Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரு குழுவினர்களிடையே மோதல் இருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்-வெள்ளவத்தை பகுதியில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளவத்தைப் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக வெடித்ததால் இருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் கதிர்காமதேவன் ஜெனிட் நிரோஷன் (வயது 24) மற்றும் மகேந்திரன் சசிதரன் ஆகிய இருவருமே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானவர்களாவர்.

வெள்ளவத்தை33ஆவது ஒழுங்கைப் பகுதியில் வைத்தே மேற்படி இரு குழுவினர் மத்தியிலும் மோதல் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவத்தில் மரணித்த இருவரில் ஒருவர், மோதலை விலக்க எத்தனித்த சமயமே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

இச்சம்பவத்தை அடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த வெள்ளவத்தைப் பொலிஸார் மோதலுடன் தொடர்புடைய இரு இளைஞர்களைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்த கூரிய ஆயுதமொன்றையும் கைப்பற்றியுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

கல்கிஸை பகுதியில் வைத்து மேற்படி குழுவினர் மது அருந்தியுள்ளதாகவும் பின்னர் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதல் வரையில் நீடித்து படுகொலையில் முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது,

வெள்ளவத்தையைச் சேர்ந்த மேற்படி தமிழ் இளைஞர் குழு நேற்றுமுன்தினம் கல்கிஸை பகுதியில் ஒன்றாக மது அருந்தியுள்ளது. அச்சமயம் இவர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு குழுக்களாகப் பிரிந்து சென்றுள்ள அவர்கள் வெள்ளவத்தை ரொக்சி திரையரங்குக்கு அருகில் அமைந்தள்ள உணவகம் ஒன்றில் வைத்து மீண்டும் சந்தித்துள்ளனர்.

உணவகத்துக்குள் வைத்து மீண்டும் இரு குழுக்களுக்கிடையில் தர்க்கம் ஏற்படவே அது மோதலாக மாறியுள்ளது. அதன்போது உணவகத்திலுள்ளவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். பின்னர் அவ்விரு தரப்பினரும் அவ்விடத்திலிருந்து சென்று மீண்டும் வெள்ளவத்தை 33ஆவது ஒழுங்கைப் பகுதியில் சந்தித்து மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஒரு குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூரிய ஆயுதங்களைக் கொண்டு மற்றைய குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு காயமடைந்த மூவரும் களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களில் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றுமொரு இளைஞர் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய இளைஞன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான மரண விசாரணைகள் கல்கிஸை மேலதிக நீதிவான் தர்ஷிகா விமலசிறியினால் நேற்றுக்காலை மேற்கொள்ளப்பட்டது. மரண விசாரணைகளை அடுத்து சடலங்களை பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மோதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வட பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் எனவும் அவர்கள் தற்போது குடும்பம் சகிதம் வெள்ளவத்தையில் தங்கியிருப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதுடன் உரிய விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

http://www.swissmurasam.net/srilanka/15075...3-05-03-54.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா செய்யிறிங்கள்

அந்த பெடியங்கள் இல்லை இதை இங்க கொணந்து போட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூறும் சில விடையம் அனேகமாணோர்க்கு உடன்பாடாகத் தெரியாது எனினும் மனதில் பட்டதை கூறுகிறேன், இதில் கனடா போவதற்கு விருந்து வைத்து இருவர் சாவதற்கு காரணமாக இருந்தாரே அவர் கண்டிக்கப்படவேண்டியவர்.

இவ்விளைஞன் கனடா வந்ததும் தனது வீரப்பிரதாபமாக அங்கிருக்கும் கோஸ்டிகளுக்கு காண்பிக்க இந்த சம்பவத்தை ஒரு தராதரப்பத்திரமாகவே உடனெடுத்து வருவார்.

இவர் எல்லாம் கனடா வந்தும் இதைத்தான் செய்யப் போகிறார் ஆகவே யாராவது கனேடிய தூதரகத்திற்கு அறிவிக்கவும் இவரை உங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முன்பு ஒருதடவைக்கு இரண்டு தடவை ஜோசிக்கச் சொல்லி. பிறகு இலங்கைத்தமிழர் எல்லாம் வன்முறையாளர் என கூறக்கூடாது எனவும் கூறிவிடவும்.

எனது இக் கருத்து பலரை கோவம் கொள்ளச் செய்யும் இருந்தாலும் என்னால் கூறாது இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா...ஓஒஹோஒ நல்லது...நல்ல செயிரியல்.. கனடாக்கு வரேக்கையே இந்த பாடேண்டா..வந்த பிறகு இன்னும் நல்ல இருக்கும்...

