Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வராசா பத்மநாதன் நேர்காணல் (ஒளிப்பதிவு)

Featured Replies

கே.பி அண்ணா

:lol:

ஓம் விளங்குது... உங்களுக்கு விளங்குதா?

பறவைகள் ஒரு முடிவோடதான் நிக்கிறீங்கள்போல......

நாங்கள் நல்லா பட்டுட்டம்... இப்போதைக்கு யாரையும் நம்புறதுக்கு இல்லை..

மற்றும்.. நிக்கராகுவா அடிக்கடி கனவில் வந்து வாட்டுது..... :(

தலைவரை பாதுகாக்க முடியாத தமிழினம்... இனி இவரை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இருக்காது என்ற நம்பபிக்கையின் நிமிர்த்தம் அவரது பாதுகாப்பில் அக்கறையுள்ளவர்களின் ஆலோசனையாக கூட இருக்கலாம் அல்லவா?

உங்கள் கருத்தை நீங்களே திருப்பி படியுங்கள்.... ஏதாவது விளங்குதா? என்று யோசியுங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மடல் சொல்கின்ற செயலை விட்டுவிட்டு, ஆராட்சி செய்கின்ற உங்களை என்னவென்று சொல்வது தமிழ்சிறி..

இன்றைக்கு கேபி அவர்கள் பிழை என்றால், ஏதோ ஒருவகையில் அவர் பின்னார் திரள வேண்டாம் என்று எமக்கான ஒரு அறிவித்தலாவது வெளியிடாமல் இருப்பார்களா? ஏன் வரவில்லை என்றால், எமக்கு இப்போது இருக்கின்ற ஒரே ஒரு வழி அவர் தான். அவரது செயற்பாட்டில் திறமை, நேர்த்தி, இருக்குமா என்று தெரியவில்லை. இதுவரைக்கும் அப்படி எனக்கும் தோன்றவுமில்லை. ஆனால் வேறு வழி ஏதும் எமக்கில்லை..

இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் சிந்திக்க வேண்டியது, தமிழீழம், அல்லது சுயநிர்ணயம் போன்ற இலக்குகளை முன் வைத்து எவர் நகர்கின்றார்களோ, அவர்கள் பின்னால் தான் செல்ல வேண்டும். இதை விட்டால் எவ்வித வழியும் இல்லை... அவர் முகத்தை மறைத்து நிற்கின்றாரா, மொட்டையாகப் போடுகின்றாரோ என்பது எல்லாம் விதண்டாவாதம்... சொல்லுகின்ற கருத்துக்களை மட்டும் எடுங்கள். செயற்படுங்கள். வெட்டித்தனமான ஆராட்சிகள் எதுவும் அவசியமற்றது..

இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லாவற்றையும் ஆரம்பத்திலே இருந்து தொடங்க வேண்டியுள்ளது. அதற்காகப் பாடுபடுங்கள். நேரத்தை ஒதுக்குங்கள்..

உண்மை தான் தூயவன் .

நீங்கள் சொன்னால் என்ன சொல்ல விட்டால் என்ன 32 நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளாகவே புலிகளை உலகம் பார்க்கிறது....

அப்படியிருக்கையில் இந்த பேட்டி தவறான கண்ணோட்டத்தை கொடுக்கும் என்பது ஏற்றுக்கொள்ள கூடியதா?

ஐயா, எங்களுக்கே இந்தப்பேட்டியை பார்க்க வயித்தை கலக்கிது. மேலே எழுதப்பட்ட கருத்துக்களை பார்த்தால் பலரும் அவ்வாறு உணர்கின்றார்கள். அதாவது, எங்களாலையே இப்படியான பேட்டியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிது. அப்படி என்றால்.. உதை சர்வதேச ஊடகங்களில இப்படி பரப்பி என்னத்தை புடுங்கப்போறம்?

முதற்கோணல் முற்றும் கோணல் என்று யாரோ சொன்னமாதிரி இருக்கிது. எனவே கொஞ்சம் அவதானமாய் போகணும் என்று பலர் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானே?

