Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் நடுவிலிருக்கிற சிதைக்கப்பட்ட நகரம் ‐ தீபச்செல்வன்:

Featured Replies

சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் நடுவிலிருக்கிற சிதைக்கப்பட்ட நகரம் ‐ தீபச்செல்வன்:

:தீபச்செல்வன்

01

மாடுகள் அலைந்து திரிந்து

கண்ணிவெடிகளையும் மண்ணையும் மேய்ந்து கொண்டு

சாணியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக

நகரத்திற்கு வேறு பக்கம் திரும்புகின்றன.

எரிந்து கருகிப்போயிருக்கிறது

சனங்களின் நிலம்.

அழிந்து சமதரையாகிப்போன வெளியில்

பேய்கள் வாழ்ந்து திரிகிறது.

நிலம் எரிந்து சாம்பல் பூத்திருக்க

தலைகள் பிடுங்கப்பட்ட

மரங்கள் மண்ணில் குத்துண்டு நிற்கின்றன.

தலையிழந்த பனைகளால் மிகுந்த வெளியில்

நோடட்மிடுகிற காவலரண்களை

சுமந்து நிற்கிறது வேர் பட்ட பனங்குத்திகள்.

உப்பு விழைந்த வாடிகளில்

இல்லாத சனங்களின்

குருதியும் துயரும்

சேர்ந்து விளைந்து கொண்டிருக்கிறது.

02

யாரும் திரும்ப முடியாத வழியில்

எங்கும் குழிகளும்

அவற்றில் அவலமும் நிரம்பியிருக்கிறது.

கல்லறைகளை புதைத்து

நினைவுச் சிலைகளை கொலை செய்ய

இடிந்த கட்டிடத்தின்

சுவர்க்கரையில் மாடுகள் கன்றுகளை ஈன்றிருக்கின்றன.

ஞாபகங்கள் அழிந்து குவிந்து கிடக்கின்றன.

விட்டுச் செல்லப்பட்ட முகங்கள்

கொழுத்தப்பட்டுக்கொண்டிருக்

  • தொடங்கியவர்

மினுமினுக்கும் சுவர் பற்றியும், எழு தமிழா வெட்டி வீழ்த்து என்று போலி வீரம் காட்டியும் புலம் பெயர் கவிதையாளர்கள் கவியெழுதிக் கொண்டிருக்க, சுடுகாட்டுச் சாம்பலில் இருந்து தோற்றுப் போன வாழ்வின் யதார்த்தம், கவிதையாக எரிகின்றது இங்கு. சாம்பல் மேடாய் மூடிக் கிடக்கும் நகரங்களில் இன்னும் புகைத்து கொண்டிருக்கும் போராட்ட களத்தின் மிச்ச மீதி எச்சங்களின் புகை மணம் கவிதை எங்கும் நிறைகின்றது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் போலி புனைவும் பூச்சும் அற்ற ஒரு நேர்மை மிக்க ஈழக் கவிதையை வாசித்த உணர்வு வருகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் முடிவடைந்ததும் ஊடகவியளாலர்கள் உடனடியாக அனுமதிக்கப்பட்டு( ஒரு பேச்சுக்குச் சொன்னால் ) அவர்களின் கண்களில் பட்ட அனைத்தையும் எந்தவித ஒளிப்புமறைப்பும் இல்லாமல் முழு பத்திரிகைச் சுதந்திரத்துடன் எழுதப்பட்ட ஓர் பத்திரிகையை வாசித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய கவிதை.....

வாழ்த்துக்கள்... எழுதியவருக்கு....

நன்றிகள் பதிந்தவருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியைக் கிழித்துச் செல்லும் கண்டி வீதியில் உணர்வுகளைத் துறந்து நிர்வாணியாகப் பயணித்தமாதிரி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன் வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது கவிதைகள் எல்லாமே உண்மையை புனைவின்றி உணர்ச்சிப்பெருக்கின்றி உணர்வின்பாற்பட்டு எழுதப்படுகின்றன. தீயெடு தெருவில் நட தலையைச் சிலுப்பென்ற பம்மாத்தில்லாத எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன் இந்த இளம் கவிஞன்.

வெற்றியைக்காணும் வரையிலும் பேசாதிருந்தவர்கள் எல்லாரும் தோற்றபோது தூற்றுகிறார்கள் என சபிக்கும் வல்லோர் மத்தியில் யதார்த்தம் உரைக்கும் வல்லமை தீபச்செல்வனக்கு உண்டென்பதை அவரது கவிதைகள் யாவும் சொல்கின்றன.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பின் சாந்தி, உங்கள் கருத்துக்கு நன்றி.

இளங்கவி உன்மையில் வன்னி நிலத்தின் ஊடாக கிளிநொச்சி நகரத்திற்கு ஊடாக ஏ-9 வீதியால் போன அனுபவம்தான் இந்தக் கவிதை.

இந்த வாழ்வு இன அழிப்பு ஏற்படுத்திய பதற்றம் மிகவும் கொடுமையாக இருந்தது. நாங்கள் வன்னி நிலத்தையும் இழந்துபோயிருக்கிநோம்.

கிருபனுக்கும். நன்றி.

தீபச்செல்வன்

Edited by தீபம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.