Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஷமப்பிரசாரம்

Featured Replies

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மெதுவாக புலிகளுக்கு எதிரான விஷமப்பிரசாரம் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது

....

களத்தில் நடந்தது என்ன ? கடைசிக்கட்ட போர் நேரடி சாட்சி... முகாமில் இருந்து தப்பியவர்களின் சாட்சிய என்ற பெயர்களில் .. பல கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

இவற்றின் நோக்கம் புலிகளின் மீது அவதூறு பரப்புவது , புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர், அவர்களெ மக்களின் அழிவுக்கு காரணம் என்ற எண்ணத்தை மக்களிடம் நிறுவுவதே..

என்றாவது ஒரு நாள் சிங்களன் செய்த கொடூர இன அழிப்பு வெளிப்படும் அப்போது அதற்கு காரணம் சிங்களன் அல்ல ,புலிகளே என்ற எண்ணத்தை மக்களிடம் இப்போதே விதைப்பதே இந்த விஷமக்கட்டுரைகளின் நோக்கம்.

புலிகளின் பலவீனங்களில் சில ... அவர்களின் பலவீனமான பரப்புரை, மறுப்புகள் வெளியிடாமை,

அவர்கள் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் பலமான மறுப்புகள் தெரிவிக்காதது, அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டது போன்ற தோற்றத்தை எதிரிகள் மக்களிடம் ஏற்படுத்த எளிதாக இருந்தன.

இப்போதும் அதே நிலை தொடர்கிறது...

களத்தில் இருந்து வந்தவர்கள் என்ற போர்வையில் மெதுவாக புலிகளை அனைத்து மக்கள் அவலங்களுக்கும் குற்றம் சுமத்தும் முயற்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை....

ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டிய கடமைகள்...

இத்தகையை விஷமப்பிரசாரங்களுக்கு பலமான மறுப்புகள் தெரிவிக்க வேண்டியது.... புலிகளுக்கு எதிராக பரப்புரை செய்து சிங்களன் செய்த இனப்படுகொலையை மறைக்க முனைவோர் எல்லோரும் , சிங்களன் கைக்கூலிகள் என்று நிறுவவேண்டும்.

அதற்கு வன்னி மக்கள் விடுவிக்கப்பட்டு , சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்... அப்போது தான் இந்த கள சாட்சிகளின் போலி முகங்கள் கிழியும்.

அப்படி சிங்களன் மீது தவறில்லை புலிகள் மீது தான் தவறு என்றால் ஏன் சிங்களன் , பன்னாட்டு அமைப்புகளை முகாம்களுக்குள் அனுமதிக்கவில்லை? முகாம்களில் இருந்து தப்பி தமிழகம் போய் பேட்டி கொடுப்பவர்கள் ,சிங்களன் கைக்கூலிகள் என்று நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது...

இதற்கு ஈழத்தமிழர்கள், மக்களை மீட்டு ,சுதந்திரமாக போர்க்குற்றம் பற்றி விசாரிக்க விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது மிக அவசியம்....

இங்குள்ள மக்களில், புலிகளுக்கு ஆதரவாக இருந்த பலர், இத்தகைய கட்டுரைகளை ப்படித்து விட்டு.. புலிகள் மக்களை மனிதகேடயங்களாக பாவித்தது தவறு என என்னுடன் விவாதிக்க த்தொடங்கியுள்ளனர்.

எதிரி தெளிவாக காய் நகர்த்துகிறான் .....

--------------------

நீங்கள் விசமம் எண்று சொல்வத்தைத்தான் ஈழத்தமிழர்கள் பலரே எண்ணி கொண்டும் சொல்லிக்கொண்டும் திரிகிறார்கள்.. இதுக்கை நீங்கள் தமிழ் நாட்டுகாறரை குறை சொல்லி கொண்டு... ( தென்னிந்தியர்கள் பலருக்கும் சிங்களன் சொல்வது தான் எப்போதும் வேத வாக்கு என்பது வேறை பிரச்சினை )

இங்கை யாழுக்கையே பலர் எழுதும் கருத்துக்களை வாசியுங்கள்... அவர்கள் ஏதோ ஒருவகையில் புலிகளை மறைமுகமாக தன்னும் குற்றம் சாட்டி கொண்டு இருக்கிறார்கள் என்பது புரியும்... இப்படி எல்லாருக்குமே புலிகள் எல்லாவற்றையும் தாங்கும் சுமை தாங்கிகள்... தாங்கள் செய்த குற்றத்தை புலிகள் மீது எப்போதும் போடும் இனத்தின் பிரதி நிதிகளாக இருந்த புலிகள் இதையும் சுமக்க வேண்டியது....