எல்லோருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவு, தகவல்கள்தான் தெரியும், இருக்கிது. கேபியின் நிலையில இருந்து பார்த்து இருந்தால்.. இப்படியான பேட்டியே சரியானதாய் இருந்து இருக்கலாம்.

நாங்கள் சொல்லிறது சரியாக இருக்கலாம், பிழையாக இருக்கலாம். ஆனால்.. பொறுப்புக்களில் இருப்பவர்கள், முடிவுகள் எடுப்பவர்கள் சரியான பாதையில் செல்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

புலிகளை சர்வதேசம் எப்படி அணுகப்போகின்றது என்பது ஒருபுறம் இருக்க... கேபியை ஒர் தனிமனிதனாக சர்வதேசம் எப்படி அணுகப்போகின்றது என்பது இந்தவிடயத்தில் முக்கியமானது.

ஒருவிதத்தில் பார்த்தால் இப்படி பேட்டி கொடுப்பது சர்வதேசத்திற்கு ஓர் நம்பிக்கையை கொடுக்கலாம். முன்பு தலைவர் அடிக்கடி ஊடகங்களில தோன்றுவதும் இல்லை, நிலமைகளை விளங்கப்படுத்துவதும் இல்லை. இதை சிறீ லங்கா அரசாங்கம் நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டது.

ஆனால்... கேபி அடிக்கடி சர்வதேச ஊடகங்களுடன் உறவாடுவது வரவேற்கத்தக்கது. இந்த நவீன உலகில பொத்திக்கொண்டு இருப்பது ஆபத்தானது. அது குற்றவாளிகள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதை ஆமோதிப்பது போன்று இருக்கும். பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு அமைதியாக இருப்பது துணைபோகும்.

தொடர்ந்து உங்கள் எங்கள் குடும்பிகளை இழுக்காது.. ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை பகிர்வோம். :lol:

கேபி அடிக்கடி சர்வதேச ஊடகங்களுடன் உறவாடுவது வரவேற்கத்தக்கது.

மீண்டும் "அண்ணைக்கு எல்லாம் தெரியும்தானே" என்பது போன்று ஆரம்பிக்க வேண்டாம்.

முகத்தைக் காட்ட முடியாத நிலையில் கமெராக்களுக்கு முன் பேட்டி கொடுப்பதை தவிர்ப்பதே நல்லது. இப்படி முகம் தெரியாத மாதிரி பேட்டி கொடுக்கின்ற பொழுது, அதைப் பார்ப்பவர்களிடம் பேட்டி கொடுப்பவர் குறித்து எப்படியான எண்ணம் ஏற்படும் என்பது பற்றித்தான் இங்கு பிரச்சனை.

பயங்கரவாதிகளும், போதை பொருள் கடத்துபவர்களும், பாலியல் குற்றவாளும் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்களும், இது போன்ற இன்ன பிற மனிதர்களும் இப்படி முகம் மறைத்து பேட்டி கொடுப்பதை பார்த:;து பழகிய சமூகத்திற்கு இந்தப் பேட்டி எத்தகைய தாக்கத்தை கொடுக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பத்மநாதன் அவர்கள் தாராளமாக பேட்டி கொடுக்கட்டும:;. இந்த முறையில் வேண்டாம். தொலைபேசி, மின்னஞ்சல், தொலைநகல் என்று நிறைய வழிகள் உண்டு.

எந்த பயங்கர வாதி தனது முகத்தை தானாக துணியால் மூடாமல் தொலைக்காட்ச்சி சேவை செய்பவர்களால் மழுங்கடிக்க பட்டு காட்ட பட்டது...???

அண்ணை தெரியா விட்டால் சும்மா இருங்கோ...

காடுகளில் ஒளிந்து இருக்கும் ஒருவரை ஒரு சர்வதேச தொலைக்காட்ச்சி தொலை பேசியினூடாக பேட்டி எடுப்பதும் நேரடியாக பேட்டி எடுப்பதுக்கும் உள்ள வித்தியாசம் கூடவா உங்களுக்கு தெரியவில்லை... ???

