Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை இந்தியா காப்பாற்ற வேண்டும் - சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு செய்தியாளர் ரூபன் 20/07/2009, 01:29

ஈழத்தமிழர்களை இந்தியா காப்பாற்ற வேண்டும் - சீமான்

இலங்கையில் முகாம்களில் சிறைபட்டுள்ள ஈழத் தமிழர்களை மீட்க, இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் வலியுறுத்தியுள்ளார்.

"நாம் தமிழர்' அமைப்பு சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிம்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் மூன்றரை இலட்சம் தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே முகாம்களில் சிறீலங்கா அரசால் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கண்டம் தெரிவித்தார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு மக்களிற்கு, அரசு போதிய கழிப்பறை, குடிநீர், சுகாதார வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீட்டு அவர்களின் சொந்த மண்ணில் குடியமர்த்த, இந்திய மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டார்.

ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை, அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என ராஜபக்ச அரசு இந்திய அரசையும், பன்னாட்டு சமூகத்தையும் ஏமாற்றி வரவதாகவும், இந்த விடயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

“நாம் தமிழர்” இயக்கமானது ஈழத் தமிழர்களுக்காக ஒருமித்த குரல் கொடுக்க, தமிழர்களை ஒன்று திரட்டுவதற்காக, கட்சி, மதம் சார்பற்று ஏற்படுத்தப்பட்ட சுயநலமற்ற ஓர் அமைப்பு எனவும் சீமான் தனது உரையில் குறிபிட்டுள்ளார்.

• முகாம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள சிங்களவர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட குழுவை கலைத்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களிடம் நிர்வாக பொறுப்பை கையளிக்க இந்தியா மற்றும் அனைத்துலக நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

• சிறீலங்கா அரசுக்கு, மத்திய அரசும், தமிழக அரசும் அளித்துள்ள 500 கோடி ரூபா நிதி உதவியை இரத்து செய்ய வேண்டும்,

என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பதிவு

சீமான் இப்ப பேசுவது உண்மையிலயே வரவேற்க்கப்பட வேண்டிய ஒண்று,தலைவர் பிரபாகரன் வருவார் அவர் தலைமையில் போராடுவோம் என்று கத்துவதைவிட இது ஆக்கபூர்வமான கத்தல்

சீமானுக்கு அறிவுரை சொல்ல நீர் யார்?நீர் என்ன செய்தனீர்?என்று சிலர் கேட்பார்கள் அவர்கள் கேட்பார்கள் என்பதற்காக நான் .....சும்மா தட்டாமல் இருக்கஏலாதுதானே

Edited by Jil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாயும் முன்வரமாட்டான் தமிழனைகாப்பாற்ற!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை நீங்க அடுத்த படம் எப்ப தொடங்கிறிங்கள்? நாங்களும் படம் பார்ப்பம் என்று நினைத்தால் நீங்கள் கதையை மட்டும் சொல்லுறிங்கள் படம் காட்டமாட்டிங்களாம் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நீங்க அடுத்த படம் எப்ப தொடங்கிறிங்கள்? நாங்களும் படம் பார்ப்பம் என்று நினைத்தால் நீங்கள் கதையை மட்டும் சொல்லுறிங்கள் படம் காட்டமாட்டிங்களாம்

ஏம்பா, இவ்வளவு கொடூரங்கள் நடந்தும் அசமந்தங்களாய், சுயநலப் பிண்டங்களாய் பெரும்பான்மை(தமிழ் நாடு, ஈழம் & புலம்) தமிழர்களிருக்கையில் அவர் தன்னாலான வகையில் ஈழத்தவருக்கு குரல் கொடுத்தால் அதையும் நக்கலடிக்கிறீர்களே இது சரியாவென மனசாட்சியுடன் சொல்லுங்கள். தானம் கிடைத்த மாட்டை பல்லைப் பிடித்துப்பார்பது போலுள்ளது உங்கள் கிண்டல்.

எவனாவது லட்டு மாதிரி தங்கத்தட்டில் வைத்து இந்தாங்களப்பா, உங்களுக்கு ஈழம் என கொடுப்பார்களென்றா நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏம்பா, இவ்வளவு கொடூரங்கள் நடந்தும் அசமந்தங்களாய், சுயநலப் பிண்டங்களாய் பெரும்பான்மை(தமிழ் நாடு, ஈழம் & புலம்) தமிழர்களிருக்கையில் அவர் தன்னாலான வகையில் ஈழத்தவருக்கு குரல் கொடுத்தால் அதையும் நக்கலடிக்கிறீர்களே இது சரியாவென மனசாட்சியுடன் சொல்லுங்கள். தானம் கிடைத்த மாட்டை பல்லைப் பிடித்துப்பார்பது போலுள்ளது உங்கள் கிண்டல்.

