Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக் கடற்படையில் சீனர்கள்: பாதுகாப்புக்கு பேராபத்து- ஆழ்ந்த அமைதியில் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக் கடற்படையில் சீனர்கள்: பாதுகாப்புக்கு பேராபத்து- ஆழ்ந்த அமைதியில் இந்தியா

திங்கள்கிழமை, நவம்பர் 2, 2009, 14:11

ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையில் சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கவலைபபடுவதாக தெரியவில்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

தமிழக மீனவர்களை இந்தியர்களாகவே இலங்கைக் கடற்படையினர் நினைப்பதில்லை. அவர்களை தமிழர்களாக மட்டுமே பார்த்து தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்திய அரசும் கூட இதுகுறித்து இதுவரை உறுதியான, இறுதியான நடவடிக்கை எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

ஆனால் தற்போது புதிய பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது. அது இலங்கைக் கடற்படையினருடன், சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வரும் தகவல்கள்தான்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து வரக் காத்திருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கைக் கடற்படையினருடன் சீனர்களைப் போன்ற தோற்றமுடைய பலரும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வேறு பாஷையில் பேசுகிறார்கள்.

விடுதலைப் புலிகள் வீழ்ச்சிக்குப் பின்னர் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடாப் பகுதிகள் அதிக பதட்டம் உடைய பகுதிகளாக மாறி விட்டன.

விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டதாக இலங்கைதான் கூறியது. தற்போது புலிகள் ஊடுறுவி விடாமல் தடுக்கிறோம் என்ற போர்வையில் இப்பகுதியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கண்காணி்ப்பு என்ற போர்வையில் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.

தங்களிடம் பிடிபடும் இந்திய மீனவர்களை மிகக் கொடூரமாக தாக்குகின்றனர். முன்பு கடற்புலிகள் இருந்தார்கள். அவர்களை வேட்டையாடுவதாக கூறி தமிழக மீனவர்களைத் தாக்கினர். ஆனால் தற்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் எந்தவித நியாயமும் இல்லை.

சமீப காலமாக இலங்கைக் கடற்படையினருடன் சீனர்களும் காணப்படுகின்றனர். இதனால் எங்களுக்கு மட்டுமல்லாமலநமது நாட்டுக்கே பெரும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுகிறது என்கின்றனர்.

ராமேஸ்வரம் நரிபையூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் கூறுகையில், இலங்கைப் படையினருடன் பல்வேறு புதிய முகங்களும் காணப்படுகின்றன. இவர்கள் நிச்சயம் இலங்கையர்கள் அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது என்றார்.

பாம்பனைச் சேர்ந்த லிடன் கூறுகையில், சீனப் படையினர் சமீப காலமாக இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து வருவதைக் காண முடிகிறது. இலங்கைக் கடற்படையினரின் சீருடையில் அவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பிடிபடும் இந்திய மீனவர்களிடம் இலங்கைக் கடற்படையினரை விட இவர்கள்தான் மூர்க்கமாக நடந்து கொள்கின்றனர் என்றார்.

தமிழ்நாடு மீனவர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் என்.ஜே.போஸும் சீனப்படையினர் இருப்பதை உறுதி செய்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், முன்பு இலங்கைப் படையினர் மட்டும்தான் தாக்கினர். தற்போது சீனர்களும் சேர்ந்து இந்திய மீனவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.

மீனவர்கள் சொல்வதை வழக்கம் போல இந்திய அரசு அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே சொல்லத் தோன்றுகிறது. காரணம், இலங்கைக் கடற்படையினருடன் சீனர்கள் இணைந்து தாக்கத் தொடங்கியிருப்பது நிச்சயம் நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல. இதுகுறித்து பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை யில் இறங்கினால்தான் நல்லது. இல்லாவிட்டால் காத்திருக்கும் பேராபத்தை நாமே விலை கொடுத்து வாங்கியது போலாகி விடும்.

சீனர்கள் இடம் பெறவில்லை- இலங்கை:

இலங்கை கடற்படைக் கப்பல்களில் சீனர்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுவத தவறு. அப்படி யாரும் கடற்படைக் கப்பல்களில் இடம் பெறவில்லை என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் தசநாயகே கூறியுள்ளார்.

தசநாயகே கூறுகையில், இலங்கை கடற்படைப் படகுகள் மற்றும் கப்பல்களில் சீனர்கள் யாரும் இல்லை. இலங்கை கடற்படையினருக்கு சீனர்களின் உதவியும் தேவைப்படவில்லை.

அதேபோல விடுதலைப் புலிகளை அழிப்பதாக கூறி தமிழக மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் தாக்குவதில்லை. மனிதாபிமான முறையில்தான் நாங்கள் இந்திய மீனவர்களை அணுகுகிறோம். சில சமயம் அவர்கள் கடல் எல்லையைத் தாண்டி வந்தால், அவர்களை மீட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி விடுகிறோம் என்றார்.

thatstamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமேஸ்வரத்தில வைகோவுக்கு சப்போட் இருக்கு. :lol:

Edited by Mathivathanang

ராமேஸ்வரத்தில வைகோவுக்கு சப்போட் இருக்கு. :lol:

மதிவதாங்!

