Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழை......

கவிதை - இளங்கவி

மனதைத் தாலாட்டும்

இயற்கையின் இன்பம் நீ......

மகிழ்வான சிறுவயதின்

என்னை மகிழ்வித்த சொர்க்கம் நீ.....

சிறுவனாய் நான்.....

விளையாடி வரும்போது

வெப்பமாகும் என் தேகம்.....

மேலிருந்து நீ வந்து வந்து

குளிரவைப்பாய் என் தேகம்....

என் சூடான சுவாசமும்

சில்லென்று குளிர்ந்துவிடும்....

அதை இன்றும் நினைத்தாலும்

ஜில்லென்று சுகம் தரும்....

இளைஞனாய் நான்......

தெருவோரம் அமர்ந்து

தேடுவேன் என் பேரழகை....

திடீரென்று நீ வருவாய்

சினத்தையும் நீ தருவாய்.....

அந்த நேரம் என்

அழகுச்சிலை வருவாள்...

நீ துளிகளாய் அவள் முகத்தினிலே

தொட்டதுமே ஒட்டிடுவாய்....

ஒட்டிய துளியொன்று

அவள் மூக்குவளி இறங்கிவந்து

அவள் மேல் உதட்டை தொட்டுவிட....

அவள் அதை உள்ளிழுத்து

என் பக்கமாய் ஊதிவிட....

அப்போது அவள்

உதடு செய்யும் ஜாலத்தில்

என்னுயிரைக் கொடுத்தவன் நான்....

அந்த மொழியை இன்றுவரை

என் இதயத்தில் ரசிப்பவன் நான்........

அதனாலே இன்றுவரை உன்னை

ரசிக்கும் கலைஞன் நான்.....

ஆனால் உன்னை எனக்கு

இப்பொது ஓரளவும் பிடிக்கவில்லை...

ஏனென்று கேட்காதே

எப்படிப் பதில் சொல்வேன்....

ஏங்கி நிற்கும் நம் உறவுகளின்

எதிர்காலம் என் சொல்வேன்....

நம் அனைத்து உறவுகளும்

முகாமில் அடைந்திருக்க

அங்கே ஒரு நாளேனும் உன் வருகை

உன்னை அருவருக்க வைக்கிறது.....

அன்றோ நீ எங்கள்

அழகுக்கு அழகு தந்தாய்

இன்றோ நீ இங்கே

அசிங்கமெல்லாம் கூட்டிவந்து

எங்களை அவலப்படுத்துகிறாய்......

பல்லாயிரம் கிருமிகளை

நம் பாதங்களில் சேர்க்கின்றாய்....

படுக்கும் இரவினிலும்

நம்மை பாடாய் படுத்துகிறாய்....

உன் தொல்லை போதும்

நாம் அழைக்கும் வரை

வர வேண்டாம்.....

அழையாத விருந்தாளியாய்

எங்களுக்கு அவலத்தை

தர வேண்டாம்.....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

கவி வரிகள் நன்று ........வரப்போகும் மழைக்காக ..கூடாரத்து அகதிக்களுக்காக ,

நம் இனத்துக்காக உங்கள் சிந்தை செல்கிறது . பாராடுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு விஷயங்களை ஒன்றாக்கயுள்ளீர்கள்.

காதலியுடன் ஆரம்பம் நன்றாக இருக்கிறது

பஞ்சபூதங்களில் ஒன்றின் தோற்றம் தான் மழை. அதன் வருகையை யாராலும் தடுக்க முடியாது. மழை இல்லாமல் நாம் வாழவும் முடியாது. இயற்கையின் நியதியை நாம் முகம் கொடுத்தே ஆக வேண்டும்.

முகாமில் இருக்கும் மக்களின் அவலம் புரிகிறது. அதற்கு வருணபகவானின் கொடையை வெறுக்கலாமா? மழை விவசாயிகளின் அத்தியாவசிய தேவை அல்லவா.

எனது கருத்தை கூறினேன், பிழை என்றால் மன்னிக்கவும்.

அருமையான கவி வரிகள்

பாராட்டுக்கள் இளங்கவி

உங்கள் கவிதை தொகுப்புக்கள் புத்தகவடிவில்

வெளிவரபோவதாக அறிந்தேன்.

வாழ்த்துக்கள்.

விபரங்களை எனக்கும் தனிமடலில் அறியத்தரவும்.

நன்றி.

பாராட்டுக்கள் இளங்கவி.... கவிதை நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை சூப்பர்.

மழை......

அந்த நேரம் என்

அழகுச்சிலை வருவாள்...

நீ துளிகளாய் அவள் முகத்தினிலே

தொட்டதுமே ஒட்டிடுவாய்....

ஒட்டிய துளியொன்று

அவள் மூக்குவளி இறங்கிவந்து

அவள் மேல் உதட்டை தொட்டுவிட....

அவள் அதை உள்ளிழுத்து

என் பக்கமாய் ஊதிவிட....

அப்போது அவள்

உதடு செய்யும் ஜாலத்தில்

என்னுயிரைக் கொடுத்தவன் நான்....

அந்த மொழியை இன்றுவரை

என் இதயத்தில் ரசிப்பவன் நான்........

