Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் புதிய தலைவராக நோர்வேத் தமிழர்? செய்தி உண்மையானால் கைது செய்து ஒப்படைக்க நோர்வேயை கோருவோம்: சிறிலங்கா அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் புதிய தலைவராக நோர்வேத் தமிழர்? செய்தி உண்மையானால் கைது செய்து ஒப்படைக்க நோர்வேயை கோருவோம்: சிறிலங்கா அரசு

விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில் அந்தச் செய்தி உண்மையானால் அவரைக் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை விடுப்போம் என வெளிவிவகார செயலாளர் பாலித ஹோகன கூறியுள்ளார்.

நோர்வேயில் வெஸ்ற்லான பகுதியைச் சேர்ந்தவரான தமிழர் ஒருவர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக அப்பென் போஸ்ரன் (Aften Posten) பத்திரிகை தெரிவித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியானதாகும் என்று வெளிவிவகாரச் செயலாளர் பாலித ஹோகன கூறியுள்ளார். கெரில்லாக் குழுவான விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவர் நியமிக்கப்படும் சாத்தியம் குறித்து அவருக்கு கூறப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்ததாக நோர்வே செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திற்கான முன்னணி வேட்பாளர்களின் ஒருவராக தமிழ் வெஸ்ற்லான பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் குறிப்பிடப்பட்டிருப்பதை கேள்வியுற்று தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக கூறுகிறார். அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகள் விடுதலைப்புலிகளை தடைசெய்தபோதிலும் நோர்வே தடைசெய்யவில்லை. இந்நிலையில் நோர்வேயில் விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவர் சுதந்திரமாக நடமாடுகின்றார் என்பது அசாதாரணமான விடயமாகும் என அப்பென் போஸ்ரனுக்கு பாலித ஹோகன கூறியுள்ளார்.

இது தொடர்பாக தாம் நோர்வே அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது இயற்கையான விடயம் என்றும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் அவரை நிச்சயமாக கையளிக்குமாறு நாம் கோரிக்கை விடுப்போம் என்றும் அவர் கூறினார். விடுதலைப்புலிகளின் எஞ்சியிருக்கும் தலைவர்களைப் பிடிப்பதற்கு ஏனைய நாடுகள் ஏற்கனவே ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக கூறிய ஹோகன, அண்மையில் பத்மநாதன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் பத்மநாதனும் ஏனைய தலைவர்களும் எமக்கு பல தகவல்களை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட தமிழர் நோர்வேயின் மேற்குக் கரையில் வசிப்பவர் என்றும் அவர் விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவர் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் தலைவராகும் சாத்தியம் இருப்பதாக பல வட்டாரங்கள் குறிப்பிட்டன. நோர்வே இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகளின்போது மத்தியஸ்தராக பங்காற்றியுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போதும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தது.

நோர்வேத் தமிழரான இந்த மனிதர் 2005 ம் ஆண்டிலிருந்து நோர்வேயிலிருந்து இயங்கி வருவதாகவும், பத்மநாதனின் வன்முறையற்ற பாதைக்கு எதிரான அணியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவர் மிகவும் ஆபத்தான மனிதர் என்று இந்தியாவின் புகழ்பெற்ற பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் கே போன்ஸ்லே கூறியுள்ளார். நோர்வேயில் சுதந்திரமாக வெளிநாட்டு அமைப்பொன்றின் தலைவர் இயங்கினால் அது நோர்வேக்கு துரதிஸ்டமான விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் முன்னர் சமாதான அனுசரணையாளராக செயற்பட்டவருமான எரிக் சொல்கெய்ம் கூறுகையில்,

நாங்கள் அறிக்கைகளை பதிவு செய்துள்ளோம். எது உண்மை, எது பொய் என்பது பற்றி எமக்கு சிறிதளவே தெரியும் என்று அவர் கூறியதாக அப்ரென் போஸ்ரன் பத்திரிகை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டால் சர்வதேச ரீதியாக அது தொடர்பாக சகிப்புத்தன்மை ஏற்படாது என்று சொல்கெய்ம் கூறியுள்ளார்.

அவர் மிதவாத கொள்கையுடையவர். அகிம்சாவழியில் செல்பவர். விடுதலைப்புலிகள் எந்தப் பாதையை இப்போது தேர்ந்தெடுக்கப் போகின்றனர் என்பது பற்றி எப்போது எமக்கு தெரியாது என்று நோர்வே அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக அப்ரென் போஸ்ரன் கூறியுள்ளது.

