Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

150 நாட்களாக வதைமுகாம்களில் வாடும் மக்களை விடுவிக்கக் கோரி அக்.17 இல் மீண்டும் லண்டனில் மாபெரும் பேரணி – பிரித்தானிய தமிழர் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

150 நாட்களாக வதைமுகாம்களில் வாடும் மக்களை விடுவிக்கக் கோரி அக்.17 இல் மீண்டும் லண்டனில் மாபெரும் பேரணி – பிரித்தானிய தமிழர் பேரவை

ஐப்பசி 17ம் திகதியோடு, முள்வேளியின் பின்னால் வதைமுகாங்களில் எமது மக்கள் அடைக்கப்பட்டு 150 நாட்கள் ஆகின்றது. இதனை உலகிற்கு மீண்டும் – மீண்டும் நினைவூட்டி நீதிகேட்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. ஐப்பசி மாதம் 17ம் திகதி (17/10/2009) மதியம்12.00 மணிக்கு லண்டன் எம்பாக்மண்ட் இல் ஆரம்பமாகும் இப்பேரணி ஹட் பார்க்கில் முடிவடையும்.

திறப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் இப்பேரணியில் “வதைமுகாங்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், எமது மக்களை கொன்றொழித்த அனைத்து குற்றவாளிகளின் மீதும் போர்க் குற்ற விசாரனைகள் நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் இப்பேரணியின் அடிநாதமாக விளங்கும்.

மிகவும் முக்கியமான அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் தாயகத்தில் வாடும் எமது மக்களின் குரலாக ஒலிக்கவேண்டியது தமிழர் ஒவ்வொருவரது கடமையாகும், அத்துடன் தமிழர் அல்லாத நண்பர் களையும் அழைத்து வருவது அவசியமாகும். உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் , தேர்தல் வேட்பாளர்களையும் இப்பேரணியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பையும் , அழுத்தத்தையும் கொடுங்கள்.

அதேவேளை மக்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதற்கான அழுத்தத்தினை இலங்கை அரசிற்கு கொடுக்க வேண்டுமென பிரித்தானிய பிரதமருக்கு வலியுறுத்தும் மனு ஒன்று www.unlockthecamps.org எனும் இணையத்தளத்தில் காணக்கிடக்கின்றது. இதில் மக்கள் அனைவரும் தமது கையெழுத்தினையிட வேண்டும் எனவும் பேரவை கேட்டுக் கொள்ளுகின்றது.

அத்தோடு மீண்டும் ஓர் பிரித்தானிய பாராளுமண்ற விவாதம் ஒன்றிற்கான அழைப்பினையும் பேரவை விடுக்கின்றது, பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிகளிடமும் இவ்வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி அவர்களிடம் வதைமிகாங்களை பற்றிய விளக்கங்களை கொடுப்பதோடு உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் அனைவரையும் இவ்விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டுமெனவும் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவை.

http://www.meenagam.org/?p=12388

  • கருத்துக்கள உறவுகள்

முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்கிற அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழனும் நிச்சயமாக இதில் கலந்துகொள்ள வேண்டும். நெல்லையன் மற்றும் பொன்ட்007 ஆகியோர் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை..! :lol:

இத்தனை காலமும் பேரணியில் போய்

எத்தனையை சாதிச்சு விட்டினம்

வெற்றி பாதை

தொடர்கிறது

புலம்பெயர் தமிழரை நம்பி இருந்தால்

எம் மக்களுக்கு

முள்கம்பி சிறையில் தான் சாவு

:lol: :lol:

யதார்த்தத்தை எம்மில் பலர் என்னும் ஏற்க மறுக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து போராடுவோம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் வரப்போகுது.தமிழர் பலத்தை ஒருமித்துக் காட்டுவதன் மூலம் அரசியல் கட்சிகளின் ஆர்வத்தைத் தூண்டலாம்.முகாம் மக்களை விடுவிப்பதற்காக எந்தக் கட்சி முனைப்புடன் செயற்படுகிறதோ அந்தக் கட்சிக்கே தமிழர் வாக்குகள் என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.தொழிற் கட்சி பெரும் சரிவை எதிர் நோக்கியிருக்கும் வேளையில் இந்தப் போராட்டம் நடப்பது பொருத்தமானதே.(இதுவரை காலமும் தமிழரின் பெரும்பாலான வாக்குகள் தொழிற் கட்சிககே; கிடைத்தது)புலிக் கொடிபை; பிடிப்பாங்கள் எண்டுசாட்டுச் சொல்லி நெல்லையனும் பொண்டும் வராமல் விடாதையுங்கோ.

