Jump to content

சவூதி:1 இந்தியர்+2 பேரின் தலை துண்டித்து தண்டனை


Sniper

Recommended Posts

FRON__002312_1025.jpg

ரியாத்: சவூதி அரேபியாவின் ஜெட்டாவில், இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கொல்லப்பட்ட மற்ற இருவரும் இலங்கையர்கள். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட இந்தியரின் பெயர் முகம்மது பர்மில். கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்தவர். மற்ற இலங்கையர் இருவரில் ஒருவர் பெயர் பந்தர் நிகார். பெண்ணின் பெயர் ஹலிமா அப்துல் காதர். இவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.

பர்மிலும், நிகாரும், சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த மரியம் ஹுசேன் என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரது வாயைப் பொத்தி நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தில் மரியம் ஹூசேன் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

மரியம் ஹூசேனின் வீட்டில் வேலைக்காரப் பெண்ணாக பணியாற்றி வந்த ஹலிமாவின் உதவியுடன் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொலை செய்து கொள்ளையடித்தனர்.

இதையடுத்து ஹலிமா உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை தலையைத் துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து ஜெட்டாவில் இவர்கள் மூன்று பேரும் வாளால் தலை துண்டித்து மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டனர்.

இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 59 பேருக்கு இவ்வாறு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 102 பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய ஷிராய சட்டப்படி, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்டவை மரண தண்டனைக்குரிய குற்றச் செயல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தற்ஸ் தமிழ் / deathpenaltynews

இதுக்கே இப்படின்னா...

என்னுடைய பட்டியலில் இந்திய இலங்கை அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் உள்ளனர்...

சவுதி ஷேக் அவர்களே, இவர்களையும் சேர்த்து தண்டிப்பீர்களா?

Link to comment
Share on other sites

கடந்தகிழமை கொழும்பில் ஓர் இளைஞனை நூறுபேர் வேடிக்கை பார்க்க ஐந்து குண்டர்கள் சேர்ந்து பொல்லுகளால் அடித்து கடலில் கொன்றார்களே.. அவற்றைவிடவா இது மோசம்? இதாவது பரவாயில்லை.. ஒரு சீவலில் உயிர்போய்விடும், வேதனை இல்லை. ஆனால்.. அந்த இளைஞன் துடிதுடித்து இறந்தானே. அது கொடூரம்.

நம்ம ஊரில நடக்காத கொலைகளா? இவனாவது விசாரிச்சுப்போட்டு கொலை செய்கிறான்.. நமது ஊரிலோ.. மண்வெட்டி தொடக்கம் உளி, screwdriver வரை எத்தனைவிதமான ஆயுதங்களால் அப்பாவிகளை கொலை செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளில் சில அப்பாவி வெளினாட்டவர்களும் பொய்யான குற்றங்களுக்கு தண்டனைக் உள்ளாக்கப்படுவார்கள்.

ஆனால் சிங்களச்சிறையில் கைது செய்யப்பட்டவர்கள் சாகும் வரை தினமும் தினமும் சித்திரவதைக்கு உட்புகுத்தப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

இதாவது பரவாயில்லை

? இவனாவது விசாரிச்சுப்போட்டு கொலை செய்கிறான்.. .

கொலை செய்ய யாருக்கும் உரிமையில்லை.அது மனிதன் எழுதிய சட்டமாகவோ அல்லது அல்லாவின் சட்டமாகவோ இருந்தாலும் யாரும் யாரையும் கொல்ல உரிமையில்லை

கொலை செய்தவனையும் உயிர்வாழவிட்ட,வாழவிடுகின்ற நாடுகளும் சமுகங்களும் உண்டு. மச்சி உங்களுக்கு தெரியாத என்ன? :wub:

Link to comment
Share on other sites

கடந்தகிழமை கொழும்பில் ஓர் இளைஞனை நூறுபேர் வேடிக்கை பார்க்க ஐந்து குண்டர்கள் சேர்ந்து பொல்லுகளால் அடித்து கடலில் கொன்றார்களே.. அவற்றைவிடவா இது மோசம்? இதாவது பரவாயில்லை.. ஒரு சீவலில் உயிர்போய்விடும், வேதனை இல்லை. ஆனால்.. அந்த இளைஞன் துடிதுடித்து இறந்தானே. அது கொடூரம்.

நம்ம ஊரில நடக்காத கொலைகளா? இவனாவது விசாரிச்சுப்போட்டு கொலை செய்கிறான்.. நமது ஊரிலோ.. மண்வெட்டி தொடக்கம் உளி, screwdriver வரை எத்தனைவிதமான ஆயுதங்களால் அப்பாவிகளை கொலை செய்கின்றார்கள்.