தன்னின மானத்தை உயர்வாக மதிக்காத எந்த ஒரு இனமும் எந்த நிலையை அடைய வேண்டுமோ அதை தமிழர்கள் அடைந்து இருக்கிறார்கள்...

என்ன ஒரு கவலை 30 வருடமாக போராடிய தலைவர் மற்றும் போராளிகள் பற்றியது தான்...

Edited by தயா

தமிழ்நாடு என்னும் மாயை என்னை விட்டு போய் சிலகாலமாகிறது..

எல்லா இனத்துக்காறரும் தன்றவர் பிழைஎண்டாலும் மறைச்சுகொண்டு... தோள் கொடுக்கிறார்கள்..

ஆணால் நம்மவரோ................. சிரிப்பும்.. கோபமும்.. அழுகையும்.. ஒண்றாய் வருது..

  • கருத்துக்கள உறவுகள்

றோ ,இலங்கை அரசு இப்போ இந்தியா , வெளிநாடுகளில் தமது பிரச்சாரங்களை முடுக்கி விட்டது காலம் காலமாக நடந்து வருகிறது. கடந்த தேர்த்தலில் இதன் விளைவுகளை நாம் கண்டோம்.

இன்று இவ்வளவு இன படுகொலையை செய்த மகிந்த குழாம் ஜாலியாக எந்த சட்ட சிக்கலிலிலும் மாட்டாமல் இருப்பதற்கு இந்தியா தான் முதற்காரணம்.

தமிழ் நாட்டு மக்கள் என்று என்று போராட்ட குணம் மிக்க மக்களாக அதாவது மத்திய அரசுக்கு எதிராகவும் , தமிழர்களுக்கு எதிரான தலைமைக்கு எதிராக போராடுகிறார்களோ அன்று தான் உலகில் வாழும் தமிழர்களுக்கான விடுதலை எனும் பாதை திறக்கப்படுகிறது. சிந்தித்து பாருங்கள் ஜேர்மனிய மக்களின் எண்ணிக்கையளவில் நாம் உள்ளோம். ஆனால் உலகில் யாரும் கண்டு கொள்ளாத இனமாக உள்ளோம்.

எப்போ நாம் ஆயுத ரீதியாக தோற்கடிக்க பட்டோமோ அன்றே இந்திய , இலங்கை, உலக அரசுகள் எம்மில் பிரிவினையை ஏற்படுத்தி எம்மை பிளவு படுத்தி எமது பலத்தை மழுங்கடிக்க பகீரத பிரயதனம் எடுக்கிறார்கள். அதில் ஓரளவுக்கேனும் வெற்றி கண்டுள்ளார்கள்.

உண்மையாக இவர்கள் என்ன எமக்கு எதிராக செய்கிறார்கள் என்ற விளக்கம் எம்மில் ஏற்படும் போது தான் நாம் அவர்களுக்கு எதிராக செயற்படமுடியும்.

எமது மக்களை வவுனியா முகாமில் வைத்திருப்பது அவர்களின் போராட்ட குணங்களை மழுங்கடிப்பது,எதிர்கால சந்ததியை உருவாக விடாமல் குடும்பங்களை பிரிப்பது, போராட்ட குணம் மிக்க இளைஞர்கள், யுவதிகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு தள்ளுவது மற்றும் உணவு உறைவிடங்களை சரியாக கொடுக்காமல் மக்களை மனோவியல் ரீதியாக வதைத்து போராட்டத்திற்கு உதவியதால் தான் இவ்வளவு விளைவுகளும் என்ற கருத்தை மிக தந்திரமாக புகுத்துகிறார்கள்.இதே முடிவு (50000 மக்கள் கொல்லப்பட்டது)தான் உரிமை கேட்கும் சிறுபான்மை இனத்துக்கு சிறுபான்மை இனத்துக்கு கிடைக்கும் பரிசு என பிரச்சாரம் செய்கிறார்கள்.

