Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் யுவதிகள் பலர் கர்ப்பம் தரித்திருக்கின்றார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று நான் இணையத்தில் படித்த செய்தி நெஞ்சை சுட்டெரித்தது அதாவது விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் இனவெறி கொண்ட சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழ் யுவதிகள் பலர் கர்ப்பம் தரித்திருக்கின்றார்கள்

ஆனால் அவர்களுக்கே தெரியாது எவ்வாறு தரித்தார்களென்று

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி வாசித்து எம் நெஞ்சும் சுடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

***!

30 வருடங்களுக்கு மேலாகப் போராடித் தனது குடும்பத்தையே பலிகொடுத்த ஒரு தலைவன்மீது இலகுவாக முழுப்பழியையும் போட்டுவிடலாம்தான். வந்து தன்னிலை விளக்கம் தரமாட்டார் என்ற நம்பிக்கைதான் நமக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்களுக்கு மேலாகப் போராடித் தனது குடும்பத்தையே பலிகொடுத்த ஒரு தலைவன்மீது இலகுவாக முழுப்பழியையும் போட்டுவிடலாம்தான். வந்து தன்னிலை விளக்கம் தரமாட்டார் என்ற நம்பிக்கைதான் நமக்கு!

அது ஒன்றுமில்ல கிருபன்.. உவை கொஞ்சப் பேரின்ர நினைப்பு.. பிரபாகரன்.. அதிசப் பிறவி.. தனி ஒருவராவே கடவுள்கள் போல நின்று எதிரியை விழுத்தி தமிழீழம் காண்பார்.. அப்படிக் கண்ட பிறகு நாங்கள் புகலிடத்தில் அகதியா பதுங்கி இருந்திட்டு ஊருக்குப் போய் ஒரு நடப்புக் காட்டலாம் என்றதுதான்.

அதில மண் விழுந்ததை இன்னும் சகிக்க முடியல்ல அவர்களால. அதுக்காக ஊருக்குப் போகாமல் இருக்கப் போறதில்லை உவை. நிச்சயம் போவினம்.. என்ன நடப்புக் காட்டுறது கஸ்டம். பிறகு உவைட வாரிசுகளுக்கு சிங்களச் சிங்கங்கள் வாரிசுகள் கொடுத்து வெளிநாட்டு அனுப்பி வைப்பாங்கள். டக்களசு அம்மான் கூட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறார் களத்தில்...! :D

பிரபாகரன் ஒரு தலைவனா எல்லாவற்றையும் சரிவரவே செய்திருக்கிறார். மக்கள் சரியாக அவரைப் புரிந்து கொண்டு அவரைப் பலப்படுத்தாமல் விட்டதே இன்றைய பின்னடைவுகளுக்கு காரணம். இன்றைய பின்னடைவுகளுக்கு மக்களே காரணமன்றி புலிகள் அல்ல..! இதை ஏற்க பலருக்கு கசக்கும். ஆனால் இதுதான் உண்மை..! :lol:

------------

தும்பினியின் இடுப்பினில் டக்கிளஸ் தேவானந்தா தமிழர்களுக்கு தமிழீழத்தைக் காட்ட.. கோத்தபாய தான் முழங்கியது போன்று தமிழ் பெண்களை சிங்களச் சிங்கங்களுக்கு இரையாக்கி சிங்க தமிழ் பரம்பரையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இவற்றை தடுக்க வக்கில்லாத.. கையாலாகாத தமிழர்கள்.. இப்படிக்கா செய்தியைப் போட்டு ஒப்பாரி வைச்சுக்க வேண்டியதுதான். வேறென்ன செய்ய முடியும்.

கோத்தபாய சொன்னதைப் போல செய்கிறான். அவன் சிங்கள மக்களின் மாவீரன்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***!

இவர் எழுதிய பழைய கருத்துக்களைப் பாருங்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=173857

...

