Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற நபர் மக்களால் அடித்துக்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற நபர் மக்களால் அடித்துக்கொலை

[படங்கள் இணைப்பு] அம்பாறைப் பகுதியில் மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள நபரொருவரை அப்பிரதேச மக்கள் தாமே கொன்றுள்ளனர்.

நேற்று முன் தினம் மாலையில் அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பற்றி நமது தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

4ம் கொலனி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மனோதுஸ்டிகா (வயது 13) இவ்விதம் குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம் கொலனிக்குச் சென்றுவிட்டு திரும்பி. வரும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவத்துடன் தொடர்புள்ள நபரொருவரை அக்கிராம மக்கள் நேற்று மாலையில் ஆத்திரத்துடன் கொலை செய்ததாக இன்றைய செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு மக்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுத்து பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளி நபருக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்துள்ளது.

http://www.meenagam.org/?p=6289

Edited by விடியல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13 அகவைச் சிறுமியை பாலியலுக்குட்படுத்தி கொன்ற நபர் மக்களால் அடித்துக்கொலை

[2 ஆம் இணைப்பு] அம்பாறைப் பகுதியில் மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள நபரொருவரை அப்பிரதேச மக்கள் தாமே கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவி மதுனுஸ்கா இனந்தெரியாதோரால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மத்திய முகாம் 4ம் கொலணி வாணி வித்தியாலய 7 ஆம் வகுப்பு மாணவி மோகன் மதுனுஸ்கா (அகவை 12)கடந்த 22ம் திகதி புதன்கிழமை அன்று குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம் கொலனிக்குச் சென்றுவிட்டு, வரும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாலை ஆறு மணியாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேககம் கொண்ட பெற்றோர் அவரைத் தேடத் தொடங்கினர்.

இதேவேளை மத்திய முகாம் எல்லைக்கிராமத்திலுள்ள பாமடி பின் அணைக்கட்டுப் பகுதியில் ஆடைகளில்லாத நிலையில் முகம் உள்ளிட்ட உடம்பு பூராகக் கீறல் காயங்களுடனும் வயிற்றிலும் கழுத்திலும் கத்திக் குத்துக் காயங்களுடனும் குடல் வெளியே தெரிந்த நிலையில் சடலமொன்று காணப்படுவதாகத் தகவல் கிடைத்தை தொடர்ந்து, பெற்றோரும் மத்திய முகாம் பொலிஸாரும் அயலவர்களும் சென்று பார்த்தபோது சடலத்தின் மேல் பறாங்கல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

குறித்த மாணவியின் சடலமே அது என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

இதனையடுத்து மத்தியமுகாம் 3 ஆம் 4 ஆம் கொலனிகளில் பதற்றம் நிலவி வருகிறது. பாடசாலை மாணவர்களின் வரவிலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

தற்போது அப்பகுதி எங்கும் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய் சகிதம் அவர்கள் தேடுதல் மேற்கொண்டு வருவதோடு பலரை விசாரணைக்குட்படுத்தியும் வருகின்றனர்.

அரசாங்கத்தால் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இளம் சிறுமிகள் பாலியல் வல்லுறுவுகட்குள்ளாக்கப்பட்

  • கருத்துக்கள உறவுகள்

இச்சம்பவத்துடன் தொடர்புள்ள நபரொருவரை அக்கிராம மக்கள் நேற்று மாலையில் ஆத்திரத்துடன் கொலை செய்ததாக இன்றைய செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு மக்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுத்து பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளி நபருக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்துள்ளது.

அந்த கிராமமக்கள் சரியான தண்டனையை தானே ...... கொடுத்துள்ளார்கள் . இதுக்கு ஏன் பதற்றம் ஏற்படவேண்டும் .

சரியான தண்டனை........... கண்ட துண்டமாக வெட்டி காக்காக்கு போடவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை காகம் தான் பாலியல் வல்லுறவு கொண்டுதோ .......

அந்தக் காகத்தை அடித்துக் கொன்றதால் பதற்றம் ஏற்படுதோ ........

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்காகக் காகம்றீங்க. அது காகமுமில்லச் சிங்கமுமில்ல நம்ம குள்ளநரியோடவேலை. சமீபத்தில நடந்த இப்படியான பல அனியாயங்களுக்கு நாம் வேறு யாரையும் பொறுப்புக் கூறமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்காகக் காகம்றீங்க. அது காகமுமில்லச் சிங்கமுமில்ல நம்ம குள்ளநரியோடவேலை. சமீபத்தில நடந்த இப்படியான பல அனியாயங்களுக்கு நாம் வேறு யாரையும் பொறுப்புக் கூறமுடியாது.

அட .... ராமா ..... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.