Edited by தயா

கே.பி இன் ஒரு புகைப் படம் தான் Selvarasa_Pathmanathan_01.jpg பரவலாக

எல்லா இணையத் தளங்களிலும் பிரசுரிக்கப் படுகிறது... அத்தோடு Interpol-ஆல் தேடப் படும் அவரின் இன்றைய முக அமைப்பை காட்டாது மறைத்தது அவரின் (பாதுகாப்புக் கருதி) நன்மைக்கே... வரவேற்கத் தக்கதும் கூட என்பது எனது கருத்து...

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு இனி எட்டுக் கோடி தலைவர்மார்..! :lol:

மேற்குலக ஊடகங்களால் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களின் முகங்கள் இப்படி மறைக்கப்பட்டு வெளிவந்த பேட்டிகளை நான் பார்த்திருக்கின்றேன். பெரும்பாலும் அவர்கள் பயங்கரவாத இயக்கங்களில் இருந்து வெளியேறியவர்களாக இருப்பார்கள். அவர்கள் தமது இயக்கம் பற்றி வழங்குகின்ற பேட்டிகளின் போது அவர்களின் முகம் இப்படி மறைக்கப்பட்டிருக்கும்.

பார்வையாளர்களுக்கு இவைகளும் ஒரு பயங்கரவாதியின் பேட்டியே. அத்துடன் தாமே தயாரிக்கின்ற பேட்டிகளில் தமது முகத்தை மழுங்கச் செய்து விடியோக்களை பயங்கரவாதிகள் என கருதப்படுபவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள்.

நான் சொன்ன சில உதாரணங்களில் பயங்கரவாதியும் ஒன்று. அதைப் மட்டும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டாம். பின்பு யார் பயங்கரவாதி என்று விவாதம் வேறு திசையில் நீளும். முகத்தை இப்படி மழுங்கச் செய்வது குற்றவாளிகளுக்கும் அல்லது குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு எதிரிக்கு அஞ்சுபவர்களுக்கும் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் எதுவாகவும் எமது இயக்கத்தின் தற்போதைய தலைவரை நாம் அடையாளப்படுத்த விரும்பவில்லை. அப்படி அடையாளப்படுத்தக் கூடிய நிகழ்ச்சிகள் வருவதையும் நாம் விரும்பவில்லை.

இக் கருத்துக்களை நான் எனது கோணத்தில் இருந்து சொல்லவில்லை. குறிப்பிட்ட பேட்டியை பார்க்கின்ற ஒரு சாதரண பார்வையாளனின் கோணத்தில் இருந்து சொல்கிறேன்.

இங்கே பெரும்பாலோர் முகம் மறைத்து வெளிவந்த பேட்டியை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு மாற்றுவழி கண்டிருக்க வேண்டும் என்பது இங்கே பலரின் கருத்து.

ஆனால் தயா வேண்டும் என்றே என்னோடு மட்டும் மல்லக்கட்ட வருகின்றார். ஆரோக்கியமான முறையில் விவாதிப்பதையே நான் விரும்புகிறேன். உள்நோக்கங்களோடு சீண்டுவதற்காக எழுதப்படும் கருத்துகளுக்கு பதில் எழுதுவதை தவிர்க்க விரும்புகிறேன். நன்றி

