Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்க் கூலி...

Featured Replies

தமிழ்க் கூலி..

தம்பி என்ன நடத்து போறீயள் வாங்கோ நான் கொண்டு போய் உங்கட முகாமிலை விடுகிறன்... வளியில் போன ஒருவர் தானாக முன்வந்து தனது உந்துறுளியில் கொண்டு செண்று விட முன் வருகிறார்... அந்த போராளிக்கும் அவர் அடிக்கடி காணும் பழகிய முகம் தான்... அனேகமான தமிழர்களின் கட்டுப்பாட்டு பிரதேசங்களின் நடக்கும் வழக்கமான நிகள்வு தான் இது...

இல்லை அண்ணை பறவாய் இல்லை பக்கம் தானே நான் நடந்து போகின்றேன்...

சாச்சா எனக்கு ஒரு கஸ்ரமும் இல்லை நீங்கள் ஏறுங்கோ தம்பி.. நான் போற வளிதான்... வேற வளி இல்லாமல் அந்த போராளியும் உந்துறுளியில் ஏறிக்கொள்கிறார்...

தம்பி நீங்கள் எங்களுக்காக எவ்வளவு கஸ்ரப்படுகிறீயள் உங்களுக்காக இது கூட செய்ய இல்லை எண்டால் தமிழனாக இருக்கிறதிலை அர்த்தமே இல்லை பாருங்கோ... உந்துருளியை ஓட்டிகொண்டே அவர் சொல்வது போராளிக்கு கேட்க்கிறது...

அவரை பற்றி சொல்ல வேணும் அவர் ஒரு வியாபாரி.. தென்பகுதியில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு பொருட்களை கொண்டு வந்து இறக்கும் ஒருவர்... அவர் வரும் வேளைகளில் எல்லாம் போராளிகளோடு ஒட்டி உறவாடுவது அவருக்கு பிடித்தமான வேலை எண்றே சொல்லலாம்..

தம்பி இதுதானே உங்களின் முகாம் கேட்டு கொண்டே வண்டியை நிறுத்துகிறார்... ஓம் அண்னை சொல்லி கொண்டே போராளியும் இறங்கி கொள்கிறார்...

உங்கட பொறுப்பாளருக்கு தேவையான பற்ரறிகள் கொண்டு வந்து குடுக்கிறது நான் தான் அவரை நான் சுகம் விசாரித்தாக சொல்லி விடுங்கள் எண்று அவர் சொல்ல அதை கேட்டு தலையாட்டுகிறார் போராளி... அவரும் போய் விடுகிறார்.. நல்ல மனுசன் மனதுக்குள் நினைக்கிறார் போராளி...

மற்றும் ஒரு நாள் வேறு இடம் அதே நபர் அதே போராளி...

தம்பி எங்க துலைக்கே... ஓம் அண்ணை இண்டைக்கு கொஞ்சம் தூரம் போக வேணும் சைக்கிளை ஒட்ட குடுத்தனான் அதுதான் பாத்து கொண்டு நிக்கிறன்... அதாலை என்ன தம்பி வாங்கோ நானும் உங்களோடை வாறன் திருப்பி கொண்டு வந்து விட்டு விடுறன்... இப்ப போராளிக்கு எந்த தயக்கமும் இல்லை ஏறிக்கொள்கிறார்...

என்ன தம்பி பழைய செருப்போடை திரியுறியள்... என்ர வீட்டில உங்களுக்கு அளவான சப்பாத்து இருக்குது போற வளி தானே வாங்கோ எடுத்து தாறன்... இல்லை அண்ணை வேண்டாம் எனக்கு செருப்புதான் வசதி உடனேயே மறுக்கிறார் போராளி... ஆனாலும் அவரை பற்றி நல்ல ஒரு அபிப்பிராயம் மட்டும் போராளியின் மனதுக்குள் தோண்றி விடுகிறது...

என்ன தம்பி கன காலமாக காணம் எங்கை போய் இருந்தீர்கள்...?? அக்கறையாக விசாரிக்க ஆரம்பிக்கிறார் அவர்... இங்கை பக்கதிலைதான் ஒரு விசயமாக போய் இருந்தேன் பட்டும் படாமலும் பதில் சொல்கிறார் போராளி...

என்ன ஆனையிறவு பக்கமாக ஒரே வெடிச்சத்தமாக இருக்கு என்ன விசயம் எங்கட பிள்ளையளுக்கு ஏதாவது ஏதாவது சேதமோ....?? அக்கறையாக அவர் விசாரிக்கிறார்... " இல்லை அண்ணை அவன் சும்மா கண்டு போட்டு அடிச்சவனாம்"... அவரை நல்லவர் எண்று நினைத்து ஒரு பெறுமதியான தகவலை தன்னை அறியாமல் உதிர்த்து விடுகிறார் போராளி...

