Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரத்தை தேடி ஓடி டயானா!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திரத்தைத் தேடி….ஓடி….டயானா!........

மனிதநேயங்கள் உன்னுள் நிறைய

இருந்தன -உன்

மலர்ச்சிரிப்பினால் அவை உலகை

மயக்கின!.....

பிரபலங்களோ என்றும் உன்னை

பின்தொடர்ந்தன

உன்பிரிவினிற்கும் ஏனோ அவை

துணையாய்ப் போயின!......

தாய்மை கொண்ட பெண்மையாலே

பலர் பெருமை கொண்டனர்

தாரமாகி உலகை நீயும்

உன்பால் கொண்டனை!

கோடி கொடுக்கும் அரண்மனையில்

கூடி வாழந்;தனை-இரு

குழந்தைகளைப் பெற்றுநீயும் அந்த

தாய்மை கண்டனை!

ஆண்இனத்தின் உரிமைகளோ

ஆதிகமானவை-அதிலும்

அரண்மனையில் வாழ்ந்துவிட்டால்

அவை புனிதமானவை!

பெண்மையிலும் உணர்வுகள் தான்

பள்ளிகொள்வதால்-அதைப்

புரிந்துகொண:டு பின்நாள் நீயும்

வுpலகி வாழ்ந்தனை!

பெற்றுவிட்ட பிரபலத்தால்-உரிமை

மறுக்கப்பட்டவள்-உன்

சிறுஅசைவுகளும் பின்னால் ஏனோ

பெரிதுபடுத்தப்பட்டன!

மனிதநேயம் கொண்டு நீயும்இந்த

மண்ணில் நடக்கின்றாய்

வறுமை கொண்ட மக்களையும்

வாரி அணைக்கின்றாய்!

சேவை செய்தே தாயானாhல்

“அன்னை”தெரேசா-அந்த

பாதையினை நீயும் மெல்ல

பற்றி நடக்கின்றாய்!

மனிதனைப் பயமுறுத்தும் விடயங்களோ

உலகில்பலவும் உள்ளன-அதைத்

தடுக்கவரும் அமைப்புகட்கும் - நீ

கைகள் கொடுக்கின்றாய்!

தாஜ்மகாலின் ஓரத்திலும் நீ

நடக்கின்றாய் - அந்த

ஆக்ராவின் அன்புக்கதை கண்டு

வுpயக்;கின்றாய்!

“காதலெனும் நதியினிலே முழுதாய்க்

கரைந்து போனவள்”

உண்மைக் காதலினைத்தேடி நீயும்

எங்கும் ஓடி அலைகின்றாய்!

கண்டுகொண்ட காதலுடன் “பாரிஸ்”

வருகின்றாய்!

களிப்புடனே அதன் அரவணைப்பில்

காரில் போகின்றாய்!

நேற்றைய பிரபலத்தால் உனைக்காலன்

அழைக்கின்றான் - இன்றும்

உன்னை எண்ணி உலகில் பலர்

கண்ணீர்விடுகின்றார்!

உரிமை கொண்டு வாழும் வாழ்கை

மறுக்கப்பட்ட மனிதர்

“ஈழத்தமிழர்” என்னும் பெயரினிலே

உலகமெல்லாம் அலைகின்றோம்!

பக்கிங்காம் அரண்மனையின் - ஆளும்

வெறியினால் - அன்று

பாராண்ட தமிழர் நாங்கள் -இன்று

அகதியாகினோம்!

அதேஅரண்மனையின் முடிவெறியை நீ

எதிர்த்து எழுந்தவள் !

அடங்கமறுக்கும் பெண் இனத்தின்

அடையாளச் சின்னமானவள் !

வாழும் உரிமை மறுக்கப்பட்ட – ஈழத்

தமிழர் போலவே

ஓடி ஓடி உன் சுதந்திரத்திற்காய்

நீ உயிரை விட்டவள் !.............

காதல்இளவரசி “டயானா”வின் பன்னிரன்டாவது நினைவு தினத்தை{31.08.1997} நினைவில் நிறுத்தி……….

வரலாற்றைத்தேடும்

தமிழ்நீ……..

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு பாராட்டு தமிழ் நீ ........நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டு வருகிறது.

உங்கள் கவிதை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உரிமை கொண்டு வாழும் வாழ்கை

மறுக்கப்பட்ட மனிதர்

“ஈழத்தமிழர்” என்னும் பெயரினிலே

உலகமெல்லாம் அலைகின்றோம்!

பக்கிங்காம் அரண்மனையின் - ஆளும்

வெறியினால் - அன்று

பாராண்ட தமிழர் நாங்கள் -இன்று

அகதியாகினோம்!

அதேஅரண்மனையின் முடிவெறியை நீ

எதிர்த்து எழுந்தவள் !

அடங்கமறுக்கும் பெண் இனத்தின்

அடையாளச் சின்னமானவள் !

