Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களை முற்றாக ஒழிக்க இலங்கை அரசு இரகசிய சதி: திரா. கழ. தலைவர் கி. வீரமணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசு ஈழத் தமிழர்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து கொடுமைப்படுத்தும் நிலை தொடர்கதையாகி வருகிறது. தமிழர்களை அடியோடு கொல்ல ராஜபக்ச அரசு சதித் திட்டம் தீட்டுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசுக்கே இலங்கை அரசு சவால் விடும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இதை இந்திய அரசு உணர வேண்டும். ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட முதல்வர் கலைஞர் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் தமிழர்கள் ஓரணியில் நிற்பது காலத்தின் கட்டாயம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

கண்ணீர் விட்டு அழச் செய்கிறது

இலங்கையில் போர் முடிந்து உள்நாட்டுத் தமிழர்களுடன் தான் போர் வெளிநாடுகளுடன் அல்ல ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது.

ஆனால், போரில் சிங்கள இராணுவம் விஷ வாயு, கொத்துக் குண்டுகளைப் போட்டு அழித்துக் கொன்ற தமிழர்கள் போக, எஞ்சியுள்ள எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் இன்னமும் ஏதிலிகளாக, சொந்த மண்ணிலேயே சோற்றுக்குப் பரிதவித்து, முட்கம்பி வேலிக்குள் ஆடுமாடுகளைவிடக் கேவலமான கொடுமையின் கோரத் தாண்டவத்தில் பிடிபட்டு நித்தம் வேதனையால், வெட்கத்தால், அவமானத்தால், செத்தொழிந்து வரும் செய்தி எம்மை இரத்தக் கண்ணீர் விட்டு அழச் செய்கிறது.

பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை

நேற்றும் முன்னாளும் வரும் செய்திகள் நிலைமை, நாளுக்கு நாள் மேலும் மோசமாகி வருகிறது என்பதையே சொல்கின்றன! அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தி ஆஸ்திரேலியா என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி நம்மை வெந்தணலில் தள்ளி வேக வைக்கிறது!

புல்மோட்டையில் உள்ள அகதிகள் முகாமில் பெண்களை அதிகாரிகளே, கட்டாய விபச்சாரத்தில் தள்ளுகின்றனர். இதுபற்றி மேலதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு போகப்பட்டது; ஆனால் அவர்கள் இதன்மீது எந்த நடவடிக்-கையும் எடுக்கவே இல்லை!

விடுதலைப் புலிகள் என சந்தேகித்து

அகதிகள் முகாம்களில் உள்ள ஒவ்வொரு கூடாரத்திலும் 3 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறுகிய இடத்தில் 3 குடும்பங்கள் தங்கி இருப்பதால் ஒருவருக்கொருவர் இடையூறாக உள்ளது. முகாம்களில் உள்ள குடும்பத்தினர் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் என சந்தேகப்படும் ஆண்களும், பெண்களும் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களைப்பற்றிய எந்த விவரங்களும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அவர்களை அழைத்துச் சென்றதற்கான அடையாளச் சீட்டு போன்றவைகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறு அவுஸ்திரேலியா ஏடு கூறுகிறது.

அதிர்ச்சியூட்டக் கூடிய இரு செய்திகள்

1.சிறைக் கைதிகளைவிட மோசமான நிலையில், ஆடு மாடுகளை அடைத்துள்ள பட்டிகளைப் போல் தற்போது முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் தமிழர்கள் அந்நாட்டுக் குடி மக்கள். அவர்களது இரத்தமும் வியர்வையும் தாம் இலங்கையை வளங்கொழிக்கும் நாடாக ஆக்கின.

அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்களை ஏதோ போர்க் கைதிகள் போல அடைத்து வைத்ததோடு அம்முகாம்களை நிரந்தரமாக்கிட, சுவர்கள் எழுப்பும் இரகசியமான கட்டுமானப் பணிகள் மூலம் நிரந்தரமாகவே அவர்களை அடைத்து அழித்துவிட திட்டம் தீட்டுகிறதாம் இலங்கையின் ராஜபக்ச அரசு.