எவனாவது லட்டு மாதிரி தங்கத்தட்டில் வைத்து இந்தாங்களப்பா, உங்களுக்கு ஈழம் என கொடுப்பார்களென்றா நினைக்கிறீர்கள்?

அட பார்ரா இவரை :lol: ,இவ்வளவுகாலமும் தூங்கி எழும்பி எங்க இருக்கிறன் என்று கேட்டமாதிரி இருக்கு உங்கள் கதை,அதுதானே நீங்கள் ஸ்ரீலங்கா பயங்கரவாதத்துக்கு தானம் கொடுத்த திறம் தெரியும் தானே அது எல்லாம் தெரிந்தும் இந்த தன்மான சிங்கம் இந்தியா தமிழர்களுக்கு உதவவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தல் என்ன அர்த்தம்,எனக்கு சுயநலமா என்று அறிபவர்கள் அறிவார்கள் நீங்கள் அடக்கி வாசியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அடக்கி வாசியுங்கோ

நாங்கள் அடக்கி வாசிப்பது இருக்கட்டும்... அப்புறமேன் கூப்பாடு? யாருமே எமக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லையெனவும் மத்திய அரசுக்கு தமிழகத்திலிருந்து அழுத்தம் தரப்படவில்லை என மனத்தாங்கல்களும் இல்லாதாவருமுண்டா?

அட பார்ரா இவரை :lol: ,இவ்வளவுகாலமும் தூங்கி எழும்பி எங்க இருக்கிறன் என்று கேட்டமாதிரி இருக்கு உங்கள் கதை,அதுதானே நீங்கள் ஸ்ரீலங்கா பயங்கரவாதத்துக்கு தானம் கொடுத்த திறம் தெரியும் தானே அது எல்லாம் தெரிந்தும் இந்த தன்மான சிங்கம் இந்தியா தமிழர்களுக்கு உதவவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தல் என்ன அர்த்தம்,எனக்கு சுயநலமா என்று அறிபவர்கள் அறிவார்கள் நீங்கள் அடக்கி வாசியுங்கோ

சுப்பு கொஞ்சம் நிதானத்தோட எழுதுங்கோ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஏனண்டா நீங்கள் சீமான் அண்ணைய கேட்டது போலதான் முகாமில இருக்கிற எங்கட சனம்

எங்கள கேக்குது.

மற்றவர குறை சொல்லுமுன்னம் நாங்கள் திருந்துவம்

மோட்டுச்சிங்களன் ..... மோட்டுச்சிங்களன் என்று சொல்லிக்கேள்விப்பட்டிருக்க

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சும்மாய் இருப்பது நல்லது....

கையாலாகமல் கத்திக்கொண்டிருப்பது எங்கட சனத்துதான் கேடாய்போகுது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சும்மாய் இருப்பது நல்லது....

கையாலாகமல் கத்திக்கொண்டிருப்பது எங்கட சனத்துதான் கேடாய்போகுது.

சரி நீங்கள் அமைதியா இருந்த்து காரியம் சாதிச்சு மக்களை மீட்டுட்டா போதும்!

மக்களை மீட்பதற்க்கு இந்தியாவின் கருணை வேண்டும்... அது தமிழ்நாட்டை செர்ந்தவர்களால் முடியாது. மேற்குலகத்தினரால்தான் முடியும்.( கருனை அடிப்படையில்.) அதற்க்கு முயற்சி செய்வோம். இந்தியாவிடம் கெஞ்சுவது எல்லம் பம்மாத்து. எனக்குதெரிந்ந பல இந்தியர்களுக்கு தமிழ்நாடு ஒண்டு இருப்பதே தெரியாது. முதலில் அதுக்கு ஒரு வழி செய்யுங்கோ. பெந்து எங்கட பிரச்சினை பற்றி அறிக்கை விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சும்மாய் இருப்பது நல்லது....

கையாலாகமல் கத்திக்கொண்டிருப்பது எங்கட சனத்துதான் கேடாய்போகுது

கேட்காமலிருந்தாலும் தப்பு, கேட்டாலும் தப்பு...!

