Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? : பாலித கோஹன பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், ஆனால் அதற்கு தர்க்க ரீதியில் எந்த அடிப்படையும் இருப்பதாக எனக்குப் புரியவில்லை எனவும் இலங்கையின் வெளியுறவுச் செயலர் பாலித கோஹன கூறியுள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" எனும் நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அரசின் மீது எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு, தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? என்று இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நமது பிரச்சினைகள் அனைத்திற்கும் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றே யோசிக்கிறோம். ஆனால் அதற்கு தர்க்க ரீதியில் எந்த அடிப்படையும் இருப்பதாக எனக்குப் புரியவில்லை என்று கூறியுள்ளார்.

இலங்கை வெளியுறவுச் செயலராக இருக்கும் பாலித கோஹன, இலங்கை அரசிற்கான ஐ.நா. பேரவையின் நிரந்தரத் தூதராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் எடுக்கப்பட்ட இப்பேட்டியில்,

எங்கே இந்த அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள்? கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 54 விழுக்காடு தமிழர்கள் வாழும் பகுதிகளிலா அல்லது வடக்கிலும் கிழக்கிலுமா?

வடக்கில் ஒட்டுமொத்தமாக ஏழரை இலட்சம் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். வன்னியில் மூன்று இலட்சம் பேர் - அதுவும் முகாம்களில் - உள்ளனர். வன்னிக்கு வெளியே ஒருவரும் இல்லை.

மற்ற இடங்களில் வாழ்பவர்களோடு ஒப்பிட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே அரசியல் தீர்வு என்று எதுவும் தேவையில்லை” என்று பாலித கோஹன கூறியுள்ளார்.

கொழும்புவிற்கு ஏன் வந்தார்கள்?

தமிழர்களுக்கு பிரச்சினை இருக்குமென்றால் 54 விழுக்காடு மக்கள் சிங்களவர்கள் வசிக்கும் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தது ஏன்? அவர்களாகவேதான் வந்தார்கள், அவர்களுக்கு சிங்களவர்களால் பிரச்சினை இருக்குமென்றால் இங்கு வந்தது ஏன்?” என்று பாலித கோஹன, கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும் என்று சுலபமாக ஆலோசனை கூறுகிறார்கள், ஆனால் அப்பிரச்சினை அரசியல் ரீதியானது அல்ல. வேலை வாய்ப்பின்மை, சிறுவர்கள் பள்ளியில் சேர்ப்பதில் சிக்கல் போன்ற பிரச்சினைகள் எந்த ஒரு நாட்டிலும் இருக்கும். ஆனால் அவைகளைத் தீர்க்க இன ரீதியான அணுகுமுறைத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

போர் குற்றத்தின் கீழ் வெற்றியாளர்கள் தண்டிக்கப்பட்டதில்லை

எவ்வளவு போர்க் குற்றங்கள் புரிந்திருந்தாலும் போரில் வெற்றி பெற்ற நாடுகள் எதுவும் போர் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட வரலாறு ஏதும் இல்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் சர்வதேச போர் விதி மீறல்கள் செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு பாலித கோஹன இவ்வாறு பதில் கூறியுள்ளார்.

வரலாற்றைப் பாருங்கள், போரில் தோற்றவர்கள்தான் போர் குற்றம் புரிந்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்கள். போரில் வெற்றி பெற்றவர்களையும் அக்குற்றத்தின் கீழ், சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்க வேண்டுமெனில், அதனை தொடக்க வேண்டிய இடம் வேறொங்கோ உள்ளது. போரின் போது நாங்கள் அணு குண்டைப் போடவில்லை, நகரங்களை அழிக்கவில்லை என்று பாலித கோஹன கூறியுள்ளார்.

இந்தியா எங்களுக்குப் பெரிதும் உதவுகிறது

நாம் இப்படிப்பட்ட தவறுகளைத்தான் செய்து வருகிறோம். இதுவரை தீர்வுகள் அனைத்தும் மேலிருந்து திணிக்கப்பட்டது. இதற்குமேல் எந்த மாற்றமாக இருந்தாலும் அது பெரும்பான்மையின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்படவேண்டும் என்று ஜனாதிபதி ராஜபக்ச கூறியுள்ளார்.

