Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் 150 ஆவது நாளைத் தொடும் தொடர் கவனயீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 - 9 - 2009 சனிக்கிழமையுடன் 150 நாட்களைத் தொடுகிறது இக்கவனயீர்ப்புப் போராட்டம்

கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 150 நாளைத் தொடும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்.

பின்வரும் வாசகங்களை ஒலித்தவண்ணம்

2882009redcross360unive.jpg

நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது.

2882009redcross360unive.jpg

2882009redcross360unive.jpg

2882009redcross360unived.jpg

2882009redcross360unive.jpg

2882009redcross360unive.jpg

2882009redcross360univep.jpg

2882009redcross360unive.jpg

2882009redcross360univev.jpg

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 - 9 - 2009 சனிக்கிழமையுடன் 150 நாட்களைத் தொடுகிறது இக்கவனயீர்ப்புப் போராட்டம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

149 ஆம் நாளின் நிகழ்வுகளைப் பார்வையிட கீழ்க்காணும் இணைப்பை அழுத்துக.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64080

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழுகை என்பது விதிப்படியும்

எழுகை என்பது வினைப்படியும்

நிகழ்ந்தே ஆகவேண்டும்.

நேற்றைய நாள்

சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது

கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு

இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம்

விடுதலைத் தழலில் வெந்து போயின.

சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.

இந்தியத்தை விட்டு

காந்தீயம் கப்பலேறிக் காணாமற்போனது.

இனத்தின் நித்திய வாழ்வுக்கு

நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்

சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.

பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி

தோற்றதன் எதிரொலியை

ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.

மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.

ஒப்பாரியின் உள்ளொலியில்

பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.

கால நெருப்பை ஏந்திய கண்களே

காவல் தெய்வங்கள் ஆயின.

அடைக்கலம் தந்த உறவுகளே

ஆற்றல்களையும் வழங்கின.

இன்னலைச் சுமந்த இருப்புகளே

ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.

முகாரிகளை இசைத்தபடியே

புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.

பிணம் புழுத்த வீதிகளிலேயே

பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி

சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.

எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்

எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.

இன்றைகள் மட்டுமேன்....

துருவ முனைகள் வரைக்கும்

உறைந்து கிடக்கிறது மூளா நெருப்பு!

பூபாளத்தை மறந்து புல்லாங்குழல்கள்

முகாரிகளையே முழுமை என்கின்றனவே!!!

ஒலியை இழந்தால்

பறைக்குப் பெருமையில்லை

பாதி வழியில் நின்று விட்டால்

பயணத்தில் முழுமையில்லை

விதியென்று ஓய்ந்து விட்டால்

மதியிருந்தும் பலனில்லை

விழல் என்று முடிவெடுத்தால்

விடுதலைக்கு இடமில்லை

நித்திய வாழ்வுக்காய்

நிம்மதியைக் கேட்ட இனம்

சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது

காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்

தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்

கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்

காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.

மீண்டும்…..

கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

150 ஆவது நாளின் நிகழ்கவுகள், நிழற்படங்களைக் காண்பதற்கு கீழ்வரும் இணைப்பை அழுத்துக.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64150

உலகெங்கிலும் கவனயீர்பு நிகழ்வுகள் படிப்படியாக ஓய்ந்துகொண்டிருந்தாலும் ஓயாது 150 நாட்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் தாயக உறவுகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நல்லுள்ளங்களுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.