Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“எங்களுக்கு பிரபல கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?” மாணவன் (தரம்8, கொக்குவில்)

Featured Replies

எங்களுக்கு பிரபல கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?” மாணவன் (தரம்8, கொக்குவில்) வன்னியிலிருந்தபோது குண்டு மழைக்கு நடுவிலும் ஏதோ படிக்க முடிந்தது. போர் பற்றிய யோசனையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு இருக்கவில்லை. முகாமிலிருந்தபோது எப்போது வெளியே வருவோம்? மற்றைய பிள்ளைகள்போல எப்போது கல்வி கற்கத் தொடங்குவோம்? என்று ஏங்கித் தவித்தோம். முகாமிலிருந்து வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பதில் உள்ள பல பிரச்சினைகளை நாங்கள் தெளிவாக அறிய முடிந்தது. நான் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்பதால் எனது பெற்றோர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான கல்லூரியொன்றில் என்னைச் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டனர். அவர்கள் ஆசைப்பட்டு என்ன பிரயோசனம்? கையிலே காசேயில்லாத எங்களிடம் மிகப்பெரியளவில் அன்பளிப்புத் தொகையொன்றைக் குறித்த பாடசாலை நிர்வாகம் கட்டுமாறு கோரியது. அவ்வாறு அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டால் மட்டுமே குறித்த கல்லூரியில் எனக்கு இடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு எங்களது குடும்பப் பொருளாதார நிலைமை எள்ளளவும் இடம் கொடுக்காததால் கல்லூரி பற்றிய கனவுகளை மூடைகட்டி வைத்துவிட்டு எமக்கு அருகிலுள்ள ஒரு பாடசாலையில் இணைந்து கற்று வருகிறேன். மாணவர்களை இணைப்பதற்கு எவ்வித நிதியினையும் பாடசாலை அதிபர்கள் வசூலிக்கக் கூடாதென அறிக்கையொன்றை அனுப்பிய பின்னரும்கூட இவ்வாறான நிலைமை எனக்கு நேர்ந்துள்ளது. பணம் படைத்தவர்கள் மட்டும்தான் வசதிகள் நிறைந்த கல்லூரிகளில் கற்க முடியுமா? என்னைப்போல எல்லாவற்றையும் இழந்துவிட்டுத் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு இக்கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா? “வன்னியிலிருந்து வந்தவள் என்பதால் வேலையில்லை” குடும்பப்பெண் (கணவனையிழந்தவர்வயது 35 தற்போதுசங்கானையில் வசித்து வருகிறார்.) நானும் கணவரும் எமது பிள்ளைகளை சுமந்துகொண்டு வரும்வழியில் ஷெல்பட்டு என் கண்முன்னாலேயே அவர் இறந்துவிட்டார். பிள்ளைகளின் வாழ்வுக்காக மனதைக் கல்லாக்கிக் கொண்டு முகாமுக்கு வந்துசேர்ந்தேன். முகாமிலிருக்கும்வரை பெரிதாக எந்தத் தேவையும் எமக்கு இருக்கவில்லை. உணவுக்குத் தேவையான பொருள்கள் கிடைத்தன. அத்தோடு தொண்டு நிறுவனங்களும் அன்றாடத் தேவைக்குரிய பாத்திரங்கள், உடுபுடைவைகள், பால்மா வகைகள், சத்துணவுப் பொதிகள் என்பவற்றை வழங்கியமையால் ஓரளவுக் கேனும் நிம்மதியாக இருக்கமுடிந்தது. முகாமிலிருந்து வெளியே வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றெண்ணி எப்போது விடுவிக்கப்படுவோம் என்று காத்திருந்தோம். ஆனால் இப்போது விடுவிக்கப்பட்டதை விடவும் முகாமிலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு நிலைமைகள் எங்களுக்கு எதிராகவே இருக் கின்றன. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை ஆயிரத் தெட்டுப் பதிவுகளை மேற்கொண்டு விட்டோம். எங்கும் ஒரே பதிவுதான். பிரதேச செயலகம், கிராம அலுவலர் அலுவலகம், தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பவற்றுக்கு மாறி மாறி ஓடித்திரிந்து கால்கள் சோர்ந்து விட்டன. இத்தனைக்கும் எமது வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு ஒரு சைக்கிள்கூட இல்லை. கையிலும் போதிய காசு இல்லை. இவ்வாறான ஏழைகளுக்கு கால்நடைதான் தோழன். நடந்து கொண்டேயிருக்கிறோம். ஆயினும் நல்லது எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. கணவர் இல்லாததால் நான்தான் ஏதாவது வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய கட்டாயம். ஆயினும் வேலைக்குச் சென்றால் “வன்னியால் வந்தவள்” என்று எனக்கு எவருமே வேலைதர முன் வருவதில்லை. இப்படியே தொடர்ந்தால் பட்டினி கிடந்து சாவதைத் தவிர வேறு வழியில்லைத்தான்.