................................................

நம் அனைத்து உறவுகளும்

முகாமில் அடைந்திருக்க

அங்கே ஒரு நாளேனும் உன் வருகை

உன்னை அருவருக்க வைக்கிறது.....

அன்றோ நீ எங்கள்

அழகுக்கு அழகு தந்தாய்

இன்றோ நீ இங்கே

அசிங்கமெல்லாம் கூட்டிவந்து

எங்களை அவலப்படுத்துகிறாய்......

பல்லாயிரம் கிருமிகளை

நம் பாதங்களில் சேர்க்கின்றாய்....

படுக்கும் இரவினிலும்

நம்மை பாடாய் படுத்துகிறாய்....

உன் தொல்லை போதும்

நாம் அழைக்கும் வரை

வர வேண்டாம்.....

அழையாத விருந்தாளியாய்

எங்களுக்கு அவலத்தை

தர வேண்டாம்.....

இளங்கவி

இளங்கவி அண்ணா காதலியையையும்,அவலத்தையும் ஒன்றாய் அதை நன்றாய் சொல்லி உள்ளீர்கள்.

இதைத்தான் சொல்லுவதோ ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று :lol::(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா அக்காவுக்கு

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு எல்லோரும் விரும்பும் ஓர் இயற்கையின் கொடை மழை அதைக்கூட வெறுக்கும் நிலையில் நாங்கள் இன்று......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Dr yogan

எனது எல்லாவிதமான எழுத்திலும் எங்கள் மக்களின் இன்றைய அவலங்களையும் சேர்த்துச் சொல்லவேண்டுமென்ற காரணத்தினாலேயே சிறிதாக காதலெனும் உணர்வில் தொடங்கி அந்த இன்பமெல்லாம் பறிபோகி எங்கள் மக்கள் இன்று அவலப்பட்டுக்கொண்டிருப்பதாக முடித்தேன்.

மற்றும்படி நான் மழையை வெறுப்பவன் அல்ல... கஸ்ரப்படும் மக்களுக்காகவாவது கொஞ்சம் தள்ளிவரக்கூடாதா என்று இயற்கையை வேண்டுவதாகவும் வேண்டாத நேரத்தில் நீ வருவதனால் உன்னில் சிறிது வெறுப்படைகிறேன் என்பதாகவே எழுதியுள்ளேன்.....

மேலும் இயற்கையின் செயற்பாடுகள் எதுவுமே நம் கைகளில் இல்லை அத்துடன் கவிதைக்கு சில பொய்களும் அழகுதானே!

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

marumakan

உங்கள் கருத்துக்கு நன்றி.....

எனது தொகுப்பு இந்த வாரத்துக்குள் வெளிவரவேண்டும். தமிழ் நாதம் இணையத்தளத்தில் வடலியின் விளம்பரத்தில் http://www.vadaly.com ஈழத்து எழுத்தாளர்களின் விளம்பரத்தில் எனதும் விரைவில் வரும் நேரம் இருந்தால் பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக உள்ளது உங்களின் கவிதை.மழையை நன்றாக வர்ணித்துள்ளீர்கள்.எங்களுக்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு

எங்கள் அவலங்களைச் சொல்லவேண்டும் ஆனால் அவலங்களை மட்டுமே சொன்னாலும் மக்களின் மனங்கள் சோர்வடையுமல்லவா. அதனால் தான் இந்த இணைப்பை பயன்படுத்தினேன்.... இணைப்புக்கு மழையைப் பயன்படுத்தினேன்....

கருத்துக்கு மிக்க நன்றிகள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.....

இயற்கையால் ஏற்படும் எங்கள் அவலங்களுடன் சிறிது காதல் உணர்வையும் சேர்க்க நினைத்ததே இந்தக் கவிதை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் இளங்கவி,

கவிதைவரிகள் மனத்தில் எம் உறவினர்கள் பட்ட துன்பத்தை கோடிட்டுகாட்டிநிற்கின்றன.

மழைவந்தது, நச்சுப்பாம்புகள் புற்றீசல்கள் போன்று எங்கள் உறவுகளை தீண்டின. மழை எங்கள் அடைகலம் தேடி பதுங்குளிகளுக்குள் போய் எத்தனை அவலங்கள் தந்தது. யுத்தகாலத்தில் சென்ற வருடம் என்றுமில்லாத அளவு யாழ்பாணத்தில் அவலம் தந்த வருணபகவான். இறுதியில் கடைசிநேரத்தில் வருணபகவான் நம் உறவுகளை திரும்பியும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

வருணபகவானை குறைசொல்லி குற்றமில்லை. யாவற்றுக்கும் மகாவலிகங்கையை வடக்கிற்கு 60பதுகளில் திசை திருப்பிவிட மறுத்த சிங்களம் செய்த கொடுமை.

இளங்கவி தொடருங்கள், தரவுகள் வரலாற்றில் பதியப்படட்டும்

பென்மன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

penmann

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி......

நான் மழையை குறை கூறவில்லை மக்கள் அவலப்படும் நேரங்களில் வந்து மேலும் அவலத்தைத் தராமல் தாமதித்து வா என்றே வேண்டிநின்றேன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.