Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனதிற்கு ஆறுதல் எங்கே

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன்

மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கின்றோம்.

ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள்.

அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள்.

இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது.

வருங்கால சந்ததியினருக்கு இவ் நிலமை ஒரு பிழையான அவிப்பிராயதிதை ஏற்படுத்தாதா.

உண்மையாகவே ஆலயம் போய் தம் மனக்கவலைகளை இறைவனிடம் கூறி வழிபாடு செய்பவர்களின் நிலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவும் கற்காலத்திலையே இருக்கிற உங்களை நினைக்க சிரிப்புச்சிரிப்பாய் வருதப்பா :lol:

Vaasha, உங்கள் ஆதங்கம் புரிகிறது... உங்கள் நிலைமையில் தான் நானும் இருந்தேன், ஆனால் இப்போ அது குறைந்தது இருக்கிறது... நான் போறதால தானே என்ட கண்ணுக்கு இது எல்லாம் தெரிஞ்சு துலைகுது என்று நினைத்து, நான் போறதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துள்ளேன்.

* கடவுள் ஆராதனை குறிப்பிட்ட நேரத்திற்குத் தொடங்கும் என்று முன்கூடியே அறியத்தந்தும், பல கூட்டம் கூட்டமாகத் தாமதமாக வருவது...

* தாமதாமாக வாறது ஒருபக்கமிருக்க, வரும்போது சிரித்துக் கதைத்துக் கொண்டு கடவுள் வழிபாடு நடக்கும் இடத்திற்கு வருவது...

* சிலர் குழந்தைகளுடன் வருவார்கள்... அவர்களையாவது பொறுத்துக் கொள்ளலாம்... அதுவும் சில நேரங்களில் எம் பொறுமையைச் சோதிக்கிறது போல வீரிட்டுக் கத்தினாலும் அந்தக் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் வாயைப் போத்துவார்களே தவிர வெளியே கொண்டு போய் சமாதானப் படுத்த மாட்டார்கள்....

தாய்மார் சிலர், வீரிட்டுக் கதறும் குழந்தையைத் தூக்கி உஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ் என்று சத்தங்கள் போடுவது...

* சில இளம் வயதினர் ஆளையாள் தள்ளி விட்டு அதைப் பகிடியாகிச் சிரிப்பதும்...

* இன்னும் சிலரின் கைத்தொலைபேசி சினிமாப் பாடல் ringtone நாடு நடுவே கேட்கும் போது, அதை நாசூக்காக நிறுத்தாமல், எடுத்து ஒழித்துக் கதைப்பது...

* கோடைக் காலங்களில் மட்டும் இல்லை... பொதுவாக வழிபாடு நடைபெறும் நாட்களில் குடும்பமாக காரில் வந்து இறங்கும் எம்மவரைப் பார்க்க ஏதோ நான் இடம் மாறி வந்தது விட்டேனா என்று கூட நினைக்கத் தோன்றும்.... அவ்வளவுக்கு ஆடம்பரம்....

* இது எல்லாத்தையும் விட, வழிபாடு ஆரம்பித்தப் பிறகு வரும் சில குடும்பங்களில் செயல் தான் தாங்க முடியாது... பொதுவாக நேரத்திற்கு வருபவர்கள் முன்னால் போய் இருந்து விடுவார்கள்... எமவர்கள் சிலர் தாமதமாக வந்தது முன்னால் குடும்பத்தோடு இருப்பதற்கு நேரி படுவார்கள்... கடைசியில் நேரத்துக்கு வந்தது முன்னால் இருந்த வேற்று இனத்தவர் சிலர் முகத்தைச் சுளித்துக் கொண்டு எழும்பிப் பினால் போய் நிற்பார்கள்...

எம்மவர் சிலர் இங்கிதம் தெரியாமல் இப்படிச் செய்கிறார்களா? இல்லை, தெரிஞ்சு செய்கிறார்களா என்று தெரியவில்லை...