பலர் பைத்தியமாகி விட்டனர்

மன அழுத்தத்தால் பைத்தியம் பிடித்தவர்கள் போல பலர் ஆளாகிவிட்ட பரிதாபநிலை அங்கு தொடர்கதையாகி வருகிறது. முகாம்களில் உள்ளவர்களை விரைவில் அவரவர்கள் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பிட வேண்டும் என்று நமது இந்திய அரசு, இலங்கை அரசுக்கு கண்டிப்புடன் கூறியதே அது என்னவாயிற்று? இதுபற்றிக் கவலைப்படாமல் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற நிலைதான் தொடர்கிறது.

இந்திய அரசுக்கு சவால் விடும் நிலையில் இலங்கை

அதுமட்டுமா? இந்திய அரசுக்கே சவால் விடும் நிலைக்கு இலங்கை அரசு வந்து விட்டது.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம, சீன நாட்டுக்கு 5 நாள் பயணமாகச் சென்று பீஜிங்கில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கை அரசுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சீனாதான் உதவியாக இருந்தது. எங்களுக்கு எல்லாவித ஒத்துழைப்பும் கொடுப்பது சீனா மட்டும்தான். சீனா மட்டும்தான் எங்களுக்கு வாழ்நாள் நண்பனாக உள்ளது வேறு எந்த நாடும் அப்படி இல்லை. என தெரிவித்துள்ளார்.

இதை சுவர் எழுத்துகளாக, இலங்கைக்கு உதவிய இந்தியப் பேரரசு, மத்திய அரசு படித்துப் பாடம் பெற்றால் ஒழிய, உருவாகும் பெரும் ஆபத்தினை தடுத்திட இயலாத நிலை ஏற்படும்.

செயத்தக்க செய்யாமையானும் கெடும் என்ற வள்ளுவனின் வாய் மொழியை நன்கு உணர வேண்டும்

முதல்வர் பின்னால் ஒரே அணி காலத்தின் கட்டாயம்

மனிதநேயமுள்ள உலக நாடுகளை (இந்திய அரசு உட்பட) வற்புறுத்தி அழுத்தம் கொடுத்து முகாம்களில் முடக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வற்புறுத்திட வேண்டும்.

வணங்காமண் கப்பலின் பொருள்களை வற்புறுத்தி அனுப்பி வைத்து, ஈழத் தமிழர்கள்பால் தனக்குள்ள கவலை, இனமான அடிப்படையிலானது, இயல்பானது. தேர்தல் அரசியலை வைத்து திடீரென முளைத்துக் கிளம்பி, பிறகு காணாமற் போகும் உணர்வு அல்ல.

நிரந்தரமானது என்பதை சட்டமன்றத்திலும் உணர்த்திய நமது முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர் முயற்சியாக, ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு தகுந்த வழி காண, மத்திய அரசினை வற்புறுத்திடும் வகையில் அவர்களுக்குத் தோன்றும் எல்லா வழிகளையும் திறந்து நிற்க வேண்டுகிறோம். என கூறப்பட்டுள்ளது.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

போடாங்....கொய்யாலை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களை முற்றாக ஒழிக்க இலங்கை அரசு இரகசிய சதி: திரா. கழ. தலைவர் கி. வீரமணி

அட நாசமறுப்பு இந்த விசயம் இவ்வளவுகாலமும் எங்களுக்கு தெரியாமல் போச்சுது

ஓரிரு நாட்களுக்கு முன் தீபம் தொலைக்காட்சியில் சுப வீரபாண்டியன், சில நாட்களுக்கு முன் தொல் திருமாவளவன் ஆகியோரின் சில பேச்சை கேட்கக்கூடியதாக இருந்தது. என்னா ..... கதைக்கிறார்கள்???? இவ்வளவு காலமும் இவர்களை உலகெல்லாம் தூக்கிச் சென்றோம் !!! இவர்களை போன்றவர்களை நம்பித்தான் இன்று எமக்கு இந்த நிலை!!!

