Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்லறைகளில் தெய்வங்கள் சபிக்கின்றன: நிழலி

Featured Replies

கல்லறைகளில் தெய்வங்கள் சபிக்கின்றன

எங்கள் ஊர்களில்

எம் தெய்வங்கள்

கல்லறைகளில் தான்

உயிர்ப்புடன்

உறைந்திருக்கின்றன

எம் தெய்வங்கள்

கல்லாகிப் போனதில்லை

எம் பிரார்த்தனைக்காக

காத்திருந்ததும் இல்லை

அவர்களின் நேர்த்திக் கடன்கள்

எம்மை நோக்கியே இருந்தன

கல்லறைக்கு போகும் முன்

தம் கழுத்தில் தொங்கிய

கனவை

எம் உயிர்களில்

மாட்டி விட்டே போயினர்

எமக்காக பசித்திருந்தனர்

எமக்காக விழித்திருந்தனர்

எமக்காக நிலவற்ற

இருள் வேளைகளிலும்

தன்னந் தனியாக

காடுகள் கடந்தனர்

எதிரியின் இறுதி தோட்டா

முடியும் வரைக்கும்

உண்ணாதிருந்தனர்

நெஞ்சம் தகிக்கும்

கனவுகளை எம்

தெய்வங்கள் கண்டன

ஊரின் எல்லைவரைக்கும்

எதிரியை துரத்துவதாக

சன்னதம் கொண்டனர்

இறுதி துளி உயிர்

கரையும் வரைக்கும்

புதிய தேசம் பற்றியே

ஓயாது உரைத்தனர்

ஊர்களின் கோடியில்

ஒரு குழந்தை தூங்குவதற்காகவும்

எம் தெய்வங்கள்

நாள் முழுதும்

உபவாசம் இருந்தன

உயிரைச் சுருட்டும்

உப்புக் காற்றை

சுமக்கும் கடல் வெளிகளிலும்

ஒற்றை துடுப்புடன்

காவல் கொண்டனர்

2

எம் தெய்வங்கள் உறையும்

கல்லறைகள்

இன்று கதறுவதாய்

ஊர் குருவி அலறுகின்றது

கோயில்களிலும் குடியிருக்கும்

பிசாசுகள் கல்லறை தெய்வங்களையும்

தின்று பசி தீர்ப்பதாக

தலையால் அடித்து அரட்டுகின்றது

கல்லறைகள் சுமந்த

மண் கூட இன்று

தெய்வங்களை நினைத்து

கதறுகின்றதாம்

என்ன சொல்லி

அவர்களை ஆற்றுவோம்

இன்று

என்ன சொல்லி

அவர்களின் ஆன்மாவிடம்

மண்டியிடுவோம்

இன்று

எதைச் சொல்லி

அவர்களை தூங்க வைப்போம்

இன்று

எம்மிடம் ஏதேனும்

வார்த்தைகள் இருக்கா

தன் உறவுகள்

வருவர் என்று

கல்லறை மீது

காத்திருக்க போகும்

எம் தெய்வங்களை

இம்முறை

யார் ஆற்றுவர்

சந்தனப் பேழைகளில்

இனி அழுகை மட்டுமே

வெளி வருமா

3

யுகப் புருசர்களின்

கல்லறையில்

முதலாவது ஆணியை

எதிரி அறைந்தான்

இறுதி ஆணியை

நாம் அறைந்து கொண்டோம்

தெய்வங்களுக்கு முன்னால்

மண்டியிட்டே அவர்களின்

குரல்வளையை நெரித்தவர்களும்

எம்மிடையேதான் உள்ளனர்

என்று எப்படிச் சொல்வோம்

நாம்

இம்முறை நாம்

ஏற்றும் விளக்கை

காறித் துப்பியே

தெய்வங்கள் சபிக்கும்

யுகங்கள் பிளந்து

எழுந்த கொழுந்துகளை

கருக விட்டு

எதிரிக்கு

காணிக்கை வைத்த

எம்மைத் தூற்றும்

ஒன்றாய், நூறாய்

பல்லாயிரமாய்

பறவையாய் பாம்பாய்

பல்மிருகமாய்

பிளந்து கிடக்கும்

எம்மை நினைத்தே

தெய்வங்களும்

செத்துப் போகும்

கால வெளியில்

கண்ணுக் கெட்டா தூரம்

வரைக்கும் எம்

காவல் தெய்வங்கள்

எம்மை விட்டே

நீங்கிப் போகும்

தெய்வங்களுக்கு

பாடை கட்டிய பெருமையில்

மீதம் வாழ்வோம்

****

யுகப் புருசர்களின்

கல்லறையில்

முதலாவது ஆணியை

எதிரி அறைந்து கொண்டான்

இறுதி ஆணியை

நாம் அறைந்து கொண்டோம்

:

நிழலி

(23- கார்த்திகை- 2009)

Edited by நிழலி

அற்புதமான கவிதை..............