அரபு நாடுகளில் சில அப்பாவி வெளினாட்டவர்களும் பொய்யான குற்றங்களுக்கு தண்டனைக் உள்ளாக்கப்படுவார்கள்.

ஆனால் சிங்களச்சிறையில் கைது செய்யப்பட்டவர்கள் சாகும் வரை தினமும் தினமும் சித்திரவதைக்கு உட்புகுத்தப்படுவார்கள்.

பம்பலப்பட்டி கொலை துயரமான உண்மைதான்....அதனுடன் சிறைகளில் தமிழர் வேதனைகள் சொல்லி மாளாதது...

கொலை செய்ய யாருக்கும் உரிமையில்லை.அது மனிதன் எழுதிய சட்டமாகவோ அல்லது அல்லாவின் சட்டமாகவோ இருந்தாலும் யாரும் யாரையும் கொல்ல உரிமையில்லை

கொலை செய்தவனையும் உயிர்வாழவிட்ட,வாழவிடுகின்ற நாடுகளும் சமுகங்களும் உண்டு. மச்சி உங்களுக்கு தெரியாத என்ன? :lol:

மச்சி நாம இப்ப அலசிகிட்டிருக்கறது...தப்புக்கு தண்டனை கொடுக்குற நாட்டிற்கும் தப்பே செய்யாததற்கும் கொடுக்குற நாட்டிற்கும் இதுல கொலை செய்தவனையும் உயிர்வாழவிட்ட,வாழவிடுகின்ற நாடுகளும் சமுகங்க பத்தி நமக்கேன் மச்சி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இடையில் குத்துகல்லாட்டம் வந்து மறிச்சு ஆடுவன் 😀 என் இலட்சியமே இந்தப் போட்டியில் @suvy அண்ணாவை வெல்வது தான்.😆
    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 05:51 PM   இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். வெளிகண்டல் பகுதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை தீர்க்கும் விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரணைமடுக் குளம் வரப்பிரசாதமானது. குறித்த குளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் விவசாயம் என்பது மாவட்டத்தில் முக்கிய இடமாக உள்ளது. ஆனால், குறித்த குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான நிரந்தர பொறிமுறை இல்லை. வருடா வருடம் ஒவ்வொரு பிரச்சினை எழுகின்றது. இந்த நீர்ப்பாசன திட்டத்திற்கான நிரந்தர பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். நீர்பாசன திணைக்களம் குறிப்பிடுவது போன்று, வான் கதவுகள் திறக்கப்படும்போது அழிவுகளை சந்திப்பவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ன மன நிலை எல்லாருக்கும் உள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சென்றடையாது, பரந்துபட்ட மக்களிற்கும் கிடைக்கும் வகையில் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். வருடம் தோறும் புதிய புதிய பிரச்சினைகள் எழுகின்றது. இதற்கு நீர்ப்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனையுடன் விவசாயிகளையும் உள்ளடக்கி நிரந்தர பொறிமுறையை உருவாக்க வேண்டும். இந்த சிறுபோகத்தின் பின்னர் இந்த பிரச்சினைக்கு முறையான பொறிமுறை ஊடாக தீர்மானம் எடுக்க வேண்டும்.  சில விவசாயிகள் என்னை சந்திக்கும் போது, எமக்கு தண்ணி தந்தால் போதும். சில தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படுகின்றனர் என கூறுகின்றனர். விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படாமல் உறுப்பினர்களின் விருப்பங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும். முதலில் விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டே செல்லாமல், ஒற்றுமையாக இருந்து முரண்பாடுகள் இல்லாமல் தீர்க்க வேண்டும். இதில் ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு அமைவாக செயற்பட முடியாது. இரணைமடு குளத்தின் கீழான விவசாயத்துக்கு நிரந்தர தீர்வு ஒன்றை வரைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185309
    • வெற்றி பெறுபவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும்.  33 % வாக்குகளுக்கு மேல் பெறப் போவதில்லை    என்று தெரிகிறது   எனவே… முதலாவது இரண்டாவது  இடங்களில் வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டி இடவேண்டும்.    இரண்டாவது இடம் வந்தவர்கள் கூட   வெல்லலாம்.  
    • தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட 15 அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம் - வெளியானது வர்த்தமானி 04 JUN, 2024 | 04:50 PM இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 15தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச்செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/185298
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.