Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துணை இராணுவக்குழுக்களுடன் ஒன்றினைந்து உரிமை மீட்பா? -தமிழ் மக்கள் விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தேசியத்தை தொலைத்து அவர்கள் தடம்மாறி பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் தேசியம் பேச விளையும் இராணுவ துணைக்குழுக்களுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூட்டணி சேருவதா? என்று தமிழ் மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் துணை இராணுவக்குழுக்களின் அரசியல் கட்சியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்த தெரிவித்தள்ளார்.

தமிழீழ தேசியத்தை மறந்து சலுகைகளுக்காக விலை போன அரசியல் தலைவர்களுக்கு சற்றும் குறைவானவர்கள் தாம் இல்லை என்பதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அண்மைய நடவடிக்கைகள் இடம் பெறுவதாக தெரிவித்த லண்டனை சேர்ந்த கனகேந்திரன் எனும் தமிழர் இது போரின் போது கொல்லப்பட்ட மக்களுக்கும் வீரச்சாவடைந்த போராளிகளுக்கம் செய்யும் துரோகம் என்றார்.

u1_2_N_Sri_Kantha.jpg

சிறிகாந்தா -ரொலோ அமைப்பின் செயலாளர் -த.தே.கூ யாழ்.பா.உ

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கனேடிய தமிழரான சிவராசா சிவஞானம் என்பவர், நாம் ஒன்று பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளை எப்படி நம்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்துக்கின்றது என்று தெரியவில்லை.

முடிந்தால் வவுனியாவி்ல் புளொட் அமைப்பின் மக்கள் மீதான கெடுபிடிகளை நிறுத்தச் சொல்லி பேச்சு வார்த்தை நடாத்தட்டும் என்று கோபப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் மாநகரசபைத் தேர்தலை அடிப்படையாக கொண்டு செயற்ப்படுவதாக கொழும்பு பத்திரிகைகள சுட்டிக்காட்டியுள்ளநிலையில

Edited by Paravaikal

பறவைகள் அங்கே இருக்கும் மக்களின் நிலமை வேறு,இன்னொரு போரை ஆயுதரீதியாக மேற்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை,நாம் இங்கே வெளிநாடுகளில் இருந்துவிட்டு தமிழ்தேசியம் பேசலாம் ,அங்கே நிலமை வேறு அங்கு சில ராஜதந்திர வேலைகள்

செய்தாத்தான் மீதமிருக்கும் மக்களையாவது காப்பாற்றலாம்,இல்லையெண்டால் உலகிலேயே மிகவும் வறுமையான ,நலிவடைந்த ஒரு சமூகம் வட-கிழக்கில் உருவாகும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லிங்கோ... இது செய்தியாக பார்த்தேன்... போட்டேன்...

அதே நேரம் யாரும் ஆயுதப்போராட்டத்தை நடாத்தும் படி வேண்டவில்லை.! ஆனால் உருப்படியாக ஏதாவது செய்ய சொல்லினம்... அதை புரிஞ்சு கொள்ளுங்க

Edited by Paravaikal

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலையில் தமிழர்கள் இலங்கைத்தீவில் ஒரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமெனில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வோண்டும். அவற்றில் அரசுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்கள், மற்றும் இராணுவப் புலனாய்வுக் குழுக்கள், அதைவிட இலங்கைத்தீவிற்கு வெளியே இருந்து இயங்கும் அன்னியசக்திகள். இவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்து வடக்குக் கிழக்கில் தமிழர்களது அரசியல் அபிலாசைகயை நிறைவேற்றிக்கொள்ள தற்போது தேவைப்படுவது அங்கு தமிழர்தரப்பினிற்கு அரசியல்ரீதியான ஸ்திரத்தன்மையும் பாதுகாப்புமே அதை அடையவேண்டுமாக இருநதால் ஆரம்பத்தில் நாம் ஏற்கனவே கூறிக்கொண்ட மேற்படி எதிர்ப்புக் குழுக்களது சவால்களைச் சமாளிக்க வோண்டும். இல்லையேல் கட்டியிருக்கும் கோமணமும் உருவப்பட்டது போல், தமிழர் மத்தியில் வேலைத்திட்டங்களை செயற்படுத்தமுடியாத நிலை ஏற்படும். முதலில் உலகில் ஓரளவு ஜனநாயகம் பற்றி சிந்திக்கக்கூடியவர்களது கவனத்தை நாம் எம்பக்கம் திருப்பவேண்டுமெனில் எடுத்தேன் கவிழ்த்தேன் எனச்சிந்திக்கக் கூடாது. களயதார்த்தத்தைப் புரிந்து கொண்டு கருத்துக்கள் தெரிவிக்க வேண்டும்.

புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்;டு எதையும் எழுதிவிட்டுப்போகலாம். நடைமுறையில் பல விடையங்களை அணுகும்போது ஏற்படும் தடைகள் மற்றும் பயங்கரங்களை மனதில் கொள்வோம்.

மோட்டுச்சிங்களவன் என நாம் எள்ளிநகையாடிய (நாம் அப்படி நினைத்தது மட்டுமே, ஆனால் அவர்கள் தமிழர் தரப்பு அப்படியே எம்மை நினைத்தபடியே இருக்கட்டும் நாம் புத்திசாலிகளாக இனஅழிப்பிற்கான நடைமுறைகளைக் கையாள்வோமெனக் கூறி அதில் வெற்றியும் பெற்றுவட்டார்கள்) சமூகத்தில் இருந்து வந்த மகிந்த ஆரம்பத்தில் இப்படியான சவால்களை ஜே.வி.பி, சந்திரிகா விசுவாசிகள் போன்றோரிடமிருந்து எதிர்கொண்டிருந்ததையும் பின்பு அச்சவால்களை எப்படி முறியடித்தார் என்பதையும் நாம் பாடமாகக் கொள்ளலாம். தற்போது எமக்கு தமிழர் பிரதேசத்தில் ஒரு களம் தேவை அதை எப்படிப்பெற்றுக்கொள்வது என்பதைப்பற்றியே எமது சிந்தனை.