அண்ணமார் ..இப்ப இங்க கொஞ்சம் எங்கடை பொடியல் நல்ல பெயரோட சண்ட சச்சரவு கொஞ்சம் குறைஞ்சு முந்திமாரி இல்லாமல் இர்க்கிரான்கள்....நீங்கள் இப்படி வரேக்கை கொஞ்சம் டிகிரி முடிச்சு வந்தா இங்க வந்து மேல்நிலை பட்டம் பெற ஆசைப்படுவியல்...தையவிசெயது கொஞ்சம் ஜோசியுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

களம் மாறிவிட்டது

இனி இதுவெல்லாம் சாதாரணம்

வீரத்தைக்கட்டிப்போடமுடியும

  • கருத்துக்கள உறவுகள்

கேடு வரும் பின்னே ...மதி ........கெட்டு வரும் முன்னே ? பார்ட்டி நல்ல பார்ட்டி தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பணத்தில் நல்ல பையன் நிரோசன் எனது நண்பன்.... இன்று குடி செய்த வேலை அவன் உயிரோடு இல்லை....

பார்ட்டிகள் வழமையானது நடந்ததும் ஒரு துன்ப சம்பவம்... இதற்கு போய் கனடா போகின்ற அந்த இளைஞனை பலிக்கடா ஆக்க வேண்டாம்..

  • கருத்துக்கள உறவுகள்
4835_93752984982_514354982_1940118_701117_n.jpg

நான் கூறும் சில விடையம் அனேகமாணோர்க்கு உடன்பாடாகத் தெரியாது எனினும் மனதில் பட்டதை கூறுகிறேன், இதில் கனடா போவதற்கு விருந்து வைத்து இருவர் சாவதற்கு காரணமாக இருந்தாரே அவர் கண்டிக்கப்படவேண்டியவர்.

இவ்விளைஞன் கனடா வந்ததும் தனது வீரப்பிரதாபமாக அங்கிருக்கும் கோஸ்டிகளுக்கு காண்பிக்க இந்த சம்பவத்தை ஒரு தராதரப்பத்திரமாகவே உடனெடுத்து வருவார்.

இவர் எல்லாம் கனடா வந்தும் இதைத்தான் செய்யப் போகிறார் ஆகவே யாராவது கனேடிய தூதரகத்திற்கு அறிவிக்கவும் இவரை உங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முன்பு ஒருதடவைக்கு இரண்டு தடவை ஜோசிக்கச் சொல்லி. பிறகு இலங்கைத்தமிழர் எல்லாம் வன்முறையாளர் என கூறக்கூடாது எனவும் கூறிவிடவும்.

எனது இக் கருத்து பலரை கோவம் கொள்ளச் செய்யும் இருந்தாலும் என்னால் கூறாது இருக்க முடியாது.

பர்ட்டிக்கள், கேளிகையாட்டங்கள், வெறிக்கூத்துக்கள், சண்டைகள், கொலைகள்,

மனித இனத்தில் இதுவெல்லம் சகஜம்..

தமிழ் பொறாமையை மிஞ்ச ஒண்டுமில்லை.. :)

இவர் எல்லாம் கனடா வந்தும் இதைத்தான் செய்யப் போகிறார் ஆகவே யாராவது கனேடிய தூதரகத்திற்கு அறிவிக்கவும் இவரை உங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முன்பு ஒருதடவைக்கு இரண்டு தடவை ஜோசிக்கச் சொல்லி. பிறகு இலங்கைத்தமிழர் எல்லாம் வன்முறையாளர் என கூறக்கூடாது எனவும் கூறிவிடவும்.

அறியாமைக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு..

அண்ணே!!!!!!!!!!!!!!! வட்டத்தை விட்டு வெளியே வாங்கோ!!!!!!!!!!!!!

நீங்களும் முருங்கைகாய்யை செருகிக்கொண்டு, மத்தாக்களுக்கும் செருகிறத்தை நிப்பாட்டுங்கோ...

குலோபலஷேசனில் சேருங்கோ..

எனது இக் கருத்து பலரை கோவம் கொள்ளச் செய்யும் இருந்தாலும் என்னால் கூறாது இருக்க முடியாது.

தூயவன் என்ன உங்கள் நண்பர்களோ? ஆழ்ந்த அனுதாபங்கள்.

4835_93752984982_514354982_1940118_701117_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை என் நண்பர்கள் அல்ல... இவர்கள் குறித்த அஞ்சலிப்படம் பிரிதொரு இடத்தில் போட்டிருந்தார்கள். அது தான் இணைத்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.