Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியம் எண்ணிக்கையல்ல அதுவொரு பண்புநிலை – ரீட்டா

Featured Replies

விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பு அழித்தொழிக்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தின் மற்றுமொரு கட்டம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதுடன் தமிழ்த் தேசியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக ஒரு மாயையை உருவாக்கி விட சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக முயன்று வருகின்றது. தமிழ்த் தேசியத்தின் ஆழமான வேர் சிங்கள பெளத்த பேரினவாத்தின் விளைவு என்பதில் நன்கு தெளிவாக உள்ள சிறிலங்கா ஆளுங்குழுமம் தமிழ்த் தேசியவாதம் மீளவும் தலை தூக்காதவாறு செய்வதில் மிகுந்த பிரக்ஞையுடன் ஓயாது செயற்பட்டு வருகின்றது.

1972ம் ஆண்டு சிங்கள அரசியல் சாசனத்தின் விளைவு வட்டுக் கோட்டை தனியான தமிழீழம் தனியரசு என்ற தீர்மானம் ஆகும். அன்று தொட்டு தமிழ்த் தேசியத்தின் அரசுருவாக்கத்திற்கு ஆதாரமாக அமையவிருந்த நிலப்பரப்பினைத் துண்டாடுவதை சிங்கள அரசு மிகவும் திட்டவட்டமாகச் மேற்கொண்டு வந்தது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுவியதுடன் அவற்றைக் காலத்திற்குக் காலம் விசாலப்படுத்திக் கொண்டமை இதன் பிரதான அம்சமாகும். இதனூடாக் தமிழ் முஸ்லிம் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் அவர்களின் வீதாசார செறிவினைக் குறைத்து வந்தமை இரண்டாவது பிரதான அம்சமாகும். இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட பல்வேறு திட்டமிட்ட ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் விளைவுதான் கூர்மையுற்ற தமிழ்த்தேசியமும் விடுதலைப் போராட்டமும் இறுதிக் கட்டமாக ஆயுதப்போராட்டமும் ஆகும்.

முப்பது வருடங்களாக நடைபெற்று வந்த ஆயுதப் போராட்டம் அதன் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளால் கையகப்படுத்தப்பட்டு முரட்டுத் தனமாக முன்னெடுக்கப்பட்டு, பல்வேறு இராணுவ சாதனைகள் அடையப்பட்டு அதன் உள்ளாந்த அரசியல் பலவீனம் காரணமாக இன்று சிங்கள அரசினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தோற்கடிக்கப்பட்டும் கூட சிங்கள அரசிற்கு தமிழ்த் தேசியம் குறித்த அச்சம் அகன்று விடவில்லை.இதற்கான ஊற்று மூலம் தனது மேலாதிக்கப் போக்குத்தான் என்பது அவர்களுக்குத் தெளிவு என்பதுதான இதற்குக் காரணமாகும்.

தமிழ்த்தேசியம் மாத்திரமல்ல வேறெந்த தேசியங்களும் கூட சிறிலங்காவில் தலையெடுக்க விடக் கூடாது என்ற நோக்கில் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு இன்று மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகள் பெளதிக ரீதியிலும் கருத்தியல் ரீதியிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்கா அரசினாலும் அதன் நிலைத்தலுக்காக வாதாடும் அரசியல் நிபுணர்களாலும் தற்போது புதிய வாதமொன்று முன்வைக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியம் தனக்கென ஒரு அரசினை உருவாக்கி அதன் ஆள்புல எல்லையாக அமையக் கோரும் தாயக நிலப்பரப்பில் தமிழ் மக்கள் சொற்ப அளவில் இருப்பதாகவும் தாயகத்திற்கு வெளியில் அதனை விட அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் எனவே தனியான அரசிற்கான அடித்தளம் இப்போது கிடையவே கிடையாது எனவும் வாதிடப்படுகின்றது.