புலிக்கு இனி எட்டுக் கோடி தலைவர்மார்..! :(

தமிழ் நாட்டு காறரை சேத்தா சொல்லுறீயள்...??? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கே.பீ யைப் பற்றி பலருக்கு இருக்கும் பிழையான அபிப்பிராயம்தான் இப்படியான விமர்சனங்களை செய்ய வைக்கிறது என்று நினைக்கிறேன். அவர் தலைவரால் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளாரக நியமிக்கப்படும்வரையிலும், புலிகளின் சர்வதேச ஆயுத முகவராகத் தொழிற்பட்டவர். இதனால் சில உளவு நிறுவனங்களால் தேடப்பட்டவர். இதனாலேயே பலமுறை தனது இருப்பிடத்தை மாற்றியும் வருகிறார்.ஆகவே அவர் தனது இன்றைய முகத்தைக் காட்டவேண்டும் என்று கேட்பது அவருடைய பாதுகாப்பைத்தான் பலவீனப்படுத்தும். மற்றது, பேட்டி கொடுப்பவரின் விருப்பத்துக்கு இணங்கவே அவரைப் பேட்டி கண்ட செய்தி தாபனம் அவரின் முகத்தை மறைத்துள்ளது. மற்றும்படி அவரின் முகத்தைக் காட்டினால் அவர்களுக்குத்தான் பிரபலம்.

இஸ்லாமியத் தீவிரவாதிகளும் தமது முகத்தை மறைத்துக்கொண்டுதான் பேட்டி கொடுக்கிறார்கள் என்பதற்காக கே.பீ யையும் அவர்கள் போலத்தான் மக்கள் எடைபோடுவார்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. புலிகளின் அரசியல்ப் பிரிவுத் தலைவர்களை விட வேறு எந்த தளபதியோ அல்லது பிரமுகரோ சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு முகம் காட்டிப் பேட்டி கொடுத்துள்ளதென்பது மிகவும் அபூர்வமே.

இன்று புலிகளியக்கத்தையும், தமிழரின் போராட்டத்தையும் முன்னே இழுத்துக் கொண்டு போகும் கடமை உள்ளவர் என்கிற பாரிய பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அவரின் பாதுகாப்பிலும் சிறிது அக்கறை செலுத்துவோம்.எமது விமர்சனங்களை பொறுப்புடன் முன்வைப்போம்.

தமிழர்களுக்கென்று தலைவர் ஒருவரை இன்னும் ஒரு மாதாகலாத்துக்குள் நியமிக்கவில்லை என்றால் நான் சிறிலங்கா சென்று டக்கிளசை ஆதரிக்கப் போகிறேன் என்று அறிக்கை விட்ட அரசியல் விற்பன்னர்கள் இன்று கே.பீ எமக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அவரை விமர்சிக்கும் பாங்கைப் பார்க்கும்போது வியப்பாகத்தானிருக்கிறது. ஆகவே இவர்கள் என்னத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்களுக்கே ஒரு தெளிவு இருக்கிறதா என்ற ஐய்யம்தான் எனக்கு வருகிறது.

இங்கே பெரும்பாலோர் முகம் மறைத்து வெளிவந்த பேட்டியை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு மாற்றுவழி கண்டிருக்க வேண்டும் என்பது இங்கே பலரின் கருத்து.

உது பிரித்தானியாவில் சாதாரண நிகழ்வு...

எமது பிரச்சினை தெரிந்த வெள்ளை இந்த பேட்டி வருகிறது எண்று எனக்கு குறுஞ்செய்திய அனுப்பி வைத்தது.. அவர் பேட்டி பற்றி சொன்னது... உவர் ஒரு தேர்ந்த அரசியல் வாதியாக இன்னும் படிக்க வேண்டி உள்ளது...

மீண்டும் ஞாபகப்படுத்து கிறேன்... முகத்தை ஒரு ஒளிபரப்பு நிறுவனம் அவரின் வேண்டுகோளை ஏற்று மறைப்பது என்பது சாதாரணம்...

BBC யினர் பாராளுமண்ற போராட்டத்தின் போது பேட்டி எடுக்க பட்ட ஒருவரிடம் கேட்டார்கள் உங்களின் முகம் ஒளிபரப்ப படுவது உங்களின் அனுமதி உண்டா ....???

பிரித்தானிய மக்கள் மற்றவரின் சுயவிருப்பை விமர்சிப்பவர்கள் அல்ல...

இதுக்கு மேலை வேலை மினக்கெட்ட விரும்பவும் இல்லை...

