Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறுதிகட்டப் போரில் 300 பேரே கொல்லப்பட்டுள்ளனர்: அரச தடுப்புக் காவலில் உள்ள வன்னி வைத்தியர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிகட்டப் போரில் 300 பேரே கொல்லப்பட்டுள்ளனர்: அரச தடுப்புக் காவலில் உள்ள வன்னி வைத்தியர்கள்

திகதி: 09.07.2009 // தமிழீழம்

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் கடந்த நான்கு மாதங்களில் 700 வரையான மக்களே கொல்லப்பட்டும், 1300 வரையான மக்களே மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக சிறீலங்காவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் வன்னியில் கடமையாற்றிய ஐந்து மருந்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் கொழும்பில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், கிளிநொச்சி சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி முல்லைத்தீவு சுகாதார பணிப்பாளர் வரதராஜா, வைத்தியர் சிவபாலன், வைத்தியர் ரங்கநாதன், வைத்தியர் இளஞ்செழியன், ஆகியோர் இந்த ஊடக மாநாட்டில் பங்கேற்றனர்.

இதில் அவர்கள் மேலும் கருத்து வெளியிட்ட போது, சந்திப்பின் போது, போர் நடைபெற்றுக்கொண்டிருந்த இறுதி 4 மாத காலப் பகுதிகளில் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு 700 பொதுமக்களின் சடலங்களே எடுத்து வரப்பட்டுள்ளன. 1300 மக்களே காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

நாங்கள் விடுதலைப் புலிகளின் வற்புறுத்தல்களினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து நாம் வழங்கிய தகவல்கள் முற்றிலும் மாறுப்பட்டவை எனத் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மரண அச்சுறுத்தல்களால் இத்தகைய மாறுபட்ட தகவல்களை நாம் வழங்கியிருந்தோம். எங்களைப் போன்ற ஏனைய மருத்துவர்களுக்கும் இவர்களினால் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. சிறீலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளமை எனக் கூறியமை முற்றிலும் பொய்யானவை. ஒரு தடவை மட்டும் முள்ளிவாய்க்கால் மருத்துவ மனையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் எறிகைண வீழ்ந்து வெடித்துள்ளது.

அனைத்துலக ரீதியாக பரப்புரைகளை முன்னெடுப்பதற்கும் இதனால் போரை நிறுத்தவும் மருத்துவமனை மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறுமாறு விடுதலைப் புலிகளால் வற்புறுத்தப்பட்டோம். சிறீலங்கா அரசாங்கத்தினால் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவு மற்றும் மருத்துப் பொருட்கள் மருத்துவமனைகளுக்கு வந்தடைந்தன.

ஆனால் அவற்றை விடுதலைப் புலிகள் தங்களின் தேவைக்கு கொண்டு கொண்டு சென்றதால் அவை பொதுமக்களுக்கு சென்றடையவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இறுதிப் போரில் 30 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை 300 பேரே கொல்லப்பட்டுள்ளனர்.

சிறீலங்காக் காவல்துறையின் குற்றத் தடுப்புப் பிரிவினரின் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இவர்கள், தடுப்புக் காவலில் உள்ள இந்த ஐந்து மருத்துவர்களும் சிறீலங்காப் படையினரின் கடும் உயிர் அச்சுறுத்தல்கள் மத்தியிலேயே இவர்கள் இக்கருத்தினை வெளியிட்டதாகக் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரில் 30 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை 300 பேரே கொல்லப்பட்டுள்ளனர்.

நல்லவேளை, வெறும் முப்பதுபேர் மட்டுமே இறந்தார்கள், அதுவும் புலிகளின் சயனைட் குப்பியிலிருந்த நஞ்சு பொதுமக்களின் வாயில் விழுந்ததால்தான் மரணித்தார்களெனெ இலங்கையரசு மருத்துவர்களை சொல்லவைக்காமல் விட்டார்களே, அந்த வரையில் நிம்மதி. இருந்தாலும் அதையும் இந்த சர்வதேச சமுதாயம் வெட்கமில்லாமல் ஆமோதிக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த மருத்துவர்களை க்காக்க என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்!

