Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தளவும் போதும் எனக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எங்கள் கவிகளுக்கன திரி,

1995 இடப்பெயர்விற்க்கு நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பிபோய், எங்களுடைய வாழ்வை மெல்ல மெல்ல தொடங்கிய காலம், எல்லாம் இழந்து உயிரை மட்டும் கொண்டு போய் வாழ்வை தொடங்கிய காலம்,

எங்கட பீடத்தில் நடத்த கவிதைப் போட்டிக்கு கொடுத்த தலைப்பு

"இந்தளவும் போதும் எனக்கு"

உண்மையில் இது ஒரு " எதிர் மறையான" தலையங்கம்..

எங்களது இழப்பை எல்லாம் சொல்லிவிட்டு, ஆறுதலுக்காய், "இந்தளவும் போதும் எனக்கு" என்று முடிப்பது..

அப்பா சொல்லுவார், முஸ்லீம் சாகோதரர்க்கள் சொல்லுவார்களாம், " வீடு எரிந்தாலும் அல்லா சுவரைக் காத்தார்" என்று.....யாரும் குறையாக எடுக்க வேண்டாம்.

புலத்தில் உள்ள கவலைகளையும் சொல்லலாம்..

நான் நல்ல ரசிகன்...ஆனால் எழுத தெரியாது..

உங்கள் ஆக்கங்களை எதிர் பார்க்கும்

வல்க்கனோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு வகையான மலிவான இன்பம் என்று நினைக்கின்றேன், மற்றவர்களின் கவிதையை படித்துவிட்டு கருத்து சொல்வது. யாரும் கவிதை தரத் தயாரில்லை. நானே எழுதி கிறுக்கல் சித்திரம் வரைய துணிவில்லை.வேகமாக எழுதத் தெரியாமல் தவிக்கின்றேன்....

இப்போதெல்லாம், கனடியன், அரசாங்க அலுவலங்களுக்கு சென்றால், தமிழில் "வணக்கம்" உண்டாவென பார்ப்பது ஒரு வியாதிபோல் என்னை பாதிக்கிறது. என்னை கோபப்படுத்தியது, அண்மையில், சிறீலங்கா என்னும் கையேடு. ஒரு வேற்றின மொழியாளரால் எழுதப்பட்டது, ஆலோசனைக் குழுவில், 2 அல்லது 3 தமிழரும்,1 சிங்களவரும் உள்ளார்கள், ஆனால் புத்தகம் என்னவோ கிட்டத்தட்ட முற்றுமுழுதாத சிங்களவர்கள் பற்றித்தான்..மருந்திற்க்கும் தமிழ் பிரதேச படம் இல்லை..தேயிலை பறிக்கும் பெண்ணைத்தவிர, ஏன் இந்த அடிமைப் புத்தி..கனடாவிலும்?

பிறகு வாரேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழுந்த பிணங்கள் போதும்

கருகிய உடல்கள் போதும்

கட்டவிழ்ந்த சேலைகள் போதும்

கழுத்தறுந்த தாலிகள் போதும்

கற்பிழந்த பெண்கள் போதும்

கருகிய கரும்புலிகள் போதும்

இழந்துவிட்ட மாவீரர் போதும்

ஒரேயொரு திலீபன் போதும்

எதிரிக்கு கருத்தரித்த

எங்கள் குமரிகள் போதும்......

எதிரி கழுத்தறுத்த

எங்களின் விடலைகள் போதும்......

இப்படி பலவாய்

நாம் இழந்துவிட்ட

துன்பம் போதும்.......

தமிழருக்கு போதாததெல்லாம்

ஒரேயொரு பிரபாகரன்........

நண்பரே எதிர்மறையான தலைப்பை ஏன் எந்த ராஜதந்திரத்தைக் கூட எங்களுக்கு சாதகமாக நேர்மறையாக மாற்றும் தந்திரம் தெரிந்திருந்தால் போதும் எங்கள் இலக்கை அடைவதற்கு....

அன்புடன்

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கவிதை எழுத வராது இருந்தும் உங்களுக்காய்..