ஒரே ஒரு தலைவன் நமக்கு அமைந்ததால் தான் இன்று தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு உன்னதமான நிலையில் இருக்கிறது. இவரை நாம் தேசிய தலைவர் என்று இனியும் அழைக்காது போனால் வரலர்றில் துரோகமிழைத்தவர்களாவார்கள். 77 தேர்தல் வெற்றியை தேசிய வெற்றியாக மாற்றாத தலைமை தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜெனிவாவரை எடுத்துச் சென்றிருக்காது. வடக்கில தமிழீழமே தாரக மந்திரம் என்று முழங்கிய தலைமைகள் தெற்கிற்கு போனதும் கொந்தாய் மாத்தையா என்ற நிலைமை. இவர்களா தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பாரகள்? ஜனநாகய தலைமைகளோ அல்லது சிந்ததாந்த தலைமைகளே தேசிய விடுதலைப் போராட்டத்தை தமது சொந்த இலாபங்களுக்கே பாவித்தனர். உமா மகேஸ்வரன் ஒரு பொலிட்பீரோ வைத்திருந்தார். கூடவே ஒரு மண் வெட்டியும் வைத்திருந்தார். மத்திய குழுவில் தான் எடுக்கும் முடிவை ஆதரிக்காதவர்கள் மண்ணுக்கள் போக தான் அந்த மண்வெட்டி. சித்தாந்த ரீதியாக தம்மை வழர்க்க முற்பட்ட இயக்கங்கள் தமக்குள் முரண்பட்டு இறுதியில் சிதைந்து போயின. இந்திய உளவுத் துறையின் துணையுடன் புலிகளை அழிக்க முயன்ற அமைப்புகள் அழிக்கப்பட்டன.. நமக்கு ஒரு நல்ல தலைமை அதாவது தேசியத் தலைவர் அவர்கள் இல்லாது போயிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும். கற்பனை பண்ணி பாருங்கள். பாரிய எண்ணிக்கையான Nபுhராளிகளை ஆரம்பத்தில் கொண்டிருந்த இயக்கம் இன்று எங்கே? இவர்களை புலிகள் அழித்தாக இன்று நீலக் கண்ணீர் வடிப்பவர்களே தமது சொந்த தோழர்களை வெட்டி புதைத்தார்கள். புலிகளால் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு இயக்கம் புலிகளை அழிக்க திட்டம் தீட்டுகையில் தமக்குள் தாமே மோதி தம்மை நலிவடைந்து போயினர். இந்திய உளவுத்துறையின் அழுத்தம் காரணமாக நலிவடைந்த நிலையில் இருந்த போதும் புலிகளை அழிப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இந்த இயக்களின் உட்புசல்கள்ளே எவ்வளவு து}ரம் இவர்கள் தேசியம் மீது அக்றை கொண்டிருந்தார்கள் என்பதை நமக்கு தௌ;ள தெளிவாக தெரிய வைக்கும். விடுதலைப் புலிகளின் தலைமை அன்று முதல் இன்று வரை தேசிய விடுதலையை தவிர வேறு எதற்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை. இன்று பலாமான ஒரு கட்டமைப்பாக அது மாறியமைக்கான முன்னணி காரணம் அந்த அமைப்பின்; கொள்கைப் பற்றே.

...

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=217130

வெற்றி தோல்வி என்பது ஒரு இராணுவ களத்தில் சரிசமனானது. வெற்றி வரும்போது கொண்டாடுவதும் தோல்லியை சந்திக்கையில் துவண்டு போவதும் மனித பண்பு. ஆனால் தோல்விகள் தான் வெற்றியின் படிக்கற்கள்.

கழகங்களுக்குள் நடைபெறும் உதைபந்தாட்ட போட்டிகளை நாம் ஒரு யுத்தத்திற்கு ஒப்பிடலாம். ஒரு கழகத்தின் உண்மையான ஆதரவாளர் தமது கழகம் தோற்றாலும் வென்றாலும்ஆதரவளிப்பார்கள். ஆனால் வெற்றியை வேட்டையாடுபவர்கள் எந்த கழகம் வெல்கிறதோ அதற்கு ஆதரவளிப்பார்கள். இவர்களை ஆங்கிலத்தில் குளோரி ஹன்டேர்ஸ் என்று ஏளனமாக அழைப்பார்கள். லண்டனில் இருந்தபடி 350 மைல்களுக்கு அப்பால் இருக்கும் மான் யுனைட்டட்டை ஆதரிப்பார்கள். தொடரந்து வெற்றி பெற்ற ஒரு கழகம் என்ற காரணத்திறாகவே அவர்கள் அந்த கழகத்தை ஆதரிப்பார்கள் அவர்களும் தோல்வியை தழுவி வேற ஒரு கழகம் அவர்களின் இடத்தை பிடித்ததும் பின்னர் அவர்களை ஆதரிப்பார்கள். இநடத குளோரி ஹன்டர்ஸ் போலவே தான் நாமும் மாறுகிறோமா?

தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு விழையாட்டுடன் ஒப்பிட முடியது. வெளிநாட்டில் வெறும் பார்வையாளர்களா ஒரு பங்களிப்பை செய்யும் நாம் யுத்த கள யதார்தத்தை பரிந்து கொண்டு தான் பேசுகிறுறோமா?

புலிகள் வெற்றிபெறுகையில் ஆக்ரோஷக்கவும் தோல்வியடைகையைல் நக்கல் பண்ணவும் நாம் என்ன சினிமா ரசிகர்களா? வரலாற்றை மீண்டும் நாம் திரும்பி பாரக்கும் நேரம் வந்து விட்டது.

வியட்நாமில் வியட்கொங்குகள் இழந்ததில் சிறு பகுதியை தானும் நாம் இழக்கவில்லை. கிராமங்கள், ஏன் நகரங்கள் கூட விமான குண்டு வீச்சால் தரைமட்டமானது. அனால் வியட்நாமியர்கள் துவண்டு போகவில்லை. அந்த பழதிக்கள் இருந்து முழுவீச்சாக மிகவும் ஆக்ரோஷமாக விறுகொண்டு எழுந்தார்கள். 2 நாடுகளுடன் ஆண்டுக் கணக்கில் போரடியே சுதந்திரம் பெற்றார்கள்.

எதிரியை நாம் குறைவாக ஒரு போதும் மதிப்பிடக்கூடாது. எதிரியை நாம் குறைவாக எடைபோட்டால் நமக்க தோல்வியே தொடரும். எதிரியின் பலம் எங்கே பலமாக இருக்கிறதோ அங்கு நாம் அவர்களுடன் சண்டைபோடக்கூடாது. மாறாக எதிரி பலவீனமாக ஈரக்கையில் தாக்கினால் வெற்றி நிச்சயமே.

இந்த தோல்விகளால் புலிகளை எதிரப்பவர்கள் அல்லது அவர்களை கிண்டல் செய்பவர்கள் நிச்சயம் தேசியத்தின் மீத அன்ப கொண்டவர்களாக இருக்க முடியாது. நாம் பிடித்த ஒரு படி மண் போனாலும் அதை மீளப்பெறும் வைராக்கியமே போராடும் திறனை அதிகரிக்கும்.

புலிகள் களத்தில் பெற்ற தேல்விகள் எப்படி வெற்றியாக மாறியது என்பது வரலாறு. ஒப்பரேசன் லிபரேசன் முதல் இந்நதயி இராணு ஆக்கிரமிப்பு பின்னர் ஜெயசிக்குறு என்று நாம் திரும்பி பார்த்தால் அந்த பின் வாங்கல்களுக்கு பின் நாம் முன்னேறியது அதிகம். அந்த நம்பிக்கையுடன் வெற்றிபெற நாம் புலிகளுக்க மன உறுதியை கொடுப்போம்.

ஒன்றை மட்டும் சிந்தியுங்கள். இலங்கை அரசிற்கு ஏதவ பாக்கிஸ்தான், அமரிக்கா, இந்தியா, பிரித்தானியா, என்று நான் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். நாம் வெறும் சிறீ லங்கா இராணுவத்துடன் மோதவில்லை மாறாக சர்வதேசத்துடன் போராடுகிறோம். புலிகளிற்கு இருக்கும் ஒரே ஒரு ஆதரவு தமிழ் பேசும் மக்களே. நாமே புலிகளை நிராகரிக்க முன்வந்தால் நம்மை நமே தீயில் கருக்குவதற்கு சமன்.

வெல்லும் போது பெருந்தலைவன்.. தோற்றபின் ... ?!

தலைவன் தனது கடமையை சரிவரச்செய்துள்ளான். மற்றவர்கள்தான் அவரை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தலைவன் தனது கடமையை சரிவரச்செய்துள்ளான். மற்றவர்கள்தான் அவரை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.