எல்லாத்தையும் கவனிக்க சில நாட்களில் சீ.... என்று போய்விட்டது... மனதிற்கு ஒரு ஆறுதலுக்காக கடவுள் வழிபாட்டில் கலந்து கொள்ளப் போனால், இவைகளால் மனதை ஒருமுகப் படுத்தி வழிபட மிகவும் சிரமமாக இருக்கும்... நேரத்திற்கு வரும்படி வழிபாட்டுக்குப் பொறுப்பானவர்கள் சொல்லியும் பலதடவைகள் சொல்லியும் அதே நபர்கள் தாமதமாக வருவார்கள்...

ஆரம்பத்தில் வழிபட்டு ஸ்தலத்திற்கு மிகச் சிறிய அளவே தமிழர்கள் வந்து கொண்டு இருந்தார்கள்... தற்போது மிகச் சிறிய அளவு வேற்று இனத்தவரே அங்கு வருகிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

Vaasha, உங்கள் ஆதங்கம் புரிகிறது... உங்கள் நிலைமையில் தான் நானும் இருந்தேன், ஆனால் இப்போ அது குறைந்தது இருக்கிறது... நான் போறதால தானே என்ட கண்ணுக்கு இது எல்லாம் தெரிஞ்சு துலைகுது என்று நினைத்து, நான் போறதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துள்ளேன்.

குட்டி.. விளங்குது.. உங்களை சூனா பானா எண்டும் கூப்பிடுறவையல்லோ? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் குட்டி எங்களைப்போல் பலரது ஆதங்கம் இது

எல்லோரும் இவ் நிகழ்ச்சிகளை இப்படியே விட்டால் எம் பண்பாட்டின்நிலை என்னாவது.

இக் கருத்துக்களம் வெறும் பொழுபோக்காக மட்டும் அமையக்கூடாது என்பது எமது விருப்பம்.

இப்பவும் கற்காலத்திலையே இருக்கிற உங்களை நினைக்க சிரிப்புச்சிரிப்பாய் வருதப்பா :lol:

வணக்கம் குமாரசாமி அண்ணே,

கள்ளுக் கொட்டிலில் இருப்பதைவிட கற்காலத்தில் இருப்பதில் தவறில்லையே.

Vaasha, உங்கள் ஆதங்கம் புரிகிறது... உங்கள் நிலைமையில் தான் நானும் இருந்தேன், ஆனால் இப்போ அது குறைந்தது இருக்கிறது... நான் போறதால தானே என்ட கண்ணுக்கு இது எல்லாம் தெரிஞ்சு துலைகுது என்று நினைத்து, நான் போறதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துள்ளேன்.

இதற்க்காக கோவிலுக்கே போகாமல் விடுவதும் சரி இல்லை எண்டு நான் நினைக்கிறன்.

மற்றவர்கள் பிழையா நடக்கினம் என்பதற்க்காக உண்மையான நம்பிக்கையுடன் கோவிலுக்கு போறவையல் போகமல்விடலமா ? கோவிலில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் எண்டு தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்து சொல்லவேண்டியது தானே.

வணக்கம் குட்டி எங்களைப்போல் பலரது ஆதங்கம் இது

எல்லோரும் இவ் நிகழ்ச்சிகளை இப்படியே விட்டால் எம் பண்பாட்டின்நிலை என்னாவது.

இக் கருத்துக்களம் வெறும் பொழுபோக்காக மட்டும் அமையக்கூடாது என்பது எமது விருப்பம்.

எம் பண்பாட்டின் மீதும் சமுதாயத்தின் மீதும் உங்களுக்குள்ள அக்கறையை / கவலையை பார்க்கும்பொழுது எனக்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை.

இந்த ஆதங்கம் பலருக்கு இருப்பதை நானும் அறிவேன்.

எம் பண்பாட்டின்நிலை கேள்விக்குறி தான்.

