Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவரின் பொன் மொழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--------------------------------------------------------------------------------

நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில்இ சந்துகளில்இ சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.

--------------------------------------------------------------------------------

நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லைஇ துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.

--------------------------------------------------------------------------------

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.

--------------------------------------------------------------------------------

மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம்இ அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

--------------------------------------------------------------------------------

விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்

--------------------------------------------------------------------------------

பயிற்சி - தந்திரம் - துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.

--------------------------------------------------------------------------------

சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.

--------------------------------------------------------------------------------

நாம் துணிந்து போராடுவோம்இ சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றதுஇ வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.

--------------------------------------------------------------------------------

கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்இ ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு

--------------------------------------------------------------------------------

இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.

--------------------------------------------------------------------------------

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டுஇ அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

--------------------------------------------------------------------------------

விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.

--------------------------------------------------------------------------------

விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை.

--------------------------------------------------------------------------------

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையானஇ புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.

--------------------------------------------------------------------------------

எமது மொழியும்இ கலையும்இ பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.

--------------------------------------------------------------------------------

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

--------------------------------------------------------------------------------

மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.

--------------------------------------------------------------------------------

சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.

--------------------------------------------------------------------------------

மலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால் இருக்கும் வரைஇ எந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.

--------------------------------------------------------------------------------

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.

--------------------------------------------------------------------------------

எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும்இ பாதுகாப்பiயும் நிலைநாட்டும் வரைஇ நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

--------------------------------------------------------------------------------

இயற்கை எனது நண்பன்இ வாழ்க்கை எனது தத்துவாசிரியன்இ வரலாறு எனது வழிகாட்டி.

--------------------------------------------------------------------------------

உழைப்பவனே பொருளுலைகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தின்றான்.

--------------------------------------------------------------------------------

நாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.

--------------------------------------------------------------------------------

சான்றோரைப் போற்றுவதும்இ கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபுஇ எமது சீரிய பண்பாடு.

--------------------------------------------------------------------------------

எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால்இ மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.

--------------------------------------------------------------------------------

அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்

--------------------------------------------------------------------------------

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவுஇ சாதாரண மரண நிகழ்வு அல்லஇ எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

--------------------------------------------------------------------------------

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்இ ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமைஇ எமது சுதந்திரம்இ எமது கௌரவம்.

--------------------------------------------------------------------------------

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

--------------------------------------------------------------------------------

எமது மக்கள் சுதந்திரமாகவும்இ கௌரவமாகவும்இ பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.

--------------------------------------------------------------------------------

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களேஇ எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.

--------------------------------------------------------------------------------

எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

--------------------------------------------------------------------------------

ஒரு விடுதலை வீரனின் சாவுஇ ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வுஇ ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லைஇ அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.

--------------------------------------------------------------------------------

தமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம்இ வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.

--------------------------------------------------------------------------------

ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும்இ அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.

--------------------------------------------------------------------------------

எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்றுஇ மக்களுக்குப் புறம்பாக நின்றுஇ விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.

--------------------------------------------------------------------------------

குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாகஇ அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.

--------------------------------------------------------------------------------

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும்இ கௌரவத்திற்காகவும்இ பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள்இ காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

--------------------------------------------------------------------------------

எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.

--------------------------------------------------------------------------------

தங்களது உயிர்களையும்இ உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழியஇ ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.

--------------------------------------------------------------------------------

விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராதுஇ நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.

--------------------------------------------------------------------------------

இது கரும்புலிகள் சகாப்தம்இ இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்

தலைவரின் பொன் மொழிகள் தழிழ் செய்திகளில் இருந்து

Edited by jhansirany

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.

வெற்றி கிடைதிருந்தால் இந்த பொன்மொழிகளை புகழ்வதில் அர்தம்முண்டு

இன்னொருக்கால் கட்டுநாயக்கா விமானநிலையத்தல தாக்கதல் நடத்தி அழிவுகளை ஏற்படுத்தி எங்களை ஹாலிவூட் பாணியில அசத்தினால்தான் நாங்கள் இதுகளை பொன்மொழிகளாக ஏற்றக்கொள்ளவம்

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்

அனைத்து தமிழ் மக்களும் தேசாபிமான உணர்வுடன் பங்கு பற்றாமல் சில தொகையினர் மட்டும் தமது உயிரை கொடுத்தும் வெற்றி பெறமுடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.

வெற்றி கிடைதிருந்தால் இந்த பொன்மொழிகளை புகழ்வதில் அர்தம்முண்டு

ஜில் தம்பி இது ஒரு தழிழ் மாவீரனின் சிந்தனையில் இருந்து எழுதப்பட்டவை இதை நாம் சரித்திரத்தில் எழுதி வைக்க வேண்டும். வெற்றி கிடைத்தால் தான் மட்டும் தான் ஒருவருடைய படைப்புக்கு மதிப்பழிப்பீர்களோ? 30 வருசமா ஒரு வெற்றியையும் கேள்விப்பட வில்லையா?

ஜில் தம்பி இது ஒரு தழிழ் மாவீரனின் சிந்தனையில் இருந்து எழுதப்பட்டவை இதை நாம் சரித்திரத்தில் எழுதி வைக்க வேண்டும். வெற்றி கிடைத்தால் தான் மட்டும் தான் ஒருவருடைய படைப்புக்கு மதிப்பழிப்பீர்களோ? 30 வருசமா ஒரு வெற்றியையும் கேள்விப்பட வில்லையா?

யான்சி அக்கோய் அதே மாவீரன் தான் இப்படியும் சொல்லியிருக்கிறார்

வெற்றி பெற்றால் சரித்திரம்

தோல்வி என்றால் சம்பவம்

30 ஆயிரம் மாவீரர் ,3லட்சம் மக்கள் அகதிகள்,1லட்சம் மக்கள் உயிரிழப்பு

இப்ப எனக்கு இது சம்பவம் அக்கோய்

  • 3 weeks later...

தமிழீழம் மீட்கப்படும்போது இவர்கள் சொல்லும் சம்பவங்களும் சரித்திரமாகும். இவர்கள் சொல்கிறார்கள் என்பத‌ற்காக எங்கள் சரித்திரங்களையும் சரித்திரநாயகர்களையும் தள்ளிவைக்கமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் மீட்கப்படும்போது இவர்கள் சொல்லும் சம்பவங்களும் சரித்திரமாகும். இவர்கள் சொல்கிறார்கள் என்பத‌ற்காக எங்கள் சரித்திரங்களையும் சரித்திரநாயகர்களையும் தள்ளிவைக்கமுடியாது.

எப்பங்கோ யாரங்கொ மீட்கப்போறது நீங்களம் சோ்ந்து போறீங்களோ இல்ல மற்றாக்களுக்கு உசுப்பேத்தறீங்களோ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.