சிங்கள அரசுக்கு தெரியும் முற்று முழுதான ஒத்துழைப்பு புலம் பெயர்நாடுகளில் இருந்து தான் வருகிறது என்று. அவர்களுக்கான ஒரே வழி இந்த ஊடகங்கள் மூலம் மக்களை குழப்புவது தான். இதற்கு ஒட்டு குழுக்கள், எமக்கு எதிரான சக்திகளை சிறிலங்கா அரசு பயன்படுத்துகிறது.

நாம் மிக தெளிவாக , அவதானமாக செயற்படுவோமேயானால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

எல்லா இனத்துக்காறரும் தன்றவர் பிழைஎண்டாலும் மறைச்சுகொண்டு... தோள் கொடுக்கிறார்கள்..

உதை பற்றி யாரையாவது கேள்வி கேக்க வேணும் எண்டு நீண்ட நாளாய் எனக்கு ஒரு ஆசை... மற்றவை என்ன நினைக்கினம் எண்டு அறியும் ஆவல்தான் காரணம்... இண்டைக்கு நீங்கள் மாட்டினீங்கள்....

என்ர கேள்வி என்ன எண்டால் இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போது எல்லா துன்பங்களையும் தாங்கி கொண்டு சிங்களவர்கள் எல்லாரையும் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வந்து ஒரு ஒற்றுமையை கட்டி எழுப்ப சிங்கள ஆட்ச்சியாளர்கள் என்ன வளிமுறையை கையாண்டார்கள்....

தமிழர் நம்பிக்கையை யும் ஒற்றுமையையும் கட்டி எழுப்ப செய்யாதது எது...

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வேலவன், உங்கள் ஆதங்கம் புரிகின்றது.

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது , சர்வதேசத்தினால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை மக்கள் செறிவாக இருக்கும் பகுதிகளில் ஸ்ரீ லங்கா அரசு பாவித்ததற்கு அத்தாட்சியாக , ஐக்கிய நாடுகள் சபை செய்மதிப் படங்களை எடுத்து வைத்துக்கொண்டு கமுக்கமாக இருந்த போது ........ வெளியில் கொண்டு வந்தவர் ஒரு மேற்குலக ஆங்கில பத்திரிகையாளர் . அதன் பின்பே ஐக்கிய நாடுகள் சபை தனது படங்களை வெளியிட்டது . அதன் பின்பும் பான் கி மூன் என்பவர் ஸ்ரீலங்கா அரசை கண்டிக்காமல் ...... போர் நடந்த பகுதிக்கு விஜயம் செய்கின்றேன் என்று பம்மாத்து காட்டிப்போட்டு , கண்டிக்குப் போய் விருந்துண்டு மகிழ்ந்த ஐ.நா.வும் ,

உலகின் ஜனநாயகம் பேசும் பெரிய வல்லரசு நாடுகளும் , ஐரோப்பிய யூனியனும் தமிழர் மீது நடந்தது கொடூரமான தாக்குதல் என்று அறிந்தும் மௌனமாக இருக்கும் போது ......

யாருக்கு நியாயத்தை எடுத்து சொல்ல ?

உண்மையில் நித்திரையாக இருப்பவனை தட்டி எழுப்பலாம் .

ஆனால் நித்திரை போல் நடிப்பவனை எக்காலத்திலுல் தட்டி எழுப்பமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இனத்துக்காறரும் தன்றவர் பிழைஎண்டாலும் மறைச்சுகொண்டு... தோள் கொடுக்கிறார்கள்..