இது இவ்வாறிருக்க, விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுபவரின் மனைவி தனது கணாவருக்கு விடுதலைப்புலிகளின் நடவடிக்கையுடன் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். 2005 இல் திருமணம் செய்த அவர்களுக்கு பிள்ளையொன்று உள்ளது. 2004 இல் விடுதலைப்புலிகளின் தூதுக்குழு நோர்வேக்கு வருகை தந்தபோது அவரும்(கணவரும்) வந்ததாக அப்பெண் கூறியுள்ளார். ஆனால், புதிய தலைவராக அவர் நியமிக்கப்படும் சாத்தியத்தை வதந்திகள் என்று அவர் நிராகரித்திருக்கிறார்.

தரக்குறைவான பிரசாரத்தினால் எமக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பலர் ஏன் அவருடைய பெயரை குறிப்பிடுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. எனது கணவர் அரசியல் ரீதியாக செயற்படுபவர் அல்ல என்று அவர் தெரிவித்திருக்க்கிறார். தனது கணாவர் புலிகளின் தலைவர் எனக் கூறுபவர்கள் பற்றி பொலிஸார் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பொலிஸ் பாதுகாப்புத் துறை இது தொடர்பாக அப்ரென் போஸ்டனுக்கு கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக அப்பத்திரிகை கூறியுள்ளது.

http://www.meenagam.org/?p=7866

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சக்கணக்கில் தமிழ்மக்கள் போரின் மத்தியில் சிக்குண்டபோதும் பல ஆயிரம் உயிர்கள் தடைசெய்யப்பட்ட ஆயுதப்பாவனையால் மடிந்தபோதும் காட்டாத அக்கறையை நோர்வேயின் பத்திரிகைகள் இப்போது தமிழர் விடயத்தில் காட்டத் தொடங்கியுள்ளன. காரணம் விடுதலைப்புலிகள் அமைப்பு புதிய தலைமையொன்றைப் பெற்று மீண்டும் தலைதூக்கிவிடுமோ என்ற பயம்தான்.

புலிகளுடனான தொடர்பைக் கடைசிவரை பேணிவந்த நோர்வேயிலிருந்து ஒருவர் புலிகளின் தலைமையை ஏற்பதென்ற செய்தி இங்கு அரசியல் வட்டாரங்களை கலக்கமடையச் செய்துள்ளது உண்மை. இதுபற்றி எரிக் சுல்கைம் "புலிகள் அமைப்பு புற்றுயிர் பெறுமென்று சர்வதேச சமுகம் பசியுடன்(ஆவலுடன்) காத்திருக்கவில்லை" என்று கருத்து தெரிவித்தபோது தற்போதைய செய்திகளை அவதானித்துவரும் வெளிநாட்டு அமைச்சின் இன்னுமொரு பெயர்குறிப்பிடாத முக்கிய பிரமுகர் "பத்மநாதனைக் கைதுசெய்த நடவடிக்கையினூடக இலங்கை அரசு (வேட்டையில்) தனது காலிலேயே வெடி வைத்துக்கொண்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்றார்.

இவ்வாறான அஜீரண வார்த்தைப்பிரயோகம் அரசியல் வட்டாரங்களில் சகஜம்தான் எனினும் இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களை அறிந்து கொள்வதால் தமிழர் விவகாரத்தில் நோர்வே எப்படியான நிலைப்பாட்டை ஆரம்பம் முதலே கொண்டிருந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்கு உதவும்.

வருங்கால தேசியத்தலைவர் நெடியவன், முக்கிய பிரமுகர்கள் ரெஜி, வாகீசன் போன்றோர் களம் சென்று தமது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இங்கிருந்து ஒன்றும் செய்ய முடியாது. ......... எல்லாவற்றுக்கும் மேலாக இனியாவது எமது பணத்தில் சொகுசு வாழ்வு வாழ்வதை நிறுத்த வேண்டும்.

ஏதோ ஒரு பழமொழி ..... "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டானாம்" ......