நாசி முகாம்களில் இருக்கும் இளம்பரிதியோ அன்றேல் தமிழினியோ காலக்கிரமத்தில் வந்து அரசியல் வேலைகளை முன்னெடுக்கக்கூடிய நிலையிலா எமது தேசம் இருக்கின்றது? காலப்போக்கில் அவர்களுக்கு அவ்விடையங்களைக் கவனிக்க வழிசமைத்துக்கொடுப்பதற்கான ஆரம்பமாக இவை இருக்கட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கும் வரையிலும் இரு வேறு துருவங்களாகச் செயல்ப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் துணை ராணுவக் குழுக்களும் ஒன்றுபட்டுச் செயல்ப்படுவதென்றால் ஒரு வழிதான் சாத்தியம். அதாவது இருவரில் ஒருவர் தமது கொள்கைகளை விட்டெறிந்துவிட்டு மற்றவருடன் ஒத்துப்போவது. இதில் துணை ராணுவக்குழுக்கள் இதுவரையிலும் அரசின் வேட்டை நாய்களாகவே வளர்க்கப்பட்டவை, அவை தொடர்ந்தும் அப்படியே வளர்க்கப்படும் அல்லாவிட்டால் அவர்கள் மகிந்தவால் காயடிக்கப்படுவார்கள். ஆகவே அவர்கள் தமது வேட்டைத் தொழிலை கைவிடுவார்கள் என்று நினைப்பது முட்டாள்த்தனம். ஆகவே இங்கே தமது கொள்கைகளை காற்றில் பறக்கவிட அதிக சந்தர்ப்பம் இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே. ஆகவே அவர்கள் அதைத்தான் செய்யப்போகிறார்கள் நினைக்கிறேன். ஏற்கனவே அப்படியிருந்தவர்கள்தானே?! மீண்டும் அவர்களின் பழைய வழிகளுக்குச் செல்வது அவர்களுக்கு அவ்வளவு கடிணமாக இருக்கப்போவதில்லை.

ஆனந்தசங்கரியின் செவ்வியை நேற்றும், சிறீ காந்தாவின் செவ்வியை இன்றும் பீ.பீ.சி தமிழோசை ஒலிபரப்பியதாக எனக்கு ஒருவர் சொன்னார்.

தமிழ்துணைக்குழுக்கள் புலிகளை எதிர்ப்பதற்காக மட்டும் தமிழர்களுக்கு எதிராக துரோகங்களை செய்தார்களா என்று சொல்லமுடியாது. பணவருவாய் / வியாபாரம்தான் மற்றும் பதவி மட்டுமே குறியாக இருந்தால் தொடர்ந்தும் தமிழ்துணைக் குழுக்கள் தமிழ்மக்களிற்கு உருப்படியாக ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பதே உண்மை.

இந்தவகையில் ஆனந்தசங்கரியுடன் கூட்டுச்சேர்வது தாயகத்தில் உள்ள தமிழ்மக்களுக்கு எப்படியான பயன்களை கொண்டுவரும் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா!

சிங்களவன் தமிழ்மக்களுக்கு செய்த கொடுமையை விட இந்த ஒட்டுக்குழுக்கள் செய்தது தான் மிக மிக அதிகம், என்ன இருந்தாலும் தமிழர்களை காப்பாற்ற ஒருவன் இருக்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வழி ஏதும் இல்லை என்ற ஒரே காரணத்தால் பூமாலையை குரங்கின் கையில் கொடுப்பதால் என்ன பயன்? சிதைவததான் முடிவெனில் மானத்தோடு சிதையலாமே?

முகாம்களில் இருக்கும் மக்களின் நிலைமை காட்டி விடுதலையை விற்றுவிடாதீர்கள். அதினிலும் கொடிது இது.......

எந்த வழியில் பார்த்தாலும் மகிந்த சொன்னதுதான் நடக்கப்போகிறது.

த.தே.கூ பே இனி இருக்காதென்று சொன்னானல்லவா? இப்போது அதும் நடைபெறப்போகிறது என்றுதான் நினைக்கிறேன்.

கூட்டணி சேராவிட்டால் துணைக்குளுக்களால் வேட்டையாடப்படுவார்கள்.

சேர்ந்தால் கொள்கையை அது இது என்று எங்கள் சனங்களே தூற்றிவாரும்.

கூட்டமைப்புக்கு யார்தான் காவல்?

நாங்கள் எதுக்கெடுத்தாலும் முடியாது கூடாது நடவாது என்று இருப்பதை விட ஆக்கபூர்வமாக எதையாவது சொன்னால்

அவர்கள் அதை செய்யவசதியாக இருக்கும். இன்றும் எங்களுக்கு இருகும் ஒரே குரல் கூட்டமைப்புத்தான் அதை முடிச்சாத்தான் எங்களுக்கு நிம்மதி.

இந்த உள்ளூராட்ச்சித்தேர்தலில் நாடிபிடிச்சறிவதே சிறந்தது. விரைவில் சிங்கள நாடாளுமன்றத்தேர்தலும் வரவுள்ளதால்

நாமும் சில அரசியல் காய்நகர்த்தல்களை செய்யவேண்டும்.

இதனாலெங்கள் உரிமைகளை வெல்லலாம் என்று நான் சொல்ல வரேல்ல,

குறைஞ்சது எங்களின் பிரதிநிதித்துவமென்றாலும் காப்பாற்றப்படலாம் தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.