(வேவு)போராளிகளின் கண்காணிப்பில் அந்த முகாம் இருப்பதை அவர் போராளிகள் தரப்பினூடாக தகவலை உறுதிப்படுத்தி கொள்கிறார்... தகவலை அவர் வியாபாரத்துக்கு போகும் தேவை யான இடத்துக்கு கூலிக்காக கடத்தி விடுவார்... இலகுவானதுதான் அவருக்கு...

அடுத்த சில நாட்களாக ஆனையிறவை சுற்றி வேவு விமான பறப்புக்களும் ஆள் நடமாட்ட பகுதிகளில் குண்டு வீச்சுக்களும் வேவு போராளிகளின் மீதான பதுங்கி தாக்குதல்களும் இராணுவத்தால் தீவிரப்படுத்த பட்டு இருந்தன.... பல இழப்புக்களும் நிகள்ந்தன..

xxxxxxx

- ஒரு உண்மைச்சம்மபவத்தின் சில சம்பவங்களையும் இடத்தினையும் மாற்றி உள்ளேன் - .

[ எங்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு பல புல்லுருவிகள் இருந்தார்கள் இருக்கிறார்கள் அவர்கள் எப்படி எல்லாம் செய்ற்பட்டார்கள் என்பதை புரிய வைக்க வேண்டிய காலமும் தேவையும் எங்களுக்குள் நிறைந்து இருக்கிறது... அந்த நபர் சிறிது காலங்க்களில் புலிகளால் கைது செய்ய பட்டு விசாரணையில் சொன்னவைகள் அந்த அணிகளுக்கு அறிவுறுத்தல்களாக வழங்கப்பட்டு தவறுகள் சீர் செய்ய பட்டன]

Edited by தயா

இதாவது பரவாயில்லை. தாயகத்தில போராளிகளை ஊடுறுவும்போது எப்படியாவது மாட்டுப்பட வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் இங்கு மக்களுடன் மக்களாக வெளிநாடுகளில் சனங்களுக்குள் ஊடுறுவி கைவரிசையை காட்டினால் ஒன்றும் செய்ய இயலாது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி நம்பி ஏமாந்தது நம் இனம். ..........நமக்கு சாதகமாக் ஏதும் செய்வார்கள் என்று .......இனியாவது எம்மை நாமே நம்பி எமக்காக

நாம் உழைப்போம்.கதை பகிர்வுக்கு நன்றி தயா ........

  • தொடங்கியவர்

இதாவது பரவாயில்லை. தாயகத்தில போராளிகளை ஊடுறுவும்போது எப்படியாவது மாட்டுப்பட வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் இங்கு மக்களுடன் மக்களாக வெளிநாடுகளில் சனங்களுக்குள் ஊடுறுவி கைவரிசையை காட்டினால் ஒன்றும் செய்ய இயலாது.

தகவல் கசிவினால் ஏற்படும் இழப்புக்களின் அளவை தெரிந்த போராளிகளையே அன்பை ஆயுதமாக காட்டி தகவல்கலை கறப்பதில் எங்களது தமிழர்களே ஈடு பட்டு முதுகில் குத்து கிறார்கள் எண்றால் சாததரணமான பொது மக்களை எந்த அளவுக்கு குழப்பி அடிப்பார்கள்...

நோக்கம் ஒண்று தான்.. உளவாளிகளில் பல தமிழர்கள் தான் அபாயமானவர்களாக இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதை எம்மவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவது ....

புலனாய்வாளர்களின் செயற்பாடுகளை அறிந்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் எழுதி ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும்... நாங்கள் இருக்கும் இக்கட்டான நிலையில் இது தேவையும் கூட ...

இப்போதைய சிங்களவனின் நோக்கம் தமிழரின் கவனத்தை வேறு திசைகளில் சிதறடிப்பதாகவும் அவர்களுக்கு அவப்ப்பேரை உண்டு பண்ணும் மேலதீக முயற்சியிலும் உள்ளது.... இதை கண்டு வேர் அறுக்க வேண்டியது எல்லோரது கடமையும் கூட ..

  • கருத்துக்கள உறவுகள்

நோக்கம் ஒண்று தான்.. உளவாளிகளில் பல தமிழர்கள் தான் அபாயமானவர்களாக இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதை எம்மவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவது ....

போராளிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டு கேட்டு சிங்களவனுக்கு மொழி பெயர்ப்பதில் இருந்து இறந்த போராளிகளை அடையாளம் காட்டுவது வரை தமிழர்கள் தான் சிங்களவனுக்கு தமது துரோகதனத்தை செய்கிறார்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களையும் குழப்ப, பிரிக்க சிறிலங்காவின் புலனாய்வாளர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.