1995ல் புலிகளில் இணைவு. களம் என்று ஒன்றும் காணவில்லை. புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக பதிவியேற்று புலிகளின் பேரளிவுக்கு பின்புலமாக நின்ற காஸ்ரோவுக்கும், முன்னால் அரசியல் பிரிவு பொறுப்பாளருக்கும் ஆலவட்டம் பிடித்ததினால் வந்த பதவிகள்.

இப்போது 300 மில்லியன்களின் ராஜாக்கள். அங்கு அனுப்புகிறோம், இங்கு அனுப்புகிறோம் என்கிறார்கள். ஆனால் அனுப்பப்பட வேண்டிய இடங்களுக்கு அனுப்ப தயங்குகிறார்களாம். ஏன்?????

ம்ம்ம்ம்..... வெளிநாட்டு வாழ்வு, அதுவும் ராஜ வாழ்வு, ஓசிப்பணத்தில் ..

...... கொடுத்து வச்சவங்களடாப்பா ....

வருங்கால தேசியத்தலைவர் நெடியவன், முக்கிய பிரமுகர்கள் ரெஜி, வாகீசன் போன்றோர் களம் சென்று தமது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இங்கிருந்து ஒன்றும் செய்ய முடியாது. ......... எல்லாவற்றுக்கும் மேலாக இனியாவது எமது பணத்தில் சொகுசு வாழ்வு வாழ்வதை நிறுத்த வேண்டும்.

ஏதோ ஒரு பழமொழி ..... "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டானாம்" ......

அட லூசுகளே உங்களுக்கு மண்டையில ஒண்டும் இல்லையா?. இவங்கள் எல்லாரும் உங்களை கிண்டிவிட்டு தங்களை பிரபல்யப்படத்த போடும் நாடகமிது.

வன்னியில் இறுதிவரை களத்தில் நின்ற பலர் வெளியில் இப்போது இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் இருப்பபை உறுதிசெய்து மீண்டும் வருவார்கள். அதுவரை பொறுத்திருங்கள்.

ஒரேஓருவர் தான் தமிழர்களின் தேசிய தலைவர். நீங்கள் தேவையில்லாமல் அவரைப்பற்றி எழுதுகிறேன் என நினைத்து அந்த நா...யிற்க்கு பதவியை கொடுக்கிறீர்கள்.

வருங்கால தேசியத்தலைவர் நெடியவன், முக்கிய பிரமுகர்கள் ரெஜி, வாகீசன் போன்றோர்

இவர்கள் தேசியத்தின் தலைவர்கள் அல்ல, தேசியத்தை துலைத்தவர்கள்! ... இனத்தின் சாபக்கேடுகள்!!

இவர்கள் தேசியத்தின் தலைவர்கள் அல்ல, தேசியத்தை துலைத்தவர்கள்! ... இனத்தின் சாபக்கேடுகள்!!

ஏன் இப்படி எல்லாம் ஆள் ஆளை பழி சுமத்தி கொல்கிறீர்கள். இவர்கள் எல்லாம் தலைவர் காலத்தில் தங்கள் பணியை செவ்வனே செய்தவர்கள். தலைவரின் பணிப்பின் பேரில் வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப பட்டவர்கள்.

எல்லாரும் தோற்று போனபின் ஒருவர் ஒருவரை குற்றம் கண்டு பிடித்து தூற்றுவது நல்லதல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

அன்று பத்மனாதனனை செயற்பட விட மாட்டோம் என்றார்கள், இப்ப இவர்களை செயற்பட விடமாட்டோம் என்கிறீர்களே பணம், பணம் என்று ஏன் அடித்துக்கொள்கிறீர்கள்?ஒரு புனித இலட்சியத்தை பணத்துக்காக விற்று விடாதீர்கள்,போதாததுக்கு ஏதோ 3 இலட்சம் வன்னி மக்களில் அக்கறை உள்ளவர்கள் மாதிரி கருத்து வேறு?

ஏன் சகோதரங்களே இப்படி இருக்கிறீர்கள்?

செல்வராஜா மாஸ்டர் சொல்வாராம் " உன்னை நான் முதலில் மனிதனாக்குகிறென் பின்னர் போராளியாக்கலாம்" என்று.

சிங்களவனை இஸ்ரேல் காரன் சொன்னானாம் அண்மையில தான் மரத்தால இறங்கின ஆக்கள் எண்டு(குரங்குகள்) ஆனால் எங்கட ஆட்கள் இன்னமும் மரத்திலதான் இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.