளையானின் புலனாய்வுத்துறை அலுவலகமாக கருதப்படும் மட்டக்களப்பு ஆரையம்பதி அலுவலகத்தையும் கையகப்படுத்தும் முயற்சியில் முரளிதரன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாகவே அந்த முகாமின் அலுவலக பொறுப்பாளர் நேற்று வியாழக்கிழமை அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து கருணா விலக்கப்பட்டதன் பின்னர் கருணா கிழக்கில் இலங்கை அரசின் துணை ஆயுதப்படையாக நடத்தப்பட்டுவந்ததுடன் அந்த படையின் தளபதியாக பிள்ளையான் செயற்பட்டுவந்தவர்.

இந்த நிலையில் கருணா(அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்) வெளிநாடுக்கு களவாக சென்றபோது அந்த குழுவின் தலைமை பொறுப்பை ஏற்று பிள்ளையான் நடத்திவந்தார்.

இந்த நிலையில் பிள்ளைiயான் அரசாங்க கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் தான் கிழக்கில் தனிக்கட்சியுடன் தனித்தே இயங்கப்போவதாக தெரிவித்துவந்தார்.

இந்த நிலையில் அவரை அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு மகிந்த உட்பட பல்வேறு அமைச்சர்களும் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் அவர் அதனை மறுத்துவந்ததாகவும் பிள்ளையானின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிள்ளைனை கிழக்கில் இருந்து வேறருக்கும் நடவடிக்கைகள் நீண்ட காலத்துக்கு முன்பாகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் ஒரு அங்கமாகவே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் மாணவிகள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவமும் அதனுடன் பிள்ளையானை தொடர்புபடுத்தும் நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு ஆயுதங்களைவும் இலங்கை அரசின் வற்புறுத்தலின் பேரிலேயே பிள்ளையானால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிள்ளையானின் எதிர்காலம் கிழக்கில் கேள்விக்குறியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.paristamil.com/tamilnews/?p=14564

Edited by ஜீவா

வினை விதைத்தவர்களை அறுவடைசெய்யும் காலம் ஆரம்பித்ருக்கிறது..அடுத்தது கரணாதான் காத்திருப்போம்

இந்த கருநாயும் ஒடினால் நலம்

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்து தமது சுயலாபத்துக்காக செயல் பட தொடங்கினார்களோ .......

அன்றே தங்களுக்கும் , தமிழனுக்கும் அழிவை தேடிக் கொடுத்து விட்டார்கள் .

வைக்கல் பட்டறை நாய்கள் .

எப்போ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்து தமது சுயலாபத்துக்காக செயல் பட தொடங்கினார்களோ .......

அன்றே தங்களுக்கும் , தமிழனுக்கும் அழிவை தேடிக் கொடுத்து விட்டார்கள் .

வைக்கல் பட்டறை நாய்கள் .

சிறி,

இப்பத்தான் காட்டிக்கொடுக்கவேண்டிய தேவை குறைவாக உள்ளது இந்த கோடாரிக்காம்புகளின் தேவையும் குறைவாப்போச்சு.

இந்த நிலமையை முன்னமே திட்டமிட்டுத்தான் இந்தைரண்டு கோடரிக்காம்புகளையும் சிங்களவன் தெரிந்தெடுத்தான்.

இப்போது ஒவ்வொன்றாக அழிக்கப்பார்க்கிறன். இந்தக் களுதைப்புலிகள் அழிவதினால் யாருக்குத்தான் வருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்தவர்கள் சிங்களவர்களை காட்டி கொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என சிங்களவர்கள் நிச்சயமாக சிந்திப்பார்கள். ஒரு காலத்தில் இவர்களின் தேவை அரசுக்கு தேவைப்பட்டது. பாவிக்கப்பட்டார்கள். இனி இவர்களால் எந்த பலனும் இல்லை என்பதால் அடித்து விரட்டப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்ப பிள்ளையான்.. அடுத்தது கருணா...

யார் கண்டது இது டக்கிளஸ் தேவானந்தாவின் திட்டமாகவும் இருக்கலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.