Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

50 வயதில் மனமும் நினைவுகளும்

Featured Replies

50 வயதில் மனமும் நினைவுகளும்

நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு மூளையாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

பெரும்பாலானவர்கள் எதற்கெடுத்தாலும் "வயதாகிவிட்டது வயதாகிவிட்டது"என்று சொல்லவார்கள். இது ஒரு பிரச்சனையிலிருந்து அல்லது வேலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்குரிய முயற்சியாகும். வயது என்பது ஒரு பெரிய விடயமல்ல. முயற்சி செய்தால் உலகத்தில் முடியாதது எதுவுமில்லை.

ஒரே மாதிரியான வேலையைச் செய்வதால் மூளைக்கு அலுப்புஏற்படும். இதனால் புதிய புதிய உத்திகளைஎண்ணங்களை தினமும் யோசித்து செய்வது மூளைக்கு உற்சாகம் அளிக்கும். புதிய புதிய தேடுதல்களை மேற்கொள்ளுங்கள் ஓய்வு என்பது வேலை செய்யாமல் ஓய்ந்திருப்பது அல்ல. தொடர்ந்து ஏதேனும் ஒரு வேலையைச் செய்து கொண்டிருங்கள். வேலையில்லாமலிருந்தால் மனதில் கவலை அதிகரிக்கும்.

மனித இனம் மற்ற உயிரினங்கனை விட எல்லாவிதத்திலும் உயர்ந்தது. உடல் ரீதியாக உணர்ச்சி பூர்வமாக கலாரசனைகள் ஆன்மரீதியான உணர்வுகளை எந்த உயிரினத்துடனும் ஒப்பிட முடியாது.

50வயதிற்குப் பின்று பலர் தங்களின் நினைவாற்றல் குறைந்து வருவதாக கூறுவார்கள். இது உண்மையல்ல. பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயது மாணவனைக் கவனித்தால் அவன் தனது பென்சிலை மறந்து வந்திருப்பான். ஆசிரியரிடம் மறந்து விட்டேன் என்று தான் பதில் கூறுவான். ஆகவே ஞாபக சக்தி வயதைப் பொறுப்பொறுத்தது அல்ல.

மூளையின் முன்பக்க பகுதியில் கற்பனை உருவாகிறது. மூளையின் இடது பக்கப் பகுதியானது ஒரு வேலையை எப்படிச் செய்வது என்ன செய்வது என்ற கட்டளைகளைப் பிறப்பிக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளையும் ஒவ்வொரு நாளும் பயன் படுத்துவது நல்லது. புத்தகங்கள் படிப்பது சிலருக்கு பிடித்தமான விடயமாகும். அப்படியானால் சுமார் 45நிமிடம் வரை புத்தகங்களைப் படியுங்கள். பின்னர் 5அல்லது 10 நிமிட ஓய்வு எடுத்துக் கொள்வது சிறந்தது.

மூளையின் வேலைக்கு கவலை ஆபத்தானது. வாழ்க்கையில் கவலை வந்து போகும். நிரந்தரமான கவலை என்று எதுவும் இல்லை. பிரச்சனைக்கு தீர்வு காண நம்பிக்கைக்குரிய நண்பருடன் விவாதியுங்கள். நாய் எலும்பைக் கடிப்பது போல பிரச்சினையை அணுகாதீர்கள்.

மனிதனுக்கள் ஒரு பிரச்சனை முடிந்தபின் அடுத்த பிரச்சனை தலை தூக்கும். அதையும் எதிர் கொள்ள தைரியத்தடன் இருப்பது பிரச்சனையை சுலபமாக்க உதவும். "என்னடா இந்த வாழ்க்கையே பிரச்சனையா இருக்கு" என நினைத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்.

உடல் ரீதியான பரபரப்பு மற்றும் பதட்டம் போன்றவற்றைக் குறைத்துக் கொண்டால் எளிதில் மனக்கவலைகள் பறந்து போகும். ஒருவரது அடி மனதில் உள்ள பொறாமை போட்டி பழிக்கு பழி என்ற குணங்கள் அவரது பண்பை குணத்தை தகர்த்துவிடும்.அடி மனதில் கற்பனை வளத்தையும் சந்தோசத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தத்தினால் உடல் ஒத்துழையாமை நிகழ்கின்றது. இந்த உணர்வு உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டிருக்கலாம். அல்லது மற்றவர்களிடம் இதைப் பார்த்திருக்கலாம். பதட்டமான நிலையில் தோள்கள் உயரும் கைகளைப் பிடித்துக் கொள்வார்கள் உட்கார்ந்த நிலையில் கால் மேல் கால் போட்டு காலை ஆட்டிக் கொண்டிருப்பார்கள். நின்றால் நடப்பார்கள்இ உட்கார்ந்தால் எழுந்த நிற்பார்கள் அவ்வப்பொழுது பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள்இ சில சமயம் பேச்சு மூச்சே இல்லாமல் இருப்பார்கள்.

இப்படியான சூழ்நிலை ஏற்பட்டால் அதனை விடுத்து தலைக்குகீழ்ஒரு தலையணை வைத்து தரையில் படுத்துக் கொள்ளுங்கள் அல்லது இருக்கையில் தலையணையை வைத்து தலையை சற்று சாயுங்கள் . இதில் எது பிடித்திருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுங்கள்.