இனியும் இவர்கள் போன்றோரின் நகைச்சுவக்காகவோ/ வயிற்று பிழைப்புக்காகனதோ பேச்சுக்களை தலை மீது தூக்கி திரிவோம்!!! ஏன் தெரியுமோ ...... உலகத்திலேயே வடிகட்டிய முட்டாள்கள் நாங்கள்!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தில் வயிற்றுப்பிழைப்புக்காக அரசியல் நடத்துபவர்களும், பதிவிக்காக அரசியலில் இருப்பவர்களின் கூட்டம் தான் ஐ. நா. தொடங்கி சகல சாடுகளிலும் இருக்கின்றது. என்பது இலங்கையில் தமிழர்கள் வகை தொகையாகக் கொல்லப்பட்டபோது தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிட்ட கதையாய் உலகமெல்லாம் இருந்தது. மொத்தத்தில் மனிதநேயம் உள்ளவர்கள் எவரும் அரசியலிலோ ஆட்சியிலோ இல்லை என்பதற்கு இந்த ஒரு சான்று போதும். இருந்தும் யுத்தம் முடிந்தபின் தமிழ்மக்களை இடைத்தங்கல் முகாம்களில் வைத்து துன்புறுத்தியும் கொன்றும் வரும் இலங்கை அரசிற்கு இன்றும் உலக அரசியாலாளர்கள் உணர்வுப+ர்வமாக அவர்களை வெர்கள் வாழ்விடங்களுக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லவில்லை. சாட்டிற்கு சொல்லிக்கொண்டு உள்ளார்வமாக இலங்கை அரசாங்கத்தின் செயலுக்கு ஆதரவு கொடுக்கின்ற ஓரு நிலைதான் இப்பவும் உள்ளது. ஒரு சில் மனிhநேய அமைப்புக்கள் எண்மையாகக் கத்துகின்றனவே தவிர செயற்பாட்டில் எதுவும் இல்லை.

6 கோடி தமிழர் எங்களைக் கைவிடமாட்டார்கள் என்று ஈழத்தமிழன் கனவு கண்டான். சிங்களவன் குறைந்த தொகையாக உலகத்தில் இருந்தும் தமிழனை உதைத்துவிட்டான். 6 கோடி தமிழனையும் நம்பித்தான் ஈழத்தமின் கெட்டான். 6 கோடி தமிழனுக்கே ஒரு வெட்கம் இல்iலா? வருங்கால போராட்டம் அப்படி இருக்காது. யாரை நம்பவேண்டும் யாரை நம்பக்கூடாது என்பதில் பெரிய ஒரு கல்வியைத் ஈழதமிழன் கற்றுக்கொண்டான்

முதலில் உந்த திராவிடர் கழகமே பைத்தியக்காரத்தனம். யார் திராவிடர். மலையாளியும், கர்நாடககாரனும் திராவிடன் என்ற சொல்லை பாவிப்பதில்லை.

இந்த தமிழ் பெக்கோக்கள் தான் தமிழனை தமிழனாக சிந்திக்க விடாமல் திராவிடன் என்று பேய்க்காட்டுதுகள்...

வீரமணி யார் ஆட்சியோ அங்கு கூசா தூக்கி தனது திராவிட கழக கஜானாவை நிரப்பிறதுதான் வேலை.

கருநாநிதியால் தமிழர் அழிக்கப்பட்டார்கள் அவன் தான் காரணம்.

கோயில்மணி முதலில் திராவிடர் கழகத்தை தமிழர் கழகம் எண்டு மாற்றி தமிழக தமிழ் அழிகிறதை காப்பாத்துங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரிரு நாட்களுக்கு முன் தீபம் தொலைக்காட்சியில் சுப வீரபாண்டியன், சில நாட்களுக்கு முன் தொல் திருமாவளவன் ஆகியோரின் சில பேச்சை கேட்கக்கூடியதாக இருந்தது. என்னா ..... கதைக்கிறார்கள்???? இவ்வளவு காலமும் இவர்களை உலகெல்லாம் தூக்கிச் சென்றோம் !!! இவர்களை போன்றவர்களை நம்பித்தான் இன்று எமக்கு இந்த நிலை!!!

/quote]

என்னா சொன்னார்கள் ??? கொஞ்சம் விலாவாரியா சொல்லுங்களேன்.. நாங்களும் தெரிஞ்சு வைச்சிருப்போம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.