இந்தளவும் போதும் எனக்கு

முப்பது வருடங்களுக்கு மேலாய் செதுக்கிய தமிழீழச்சிலை

முள்ளியாய்க்காலோடு முற்றுப் பெறாமலே சிதைந்த போதும்

மீட்பருக்காய் காத்திருந்த இனம் இன்று

மீட்பர்களையே அழித்து விட்டு

கடைசித்துளி கண்ணீரொடு

காத்திருக்கிறது...

எப்படிச் சொல்ல அந்த இறுதி நாட்களை

கடைசிப் பிள்ளை கண்முன்னே

குண்டடிபட்டு இறந்து கிடக்கும் போதும்

காலால் உதறி விட்டு கால்நடையாய்ப்

போகிறேன் காலனின் வதைமுகாம் நோக்கி

என் மனுசியின் சதைத் துண்டங்களை

நாய்கள் தின்னும் போதும் சூ..என்று

கலைக்கத் திராணியற்று சூழ்நிலைக் கைதியாய்

சுருண்டு போய்க் கிடக்கின்றேன்

வந்த வழி எங்கிலுமே வாழ்விழந்த

மனிதர்களின் குருதிக் கடலில்

மீன்களாய் மிதக்கின்றன தமிழர் பிணங்கள்

கண்ட பின்னும் நடக்கிறேன் கால் போகும் திசை நோக்கி

போகுமிடம் சொர்க்கமில்லை எனத் தெரிந்தும்

போய்ப் பார்த்தேன் நரகத்தின் கொடுமைகளை

நம்மினம் அனுபவிப்பதைக் கண்டு

போயிருக்கலாம் என் மனைவி பிள்ளை போன இடத்துக்கே

போதுமடா சாமி எமக்கு இந்த வாழ்க்கை

கண் முன்னே அண்ணனை காடையர்

கூட்டம் இழுத்துச் செல்லும் போதும்

பக்கத்து வீட்டு அக்காவை பல ஓநாய்க் கூட்டம்

சேர்ந்து சிதைக்கும் போது அவள் கதறிய ஒலி காதில் கேட்டும்

கண் கட்டி வாய் பொத்தி

காதிருந்தும் கேட்காது

கையாலாகாத் தனமாய் இருந்த

காலமெல்லாம் போதுமைய்யா எமக்கு

நெல் விளைந்த பூமி எல்லாம் இன்று

தமிழர் பிணங்கள் எரிந்த சுடுகாடாய்

மண்ணை இழந்தோம் மக்களை இழந்தோம்

பொன்னை இழந்தோம் பொருளை இழந்தோம்

கண்ணான எம் தாய் தந்தை பிள்ளைகளை இழந்தோம்

இழப்பினில் வடிக்கும் இறுதிச் சொட்டு

கண்ணீரையும் இழந்தோம்

இன்னும் என்ன இருக்கு இழப்பதற்கு

இந்தளவும் போதும் எனக்கு...

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழுந்த பிணங்கள் போதும்

கருகிய உடல்கள் போதும்

கட்டவிழ்ந்த சேலைகள் போதும்

கழுத்தறுந்த தாலிகள் போதும்

கற்பிழந்த பெண்கள் போதும்

கருகிய கரும்புலிகள் போதும்

இழந்துவிட்ட மாவீரர் போதும்

ஒரேயொரு திலீபன் போதும்

எதிரிக்கு கருத்தரித்த

எங்கள் குமரிகள் போதும்......

எதிரி கழுத்தறுத்த

எங்களின் விடலைகள் போதும்......

இப்படி பலவாய்

நாம் இழந்துவிட்ட

துன்பம் போதும்.......

தமிழருக்கு போதாததெல்லாம்

ஒரேயொரு பிரபாகரன்........

நண்பரே எதிர்மறையான தலைப்பை ஏன் எந்த ராஜதந்திரத்தைக் கூட எங்களுக்கு சாதகமாக நேர்மறையாக மாற்றும் தந்திரம் தெரிந்திருந்தால் போதும் எங்கள் இலக்கை அடைவதற்கு....

அன்புடன்

இளங்கவி

நன்றி இளங்கவி அண்ணா..