தமிழர் பிரச்சனைக்கு இந்தியா அளித்துள்ள அதிகபட்சத் தீர்வு என்பது ராஜீவ் அளித்த 1987 ஒப்பந்தம் தான் என்று கூறியுள்ள பாலித கோஹன, எங்கள் பிரச்சனைகளில் இந்தியா பெரும் உதவியாக இருந்தது. அந்த ஆதரவு தொடரும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளோம்.

அவர்கள் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர். அதற்கு ஜனாதிபதியும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தாண்டி எதையும் இந்தியா விவாதிக்கவில்லை.

கொழும்பு மேற்கொண்ட போர் நடவடிக்கைக்கு மட்டுமின்றி, இலங்கைக்கு எதிராக மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதிலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளித்ததை பெருமிதத்துடன் கூறியுள்ளார் பாலித கோஹன

daily mirror

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். ஏனெனில் உங்களை இந்தியா பாதுகாக்க, தமிழினத்தை முழுவதுமாக அழித்துவிடுவீர்கள் பிறகெதற்குத் தீர்வு. தமிழரைத் தீர்ப்பதே தமிழர் பிரச்சினைக்கான தீர்வென்பது 1948 முதல் உங்கள் முன்னோர் எடுத்த முடிவை செயல்படுத்தும் போது பிறகென்ன?

தர்க்கரீதியாகச் சிங்கத்துக்குப் பிறந்த (உங்களது கற்பனைக் கதiயான மகாவம்சக் கூற்றுப்படி) உங்களுக்கே, அதாவது மிருகத்தின் வழிவந்த குணம் காரணமாகவே இந்தப் பிதற்றலாகும். இனி ஐநாவிலும் மிருகவாடையடிக்கப் போகிறது என்கிறீர்கள்.

பார்ப்போம்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாதி என நிரூபித்துள்ளார். இனவாதத்துக்கு முன் கல்வி, மனசாட்சி இதெல்லாம் எந்த மூலையில். மிருகங்களுக்கு உள்ள அறிவே இல்லாமல் போய்விடும். இவர்களிடம் அரசியல் தீர்வை நாம் எதிர்பார்த்தால் நாம் தான் மடையர்கள்.

வடக்கில் ஒட்டுமொத்தமாக ஏழரை இலட்சம் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். வன்னியில் மூன்று இலட்சம் பேர் - அதுவும் முகாம்களில் - உள்ளனர். வன்னிக்கு வெளியே ஒருவரும் இல்லை.

மற்ற இடங்களில் வாழ்பவர்களோடு ஒப்பிட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே அரசியல் தீர்வு என்று எதுவும் தேவையில்லை” என்று பாலித கோஹன கூறியுள்ளார்.

கொழும்புவிற்கு ஏன் வந்தார்கள்?

தமிழர்களுக்கு பிரச்சினை இருக்குமென்றால் 54 விழுக்காடு மக்கள் சிங்களவர்கள் வசிக்கும் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தது ஏன்? அவர்களாகவேதான் வந்தார்கள், அவர்களுக்கு சிங்களவர்களால் பிரச்சினை இருக்குமென்றால் இங்கு வந்தது ஏன்?” என்று பாலித கோஹன, கேள்வி எழுப்பியுள்ளார்.

daily mirror

நானும் இதைதான் கேட்கிறேன் உங்களுக்கு இனப்பிரச்சினை இருந்தால் ஏன் கொழும்புவிற்கு வந்தீர்கள்? வடக்கு கிழக்கில் இருந்து போராடி இருக்க வேண்டும். உங்கள் பிரச்சினை செகுசு வாழ்க்கைகுரிய வசதி , வேலை, கல்வி வடக்கில் இல்லை. இதை நாங்கள் வடக்கில் எற்படுத்தில் தருகிறோம். உங்களுக்கு அரசியல் பிரச்சினை இல்லை

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களாகவே தான் வந்தார்கள்

இல்லையே அவர்கள் பலோத்காரமாக அனுப்பப்பட்டார்கள். குண்டு மழை பொழிந்து, பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் மைல் கணக்கான இடங்களை கைப்பற்றி அம்மக்களை விரட்டி அடிக்கவில்லையா?

புலிகளை பிடிக்க வேண்டுமெனில் ஏன் மக்கள் குடியிருப்பு மீது குண்டு மழை பொழிய வேண்டும். ஒரு கதைக்கு கண்டியில் பாதாளகும்பல் இருக்கிறது என்று வைப்போம் . உடனடியாக கண்டியில் குண்டு மழை பொழிவீர்களா?