இன்றய காலத்தின் உண்மையை உணர்த்துவது மட்டுமல்லாமல் எல்லோர்

மனச்சாட்சியையும் பேச வைக்கும் கவிதையாக தந்திருக்கிறியள்...............

வாழ்த்துக்கள் கவியே!!!!!!!!

நாங்கள் சுகமாக வாழ தங்கள் சுகங்களை இழந்த மறவர்கள்

நாங்கள் வெளிச்சத்தில் வாழ தங்களை எரித்த மறவீரர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வங்களுக்கு முன்னால்

மண்டியிட்டே அவர்களின்

குரல்வளையை நெரித்தவர்களும்

எம்மிடையேதான் உள்ளனர்

என்று எப்படிச் சொல்வோம்

நாம்

இம்முறை நாம்

ஏற்றும் விளக்கை

காறித் துப்பியே

தெய்வங்கள் சபிக்கும்

யுகங்கள் பிளந்து

எழுந்த கொழுந்துகளை

கருக விட்டு

எதிரிக்கு

காணிக்கை வைத்த

எம்மைத் தூற்றும்

ஒன்றாய், நூறாய்

பல்லாயிரமாய்

பறவையாய் பாம்பாய்

பல்மிருகமாய்

பிளந்து கிடக்கும்

எம்மை நினைத்தே

தெய்வங்களும்

செத்துப் போகும்

தெய்வங்களுக்கு

பாடை கட்டிய பெருமையில்

மீதம் வாழ்வோம்

****

யுகப் புருசர்களின்

கல்லறையில்

முதலாவது ஆணியை

எதிரி அறைந்து கொண்டான்

இறுதி ஆணியை

நாம் அறைந்து கொண்டோம்

:

நிழலி

(23- கார்த்திகை- 2009)

நிழலிக்கு

மாவிரர்களின் தியாகங்களை எண்ணிக் கண்ணீருடன் அவர்களின் தியாகங்க்கள் வீணாகி விடக்கூடாது என்ற மன உறுதியுடன் செயற்படுபவர்களும் எங்களில் இருக்க, அவர்களின் தியாகங்களை மறந்து எதிரிக்குத் துணை போகிறவர்களும் எங்களில் தான் இருக்கிறார்கள்....

வலிகளை சொன்ன வரிகள் அருமை.... வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

அய்..அண்ணா மிகவும் நன்றாக இருக்கிறது உங்களின் கவிதை.இன்று தான் உங்கள் கவிதையைக் கவனித்தேன்.

எங்கள் ஊர்களில்

எம் தெய்வங்கள்

கல்லறைகளில் தான்

உயிர்ப்புடன்

உறைந்திருக்கின்றன

எம் தெய்வங்கள்

கல்லாகிப் போனதில்லை

எம் பிரார்த்தனைக்காக

காத்திருந்ததும் இல்லை

அவர்களின் நேர்த்திக் கடன்கள்

எம்மை நோக்கியே இருந்தன

கல்லறைக்கு போகும் முன்

தம் கழுத்தில் தொங்கிய

கனவை

எம் உயிர்களில்

மாட்டி விட்டே போயினர்

எமக்காக பசித்திருந்தனர்

எமக்காக விழித்திருந்தனர்

எமக்காக நிலவற்ற

இருள் வேளைகளிலும்

தன்னந் தனியாக

காடுகள் கடந்தனர்

எதிரியின் இறுதி தோட்டா

முடியும் வரைக்கும்

உண்ணாதிருந்தனர்

நெஞ்சம் தகிக்கும்

கனவுகளை எம்

தெய்வங்கள் கண்டன

ஊரின் எல்லைவரைக்கும்

எதிரியை துரத்துவதாக

சன்னதம் கொண்டனர்

இறுதி துளி உயிர்

கரையும் வரைக்கும்

புதிய தேசம் பற்றியே

ஓயாது உரைத்தனர்

ஊர்களின் கோடியில்

ஒரு குழந்தை தூங்குவதற்காகவும்

எம் தெய்வங்கள்

நாள் முழுதும்

உபவாசம் இருந்தன

உயிரைச் சுருட்டும்

உப்புக் காற்றை

சுமக்கும் கடல் வெளிகளிலும்

ஒற்றை துடுப்புடன்

காவல் கொண்டனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி அண்ணா

நெஞ்சைபிழியும் கனத்த வரிகள்.

உண்மையாகவே எம் காவல் தெய்வங்கள் எல்லாம் கல்லறையில் தான் இருக்கின்றன.

உங்கள் அத்தனை கவிதைகளினதும் சிறப்பு உயர்ந்த உவமான,உவமேயங்களைத் தாண்டி இயல்பான எழுத்து நடை தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.