- Tamilseithekal

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து கொண்டே இருக்கிறேன்............எதுவும் நடப்பதாக இல்லை. சட்டிக்கு தப்பி அடுப்புக்குள்

விழுந்த கதையாக தான் இருக்கிறது.. வலியும் வேதனையுமா?தமிழனின் வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து கொண்டே இருக்கிறேன்............எதுவும் நடப்பதாக இல்லை. சட்டிக்கு தப்பி அடுப்புக்குள்

விழுந்த கதையாக தான் இருக்கிறது.. வலியும் வேதனையுமா?தமிழனின் வாழ்க்கை.

வன்னியிலிருந்து வந்தவள் என்பதால் வேலையில்லை”

சொல்பவனும் தமிழன்தானே...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கசப்பான உண்மை..

யாழ்ப்பாணத்து பெரிய பள்ளிக்கூடம் எல்லாம் "இன்ஸ்ரன் நூடிலைத்தான்" விரும்புகின்றன. ஒரு பக்கம் 5 வகுப்பு புலமை பரிசில் புள்ளி, மற்ற பக்கம் படித்த செல்வந்த பெற்றேரின் பிள்ளைகள். நாங்களும் அதுதான் வேணும் என்று பழகி விட்டோம்.

அந்த மாணவனுக்கு என்னால் சொல்ல முடிந்தது..25 வருடத்துக்கு முந்தி நானும் இவ்வாறு மாறி,மாறி அலைந்த பிற்பாடு..கிடைத்த பள்ளியில் படித்து..இப்ப நல்ல நிலையில் உள்ளேன், மனம் தளராமல் கிடைக்கும் பள்ளியில் படிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னித்தமிழருக்கு வேலையில்லை..

அது எங்களின் பிறவிக்குணம்..அதில் எங்கள் "பாதுகாப்பு" படையினரின் தலையீடுகளும் இருக்கலாம்/இருக்கும், அதைவிட..

நாங்கள் எங்கள் அடையாள்ங்களை இந்த இடங்களில் சரியாக காட்டுவோம்..

கொழும்பில 5 6 வருசம் இருந்தால் கொ.தமிழர்..அவை புதியாய் யாழில் இருந்து வந்தால் ரும் கொடுக்க மாட்டிணம்..

இப்ப வன்னி சனம் என்றால் வவுனியாவிலும் இல்லை..

கனடா 4 வருசம் முந்தி வந்தால்..நாங்கள் சிலோன் ஆக்கள்..அவை கனடியன்..

2 பொடியள் ராக்கின்கில பிடிபட்டா..ஒரு பொடியழுக்கும் ரூம் இல்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதைவிட..

இப்ப விளையாட்டில் எல்லாம் நகரத்தில் உள்ள பள்ளிகளை விட மற்ற தூர உள்ள பள்ளிகளே நன்றாக செயற்படுகின்றன..

யாழ்ப்பாணத்து உதயன் பேப்பரை பார்த்தால் தெரியும்..கிட்டடியில்..அளவெட்டி பள்ளிக்கூடம் ஒன்று தேசிய ரிதியில் கால் பந்து சம்பியன் பெற்றது.. ???"மைலோ கப்"

அங்குள்ள பெண்பிள்ளை ஒன்று போல்வோட்டில் தங்கம் வென்றது..

படிப்பிலும் அவர்கள் இனி மேலும் பிரகாசிப்பார்கள்..