“பெரும்பான்மை” எனும் எண்ணிக்கை வகைப்பட்ட எண்ணக் கருவின் மீது தனது ஆதிக்கத்தை நிறுவிக் கொண்ட சிங்கள ஆழுங்குழுமமானது தேசியம், தேசம் என்ற பண்புநிலை சார் எண்ணக்கருவினை சற்றேனும் விளங்கிக் கொள்வதாக இல்லை அல்லது வேண்டுமென்றே விளங்க மறுக்கின்றது.

பலஸ்தீன மக்கள் தமது பாரம்பரியப் பிரதேசங்களில் இருந்து பலவந்தமாக கிட்டத்தட்ட முற்று முழுதாக வெளியேற்றப்பட்ட பின்பும் கூட அவர்களின் தேசிய உணர்வானது பல வருடங்கள் நீடித்து நிலைத்து இறுதியில் சில குறைபாடுகளுடன் என்றாலும் ஒரு தனியான அரசினை நிறுவிக் கொண்டனர். இதைவிடப் பொருத்தான உதாரணம் வேறென்ன வேண்டும். இங்கு இரண்டு விடயங்கள் முக்கியமானதாகும். ஓன்று தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசத்திலிருந்து சுய விருப்புடன் வெளியேறவில்லை. அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் இன அழிப்பின் பல்வேறு வடிவங்களைத் தாங்க முடியாது வெளியேறினார்கள். இரண்டாவதாக> அவர்கள் அவ்வாறாக வெளியேறி தென்னிலங்கையிலும் தமிழ் நாட்டிலும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் வதிகின்ற போதிலும் அவர்களின் தேசிய உணர்வும்> தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற அவாவும் வற்றி விடவில்லை. பல்வேறு விதங்களில் இந்த தேசிய உணர்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு தொடக்கம் 22 வருடங்களாக நிலவிய விடுதலைப் புலிகளின் மேலாதிக்க அரசியல் போக்கில் உடன்பாடு இல்லாத பலரும் கூட விடுதலைப் புலிகள் அமைப்பின் எதிரி நோக்கிய செயற்பாடுகளில் உட்கூறாகக் கிடந்த தேசிய அம்சத்தை ஆதாப்த்து வந்தமைக்குக் காரணம் தமக்குள் பொதிந்து கிடந்த தேசிய வேட்கைதான். தேசிய உணர்விற்கு நில எல்லை கிடையாது. நுப்லம் என்பது வெறும் ஆள்புல எல்லைதான். அது துண்டாடப்பட முடியும் குறுக்கப்பட முடியும், விஸ்தாப்க்கப்படவும் முடியும். மற்றப்படி இது ஒரு உணர்வு சார்ந்த ஆழமான அரசியல் பிடிப்பாகும். நிலப் பிரதேசம் என்ற பெளதிக அம்சத்தையும் கடந்த அரசியல் வகையினமாகும்.

எண்ணிக்கைச் செறிவினைக் குறைத்து விட்டால் தமிழ்த் தேசிய அவாவிற்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்து விடலாம் என்ற சிங்கள மேலாதிக்க அரசியலின் முட்டாள்தானமான கணக்கின் விளைவே இது. இன்னமும் கூட சிங்கள் மேலதிக்க சக்திகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வெளியேற்றப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களை அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களிற்கு மீளத் திரும்பி சுதந்திரமாக வாழ்வதற்கு எந்தவித கொள்கை வகுப்புகளும் செய்யாது அர்ததமுள்ள நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது மறுபடியும் அந்நிய ஆதரவுடன் கூடிய இராணுவ வலிமையினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த் தாயகப் பிரதேசங்களில் புதிய புதிய சிங்கள ஊடுருவலை மேற்கொள்வதிலும் அங்கெல்லாம் தமது அடிவருடிகளின் துணையுடன் சிங்கள மேலத்தினை நிறுவுவதிலும் குறியாகச் செயற்பட்டு வருகின்றனர்.

