Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்ப்பு அரசியல் மூலம் தமிழ் மக்கள் பெற்றது என்ன?: கேள்வி கேட்கிறார் டக்ளஸ்

Featured Replies

மிக நீண்ட காலமாக தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு அரசியலையே இலங்கையில் நடத்தி வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன? அதற்கு மாற்றாக இணக்க அரசியலை முன்மொழிவதாக சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவின் தலைவரும் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழ் ஊடகவியலாளர்களைத் தனது அமைச்சில் சந்தித்துப் உரையாடிய அவர், அரசுடன் பேரம் பேசுவதற்கான சக்தியை அதிகரிக்கும் வகையில் தனது கரங்களை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும் என்று கோரினார்.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடந்தன என்றும் அதனை கொழும்பில் உள்ள ஊடகங்களும் கண்காணிப்புக் குழுக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், சில அரசியல் சக்திகள் தமது சுயநலத்திற்காக யதார்த்தத்திற்கு மாறான கருத்துக்களைத் தெரிவித்தன எனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாண தேர்தல்களின்போது ஈபிடிபியினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்தார்.

யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலின் போது 20 விழுக்காடு மக்களே வாக்களித்தனர் என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, அது அப்படியல்ல என்றும் உண்மையில் அங்கு 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகின என்றார்.

கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் பேரம் பேசுவதற்கான சக்தியாக இருந்தது. ஆனால் இப்போது நிலமைகள் மாறிவிட்டன என்று தெரிவித்த டக்ளஸ், தான் முன்னர் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக இருந்தார் என்றும் அது இரண்டு வகைப்பட்டது என்றும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளினதும் தனதும் தமிழ்த் தேசிய வாதங்களை ஒப்பிட்ட அவர், ஒன்று கெட்டது மற்றையது நல்லது என்றார்.

மக்கள் அதனைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தின்போது இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் ஒன்று கிட்டடியது எனவும் ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமை அதனைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

"அது (புலிகள் இயக்கம்) தன்னையும் அழித்துக்கொண்டதுடன் இந்த சமூகத்தையும் அழிவுக்கு உள்ளாக்கியது. யாருடைய அழிவிலும் நான் மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஆனால், விடுதலைப் புலிகளின் தலைமையினதும் தமிழ் மக்களினதும் பிரச்சினைகள் வேறு வேறானவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இணக்க அரசியல் முறை ஒன்றை நான் முன்வைத்தபோது பலரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அதற்கான சூழ்நிலை கனிந்து வந்துள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைச் சாத்திருயமான தீர்வுப் பொதி. அரச தலைவரும் அதற்கு ஆதரவாக இருக்கிறார். எனவே பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கும் வகையில் எனது கரங்களை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

புதினம்

மிக நீண்ட காலமாக தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு அரசியலையே இலங்கையில் நடத்தி வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன? அதற்கு மாற்றாக இணக்க அரசியலை முன்மொழிவதாக சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவின் தலைவரும் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

அதுசரி நக்கி பிழைக்கிறது எவ்வளவு சுகம். உமக்குதானே தெரியும்.

அதுதான் காரைநகர் கடற்படைதளம் அடிக்க போய் நேவிக்காரான் வெளிய வர முந்தி நீங்க விட்டுட்டு ஓடிவிட்டியள். றோட்டில நிண்ட சன்ம் கேக்க எல்லாம் முடிஞ்சுது எண்டியள்.

கடைசியா பார்த்தா சும்மா பொன்னாலை சந்தியில கொத்துறொட்டி கடையில வேலை செய்த பெடியன் வீரமரணம் எண்டுவருது. எண்ணண்டு கேட்டா காம் அடிக்க போக முதல் அந்த கொத்து றொட்டி கடையில வந்து நிண்டு சாப்பிட்டு ஊசாரா போனவையாம். அப்ப அந்த பெட்டியனையும் வா போவம் எண்டு கூட்டி கொண்டு போனவையாம்.

இதுதான் டக்ளஸ் மாமாவின் இயக்கம்நடாத்திய கதை.

  • கருத்துக்கள உறவுகள்

பேரம் பேசும் சக்தி????????????????ஃசொந்தசின்னத்தில் போட்டியிட வக்கிகில்லாதவர் எப்படி பேரம் பேசப் போகிறார்.காரைநகர் காம் அடிக்க முன்னமே மக்களுக்கு விளம்பரப் படுத்திப் போட்டுத்தான் போனவை.

சார்பு அரசியல் நடத்தித் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எருமை...

எதிர்ப்பு அரசியல் மூலம் தமிழர் பெற்றது டக்களஸ் , கருணா போண்ற தமிழ் ஈனபிறப்பை வாழ வைத்தது...

  • கருத்துக்கள உறவுகள்

இதனை இவர் தன்னைத்தானே கேட்டுக் கொள்வதே முதலில் செய்ய வேண்டிய வேலை.

25 வருடம் காட்டிக் கொடுத்தே அரசியல் செய்தவன்.. பயங்கரவாத தடை சட்டத்தை ஆதரித்து மக்களைக் கொன்று குடல் வளர்த்தவன்.. எல்லாம் மக்களைப் பார்த்து கேள்வி கேட்கிற நிலையில் இருப்பது என்பது அந்த மக்களின் கையாலாகத்தனம் என்றே கொள்ள வேண்டும். இந்த ஒரு அவமானம் போதும்.. எதிரி ஆயிரம் அணு குண்டுகளை எம்மீது வீசியதற்குச் சமன்..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பூனை(புலி) இல்லா வீட்டில் எலிக்குக் கொண்டாட்டமாம்.எத்தனை நாளைக்கு மகிந்த விட்டு வைக்கப் போறான்.ஆனானப் பட்ட பொன்னருக்கே இந்தக் கதி என்றால் எலும்பு பொறுக்கிகளை சும்மா விடுவானா? அது தெரிஞ்சு தான் தலைமையில்லாமல் இருக்கிற தமிழ் மக்களை தம் பக்கம் இழுத்து தனக்கு தமிழ் மக்களிடம் செல்வாக்கு இருக்குது என்று காட்டினால்தான் மகிந்த கொஞ்சமாவது மதிப்பான் என்று யோசிக்கிறார் போல.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.