Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறு எமக்குண்டு (வல்வை சகாறா)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விழுகை என்பது விதிப்படியும்

எழுகை என்பது வினைப்படியும்

நிகழ்ந்தே ஆகவேண்டும்.

நேற்றொரு நாள்

சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது

கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு

இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம்

விடுதலைத் தழலில் வெந்து போயின.

சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.

இந்தியத்தை விட்டு

காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.

இனத்தின் நித்திய வாழ்வுக்கு

நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்

சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.

பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி

தோற்றதன் எதிரொலியை

ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.

மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.

ஒப்பாரியின் உள்ளொலியில்

பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.

கால நெருப்பை ஏந்திய கண்களே

காவல் தெய்வங்கள் ஆயின.

அடைக்கலம் தந்த உறவுகளே

ஆற்றல்களையும் வழங்கின.

இன்னலைச் சுமந்த இருப்புகளே

ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.

முகாரிகளை இசைத்தபடியே

புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.

பிணம் புழுத்த வீதிகளிலேயே

பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி

சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.

எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்

எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.

இன்றைகள் மட்டுமேன்....

துருவ முனைகள் வரைக்கும்

உறைந்து கிடக்கிறது மூளா நெருப்பு!

பூபாளத்தை மறந்து புல்லாங்குழல்கள்

முகாரிகளையே முழுமை என்கின்றனவே!!!

ஒலியை இழந்தால்

பறைக்குப் பெருமையில்லை

பாதி வழியில் நின்று விட்டால்

பயணத்தில் முழுமையில்லை

விதியென்று ஓய்ந்து விட்டால்

மதியிருந்தும் பலனில்லை

விழல் என்று முடிவெடுத்தால்

விடுதலைக்கு இடமில்லை

நித்திய வாழ்வுக்காய்

நிம்மதியைக் கேட்ட இனம்

சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது

காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்

தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்

கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்

காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.

மீண்டும்…..

கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.

Edited by valvaizagara

அருமையான கவிதை சகாரா

அதர்மங்கள் எல்லாம் அவசரமாகவே வெல்லும்

தர்மங்கள் தாமக வெல்லும்

வெல்வோம்

நாம் வெல்வோம் ஏந்திய குப்பி இன்றும் இருக்கின்றுது

அக்கா வாழ்த்துக்கள். அருமையான பதிவு.

வரலாற்றை மறைக்காத மறுக்காத வரிகள்.

நீண்ட எம் இரவுகள் விடிகின்ற வேளை - அக்கா

நிச்சயம் நம் சந்ததி பேசிடும் உன்கவி நாளை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3rd Eye, ராசராசன் உங்கள் இருவரின் வரவிற்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி உரைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சகாராக்கா..

உங்களின் கவி சொல்லும் விடயங்கள் அனைத்தும் மக்கள் கண் முன் நடந்தேறிய அவலங்கள்.உங்கள் கவிதை அவற்றைச் சொல்லிச் சென்ற விதம் அழகு...காலத்திற்கு ஏற்ப எடுத்து இயம்பி இருக்கிறீர்கள் நன்றி அக்கா.

நித்திய வாழ்வுக்காய்

நிம்மதியைக் கேட்ட இனம்

சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது

காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

பிரியமுடன்....யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி இன்றைய நாட்களில் அநேகர் சந்தர்ப்பவாதிகளாக மாறிக் கொண்ட செல்கிறார்கள். மனதிற்குக் கஸ்டமாக இருக்கிறது. கண்ணெதிரே எத்தகைய கொடூரங்களைக் கண்டு துடிதுடித்திருக்கிறோம். நடந்து வந்த பாதைகளையும், இழப்பின் வலிகளையும் மறந்து சம்பந்தமில்லாதவர்கள் போல் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டும் வீணான விவாதங்களை மேற்கொள்ளும் அனைவரையும் பார்த்துக் காறி உமிழ்ந்தாலென்ன என்று தோன்றுகிறது. அனலிடை கிடந்துழலாத அயோக்கியர்கள் மாற்றுக் கருத்து என்று ஏதோதோ சொல்கிறார்கள். எல்லாம் பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்பதைப் போல் இருக்கிறது. செயலாற்று திறனற்ற ஒரு கூட்டம் குற்றச்சாட்டை வைப்பதிலே மும்முரமாக இருக்கும் அளவுக்கு தம்மால் தம்பாட்டில் ஏதாவது முயற்சிகள் எடுக்கிறதா என்றால்....கேள்விக்குறிதான் மிச்சமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தைக் காட்டும் உங்கள் கவிதை வரிகள் அழகு.

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்

காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்..................

எல்லாம் முடிந்தது என்று உறைந்து போய் அவரவர் தம் வீட்டு வேலைகளில் மூழ்கி கிடப்பர் . சகாராவின் கவி வரிகள்

அனைவரையும் தட்டி எழுப்பும் ஓர் பறையொலி.........பறை யொலி கேட்டு ........யாழ் உறவுகளாவது செயல் படாதா ....

...நம் முகாமில் அடைபட்ட உறவுகளுக்காய் ..........

உணர்வூட்டும் கவி வரிகள் சகாரா ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியக்கா, கறுப்பி உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி உரைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சகாரா அக்காவுக்கு

மிக அற்புதமான வரிகள்....

இன்றைகள் மட்டுமேன்....

துருவ முனைகள் வரைக்கும்

உறைந்து கிடக்கிறது மூளா நெருப்பு!

பூபாளத்தை மறந்து புல்லாங்குழல்கள்

முகாரிகளையே முழுமை என்கின்றனவே!!!

ஒலியை இழந்தால்

பறைக்குப் பெருமையில்லை

பாதி வழியில் நின்று விட்டால்

பயணத்தில் முழுமையில்லை

விதியென்று ஓய்ந்து விட்டால்

மதியிருந்தும் பலனில்லை

விழல் என்று முடிவெடுத்தால்

விடுதலைக்கு இடமில்லை

நித்திய வாழ்வுக்காய்

நிம்மதியைக் கேட்ட இனம்

சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது

காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

மீண்டும்…..

கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.

உங்கள் வரிகளின் ஏக்கம் தான் இன்றைய ஒவ்வொரு மானமுள்ள தமிழ் மகனின் ஏக்கமும்.... இந்த நிலை நிச்சயம் மாறும் அதுவரை விடாமல் எங்கள் கடமைகளைத் தொடர்வோம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.