Edited by தயா

ரகு,

முகத்தை மறைத்து பேட்டி கொடுத்தது எனக்கு நெருடலாக இருக்கிறது என்று சொல்வதன் அர்த்தம், அவர் முகத்தைக் காட்டி பேட்டி கொடுக்க வேண்டும் என்பது அல்ல.

அப்படி இங்கே யாருமே கருதவில்லை.

தொலைக்காட்சி என்பது ஒரு காட்சி ஊடகம். அதிலே பேசப்படுபவைகளை விட காட்சிகளாக வருபவை முக்கியமானவை. மனிதனின் சிந்தனையில் காட்சிகள் விளைவிக்கின்ற தாக்கம் முக்கியமானவை.

குற்றவாளிகளையும், குற்றத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களையும் பார்த்துப் பழக்கப்பட்ட அதே நிலையில் விடுதலை இயக்கம் ஒன்றின் தலைவர் காட்டப்படுகிறார். இந்தக் காட்சி பார்வையாளனிடம் எப்படியான சிந்தனையை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மற்றையபடி அவருடைய பாதுகாப்பு முக்கியமானது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஒரு அரசை நடத்திய இயக்கம் ஒன்றின் இன்றைய தலைவர் முகத்தை காட்டி பேட்டி கொடுக்காத நிலையில் இருக்கின்றார் என்றால், நிலைமை மாறும் வரை வேறு வழிகளில் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தட்டும் என்றுதான் நான் சொல்கிறேன்.

தமிழர்களுக்கென்று தலைவர் ஒருவரை இன்னும் ஒரு மாதாகலாத்துக்குள் நியமிக்கவில்லை என்றால் நான் சிறிலங்கா சென்று டக்கிளசை ஆதரிக்கப் போகிறேன் என்று அறிக்கை விட்ட அரசியல் விற்பன்னர்கள்

ஓம் ரகுநாதன் அண்ணர்... எங்கட சபேசன் டக்கீன்ட ஆளா இருக்குமோ...... :lol:

கே.பீ யைப் பற்றி பலருக்கு இருக்கும் பிழையான அபிப்பிராயம்தான் இப்படியான விமர்சனங்களை செய்ய வைக்கிறது என்று நினைக்கிறேன். அவர் தலைவரால் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளாரக நியமிக்கப்படும்வரையிலும், புலிகளின் சர்வதேச ஆயுத முகவராகத் தொழிற்பட்டவர். இதனால் சில உளவு நிறுவனங்களால் தேடப்பட்டவர். இதனாலேயே பலமுறை தனது இருப்பிடத்தை மாற்றியும் வருகிறார்.ஆகவே அவர் தனது இன்றைய முகத்தைக் காட்டவேண்டும் என்று கேட்பது அவருடைய பாதுகாப்பைத்தான் பலவீனப்படுத்தும். மற்றது, பேட்டி கொடுப்பவரின் விருப்பத்துக்கு இணங்கவே அவரைப் பேட்டி கண்ட செய்தி தாபனம் அவரின் முகத்தை மறைத்துள்ளது. மற்றும்படி அவரின் முகத்தைக் காட்டினால் அவர்களுக்குத்தான் பிரபலம்.

இஸ்லாமியத் தீவிரவாதிகளும் தமது முகத்தை மறைத்துக்கொண்டுதான் பேட்டி கொடுக்கிறார்கள் என்பதற்காக கே.பீ யையும் அவர்கள் போலத்தான் மக்கள் எடைபோடுவார்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. புலிகளின் அரசியல்ப் பிரிவுத் தலைவர்களை விட வேறு எந்த தளபதியோ அல்லது பிரமுகரோ சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு முகம் காட்டிப் பேட்டி கொடுத்துள்ளதென்பது மிகவும் அபூர்வமே.