சரியான நேரத்தில் மக்கள் தீர்ப்பை ஆணித்தரமாக அளிக்கவில்லைதான்...எங்களுக்க

ராஜவன்னியன்,

இதை சொல்ல வெக்கமாயில்லையா?

அட்லீஸ்ட் மனசுக்கு கஷ்டமாய் சரி இல்லைங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்,

இதை சொல்ல வெக்கமாயில்லையா?

பனங்காய் உண்மையச்சொல்ல என்ன வெட்கம்? மனதிற்குள் மிக வேதனையுடன் தான் இதை எழுதினேன்.

Edited by ராஜவன்னியன்

தனிநாட்டில் நம்பிக்கை போய்விட்டது....

இலங்கை வாழ் தமிழ் மக்களை கப்பாற்றுவதற்க்கு ஒரேவழி, அவர்களை மேற்குலக காப்பிலிகளை போல வாழப்பழக்குவதுதான்.....

எங்கேயாவது விடியும்.. அப்போது பாத்துக்கொள்ளுவோம் சிங்களவனை.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை இழக்கவேண்டாம்..இது வெறும் சம்பிரதாயத்திற்காக சொல்லும் வார்த்தைகள் அல்ல. நிச்சயம் வழி பிறக்கும். நம் எண்ணங்கள் ஈடேறும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பு கொஞ்சம் நிதானத்தோட எழுதுங்கோ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஏனண்டா நீங்கள் சீமான் அண்ணைய கேட்டது போலதான் முகாமில இருக்கிற எங்கட சனம்

எங்கள கேக்குது.

மற்றவர குறை சொல்லுமுன்னம் நாங்கள் திருந்துவம்

மோனே எனக்கு நிதானம் தெரியுமப்பு நான் ஒண்டும் தண்ணியடிச்சிட்டு எழுதேல,எங்கட சனம் எங்களை கேட்கிறது நியாயம் ஏனெண்டால் நாங்கள் எங்கட மக்களை எதிரி அழித்துக்கொண்டிருக்கும் போதும் நீங்க சொன்ன நிதானமா அதுக்காக நாங்களும் மனிதவுரிமையை மீறுறதா என்று கதைச்சனாங்கள் தானே,எங்கள் மக்கள் இந்திய படைகள் போர் நடாத்தி அழித்துக்கொண்டிருக்கும் போதும் இந்தியா வரும் ஈழம் தரும் என்று சொன்னனாங்கள் தானே அப்ப சனம் அடிச்சாலும் வேண்டத்தானே வேணும்,நாங்கள் பாதுகாப்பா இருந்து ஈழம் ஈழம் எண்டு கத்தினாங்கள் ஆனால் அங்க இருந்தவர்கள் எத்தனை உறவுகளை இழந்து வாழ்க்கையையே பறிகொடுத்துவிட்டு நிற்கிரவனுக்கு தான் அதன் வலி தெரியும் அவன் இனிமல் என்ன செய்தாலும் தப்பில்லை.

மற்றது சீமானை நான் குறை சொல்ல வரவில்லை ஆனால் சீமான் கொன்றவனிடமே காப்பாற்ற வேண்டும் என்று கோருவதுதான் ஏற்றுக்கொள்ளமுடியல

மோட்டுச்சிங்களன் ..... மோட்டுச்சிங்களன் என்று சொல்லிக்கேள்விப்பட்டிருக்க
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் அடக்கி வாசிப்பது இருக்கட்டும்... அப்புறமேன் கூப்பாடு? யாருமே எமக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லையெனவும் மத்திய அரசுக்கு தமிழகத்திலிருந்து அழுத்தம் தரப்படவில்லை என மனத்தாங்கல்களும் இல்லாதாவருமுண்டா?

நான் எப்பொழுதும் இந்தியாவை நம்பியதும் இல்லை அதன் உதவிகளையும் எதிர்பார்த்ததும் இல்லை இந்தியா எப்பொழுதும் எனக்கு எதிரியாகவே தெரிகிறது,இந்தியா அழிய வேண்டும் என்றே பலகாலமாக எதிர்பார்த்திருக்கிறேன்,பல நாடுகளுக்கு இதுவரை சென்றிருந்தாலும் ஒரு தடவை கூட இந்தியாவுக்கு செல்லவில்லை காரணம் இந்தியாவில் உள்ள வெறுப்பு,வெறுப்புக்கு காரணம் அவர்கள் எமக்கு ஈழம் பெற்றுதராததால் அல்ல இந்திய படைகள் எம் மண்ணில் ஏற்படுத்தியா அழிக்கமுடியாத வடுக்களால்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.