ஆக தமிழ்த் தேசியமும் உண்மையான தமிழ்த்தேசிய சக்திகளும் சிங்கள மேலதிக்கத்தினை நோக்கி ஒரு தெளிவான செய்தியினை விடுக்கின்றது. தமிழ் மக்களின் எண்ணிக்கைச் செறிவினை நீங்கள் பத்தில் ஒன்றாகக் குறைத்தாலும் ஏன் அதற்கும் மேலாக தமிழ்த் தாயகத்தில் குறைத்தாலும் கூட சிங்கள அரசினதும் அதன் இராணுவ இயத்தினதும் முழுமையான ஒத்துழைப்புடன் நீங்கள் மேற்கொண்டு வரும் மேலாதிக்கப் போக்கு இருக்கும் வரை அனைத்து மக்களும் சமத்துவமாக பேணப்படும் ஒரு உன்னதமான அரசியல் நடைமுறை இல்லாத வரை தமிழ்த் தேசியத்தை ஒரு சொட்டும் பலவீனப்படுத்தி விட முடியாது.

மீண்டும் மார்க்சிய சொல்லாடலில் கூறினால் சக தேசியங்களை அடக்கியாண்டு கொண்டு நீங்கள் மாத்திரம் சுதந்திரமாக நிம்மதியாக இருந்து விடமுடியாது. பிறர் மீது விதிக்கப்படும் அடிமைச் சங்கிலி உங்களுக்கு நீங்களே போட்டுக் கொள்ளும் அடிமைச் சங்கிலிதான்.

http://kuralweb.com/200909/Nationalism.aspx

முஸ்லீம் மக்கள் தாம் ஒரு தனியான தேசியம் என்று இன்று சொல்கிறார்கள். அது போல் அந்த தேசியத்தை நாம் 10ரூபா வுடனும் உடுத்த உடையுடனும் வெளியேற்றியது எமக்கு நாமே போட்ட அடிமைச்சங்கிலி தானே?

அது சரி! ஒரு கேள்வி? நாளை புங்குடுதீவோ அல்லது வல்வெட்டித்துறையோ தான் ஒரு தினயான தேசியம் என்றால் அதற்கு பதில் என்ன? காரணம் ஏற்கனவே கிழக்கு மாகாணம் தாம் ஒரு தனி தேசியம் என்ற பங்கில் இயங்குவதாக ஒரு கிழக்கு மாகாண அரசியல்வாதி தெரிவித்தார்.

நான் இங்கு யாரையும் புண்படுத்த இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் இதற்கான சந்தரப்பம் தமிழர்களின் இன்றைய செயற்பாட்டில் உள்ளன. உதாரணம் ஊருக்கொரு சங்கம், அதற்கொரு விழா என்று நடைபெறுவதே. இது ஒரு விவாத கருப்பொருள். விவாதிக்க வேண்டிய தேவை நிச்சயமாக இருக்கிறது!

  • தொடங்கியவர்

முஸ்லீம் மக்கள் தாம் ஒரு தனியான தேசியம் என்று இன்று சொல்கிறார்கள். அது போல் அந்த தேசியத்தை நாம் 10ரூபா வுடனும் உடுத்த உடையுடனும் வெளியேற்றியது எமக்கு நாமே போட்ட அடிமைச்சங்கிலி தானே?

கடந்த காலம் குறித்த தவறுகள் சுட்டிக் காட்டப் பட்டு ஆவன செய்யப் பட வேண்டுமென்பதில் வேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் பொதுவாக இது மற்றவர்களை சீண்டுவதற்கே செய்யப் படுகிறது. இந்த விடயங்களை மனச்சாட்சியுடன் இந்தக் களத்தில் விவாதிக்க முடியுமாவென்பதே கேள்வி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி! ஒரு கேள்வி? நாளை புங்குடுதீவோ அல்லது வல்வெட்டித்துறையோ தான் ஒரு தினயான தேசியம் என்றால் அதற்கு பதில் என்ன? காரணம் ஏற்கனவே கிழக்கு மாகாணம் தாம் ஒரு தனி தேசியம் என்ற பங்கில் இயங்குவதாக ஒரு கிழக்கு மாகாண அரசியல்வாதி தெரிவித்தார்.