நிச்சயமாக போராட்டங்கள் தொடர வேண்டும். மே 18க்கு முன்னர் இதே அமைப்பு 'தமிழர்களை தமது வாழ்விடங்களிலிருந்து விரட்டாதீர்கள்' என்ற கோஷத்துடன் போராடியது. அதாவது காலங்காலமாக 3 இலட்சம் மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள் ஏன்று உலகுக்கு சொல்ல முயன்றது. இந்த நேரத்தில் தப்ப முயன்ற மக்கள் இரு தரப்பினராலும் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தமை அந்த மக்களின் வாக்குமூலங்களிலேயே (முகாம்களுக்கு வெளியில் கூட) தெரிய வந்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அரச பயங்கரவாதத்தை மட்டும் காட்டி அரசியல் செய்ய முனைவது எல்லா காலங்களிலும் பலிக்காது.

எவ்வாறாயினும் ஒக்ட் 17ல், முகாம்களில் அடை பட்டுள்ள மக்களுக்காக எமது ஒற்றுமையான குரலை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.

இத்தனை காலமும் பேரணியில் போய்

எத்தனையை சாதிச்சு விட்டினம்

வெற்றி பாதை

தொடர்கிறது

புலம்பெயர் தமிழரை நம்பி இருந்தால்

எம் மக்களுக்கு

முள்கம்பி சிறையில் தான் சாவு

:D :D

யதார்த்தத்தை எம்மில் பலர் என்னும் ஏற்க மறுக்கிறார்கள்

பீற்றர் ரட்னா,

சரி புலம்பெயர் தமிழர்களையும் நம்பவேண்டாம்,

புலிகளையும் நம்பவேண்டாம், புலிக்கு ஆதரவானவர்களையும் நம்பவேண்டாம்.

சரி அந்த முள்கம்பிவேலிக்குள் இருக்கும் மூன்று லட்சம் மக்களையும் காப்பாற்ற என்னதான் வழி?

யாரையும் நம்பவேண்டாம் எனும்போது உங்களிடம் ஒரு வழி இருந்தாகனும்! :lol:

ம் சொல்லுங்க என்ன வழி? :lol:

யுதார்த்தத்தை எம்மில் பலர் உணர்ந்தும் பதில்தரமறுக்கின்றனர்! :D

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றர் ரட்னா,

சரி புலம்பெயர் தமிழர்களையும் நம்பவேண்டாம்,

புலிகளையும் நம்பவேண்டாம், புலிக்கு ஆதரவானவர்களையும் நம்பவேண்டாம்.

சரி அந்த முள்கம்பிவேலிக்குள் இருக்கும் மூன்று லட்சம் மக்களையும் காப்பாற்ற என்னதான் வழி?

யாரையும் நம்பவேண்டாம் எனும்போது உங்களிடம் ஒரு வழி இருந்தாகனும்! :lol:

ம் சொல்லுங்க என்ன வழி? :lol:

யுதார்த்தத்தை எம்மில் பலர் உணர்ந்தும் பதில்தரமறுக்கின்றனர்! :D

இதைத்தான் நானும் பலமுறை கேட்டுவிட்டேன்

எங்கள் பாதை பிழை என்றால்

புதுப்பாதையைக்காட்டுங்கள் பின்னால்வர என....

ஆனால்

அவர்கள் எமை இப்படியே அடிமையாக எம்இருப்பதற்கு அனுமதிப்பதை அங்கீகரிக்கவே

இங்கு போராடுகின்றனர்

இதுதான் உண்மை

யுதார்த்தத்தை எம்மில் பலர் உணர்ந்தும் பதில்தரமறுக்கின்றனர்!

முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்கிற அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழனும் நிச்சயமாக இதில் கலந்துகொள்ள வேண்டும். நெல்லையன் மற்றும் பொன்ட்007 ஆகியோர் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை..! :lol:

டன், 20 வருடகால புலம்பெயர் வாழ்வில் ... எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் விட்டதில்லை! இதிலும் நிச்சயமாக!!! ... எம் முன்னால் தலைமையின் அரசியல் சூனியத்தினால், வாழ்வு/எதிர்காலம்/அனைத்துமே சூனியமாக்கப்பட்ட எம்மக்களின் விடுதலைக்கு குரல் கொடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை!!

இனியும் வெற்றுப்பேச்சுக்களில் எம்மக்களை இன்னோர் முள்ளிவாய்க்காளில் சிங்களத்திடம் பலி கொடுக்காதிருக்க, எல்லா மக்களும் இணைவோம்!!!

இனிவருங்காலங்களில் வீடு வீடாக வாசலில் வந்து ஒருவரும் நக்கமாட்டார்கள். உணர்வுள்ளவர்கள், மனிதனை மனிதனாக மதிப்பவர்கள் தானாக வந்து கலந்து கொள்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.