அருமையான கவிதை எமக்கு தந்ததற்காய்

எவ்வளவு இழந்த பின்னும் எமக்கு தேவை

"தமிழருக்கு போதாததெல்லாம்

ஒரேயொரு பிரபாகரன்"........

கடந்த யாழ்மாநகர

தேர்தலில் யாழ்மக்களின்

மனநிலைபோதும்

எனக்கு

வேண்டாம் போராட்டம்

வேண்டாம் மாற்றுக்கருத்து

வேண்டாம் உரிமை

வேண்டாம் வீராப்பு

வேண்டாம் ஜனநாயகம்

வேண்டும் வாழ்வு

இப்படி பலவாய்

நாம் இழந்துவிட்ட

துன்பம் போதும்.......

தமிழருக்கு போதாததெல்லாம்

ஒரேயொரு பிரபாகரன்........

நன்று

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்த பிணங்கள் போதும்

கருகிய உடல்கள் போதும்

கட்டவிழ்ந்த சேலைகள் போதும்

கழுத்தறுந்த தாலிகள் போதும்

கற்பிழந்த பெண்கள் போதும்

கருகிய கரும்புலிகள் போதும்

இழந்துவிட்ட மாவீரர் போதும்

ஒரேயொரு திலீபன் போதும்

எதிரிக்கு கருத்தரித்த

எங்கள் குமரிகள் போதும்......

எதிரி கழுத்தறுத்த

எங்களின் விடலைகள் போதும்......

இப்படி பலவாய்

நாம் இழந்துவிட்ட

துன்பம் போதும்.......

தமிழருக்கு போதாததெல்லாம்

ஒரேயொரு பிரபாகரன்........

மிகவும் நன்றி இளங்கவி.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏன்......? எமக்காய் கிளிந்த கந்தல்......

துணியால் அமைத்த அகதி முகாம்கள் போதும்

கூடாரவாழ்கை போதும்

எம் இனத்தைக் கூண்டோடு....

அளிப்பதற்கு வாங்கிய ஆயுதங்களும் போதும்

சொல்லிய பொய் புரட்டுக் களும் போதும்

தமிழனை நின்மதியாய்... தன்

சொந்த நிலத்தில்.....

வாழ விட்டால் அதுவே போதும்...அவன்

இறக்கும் மட்டும்.

பிரியமுடன்...யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி, நன்றி.. !!!

கோடானகோடி நன்றி..

வலி உணர்ந்த வரிகள்...

வழி சொல்லும் வரிகள்.....

----மாலை வருகிறேன்..வேலை/கடமை அழைப்பதால்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த யாழ்மாநகர

தேர்தலில் யாழ்மக்களின்

மனநிலைபோதும்

எனக்கு

வேண்டாம் போராட்டம்

வேண்டாம் மாற்றுக்கருத்து

வேண்டாம் உரிமை

வேண்டாம் வீராப்பு

வேண்டாம் ஜனநாயகம்

வேண்டும் வாழ்வு

கனடா தெரு ஒன்றிலே

கால நடையாய் நடக்கின்றேன்....

காப்பிலி ஒருத்தண்

என்னைக் கண்வெட்டாமல் பார்க்கின்றான்....

கலோ என்று சொல்லிவிட்டு

என் நடையைத் தொடர்கின்றேன்....

நான் கலோ சொன்னது

அவனுடன் நட்புறவை வளர்க்கவல்ல

என் பாதுகாப்பை உறிதிசெய்ய....

இது போல...

திறந்த வெளி சிறைச்சாலையிலே

திக்கெல்லாம் ஆமி நிற்க

தம் சிசுவைப் பாதுகாக்க

திரியும் ஆமிக்கு ஓர் கலோ.....

தம் பையனைப் பாதுகாக்க

முறைக்கும் ஆமிக்கு ஓர் கலோ.....

பருவம் கண்ட பெண்ணைப் பாதுகாக்க

பார்க்கும ஆமிக்கு ஓர் கலோ...

இந்தப் பாதுகாப்பில்லாக் கெடுபிடியில்

பக்குவமாய் ஓர் தேர்தலாம்.......