தங்களுக்கு 'எதற்கும் ஏதாவது கூறாதுவிடில், தங்களுக்கு ஏதாவது பிழை இருக்கு என்று எல்லோரும் சொல்வார்கள்' என்று யாராவது சொன்னார்களா?

தயவு செய்து எல்லாத்துக்கும் செறிக்கதை கதைக்கிறதை விட்டிட்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை (உங்களால் முடியும்) பகிர்வது எல்லோருக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவதாங்!

தங்களுக்கு 'எதற்கும் ஏதாவது கூறாதுவிடில், தங்களுக்கு ஏதாவது பிழை இருக்கு என்று எல்லோரும் சொல்வார்கள்' என்று யாராவது சொன்னார்களா?

தயவு செய்து எல்லாத்துக்கும் செறிக்கதை கதைக்கிறதை விட்டிட்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை (உங்களால் முடியும்) பகிர்வது எல்லோருக்கும் நல்லது.

அண்ணே மினக்கெட்டு எழுதிய கருத்துக்கள் எவையும் இல்லை உடனடியாக தூக்கப்பட்டுவிடும். இப்படி எழுதினால் மாத்திரம் நிலைத்து நிக்கும். அதனால்.....

வைகோ மீட்டிங்குகளில சீனாக்காரன் மீன்பிடிக்கிறான் சீனாக்காரன் ஆமியோட சுத்துறான் எண்டு அறிக்கை விட ரெண்டு சப்போட்டர் அதுக்கு இசைவா சொல்லுறத எடுத்துப்போட்டதுதான் இந்தச்செய்தி. இதில எந்தவித உண்மையுமில்ல எண்டு எல்லோருக்கும் தெரியும்.

ஆதரவுக்காக சொல்லுறதெல்லாத்தையும் ஏற்கிற மனப்பான்மையில இருந்தா எல்லாமே மெய்யாத்தெரியும். உதாரணத்துக்கு இந்தியப்படைகள் சண்டைபிடித்ததாக சொன்னார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் எவரும் சண்டையின்போது சாகவில்லையா? பாகிஸ்தானிகள் யூகிரேனியர்கள் விமானம் ஓட்டியதாகச் சொன்னார்கள் சீனர்கள் படையில் இருப்பதாகச்சொன்னார்கள் படம் காட்டினார்கள் அவாகள் எல்லாம் எங்கே? இருந்தார்களா?

இல்லை அப்படி எவரும் இருக்கவில்லை. கனவுலகத்திலிருந்து அறிக்கை விட்டுவிட்டு அதற்க இசைவாக ஓரிருவரை கதைக்கவிட்டு மக்களை மந்தைகளாக்கிய பெருமை இந்த அரசியலவாதிகளைச்சாரும் பினாமிகளைச்சாரும். இருக்கிறார் என அறிக்கைவிடும் எவருக்கும் பின்விளைவுகள்பற்றிய எண்ணமில்லை. இருந்தால் 27ம் திகதி வரவேண்டும் இல்லையேல்........

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவுக்காக சொல்லுறதெல்லாத்தையும் ஏற்கிற மனப்பான்மையில இருந்தா எல்லாமே மெய்யாத்தெரியும். உதாரணத்துக்கு இந்தியப்படைகள் சண்டைபிடித்ததாக சொன்னார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் எவரும் சண்டையின்போது சாகவில்லையா? பாகிஸ்தானிகள் யூகிரேனியர்கள் விமானம் ஓட்டியதாகச் சொன்னார்கள் சீனர்கள் படையில் இருப்பதாகச்சொன்னார்கள் படம் காட்டினார்கள் அவாகள் எல்லாம் எங்கே? இருந்தார்களா?

இல்லை அப்படி எவரும் இருக்கவில்லை.

அப்படி எவரும் இருக்கவில்லை, நடக்கவில்லை என்பதற்கு உங்களிடமும் ஆதாரமும் இல்லை. பிறரின் உதவியின்றி சிங்களவர்கள்தான் எல்லாவற்றையும் நடாத்திமுடித்தார்கள் என்பது நம்பும்படி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு முறையிட்டால் 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து பிரச்சனையைத் தீர்ப்பார்.

சிங்களன் சொல்வது போல் அவர்கள் சீனர்களாக இல்லாமல் இருக்கலாம்...

வட் இந்திய மாநிலத்தவர்கள் .. வட கிழக்கு மாநில மக்கள்.... கூர்க்காக்கள் ஆகியோரையும் தமிழ் மீனவர்கள் சீனர்கள் என தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளதே!

இருக்கும் இருக்கும்...

வெள்ளைக்காறன் நட்ட மைல் கல்லுக்கு கெடா வெட்டி சாமியாடும் கூட்டமாச்சே... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.