உண்மை தான். சில காலங்களுக்கு முன் இஸ்ரேலிய தலைவர் ஒருவர் நோய் வாய்ப்பட்டது ஊடகங்கள் மூலம் கசிந்தது. ஆனால் பல காலமாக அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த ஊடகத்தால் கூட ஊகிக்க முடியாமல் இருந்தது. எதிர்கட்சிகள் கூட ஒரு சொல் வெளியில் விடவில்லை.(ஆக ஒரு தலைவரின் நோய்க்கே இப்படி என்றால்). ஒரு நாட்டு இரகசியம் எப்படி வெளிவரும் என்று நினைத்து பார்க்க முடியாது.

நாம் இன்னும் நிறையவே கற்க வேண்டியுள்ளது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

என்ர கேள்வி என்ன எண்டால் இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போது எல்லா துன்பங்களையும் தாங்கி கொண்டு சிங்களவர்கள் எல்லாரையும் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வந்து ஒரு ஒற்றுமையை கட்டி எழுப்ப சிங்கள ஆட்ச்சியாளர்கள் என்ன வளிமுறையை கையாண்டார்கள்....

சாதாரண மக்களை எவ்வளவு பயப்படுத்த முடியுமோ அவ்வளவு பயப்படுத்தினார்கள்.. பயம் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, தங்களை காப்பாற்ற சிங்கள ராணுவத்தால் மட்டும்தான் முடியும் எண்று திரும்ப திரும்ப விளங்கப்படுத்தினார்கள்..... விடுதலை புலிகள் அதற்க்கு சரிஎதிர்மாராக நடந்துகொண்டார்கள்.. எப்படி எண்டு விளக்கமா சொல்ல வெளிக்கிட்டா எங்கட தமிழ் மண்டைக்கு முஸுபாத்தியா இருக்கும்..

தமிழர் நம்பிக்கையை யும் ஒற்றுமையையும் கட்டி எழுப்ப செய்யாதது எது...

தெரியவில்லை..தயா..

நான், ஒரு நூறு முறையாவது 'தமிழீழ விடுதலை புலிகளை' ஈ-மெய்லில் தொடர்புகொண்டு தமிழை ஆங்கிலத்தில் எழுதும்போது TAMIL எண்டும்........ TAMIZ / TAMIZH இல்லையெண்டும் ஒரு படிச்சவர் பெரியவரை வைத்து அறிக்கை விடுமாறு கேட்டுக்கொண்டேன்.. பதிலே வரவில்லை.

Edited by Panangkai

சாதாரண மக்களை எவ்வளவு பயப்படுத்த முடியுமோ அவ்வளவு பயப்படுத்தினார்கள்.. பயம் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, தங்களை காப்பாற்ற சிங்கள ராணுவத்தால் மட்டும்தான் முடியும் எண்று திரும்ப திரும்ப விளங்கப்படுத்தினார்கள்..... விடுதலை புலிகள் அதற்க்கு சரிஎதிர்மாராக நடந்துகொண்டார்கள்.. எப்படி எண்டு விளக்கமா சொல்ல வெளிக்கிட்டா எங்கட தமிழ் மண்டைக்கு முஸுபாத்தியா இருக்கும்..

மிக துல்லியமாக சொன்னால் இராணுவ வெற்றிகளை காட்டி சிங்களவரை அரசு மயக்கியது எண்று சொல்லாம்..

எனக்கு புலிகளின் செயற்பாடுகளில் எந்த குறையும் தெரியவில்லை... ஆனால் புலிகளின் ஆதரவு செயற்பபட்டாளர்களின் ( அள்ளக்கைகள்), மக்களை குழப்ப எண்று உருவான தமிழர்கள் குழப்பியவைகள் அதிகம்.... அதில் ஒரு தெளிவை மிகச்சிலருகு ஊட்ட முடிந்தால் கூட சந்தோசம்தான்...

இதை தனியா வேற தலைப்பில் பேசுவம்.... வேலவனின் எரிச்சலை வாங்கி கட்டி கொள்ள வேண்டாம்..

  • தொடங்கியவர்

இந்த விஷமப்பிரசாரத்தை முறியடிக்க ...

ஈழத்தமிழர்களால் மட்டுமே முடியும்.