அதன் முடிவு சொல்லுமாம்

மக்களின் மனத்தின் இருக்கைகளை....

நாங்களும் புலத்திலே இருப்பமாம்

மக்களின் மனங்களையும்

பூதக் கண்ணாடியால் பார்ப்பமாம்.....

காப்பிலிக்கும் ஓர் கலோ

காவாலி ஆமிக்கும் ஓர் கலோ

இந்த நிலை மாறும் வரை

எதிரான கருத்துக்கும் ஓர் கலோ....

வணக்கம்

இளங்கவி

Edited by ilankavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா இளங்கவி...

விழுந்த பிணங்கள் போதும்

கருகிய உடல்கள் போதும்

கட்டவிழ்ந்த சேலைகள் போதும்

கழுத்தறுந்த தாலிகள் போதும்

கற்பிழந்த பெண்கள் போதும்

கருகிய கரும்புலிகள் போதும்

இழந்துவிட்ட மாவீரர் போதும்

ஒரேயொரு திலீபன் போதும்

எதிரிக்கு கருத்தரித்த

எங்கள் குமரிகள் போதும்......

எதிரி கழுத்தறுத்த

எங்களின் விடலைகள் போதும்......

இப்படி பலவாய்

நாம் இழந்துவிட்ட

துன்பம் போதும்.......

தமிழருக்கு போதாததெல்லாம்

ஒரேயொரு பிரபாகரன்........

உங்கள் கவிசொல்லும் வலி கண்டு விழி வழிகிறது, மனம் பதறுகிறது. விழுந்த பிணங்கள்,கருகிய உடல்கள்,மாவீரர்,கரும்புலி,தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன்...

(தமிழர்) சேற்றில் முளைத்த செந்தாமரை..

பன்றிக்களுக்குள் பசு...நட்சத்திரங்களுள் சுரியன், கற்பனைகளுள் நியமானனவன்,கருணாக்களையும், (கள்ள) காந்திகளையும்,எல்லா (போலி) தமிழ் தலைவர்களையும் இனங்காட்டியவன், எங்கள் புலத்தில் (புலித்தோல் போர்த்திய) புலி பினாமிகளை காட்டியவன் இன்னும் லட்சம் கோடி செய்தவன்...

ஆனால்,

எங்களுக்கு இப்ப வேணும் நிம்மதி...அதற்கு பிரபாகரன்கள் மட்டும் போதாது...

அது என்னவென்றும் சொல்லத் தெரியவில்லை..

அதை சொல்லவும்.....? வேண்டும்......அவன்

பிரபாகரன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ilankavi @ Sep 26 2009, 05:40 PM)

இப்படி பலவாய்

நாம் இழந்துவிட்ட

துன்பம் போதும்.......

தமிழருக்கு போதாததெல்லாம்

ஒரேயொரு பிரபாகரன்........

என் பிரார்த்தனையும் இது தான் இளம் கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பது வருடங்களுக்கு மேலாய் செதுக்கிய தமிழீழச்சிலை

முள்ளியாய்க்காலோடு முற்றுப் பெறாமலே சிதைந்த போதும்

மீட்பருக்காய் காத்திருந்த இனம் இன்று

மீட்பர்களையே அழித்து விட்டு

கடைசித்துளி கண்ணீரொடு

காத்திருக்கிறது...