எங்களுக்கு பிரபல கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?” மாணவன் (தரம்8, கொக்குவில்) வன்னியிலிருந்தபோது குண்டு மழைக்கு நடுவிலும் ஏதோ படிக்க முடிந்தது. போர் பற்றிய யோசனையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு இருக்கவில்லை. முகாமிலிருந்தபோது எப்போது வெளியே வருவோம்? மற்றைய பிள்ளைகள்போல எப்போது கல்வி கற்கத் தொடங்குவோம்? என்று ஏங்கித் தவித்தோம். முகாமிலிருந்து வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பதில் உள்ள பல பிரச்சினைகளை நாங்கள் தெளிவாக அறிய முடிந்தது. நான் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்பதால் எனது பெற்றோர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான கல்லூரியொன்றில் என்னைச் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டனர். அவர்கள் ஆசைப்பட்டு என்ன பிரயோசனம்? கையிலே காசேயில்லாத எங்களிடம் மிகப்பெரியளவில் அன்பளிப்புத் தொகையொன்றைக் குறித்த பாடசாலை நிர்வாகம் கட்டுமாறு கோரியது. அவ்வாறு அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டால் மட்டுமே குறித்த கல்லூரியில் எனக்கு இடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு எங்களது குடும்பப் பொருளாதார நிலைமை எள்ளளவும் இடம் கொடுக்காததால் கல்லூரி பற்றிய கனவுகளை மூடைகட்டி வைத்துவிட்டு எமக்கு அருகிலுள்ள ஒரு பாடசாலையில் இணைந்து கற்று வருகிறேன். மாணவர்களை இணைப்பதற்கு எவ்வித நிதியினையும் பாடசாலை அதிபர்கள் வசூலிக்கக் கூடாதென அறிக்கையொன்றை அனுப்பிய பின்னரும்கூட இவ்வாறான நிலைமை எனக்கு நேர்ந்துள்ளது. பணம் படைத்தவர்கள் மட்டும்தான் வசதிகள் நிறைந்த கல்லூரிகளில் கற்க முடியுமா? என்னைப்போல எல்லாவற்றையும் இழந்துவிட்டுத் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு இக்கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா? “வன்னியிலிருந்து வந்தவள் என்பதால் வேலையில்லை” குடும்பப்பெண் (கணவனையிழந்தவர்வயது 35 தற்போதுசங்கானையில் வசித்து வருகிறார்.) நானும் கணவரும் எமது பிள்ளைகளை சுமந்துகொண்டு வரும்வழியில் ஷெல்பட்டு என் கண்முன்னாலேயே அவர் இறந்துவிட்டார். பிள்ளைகளின் வாழ்வுக்காக மனதைக் கல்லாக்கிக் கொண்டு முகாமுக்கு வந்துசேர்ந்தேன். முகாமிலிருக்கும்வரை பெரிதாக எந்தத் தேவையும் எமக்கு இருக்கவில்லை. உணவுக்குத் தேவையான பொருள்கள் கிடைத்தன. அத்தோடு தொண்டு நிறுவனங்களும் அன்றாடத் தேவைக்குரிய பாத்திரங்கள், உடுபுடைவைகள், பால்மா வகைகள், சத்துணவுப் பொதிகள் என்பவற்றை வழங்கியமையால் ஓரளவுக் கேனும் நிம்மதியாக இருக்கமுடிந்தது. முகாமிலிருந்து வெளியே வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றெண்ணி எப்போது விடுவிக்கப்படுவோம் என்று காத்திருந்தோம். ஆனால் இப்போது விடுவிக்கப்பட்டதை விடவும் முகாமிலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு நிலைமைகள் எங்களுக்கு எதிராகவே இருக் கின்றன. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை ஆயிரத் தெட்டுப் பதிவுகளை மேற்கொண்டு விட்டோம். எங்கும் ஒரே பதிவுதான். பிரதேச செயலகம், கிராம அலுவலர் அலுவலகம், தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பவற்றுக்கு மாறி மாறி ஓடித்திரிந்து கால்கள் சோர்ந்து விட்டன. இத்தனைக்கும் எமது வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு ஒரு சைக்கிள்கூட இல்லை. கையிலும் போதிய காசு இல்லை. இவ்வாறான ஏழைகளுக்கு கால்நடைதான் தோழன். நடந்து கொண்டேயிருக்கிறோம். ஆயினும் நல்லது எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. கணவர் இல்லாததால் நான்தான் ஏதாவது வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய கட்டாயம். ஆயினும் வேலைக்குச் சென்றால் “வன்னியால் வந்தவள்” என்று எனக்கு எவருமே வேலைதர முன் வருவதில்லை. இப்படியே தொடர்ந்தால் பட்டினி கிடந்து சாவதைத் தவிர வேறு வழியில்லைத்தான்.

- Tamilseithekal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.