உங்கள் ரத்த சொந்தங்கள், உறவினர்கள் முகாம்களில் எப்படியும் இருப்பார்களே அவர்களிடம் உங்களுக்கு தொடர்பு இருக்கும் இல்லையா ... அவர்களிடம் பெற்ற தகவல்களை, சிங்கள அரசு பாவித்த கனரக ஆயுதங்கள், நச்சு,மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பாவனை பற்றிய செய்திகளை நீங்கள் வெளிக்கொண்டு வந்து பிரசாரம் செய்ய வேண்டும்!

அவற்றை தமிழக ஊடகங்களுக்கும் அனுப்ப வேண்டும்!

சாட்சிகள் உண்மையை சொல்வார்கள் என்று அஞ்சியே சிங்களன் மக்களை அடைத்து வைத்து கொல்கிறான் என்று மேற்குலக நாடுகளை இனப்படுகொலைக்கு துணைபோவதை நிறுத்தி விட்டு முகாம்களில் உள்ள மகக்ளை சுதந்திரமாக பேட்டிகாணவும் , சிங்கள அரசை போர்க்குற்றங்களுக்காக விசாரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரசாரம் செய்ய வேண்டும்!

தமிழர்கள் இருவர் ஆஸ்திரேலியாவில் நடை பயணம் செல்வது போல் தமிழன் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் போராட வேண்டும்!

போர்க்குற்றங்களுக்காக சிங்களனை விசாரிக்க தாமதம் ஏற்பட்டால் , தடயங்கள் அழிக்கப்பட்டு ,நீதியும் கொல்லப்படும் அபாயம் உண்டே!

சர்வதேசம் தூங்குவது போல் நடிக்கலாம் ஆனால் நாம் தான் தூங்குபவன் போல் நடிப்பவன் காதுகளில் குச்சியை விட்டு குடைய வேண்டும்.... எரிச்சல் தாங்காமல் அவர்கள் நடிப்பை நிறுத்த வேண்டும்!

உங்கள் ரத்த சொந்தங்கள், உறவினர்கள் முகாம்களில் எப்படியும் இருப்பார்களே அவர்களிடம் உங்களுக்கு தொடர்பு இருக்கும் இல்லையா ... அவர்களிடம் பெற்ற தகவல்களை, சிங்கள அரசு பாவித்த கனரக ஆயுதங்கள், நச்சு,மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பாவனை பற்றிய செய்திகளை நீங்கள் வெளிக்கொண்டு வந்து பிரசாரம் செய்ய வேண்டும்
!

சிங்களவன் எந்த ஆயுதங்களையும் பாவிக்கட்டும் (பாவிப்பான் காரணம் அவன் எதிரி)நாங்கள் தாங்கி கொள்வோம் ஆனால் எங்கன்ட பெடியள் எங்களுக்கு எதிராக சிறிய (பொல்லு)தடியை கூட பாவித்தமை தப்பு என்று அந்த மக்கள் கூறுகிறார்கள்

  • தொடங்கியவர்

!

சிங்களவன் எந்த ஆயுதங்களையும் பாவிக்கட்டும் (பாவிப்பான் காரணம் அவன் எதிரி)நாங்கள் தாங்கி கொள்வோம் ஆனால் எங்கன்ட பெடியள் எங்களுக்கு எதிராக சிறிய (பொல்லு)தடியை கூட பாவித்தமை தப்பு என்று அந்த மக்கள் கூறுகிறார்கள்

குழப்புறீங்களே.....

குழப்புறீங்களே.....

எனது உறவுக்காரர் சொன்னதை சொன்னேன் ....கடைசி நேரத்தில பெடியள் எங்களை க,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

தன்னின மானத்தை உயர்வாக மதிக்காத எந்த ஒரு இனமும் எந்த நிலையை அடைய வேண்டுமோ அதை தமிழர்கள் அடைந்து இருக்கிறார்கள்...

என்ன ஒரு கவலை 30 வருடமாக போராடிய தலைவர் மற்றும் போராளிகள் பற்றியது தான்...

அருமையான கருத்து :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.