எப்படிச் சொல்ல அந்த இறுதி நாட்களை

கடைசிப் பிள்ளை கண்முன்னே

குண்டடிபட்டு இறந்து கிடக்கும் போதும்

காலால் உதறி விட்டு கால்நடையாய்ப்

போகிறேன் காலனின் வதைமுகாம் நோக்கி

என் மனுசியின் சதைத் துண்டங்களை

நாய்கள் தின்னும் போதும் சூ..என்று

கலைக்கத் திராணியற்று சூழ்நிலைக் கைதியாய்

சுருண்டு போய்க் கிடக்கின்றேன்

வந்த வழி எங்கிலுமே வாழ்விழந்த

மனிதர்களின் குருதிக் கடலில்

மீன்களாய் மிதக்கின்றன தமிழர் பிணங்கள்

கண்ட பின்னும் நடக்கிறேன் கால் போகும் திசை நோக்கி

போகுமிடம் சொர்க்கமில்லை எனத் தெரிந்தும்

போய்ப் பார்த்தேன் நரகத்தின் கொடுமைகளை

நம்மினம் அனுபவிப்பதைக் கண்டு

போயிருக்கலாம் என் மனைவி பிள்ளை போன இடத்துக்கே

போதுமடா சாமி எமக்கு இந்த வாழ்க்கை

கண் முன்னே அண்ணனை காடையர்

கூட்டம் இழுத்துச் செல்லும் போதும்

பக்கத்து வீட்டு அக்காவை பல ஓநாய்க் கூட்டம்

சேர்ந்து சிதைக்கும் போது அவள் கதறிய ஒலி காதில் கேட்டும்

கண் கட்டி வாய் பொத்தி

காதிருந்தும் கேட்காது

கையாலாகாத் தனமாய் இருந்த

காலமெல்லாம் போதுமைய்யா எமக்கு

நெல் விளைந்த பூமி எல்லாம் இன்று

தமிழர் பிணங்கள் எரிந்த சுடுகாடாய்

மண்ணை இழந்தோம் மக்களை இழந்தோம்

பொன்னை இழந்தோம் பொருளை இழந்தோம்

கண்ணான எம் தாய் தந்தை பிள்ளைகளை இழந்தோம்

இழப்பினில் வடிக்கும் இறுதிச் சொட்டு

கண்ணீரையும் இழந்தோம்

இன்னும் என்ன இருக்கு இழப்பதற்கு

இந்தளவும் போதும் எனக்கு...

ஜிவா,

எங்களின் அவலங்களை இதைவிட சொல்ல முடியாது, நடந்த அவலத்தின் சாட்சி.."கண்ணான எம் தாய் தந்தை பிள்ளைகளை இழந்தோம் இழப்பினில் வடிக்கும் இறுதிச் சொட்டு கண்ணீரையும் இழந்தோம்" வேண்டாம் இந்த வலி இனி எவருக்கும் இவ்வுலகில். எனக்கு போலியாக வசனங்களை நிரப்ப தெரியவில்லை. பல நாள் சிந்திதும் கருத்தெழுத முடியவில்லை. ஒன்றுமட்டும் உண்மை யாழின் பதிவுகள் வரலாற்று பதிவுகள்..யாரும் நூலாக்கினால் மிகவும் நன்று.

உண்மையில் உங்களினதும் இளங்கவியினதும் கவிதைகளை படித்துவிட்டு எங்கள் மூத்த கலைஞர்களும்,அறிஞர்களும் யாழில் இணைந்திருந்தால் எவ்வளவு நல்லது என்று எண்ணியிருந்தேன்,அப்போதுதான், எங்கள் வி.ரி.பாலசந்திரன்(தர்) தனது நூல் பற்றிய அறிமுகத்திற்க்கு பதிலெழுதியிருந்தார். பார்க்க சந்தோசமாக இருந்தது. உங்களைப்போன்றோரின் எழுத்தும், தமிழர் வாழ்வும் வாழ வாழ்த்துகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூத்த கலைஞரின் பெயர்.கே.எஸ்.பாலசந்திரன்..தவறு

க்கு வருந்துகிறேன்..

அண்ணை ரைற்றோ!!!

.....

காப்பிலிக்கும் ஓர் கலோ

காவாலி ஆமிக்கும் ஓர் கலோ

இந்த நிலை மாறும் வரை

எதிரான கருத்துக்கும் ஓர் கலோ....

வணக்கம்

இளங்கவி

காப்பிலிக்கு கலொ சொல்லலாம்

அவன் ஆபிரிக்கன்

காவாலி ஆமிக்கு கலோ சொல்லாம்

அவன் இனவாத சிங்களவன்

மாற்றுக்கருத்தாளன் நான்

எனக்கு ஏன் கலோ?

தமிழன்

வடக்கன்

யாழ்பாணத்தான்

ஊரான் :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.