Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபன் அழைப்பது சாவையா..இந்தச் சின்ன வயதில் அது தேவையா.?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன்.jpg

1987 செப்ரம்பர் 15 அன்று நல்லூர் வீதியில் தியாக தீபம் திலீபனின் நீரேந்தும் அருந்தாத உண்ணாவிரதம், இந்திய வல்லாதிக்கத்திடம் ஈழத் தமிழ் மக்களின் 5 அம்சக் கோரிக்களை நிறைவேற்றக் கோரி ஆரம்பமானது.

(திலீபன் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவன். யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி இருந்த மாணவன்.)

----- நினைவுப் பதிவு-----

தியாக தீபமே

விடுதலைத் தீயே....

அன்னை மடியில்

நீ கிடந்த நினைவுகள் அழியவில்லை..!

தமிழீழ மண்ணில்

நீ பதித்த பாதச் சுவடுகள்

கருவறைகளாய்

சாதனைகளைப் பிரசவிக்கின்றன...!

அண்ணா..

உன் உயிர் தந்து

தமிழீழ விடுதலைக்கு

நீ..

உயிர் கொடுத்தாய்..!

உன் தியாகம் என்றும்

விலை போகாது..!

நீ சுமந்த விடுதலைக் கனவு

நனவாகும் நாள் தொலைவில் இல்லை..

நீ நேசித்த தலைவன் வழி

மக்கள் நடத்தும்

களம் சொல்லுது கதை...!

இடையில்..

மறவர் படை

சதிகாரரால் வீழலாம்...

அவர் கொண்ட இலட்சியம்

என்றும்.. வீழாது.

விடுதலை வீரர்களும்

இலட்சியம் ஒரு நாள் வெல்லும்.

அதுவரை..

நீ தூங்கு அண்ணா தூங்கு

நிம்மதியாய் தூங்கு.!

உன் கல்லறைப் பூக்கள்

சொல்லும்

தேசத்தின் விடுதலைச் சேதி..!

ஆக்கம் குருவிகள் - 12-09-2009

source: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திலீபா! மக்கள் புரட்சி வெடிக்கவேண்டுமென்று நீ சொன்னாய்!

ஆனால் எம் மக்கள் புரட்சி கொண்டது எதில் தெரியுமா?

படையெடுத்து வெளிநாடு வருவதிலும்

வந்தபின் நான் பெரிது நீ பெரிது என்று ஆடம்பரம் காட்டி வாழ்வதிலும்

பன்னிரு நாள் துடிதுடித்து நீ மடிந்தாய்!

ஆனால் நாமோ

முள்ளிவாய்க்கால் முடிந்த பத்து நாள் தாண்டுமுன்னே

கோயில், கேளிக்கை, களியாட்டம் என தொடங்கிவிட்டோம்

இப்போது தலைவரையும் விமர்சிக்கின்றோம்

போராட்டத்தையும் விமர்சிக்கின்றோம்

ஆனால் எம்மை நாம் விமர்சிக்கமாட்டோம்

கடைசிவரை கொள்கைய நேசித்தவன் நீ

இனி என்ன எல்லாம் முடிந்துவிட்டது என கைகழுவியவர்கள் நாங்கள்

இப்போது நக்கி பிழைக்கும் அரசியலுக்கு வக்காலத்து வாங்குகின்றோம்

உண்மையில் உனக்கு அஞ்சலி செலுத்தும் அருகதை கூட எமக்கில்லை

Edited by காட்டாறு

கவிதையில நிறைய புளுகுவிடப்பட்டு இருக்கிது. தற்போதைய உண்மை நிலவரத்தை திலீபனுக்கு சொல்லுங்கையா.

தியாக தீபமே

விடுதலைத் தீயே....

அன்னை மடியில்

நீ கிடந்த நினைவுகள்

அழிந்துகொண்டு போகின்றது..!

தமிழீழ மண்ணில்

நீ பதித்த பாதச் சுவடுகள்

சுடுகாடாகி

துரோகிகளை பிரசவிக்கின்றன...!

அண்ணா..

உன் உயிர் தந்து

தமிழீழ விடுதலைக்கு

நீ..

உயிர் கொடுத்தாய்..!

உன் தியாகம் எப்போதோ

விலை போய்விட்டது..!

நீ சுமந்த விடுதலைக் கனவு

நனவாகும் நாள் கனவிலும் இல்லை..

நீ நேசித்த தலைவன் வழி

மக்கள் நடத்தும்

களம் சொல்லுது கதை...!

இடையில்..

மறவர் படை

சதிகாரரால் வீழலாம்...

அவர் கொண்ட இலட்சியமும்

வீணாகிப் போகலாம்..

உன் கல்லறைப் பூக்கள்

சொல்லும்

தேசத்தின் இழவுச் சேதி..!