நன்றி

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பது வயதுக்குக்குப் பின் நாய்க்குணம் ஏற்படும் என்பதை பொய்யாக்கிய கட்டுரைக்கு நன்றி.

  • தொடங்கியவர்

என்ன தமிழ்சிறி உப்புடி சோர்ந்து போயிட்டியள்!!!!!!

எல்லாத்திற்கும் மனம் தான் காரணம்!!!!!

அதால மனதை திடமாய் வைச்சிருங்கோ!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு, சாத்திரியார் , சோமாலியாக்காறன் , கறுப்பு எல்லாரும் இதை ஒருக்கால் நல்லவடிவாய் வாசியுங்கோ.

அண்ணன் தமிழ்மாறன் உங்களுக்காக நல்லவிசயத்தை கொண்டுவந்திருக்கிறார்.

மன அழுத்தத்தினால் உடல் ஒத்துழையாமை நிகழ்கின்றது. இந்த உணர்வு உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டிருக்கலாம். அல்லது மற்றவர்களிடம் இதைப் பார்த்திருக்கலாம். பதட்டமான நிலையில் தோள்கள் உயரும் கைகளைப் பிடித்துக் கொள்வார்கள் உட்கார்ந்த நிலையில் கால் மேல் கால் போட்டு காலை ஆட்டிக் கொண்டிருப்பார்கள். நின்றால் நடப்பார்கள்இ உட்கார்ந்தால் எழுந்த நிற்பார்கள் அவ்வப்பொழுது பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள்இ சில சமயம் பேச்சு மூச்சே இல்லாமல் இருப்பார்கள்.

இப்படியான சூழ்நிலை ஏற்பட்டால் அதனை விடுத்து தலைக்குகீழ்ஒரு தலையணை வைத்து தரையில் படுத்துக் கொள்ளுங்கள் அல்லது இருக்கையில் தலையணையை வைத்து தலையை சற்று சாயுங்கள் . இதில் எது பிடித்திருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தமிழ்சிறி உப்புடி சோர்ந்து போயிட்டியள்!!!!!!

எல்லாத்திற்கும் மனம் தான் காரணம்!!!!!

அதால மனதை திடமாய் வைச்சிருங்கோ!!!!!

தழிழ்மாறன் வெள்ளைக்காரனை பாருங்கோ எப்படி இருக்கான்

எல்லாத்துக்கும் மனம் தான் காரணம்

Edited by jhansirany

  • தொடங்கியவர்

அண்ணன் தமிழ்மாறன் உங்களுக்காக நல்லவிசயத்தை கொண்டுவந்திருக்கிறார்.

என்ன கு ம அ என்னை அண்ணை எண்டு சொல்லிப் போட்டியள்!!!!!

எனக்கு சின்ன பொடியனாய் இருக்க தான் விருப்பம் !!!!!!

எப்போதும் இளமையாகவும் எல்லா விடயங்களிலும்??? சுறு சுறுப்பாகவும்

இருக்க விருப்பம்!!!!!!

உங்களை மாதிரி தான்!!!!!!!

சும்மா உங்கட பேரை பாத்திட்டு இவங்கள் எல்லாரும் உங்களை அண்ணா எண்டுற

மாதிரி................ என்னையும் சொல்லாதையுங்கோ தாத்தா!!!!!!

  • தொடங்கியவர்

ஓம் யான்சி ராணி நீங்கள் சொல்வது சரிதான்!!!

அவர்கள் எப்போதும் இளமையாக இருப்பதிற்கு காரணம்

அவர்களின் மனம் தான்.............

எங்கண்ட சனம் முதல் பிள்ளை வயசுக்கு வந்து விட்டாலே தங்கட வாழ்க்கை முடிஞ்சு

போச்சு எண்டு எண்ணுகிறதுகள்!!!!!!

தங்கட வாழ்க்கையை சந்தோசமாக வாழ தெரியாததுகள்....

அது மட்டுமல்லாமல் நாளைக்கு நாளைக்கு எண்டு சேர்த்து

வைப்பதிலேயே கண்ணாயிந்து இன்றய வாழ்க்கையை

கோட்டைவிடுபவர்கள்!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாவற்றுக்கும் மனம் தான் காரணம்"..........அருமையான தத்துவம். பதிந்த தமிழ் மாறனுக்கு நன்றி........அதுசரி தமிழ் மாறனுக்கு

ஐம்பது தாண்டியாச்சோ :( .......உணர்ந்து எழுதியது போல இருக்கு. .......தரமான பதிவை பதிந்த தமிழ் மாறனுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐம்பதுலும் ஆசை வரும் :(:(

ஐம்பதுலும் ஆசை வரும் :o:)

யாருக்கு????????? :( :(

  • தொடங்கியவர்

எல்லாருக்கும்தான் மருமகன்!!!!!

ஏன் உங்களுக்கும் தான்!!!!!!

  • தொடங்கியவர்

என்ன நிலா அக்கா உப்புடி சொல்லிப் போட்டியள் நான்

இன்னும் 25 கூட தாண்டேலை!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.