அரசியல் பிரச்சனை இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வந்தது?

ஒரு போர் சூழல் உள்ள பகுதியில் எப்படி வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பது? ஆகவே மக்கள் வேலை வாய்ப்பை தேடியும் ஓட வேண்டி இருந்தது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா

இவ்வளவு ஆட்களும் மனிதாபிமானத்தை புதை குழி தோண்டி புதைத்தவர்கள். நியாயம் கேட்ட மக்களுக்கு துப்பாக்கி குண்டுகளையே பரிசாக கொடுத்தவர்கள். அவர்கள் வரிசையில் சிறிலங்காவும் இருப்பதால் அவர்கள் உங்களுக்கு வாக்களித்ததில் ஆச்சரியமில்லை. மேலும் அவர்களின் ஆயுதங்களை வாங்கி குவிப்பவர்கள் சிறி லங்கா.எனவே அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றும் படி தமிழர்களால் இந்த நாடுகளுக்கு என்ன பலன் என்றால் ஒன்றுமே இல்லை. ஏன் அவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்?

மற்ற இடங்களில் வாழ்பவர்களோடு ஒப்பிட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இதென்ன 4ஆம் வகுப்பு பிள்ளைக்கே தெரியும். 77 ஆம் ஆண்டு மக்கள் காக்கெடுப்பை ஒருக்கால் பாலித வாசிக்க வேண்டும். அப்போதிருந்து தமிழ் மக்கள் தமது தாய் மண்ணில் இருந்து திட்டமிட்டு விரட்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 30 வருடங்கள் கழித்து இப்படியான கருத்துக்களை விட்டு தமது பக்கம் நியாயம் கற்பிக்கிறார்கள். தமிழர்கள் எதிர்காலங்களில் ஒரு ஆயுதப்போராட்டம் ஒன்று ஏற்படும் இடத்து இவற்றை கருத்தில் கொண்டு சிங்களவர்களுக்கும் இதே நிலையை ஏற்படுத்துவார்கள். ஏனெனில் உலகம் ஒரு போதும் எமக்காக பேசாது வாய்மடந்தையாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, ''இனிமேல் நான் தமிழர்களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவதில்லை. அவர்களுடைய உயிர் களோ, கருத்துக்களோ எங்களுக்குப் பொருட்டல்ல. தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்'' என லண்டனிலிருந்து வெளி யான பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

சம்பந்தன் கூறினார் இப்படி.

''இந்த வன்முறையின் போது (1983)குறிப்பிட்ட ஒரு தந்திரத்தை சிங்களவர்கள் கையாண்டார்கள். முதலில் இலங்கை ராணுவத்தினர், தமிழர் வாழும் பகுதிக்குள் வருவார்கள். அங்கே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்லித் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். தமிழர்களை ஆபாசமாகப் பேசி அச்சுறுத்திக் களேபரம் செய்வார்கள். அங்கிருக்கும் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிடித்துப் போவார்கள். சிறிது நேரத்தில் அங்கே சிங்களவர்களின் கும்பல் நுழையும். தமிழர்களின் வீடுகளைக் கொள்ளையடிக்கும். அதன்பிறகு வீடுகளுக்குத் தீ மூட்டும். ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையும், தமிழ் இளைஞர்களை அவர்கள் பிடித்துச் செல்வதும் அதன்பிறகு வருகின்ற சிங்களவர்களின் கும்பலுக்கு உதவத்தான்.'' தங்களை தற்காத்துக்கொள்ள எதுவுமற்ற நிலையில் தமிழர்கள், சிங்களவர்களிடம் சிக்கி உயிரிழந் தனர் என்று அதை வர்ணிக்கிறார் சம்பந்தன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த சிங்களவன் இதில்லை இதைவிடவும் சொல்லுவான் தானே

ஏனெண்டால் எங்கடை பன்னாடையள் கொஞ்சம் சிங்களத்தியளுக்கு பாவாடையும் தோச்சு குண்டியும்

களுவிக் கொண்டிருக்கிறாங்களேல்லே

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சிங்களவன் இதில்லை இதைவிடவும் சொல்லுவான் தானே

ஏனெண்டால் எங்கடை பன்னாடையள் கொஞ்சம் சிங்களத்தியளுக்கு பாவாடையும் தோச்சு குண்டியும்

களுவிக் கொண்டிருக்கிறாங்களேல்லே

http://www.dinamani.com/images/pdf/impressions/18aug1985.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.