ஆள் உயிரோடை இல்லை என்கின்ற துணிவிலை புளுகு விட்டாலும் திலீபனுக்கு உண்மையில இப்ப என்ன நடக்கிது எண்டு தெரியாமலா போகும். எங்களை நாங்கள் தேற்றிக்கொள்வது தவிர வேறு வழியில்லை. ஆமென்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு.. நீங்கள் சொல்வது மக்களில் ஒரு கூட்டத்தின் அளவில் உண்மை தான். அதுவும் இன்றைய சூழ்நிலையில். ஆனால் இன்னும்.. போராடி உரிமை பெறலாம்.. திலீபன் வழியில் செல்லத் தயாராக இருக்கிறோம் என்கின்ற மக்களும் உள்ளனர். அவர்களை மையமாக வைத்துத்தான் இதை எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

திலீபன் உண்ணாவிரதம் இருந்த போதும் கூட.. துரோகிகள்.. செயற்பட்டனர் தான். அப்போதே திலீபன்.. எல்லாவற்றையும் கண்டுவிட்டார். ஒப்பரேசன் லிபரேசனோடு.. எம்மவர்கள் வெளிநாட்டுக்கு சாரை சாரையாக ஓட வெளிக்கிட்டதையும் திலீபன் நன்கு அறிவார்..!

அன்றிலிருந்ததைக் காட்டிலும்.. இன்று தமிழீழத்துக்காக கொடி தூக்கக் கூடிய ஒரு மக்கள் கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அன்று ஒரு ஊர்வலத்துக்கு சொந்த தாயக மண்ணில் ஆட்களை அழைப்பதே கடினமாக இருந்தது. அத்தனை பயம். எங்க கூட்டத்துக்குப் போனா.. ஆனையிறவால போக ஆமி பிடிச்சிடுவானோ.. தலையாட்டி காட்டிக் கொடுத்திடுவானோ என்று எம்மவர்கள் பயப்பிட்டு.. வாழ்ந்த காலங்கள்.. இருக்கின்றன..!

அன்றிலிருந்ததை விட இன்று மக்களில் ஒரு தொகுதியினர் தாமாகவே புகலிடத்தில் குரல் எழுப்பக் கூடிய நிலைக்கு முன்னேறி வந்திருக்கிறார்கள். அது திலீபன் அண்ணா எண்ணியதன்.. முழுமையான மக்கள் புரட்சி இல்லை என்றாலும்.. ஒரு 5% புரட்சி என்றாவது கொள்ளலாம். :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாக தீபமே

இன்றல்ல ஒரு நாள் உங்கள் கனவு நனவாகும்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் எம்மவர்களின் வாரிசுகள் காந்தி தாத்தா சுதந்திரம் வாங்கிதந்தார் என்று நேற்றும் ஒரு நாடகத்தில் நடித்ததை பார்த்தேன்..மனம் வேதனைப்பட்டது......

திலீபன் அண்ணா எத்தனையோ ஆயிரம் ஆயிரம் தமிழர்களிற்கு அவரின் தியாகத்தினால் விடுதலைத்தீயை ஊட்டியவர் என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. எங்களுக்குள்ளேயும் உங்களுக்குள்ளேயும் எங்களுக்கே தெரியாமல் அவரது தியாகம் விடுதலைத் தீயை ஊட்டியுள்ளது. சிறிய வயதில் என்னை என் தந்ததையார் திலீபன் அண்ண உண்;ணாவிரதம் இருப்பதை அவரது உண்ணா விரத நாளான 4ஆம் நாள் கூட்டிச்சென்று காட்டி இருந்தார். ஆனால் நான் அப்போது சிறியவன் ஆனபடியால் எனக்கொன்றும் புரிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது ; எண்ணிப் பெருமையடைகின்றேன் இந்த வரலாற்று நாயகனை என் கண்களால் தரிசனம் செய்யக் கிடைத்ததை.

அவர்களை நினைவூட்டும் பாடல்களைக் கேட்பதன் மூலம் எங்களிற்காக தனது இளமைக் கால கனவுகளையும் துறந்து எங்களிற்காக தன் உயிரை அணுவணுவாக துறந்த தியகத் தீபம் திலுpபன் அண்ணாவை நெஞ்சிலே சுமப்போம். வானத்திலிருந்து எமது மாவீரத் தோழர்களுடன் ஈழம் மலர்வதை பார்த்து மகிழ்வேன் என்று கூறி இருந்ததீர்கள். உங்கள் ஆசை நிறைவேறுகின்றதே இல்லையோ( ஆனால் உங்கள் ஆன்மா எம் மண்ணின் ஒவ்வொரு அசைவையும் அந்து தோழர்களுடன் கூடி இருந்து பார்த்துக் nhகாண்டிருக்கின்றீர்கள் என்பது உண்மை...

part 1:

Continue to see all parts.......

Song :

இந்த நேரத்தில் நாம் வான் படை அமைத்து தமிழன் வீரம் உலகறியச் செய்த கேணல் சங்கர் அண்ணா அவர்களையும் நினைவு கூருவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.