பிரித்தானிய மக்களை பற்றி உங்களுக்கு தெரியாதது இல்லை.. எண்றாலும் சொல்கிறேன்... இந்த மக்கள் ஒருவர் தனது முகத்தை காட்ட வில்லை என்பதை விமர்சிப்பது கிடையாது... அவர் தனது தனிமையை காப்பதை கண்ணியமான புரிந்து கொள்ளக்கூடியவர்கள்... ஆகவே வெளி நாடு ஒண்றில் தான் சுந்ததிரமாக தனிமையாக நடமாட வேண்டி அவர் முகத்தை திரையிட வேண்டாம் எண்று கேட்டு கொண்டதுக்கு இணங்க அந்த தொலைக்காட்ச்சியினரால் மழுங்கடிக்க பட்டது...

இஸ்லாமிய போராளிகள் போல அவர் தானாக ஒரு துணியை கொண்டு முகத்தை மூடி மறைத்து கொண்டு வந்து பேட்டி கொடுக்க அதை அப்படியே அந்த தொலைக்காட்ச்சி ஒளிபரப்பவும் இல்லை...

அந்த தொலைக்காட்ச்சிக்கு தனத்து முகத்தை காட்டி பேட்டி கொடுக்கிறார்.. அதை தொலைக்காட்ச்சி நிறுவனத்தால் எடிட் செய்ய பட்டு காட்டப்பட்டது... ஆகவே அவர் மறைந்து பேட்டி கொடுக்க வில்லை பேட்டி எடுத்த வரும் கொடுத்தவரும் இணங்கி மற்றவர்களுக்கு மறைத்தனர்... இங்கே C4 வினரும் , KP அண்ணையும் சேர்ந்து செய்தமை புரியலாம்...

மற்றது KP அண்ணையின் உண்மையான உருவ அமைப்பு கொண்ட வீடியோவின் ஒறிஜினல் C4 நிறுவனத்திடம் இருக்காது எண்று நினைக்கும் முட்டாள்கள் அல்ல பிரித்தானிய மக்கள்... இந்த வீடியோ பிரித்தானிய உளவு அமைப்பான M16 க்கு போகாது எண்று KP அண்ணையும் நினைக்க மட்டார்... அப்படி நினைக்கும் அளவுக்கு இருப்பாராகில் 19 வருடமாக விடுதலைப்புலிகளை இவ்வளவு தூரம் வளர்க்க உதவி இருக்கவும் முடியாது... ( மறைந்து திரிந்த அவருக்கு இனியும் மறைய வேண்டிய அவசியம் இல்லை)

ஆகமொத்தம் தேவை இல்லாத திசையில் இங்கே வேண்டும் எண்றே வளமையான திசை திருப்பிகள் வேலை செய்கிறார்கள்...

பிரித்தானிய மக்களை பற்றி உங்களுக்கு தெரியாதது இல்லை.. எண்றாலும் சொல்கிறேன்... இந்த மக்கள் ஒருவர் தனது முகத்தை காட்ட வில்லை என்பதை விமர்சிப்பது கிடையாது... அவர் தனது தனிமையை காப்பதை கண்ணியமான புரிந்து கொள்ளக்கூடியவர்கள்... ஆகவே வெளி நாடு ஒண்றில் தான் சுந்ததிரமாக தனிமையாக நடமாட வேண்டி அவர் முகத்தை திரையிட வேண்டாம் எண்று கேட்டு கொண்டதுக்கு இணங்க அந்த தொலைக்காட்ச்சியினரால் மழுங்கடிக்க பட்டது...

இஸ்லாமிய போராளிகள் போல அவர் தானாக ஒரு துணியை கொண்டு முகத்தை மூடி மறைத்து கொண்டு வந்து பேட்டி கொடுக்க அதை அப்படியே அந்த தொலைக்காட்ச்சி ஒளிபரப்பவும் இல்லை...

அந்த தொலைக்காட்ச்சிக்கு தனத்து முகத்தை காட்டி பேட்டி கொடுக்கிறார்.. அதை தொலைக்காட்ச்சி நிறுவனத்தால் எடிட் செய்ய பட்டு காட்டப்பட்டது... ஆகவே அவர் மறைந்து பேட்டி கொடுக்க வில்லை பேட்டி எடுத்த வரும் கொடுத்தவரும் இணங்கி மற்றவர்களுக்கு மறைத்தனர்... இங்கே C4 வினரும் , KP அண்ணையும் சேர்ந்து செய்தமை புரியலாம்...

