Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை நீக்கப்படும் சாத்தியம் இல்லை

Featured Replies

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகை (ஜி.எஸ்.பி. பிளஸ்) நிறுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் ஏற்றுமதித் துறைக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை நீடிப்பதற்கே ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகின்றது. ஆனால், மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் சலுகை ரத்துச் செய்யப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று அந்த இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர் நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளன.

‘எதிர்மறையான சிபாரிசுடன் அந்தச் சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்றே தெரிகிறது” எனப் பெயரை வெளியிட விரும்பாத அந்த இராஜதந்திர வட்டாரம் கூறியது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்துத் தெரிவித்த போதே அந்த இராஜதந்திர வட்டாரம் இப்படிக் கூறியது.

‘அதன் பின்னர் சில இலக்குகளை (குறிப்பாக மனித உரிமைகளைப் பாதுகாத்தல்) சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டி இருக்கும்” என்றது அந்த வட்டாரம்.

சிறிலங்காவின் 7,200 பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் நாட்டின் 8.1 பில்லியன் டொலர் பெறுமதியான மொத்த ஏற்றுமதியில் 36 விழுக்காடு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் கிடைத்தது.

இதில் சிறிலங்காவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியே பெருமளவு நன்மை அடைந்து வருகின்றது. கடந்த ஆண்டு 3.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஆடைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது மொத்த ஆடை ஏற்றுமதியில் 43 விழுக்காடு.

ஆனால், சிறிலங்காவில் அண்மைக் காலமாக அதிகரித்து வந்த மனித உரிமை மீறல்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை நிறுத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

நாட்டின் மனித உரிமை நிலை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது. ஆனால் அதற்கு ஒத்துழைக்க சிறிலங்கா அரசு மறுத்துவிட்டது. விசாரணையாளர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கும் அனுமதி மறுத்திருந்தது.

இருப்பினும் சிறிலங்காவின் மனித உரிமை நிலை குறித்து ஒன்றியம் அண்மையில் அறிக்கை ஒன்றைத் தயாரித்திருந்தது. அந்த அறிக்கை நாட்டுக்குச் சாதகமானதாக இல்லை என்று ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ரணுகே ரொய்டர் நிறுவனத்திற்குத் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து அவர் உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் வரிச் சலுகை மீளப்பெறப்படாமல் நீடிக்கப்படும் என்ற தகவல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திரிகளிடம் இருந்து வந்துள்ளன.

ரொய்ட்டர் நிறுவனத்திடம் பேசிய, இந்த விடயத்துடன் தொடர்புடைய இரு இராஜதந்திரிகள் இதனைத் தெரிவித்தார்.

நிபந்தனையுடன் வரிச் சலுகை நீடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம் என அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

‘இடைக்காலத் தீர்வு ஒன்றை நாம் எட்டுவதற்கு தேவையான சில நகர்வுகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்று அவர்களில் ஒரு இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

‘நல்லெண்ணத்திற்கான சில சமிக்ஞைகளை நாம் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் அனைத்தையும் போர் என்றதின் கீழேயே பார்க்கிறார்கள்..... அது வெற்றியாக இருந்தாலும் கொடுப்பதாக இருந்தாலும் சரி” என்றார் அவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை நிறுத்தப்பட்டால் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகின்றது.

அத்துடன் ஏற்கனவே தள்ளாடிவரும் பொருளாதாரம் இதனால் மேலும் மோசமாகப் பாதிக்கப்படும் என்ற அச்சமும் இருக்கின்றது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பப்பா முறிஞ்சிட்டுது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

:wub: ஏண்டா, உனக்கும் இங்க இணைத்த செய்திக்கும் எந்தத் தொடர்புமில்லையா? தமிழரை அழிக்கும் ஒரு அரசாங்கத்துக்கு எதிராத்தானே அந்தத் தீர்மானம் கொண்டுவரப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது? அதை எந்த கவலையுமில்லாமல் ரசித்துக்கொண்டு இருக்கிறாயே? நீ யார்? தமிழனா? சோனியா அல்லது இந்தியனா??

துரோகத்தனம் பற்றிப் பார்த்திருக்கிறோம், ஆனால் அவனுக்குக் கூட இந்த மனம் வராதே? எதற்காக சிங்களவனுக்கு இந்தளவிற்கு ஆளவட்டம் பிடிக்கிறாய்? ஒருநாளாவது மனதளவில் தமிழனாக இருந்து பார், இந்தச் செய்தியின் ஆழம் புரியும் !!!!!!

மேற்குலகின் நிகழ்ச்சி நிரலின் படி எல்லாமே நடந்தது இன்றும் நடக்கிறது. தமிழரின் குரலை அமைதியாக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ராயத(ரி)ந்திர அறிவிப்புக்களே அடிக்கடி எம் காதில் ஒலிக்கும் ஏற்றுமதி வரிச்சலுகை ரத்து தொடர்பான செய்திகள்.

ஈழப்போர் 4ஐ தொடக்குவதற்காக புலிகளை தடை செய்து முதல் மணியை அடித்தவர்கள் இவர்களே.

'என்னினமே எவரிடமும் அதிகம் எதிர்பார்ப்புக் கொள்ளாமல் உன் பணியை செய் உனக்கான கட்டளைகள் உன்னை வந்தடையும்'

எதிர் பார்த்த ஒன்றே. வெள்ளையன் ஒரு போதும் தனக்கு தனது சுக போக வாழ்வுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடான்.

வரிச்சலுகையை நீக்கினா எப்படி பல்தேசிய கொம்பனிகள் இவர்களுக்கு மலிவாக சாமான்களை விற்கும்?

விலை கூடினால் உள்ளூர் அரசியல் குழப்பம் வரும்.

அப்ப தமிழனை அழித்தாய் என்பதற்காக வரிச்சலுகை நீக்கப்படமாட்டாது.

அப்படி நீக்கினால் சிரிலங்கனோடு பெரிய வெறுப்பு வந்து விட்டது என்றுதான் அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்த ஒன்றே. வெள்ளையன் ஒரு போதும் தனக்கு தனது சுக போக வாழ்வுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடான்.

வரிச்சலுகையை நீக்கினா எப்படி பல்தேசிய கொம்பனிகள் இவர்களுக்கு மலிவாக சாமான்களை விற்கும்?

விலை கூடினால் உள்ளூர் அரசியல் குழப்பம் வரும்.

அப்ப தமிழனை அழித்தாய் என்பதற்காக வரிச்சலுகை நீக்கப்படமாட்டாது.

அப்படி நீக்கினால் சிரிலங்கனோடு பெரிய வெறுப்பு வந்து விட்டது என்றுதான் அர்த்தம்.

இலங்கையை விட்டால் பங்களாதேஷ் மாதிரி வேறுசில ஆசிய நாடுகளும் சலுகையை அனுபவிக்கின்றன. இலங்கையைப் போல அங்கிருந்துவரும் ஆடைகளும் விலை குறைந்தவையே.. உடனடியாக இலங்கையில் போட்ட பணத்தை முதலாளிமாராலும் திரும்பப் பெற முடியாதுதானே.. தொடர்ந்தும் எமது அழுத்தங்களைப் பிரயோகிக்கும்போது, இலங்கையை விட்டு படிப்படியாக பங்களாதேஷ் மாதிரி நாடுகளுக்கு முதலாளிமார் மாற வாய்ப்புள்ளது..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.