இக் கருத்துக்களம் வெறும் பொழுபோக்காக மட்டும் அமையக்கூடாது என்பதை நானும் அமோதிக்கிறேன்.

விவாதங்கள் தொடரட்டும்.

Edited by Tamilpriyaa

குட்டி.. விளங்குது.. உங்களை சூனா பானா எண்டும் கூப்பிடுறவையல்லோ? :lol:

">

தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன்

மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கின்றோம்.

ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள்.

அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள்.

இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது.

அவையளுக்கு திருமணவீட்டுக்கு வெளிக்கிடுறதுமாதிரி வெளிக்கிட்டுக்கொண்டு கோயிலுக்குவந்து ஆக்களோட கதைத்தால்தான் மனம் ஆறுதல் அடையுதாக்கும். வேணுமெண்டால் நீங்களும் அப்பிடி செய்து பாருங்கோ. இதுக்கு ஏன் அவையளை கோவிக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவையளுக்கு திருமணவீட்டுக்கு வெளிக்கிடுறதுமாதிரி வெளிக்கிட்டுக்கொண்டு கோயிலுக்குவந்து ஆக்களோட கதைத்தால்தான் மனம் ஆறுதல் அடையுதாக்கும். வேணுமெண்டால் நீங்களும் அப்பிடி செய்து பாருங்கோ. இதுக்கு ஏன் அவையளை கோவிக்கிறீங்கள்.

உண்மைதான். நான் திருவிழாக்காலத்தில கோவிலுக்கு போறது கும்பிட இல்லை, பொழுது போக்கிற்கு தான். அந்த நேரங்களில் போனால் கோவிலுக்கு உள்ளை போறதே இல்லை.. வெளியால நிண்டு திருவிழாவை பார்த்து ரசிக்கிறதுதான் :lol: . கும்பிடுறதெண்டால் ஒரு கிழமை நாளில் (விசேட நாள் இல்லாத) போவேன். எனக்கு பூசை நடக்க வேணுமெண்டில்லை எண்ட படிய எனக்கு விரும்பின நேரம் போவேன். ஆயுள்கைதியானாப்பிறகு எல்லாம் தலைகீழ் :lol: .

நமக்கேன் தேவை இல்லாத வேலை... நாம ஒதுங்க்கிப் போவமன்........

எண்டு எல்லாரும் ஒதுங்கி போனால் யார் தான் எடுத்து சொல்றது?

கடவுளுக்கு தேவை ஆடம்பரம் இல்லை, உண்மையான பக்தி மட்டுமே!

கடவுள் தனக்கு ஆடம்பரம் தேவை இல்லை எண்டு உங்களுக்கு சொன்னவரோ? அப்பிடியெண்டால் கடவுளை கோயிலை ஏன் அலங்காரம் செய்து அழகு பார்க்கிறீங்களாம்? அப்பிடி செய்தால்தான் உங்களுக்கு பக்தி வருமோ? அப்ப தங்களை அலங்காரம் செய்தால்தான் பக்திவரும் என்று ஆக்கள் அலங்காரம் செய்யுறது பிழை இல்லைத்தானே? இல்லாட்டிக்கு கோயிலில சுருட்டுற காசுக்கு கணக்கு காட்டவேணும் எண்டுறதுக்காக கோயிலையும் சாமியையும் ஆடம்பரமாக வச்சு இருக்கிறீனமோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

மனதிற்கு ஆறுதல் எங்கே

கண்மூடி பாடல்கள் ரசிப்பதில் ஆறுதல்

கஞ்சா அடிச்சாலும் மனதுக்கு ஆறுதல் :D

கண்மூடி பாடல்கள் ரசிப்பதில் ஆறுதல்

கஞ்சா அடிச்சாலும் மனதுக்கு ஆறுதல் :)

அடடா..... நீங்கள் தான் அந்தக் கஞ்சாக் கறுபியா?? :lol::mellow::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.