மற்றது KP அண்ணையின் உண்மையான உருவ அமைப்பு கொண்ட வீடியோவின் ஒறிஜினல் C4 நிறுவனத்திடம் இருக்காது எண்று நினைக்கும் முட்டாள்கள் அல்ல பிரித்தானிய மக்கள்... இந்த வீடியோ பிரித்தானிய உளவு அமைப்பான M16 க்கு போகாது எண்று KP அண்ணையும் நினைக்க மட்டார்... அப்படி நினைக்கும் அளவுக்கு இருப்பாராகில் 19 வருடமாக விடுதலைப்புலிகளை இவ்வளவு தூரம் வளர்க்க உதவி இருக்கவும் முடியாது... ( மறைந்து திரிந்த அவருக்கு இனியும் மறைய வேண்டிய அவசியம் இல்லை)

ஆகமொத்தம் தேவை இல்லாத திசையில் இங்கே வேண்டும் எண்றே வளமையான திசை திருப்பிகள் வேலை செய்கிறார்கள்...

:lol:

ரகு,

இன்னும் ஒரு விடயம். அறிக்கை விட்டவர்களே பத்மநாதனை "விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்" என்று அறிமுகப்படுத்தத் தயங்குகின்ற பொழுது, நாம் அவரை விடுதலைப் புலிகளின் புதிய தலைவராகவே அடையாளப்படுத்துகிறோம். உலகம் எங்கும் உள்ள கிளைகள் அவருடைய தலைமையை ஏற்று செயற்பட வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ஆனால் கடந்த காலத்தில் புலிகளுடன் பின்பற்றிய அதே அணுகுமுறையை இம்முறை பின்பற்ற நான் விரும்பவில்லை. புலிகள் தவறு செய்வதாக எமக்குப்படுகின்ற பொழுது இனிமேல் நாம் அதை வெளிப்படையாக விமர்சிப்போம். பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்தை புலிகள் வரவேற்கின்ற பொழுது, விமர்சனங்களையும் அவர்கள் வரவேற்பார்கள் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

முகத்தை மறைத்து பேட்டி கொடுத்தது எனக்கு நெருடலாக இருக்கிறது என்று சொல்வதன் அர்த்தம், அவர் முகத்தைக் காட்டி பேட்டி கொடுக்க வேண்டும் என்பது அல்ல.

அப்படி இங்கே யாருமே கருதவில்லை.

தொலைக்காட்சி என்பது ஒரு காட்சி ஊடகம். அதிலே பேசப்படுபவைகளை விட காட்சிகளாக வருபவை முக்கியமானவை. மனிதனின் சிந்தனையில் காட்சிகள் விளைவிக்கின்ற தாக்கம் முக்கியமானவை.

குற்றவாளிகளையும், குற்றத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களையும் பார்த்துப் பழக்கப்பட்ட அதே நிலையில் விடுதலை இயக்கம் ஒன்றின் தலைவர் காட்டப்படுகிறார். இந்தக் காட்சி பார்வையாளனிடம் எப்படியான சிந்தனையை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மற்றையபடி அவருடைய பாதுகாப்பு முக்கியமானது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஒரு அரசை நடத்திய இயக்கம் ஒன்றின் இன்றைய தலைவர் முகத்தை காட்டி பேட்டி கொடுக்காத நிலையில் இருக்கின்றார் என்றால், நிலைமை மாறும் வரை வேறு வழிகளில் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தட்டும் என்றுதான் நான் சொல்கிறேன்.

நன்றி சபேசன் உங்கள் கருத்துக்கு. ஏற்றுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு காறரை சேத்தா சொல்லுறீயள்...??? :(

எல்லாரையும் சேர்த்துதான்..! எல்லா தமிழரும் இப்ப கதைக்கலாம்தானே..!! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.