யூதர்கள் போல் இல்லாவிட்டால் தமிழினம் முற்றாக அழிந்து போகும்........ நம் ஒற்றுமையின்மையே நம்மை அழித்துவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி கொடுக்கும்போது பின்னால் இடுக்கி (குறடு) போட்டுப் பிடித்தபடி ஒருவர் குந்தி இருப்பாராம். கமராவில் அது பிடிபடாதாம். ஏதாவது இடக்கு முடக்காகப் பேசினால் பிடியை இறுக்கித் திருகுவார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு விடயம் என்னவெனில் இறுதிப்போர் என்று சொன்ன 17ம் திகதிக்கு முன்னரேயே இவர்கள் புதுமாத்தளன்பகுதியில் வைத்து சிறிலங்கா அரசபடையால் கைது செய்யப்பட்டனர் என்பது தான். இவர்களுக்கு எப்படிப் 17ம் திகதி நடத்தப்பட்ட கோராமான தாக்குதலில் 20 ஆயிரம் வரையிலான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது தெரியும்.

------------------

வேலவன்,

உங்களின் "கேள்வி நியாமானதே... ஆனால் புலத்தில இருந்து யார் எங்கு எதை, எப்படி ஆரம்பிப்பது என்றே யாருக்கும் தெரியவில்லை... வரலாற்றில் இப்படி ஒரு துன்பமான சம்பவத்தை நாங்கள் சந்தித்திருக்கவில்லை. என்பதால் நிலமை மிகவும் சிக்கலாக இருக்கின்றது..

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

1300 மக்களே காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வடிவாகத் தெரியவில்லை.. நான் நினைக்கின்றேன். செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலை வைத்தியசாலைக்கு 4 மாத காலப்பகுதியில் 4000 வரையிலான காயப்பட்டோரைக் கொண்டு சென்றிருக்கின்றது.

தமிழர்களாகிய நாம் .... பொழுது போக்கு அற்ப விஷயங்களுக்காக மட்டுமே நிறைய பொழுதை வீணடிக்கிறோம்...

கலங்கிக்கொண்டு இருப்பதாலோ..... ஒருவர் மீது குற்றம் பழி சொல்வதாலோ ஆதாயம் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை....

தமிழகத்தில் ஈழத்தமிழன் நம்மை விட புத்திசாலி என்று நாங்கள் பெருமை பேசித்திரிந்தோம்!

கலங்காமல் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது....

இனி வரும் காலம் தான் மிக முக்கியம் ....... நமக்காக தமிழ்த்தாய்க்காக போராளிகளைத்தந்த மானமுள்ள ... வன்னித்தமிழர்களை கைவிடலாமா????

புலிகளை ஒழித்துவிட்டதாக சொல்லி கொண்டு அப்பாவித்தமிழனை வதைக்கும் சிங்கள நரிகளின் முகமூடியை கிழிக்க போராட .... தமிழர்கள் திரள வேண்டும்...

வதை முகாம்களில் சர்வெதேச தொண்டு நிறுவனங்கள்.... தமிழர் அமைப்புகளை அனுமதிக்க க்கோரி அழுத்தம் கொடுத்து போராட வேண்டும்....

.....

இந்தியாவை பழி வாங்குதல்...

பிறகு பார்க்க வேண்டியது!

இன்னும் சற்று தாமதித்தால் வன்னியில் தமிழன் இருக்கமாட்டான்!

இது தன்னைக் காத்துக் கொள்ள அரசு எடுத்த நடவடிக்கை. மருத்துவர்கள் என்ன சொன்னாலும் அவர்களை அரசு இப்போதைக்கு விடுதலை செய்யப் போவதில்லை. இதன் அர்த்தத்தை ஐ.நா மறுத்திருக்கிறது.

வைத்தியர்கள் பாவம். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களைக் கொண்டு எதை வேண்டுமானாலும் சொல்லப் பண்ணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.