நான் இங்கு யாரையும் புண்படுத்த இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் இதற்கான சந்தரப்பம் தமிழர்களின் இன்றைய செயற்பாட்டில் உள்ளன. உதாரணம் ஊருக்கொரு சங்கம், அதற்கொரு விழா என்று நடைபெறுவதே. இது ஒரு விவாத கருப்பொருள். விவாதிக்க வேண்டிய தேவை நிச்சயமாக இருக்கிறது!

திருவாளர் பொன்ட்007 அவர்களின் தெளிந்த நோக்கு புல்லரிக்க வைக்கிறது. என்னே உங்கள் அவதானிப்பும், அனுமானமும்.... :)

மீண்டும் மார்க்சிய சொல்லாடலில் கூறினால் சக தேசியங்களை அடக்கியாண்டு கொண்டு நீங்கள் மாத்திரம் சுதந்திரமாக நிம்மதியாக இருந்து விடமுடியாது. பிறர் மீது விதிக்கப்படும் அடிமைச் சங்கிலி உங்களுக்கு நீங்களே போட்டுக் கொள்ளும் அடிமைச் சங்கிலிதான்.

இதுவே எமக்கும் பொருந்துகின்றது. நாம் மதவாரியாகவும் சாதிவாரியாகவும் பிரதேசவாரியாகவும் வர்க்கவாரியாகவும் எமக்குள் நாமே விதித்த அடிமைச்சங்கிலி இப்பேர்து ஒட்டுமொத்தமாக எம்மை சுற்றிவிட்டது. தமிழ்த்தேசியம் என்ற பண்பு நிலைதான் இஸ்லாமிய தமிழர்களை ஒடுக்க முற்பட்டது. தமிழ்த்தேசியத்தின் பண்பு நிலை என்பது மிகப்பெரும் சிக்கலானது. அது ஒரு மேட்டுக்குடி பண்பு நிலையாகவே தொடர்ச்சியாக இருந்துவருகின்றது. வர்க்க மத சாதிய அலகுகள் பெருமளவு தமிழ்த் தேசிய பண்பு நிலையை உருவகப்படுத்துகின்றது. தமிழர்களுக்கென்ற பொதுவான தேசியப்பண்பு நிலை ஒன்று அக நிலையில் இல்லை. புற நிலையில் சிங்களம் தமிழர்களை ஒருங்கிணைத்து ஒரு வலிமை மிக்க தேசிய இனமாக வடிவமைப்புச் செய்து ஒடுக்குகின்றது. எமது தேசிய பண்பு நிலை என்பது மதவாரியாக பிரதானமாக சீர்குலைந்தும் வர்க்க வாரியாக சீர்குலைந்தும் இருக்கின்றது. இன ரீதியாக ஒருங்கிணைய முடியாத பிரதான காரணியும் இதுவே. மதவாரியான இஸ்லாமிய தமிழர்களுக்கும் எமக்குமான இடைவெளியை நிரப்புவது மிகப்பெரும் சிக்கலான விடயம். தொடர்ந்து தமிழர்களின் அடிமைக்குணம் என்பது அதிகமாக இருப்பது மேட்டுக்குடிகளிடமே. மேட்டுக்குடிகள் எப்போதும் சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழ்வதில் எந்த சங்கடமும் படுவதில்லை. அரச உத்தியோகமும் செல்வாக்கும் போதுமானது தவர அடிமைத்தனம் ஒரு பிரச்சனை இல்லை. மேலும் இந்த மனோபாவம் பிரதேசவாரியாகவும் ஆதிக்கம் செலுத்துகின்றது. தேசியம் என்பது ஒரு கருத்துநிலை என்பதற்கு அப்பால் உணர்வு நிலை பண்பு நிலை என்பது உண்மை ஆனால் தமிழ்த்தேசியம் அவ்வாறு நிச்சயமாக இல்லை. எமது அனுபவத்தில் தமிழ்;த்;தேசியம் வாழ்வாதராத்துக்கு அவசியம் என்றளவில் வந்து நிற்கின்றது. வன்னியில் வாழும் மக்கள் அவர்கள் சொந்த