வாழும் உரிமை மறுக்கப்பட்ட – ஈழத்

தமிழர் போலவே

ஓடி ஓடி உன் சுதந்திரத்திற்காய்

நீ உயிரை விட்டவள் !.............

எதை எதனுடன் ஒப்பிடுவது என்று ஒரு விவஷ்தையே இல்லாமல் போய்விட்டது.

எமது போராட்டத்தின் தூய்மை எங்கே?

அரண்மனை சுகம் தேடிச்சென்று அதில் அலுத்துப்போய் வேறு ஆண்மைச்சுகம் அனுபவிக்கச்சென்ற தேவடியாள் கூட்டத்தின் தூய்மை எங்கே?

சுதந்திரத்தை தேடி ஓடி டயானா!

மண்ணாங்கட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நீ

உங்கள் கவிதை நடை மிகவும் நன்று ஆனால் குமாரசாமி அண்ணை சொன்னதைப் போல எதை எதனுடன் ஒப்பிட்டுவிட்டீர்களே... அதுதான் வேதனையான விடயமாக உள்ளது...

எதை எதனுடன் ஒப்பிடுவது என்று ஒரு விவஷ்தையே இல்லாமல் போய்விட்டது.

எமது போராட்டத்தின் தூய்மை எங்கே?

அரண்மனை சுகம் தேடிச்சென்று அதில் அலுத்துப்போய் வேறு ஆண்மைச்சுகம் அனுபவிக்கச்சென்ற தேவடியாள் கூட்டத்தின் தூய்மை எங்கே?

மண்ணாங்கட்டி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நீ,

டயானா தனது சொந்த நலனுக்காக சுதந்திரத்தை தேடி அலைந்து....அளிந்துபோய் விட்டார்.அவரோடு நமது

தூய்மையான போராட்டத்தை ஒப்பிடுவது உங்களுக்கே நல்லாவா இருக்கு...?காலத்தின் தேவை அறிந்து நடந்தால்,எழுதினால் நன்று.

யாயினி.

தமிழ்நீ வணக்கம்,

காதல்இளவரசி “டயானா”வின் பன்னிரன்டாவது நினைவு தினத்தை நினைவில் நிறுத்தி கவி புனைந்திருந்தீர்கள். நீங்கள் உங்களுக்குப் பிடித்த எவரையும் புகழ்ந்து கொள்ளலாம். கருத்துச் சுதந்திரம் உங்களுடயது. ஆயினும் என்னுடைய சில கருத்துக்களையும் இங்கே முன்வைக்கிறேன்.

எங்களுடய போராட்டத்தின் அலைச்சல் வேறு, "டயானா"வின் அலைச்சல் வேறு. அது அடிப்படைச் சுதந்திரம் மறுக்கப்பட்ட ஓர் இனத்தின் விடுதலைக்கான தத்தளிப்பு. "டயானா"வின் அலைச்சலானது தன்னுடய சுகபோகங்களை மட்டுமே மையப்படுத்திய ஓர் அங்கலாய்ப்பு. அயல்நாட்டு வல்லாதிக்கப் படைகளுடன் சமராடி தனது 17 அகவையில் வீழிந்த "மாலதி"யின் அலைச்சல் அது. தற்போது வாழ்ந்திருந்தால் பூவும் பொட்டுடன் தன் குழந்தைகளுடன் அவள் வாழ்ந்திருப்பாள். ஆயிரம் ஆயிரம் "மாலதி"கள் களமாடிய உன்னத அலைச்சல் அது. திருமணமான ஓரிரு மாதங்களிலேயே இன்னொருவனுடன் காதல் உறவை ஏற்படுத்திய அலைச்சல் இது

ஆண் இனத்தின் உரிமைகளோ அதிகமானவை எனக் குறிப்பிடுகின்றீர்கள். பெண் ஆணுக்கு அடிமை என்ற கருத்து தகர்க்கப்பட்டு காலங்கள் பலவாயிற்று. ஆணுக்கு நிகராக பெண் வாழ்கின்ற காலமிது. மேலைத்தேசத்தவரின் சிந்தனைகளை நாங்கள் அப்படியே அடியொற்ற முயற்சிக்கக் கூடாது. தமிழர்களின் வாழ்க்கை முறை வேறு மேலைத்தேசத்தவரின் வாழ்க்கை முறை வேறு. சில இயற்கையின் நியதிகள் மாற்றப்பட முடியாதவை மட்டுமல்ல மாற்றப்படவுங் கூடாதவை. நேர் (+), மறை (-) சேரும் போதுதான் மின்சாரம் பிறக்கின்றது. காந்தப் புலமும் இதற்கு விதிவிலக்கல்ல. அதாவது வடபுலமும் தென்புலமும் தான் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளும். ஆண்மை என்கிற வன்மைக்குள்ளே பெண்மை என்கிற மென்மை இணைகின்ற போதுதான் இருமைக்கும் (ஆண்மை+பெண்மை) வெற்றி மட்டுமல்ல பாதுகாப்பும் கூட.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.