இடங்களில் வாழ்வதற்கு முனைவதே தற்போது தேசியத்தை தாங்கும் சக்தியாகின்றது. மற்றபடி சொந்த இடங்களில் வாழும் மக்களுக்கு தேசியம் முக்கியமானதாக இல்லை. புலம்பெயர்ந்த தமிழனின் நிலையும் இதுவே. தேசியப்பண்பு நிலை உணர்வு நிலையை இறுதியில் தீர்மானிப்பது பொருளாதாரமே தவிர இன அடயாளங்கள் கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் மேலும் மொழி பிரதேசம் கூட இல்லை என்பதே எமது சுய அனுபவமாகின்றது. இருக்கும் இடத்தை துறந்து சகல அடயாளங்களையும் துறந்து படிப்படியாக மொழியையும் துறந்து உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டும் வாழ முற்படும் பெரும்பான்மை முயற்ச்சியும் இதற்கு சான்று. எத்தனை உயிர் அச்சுறுத்தல்கள் இருந்தாலும் சிங்களவர்களை அனுசரித்து அண்டிவாழ்வதும் வாழ முற்படுவதும் இதற்குச் சான்று. தேசியவாதம் பண்பு நிலை உணர்வு நிலை என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட பலமடங்கு உண்மை சாதியம் மதம் வர்க்கம் பிரதேசவாதம் என்பதும் உணர்வு நிலை பண்பு நிலை என்பது. இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி இனத்தை அழிப்பதில் இருந்தும் அடிமையாக்குவதில் இருந்தும் மீள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி................ ஈழம் அமைச்சு பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஜிகாத்தினால் தமிழ் கிராமங்கள் பல ,முழுவதும் அழிக்கப்பட்டன. சத்துருக்கொண்டான் படுகொலை முள்ளிவைக்காளுக்கு நிகரானது. மூதூரில், ஜிகாத்தினால் களியாட்டமா நிகழ்ந்தது? அரச புலனாய்வுப் புண்ணாக்கு ,சுரேஷ் முகம்மது ,மூதூர் தமிழர்களை விரட்டியடித்தான்,கிண்ணியாவி

  • தொடங்கியவர்

தமிழர்களுக்கென்ற பொதுவான தேசியப்பண்பு நிலை ஒன்று அக நிலையில் இல்லை. புற நிலையில் சிங்களம் தமிழர்களை ஒருங்கிணைத்து ஒரு வலிமை மிக்க தேசிய இனமாக வடிவமைப்புச் செய்து ஒடுக்குகின்றது.

இந்த கருத்தியல் இப்போது சிலரிடம் வலுப் பெற்று வருகிறது. அதாவது உண்மையில் நாம் இன்னும் ஒரு தேசிய இனமாக வளர்ச்சியடையவில்லை ஆனால் இனவாத அரசின் ஒடுக்குமுறையே எம்மை தேசிய இனம் போல் உருவகிக்கிறது என்ற எண்ணப் போக்கு. இதற்கு ஆதாரமாக கருணாவின் பிரிவையும் அதைத் தொடர்ந்து கிழக்கில் எமக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் கொண்டு வருகின்றனர். இவ்விடயத்தை வெறும் தனி நபர் பிரச்சனையாக குறுக்க முடியாது, மாறாக இது ஒரு இனத்தின் அக முரண்பாடாகவே பார்க்கப் பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.