Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலில் தொலைந்தேன்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலில் தொலைந்தேன்......

கவிதை வலியாக- -இளங்கவி

அந்திப் பொழுது

அழகன பூஞ்சோலையில்...

ரோஜா குளியலில்

நான் திழைத்திருக்க

மல்லிகைக் குவியலாய்

என் மனங்கவர

அவள் வந்தாள்....

என் முன்னால்

முட்செடியில் ரோஜாக்கள்...

முழு நிலவாய் அவள் முகம்...

மூன்றாம் பிறை நிலவு...

நான் முனிவனா என்ன

முகங்குனிந்து செல்ல...!

சனங்கள் நெரிசலிலும்

அவள் நடையை

அழகாய் ரசித்திருக்க......

யாரோ ஒருவன்

அடித்துவிட்டான் என் மணிபேசை...

அதைத் தேடவா..?

அவளைத் தொடர்வதா...?

மனதில் உடன் பதில்

உடனே தொடர் என்று....

காரணம்..கணப்பொழுதில்

உன் கண்களினால்

உன் மனதைச் சென்றடைந்தவள்...

அவளுக்காய் உனை மறந்து

உன் உடமையைத் தொலைத்தவன்...

எனவே அவள் தான் முக்கியம்...

மனதின் பதில் கிடைத்ததும்

அவள் பார்வையைத் தேடினேன்...

ஆனாலும் என் மணிபேசை அடித்த

பாவியையும் தேடினேன்...

சரி போகட்டும்...

ஐந்து பவுண்சில்

அவன் ஆயுள் முழுவதுமா வாழ்வன்..?

அரை வயிறு மைக்டொனால்சில்

அன்றிரவை முடிப்பான்....

அவளுக்காய் என் கணம் மறந்ததை

சிம்போலிக்காய் காட்டிய

தெய்வம அவன்....

சரி அவனை விட்டுவிட்டேன்...

அவள் மேல் காதல்

அவரை விதைபோல

அவசர அவசரமாய் என் மனதில்

செடியாய் முளைத்துவிட

பல முயற்சியின் பின்

அவள் பார்வையில்

பதிந்து கொண்டேன்...

பக்குவமாய் சேர்ந்தும் கொண்டேன்.....

துளித்துளியாய் அவள்

காதலைச் சேகரித்தேன்...

ஒரு துளியேனும் அழிந்துவிடாமல்

என் உயிரால் சிறையமைத்டேன்...

எனக்கு மனதிலே சுகம் தந்தாள்....

என் மணிகள் பல தொலைத்தாள்....

மந்திகைப் பைத்தியமாய்

என் நினைவையே மறக்கவைத்தாள்....

நில் என்றால் நிற்பேன்...

அவள் நினைத்ததை முடிப்பேன்...

ஆனாலும் அவள் நினைவில்

எனைத்தூக்க நினைத்துவிட்டாள்....

காரணம் சொல்லவில்லை...

என் மேல் காதலும் அவளுக்கில்லை; என்று

கண்டபடி பொய் சொல்லி...

என்னை புதைகுளியில் தள்ளிவிட்டாள்....

அந்தப் பூவிலே புதைந்த

என் காதல் புனிதத்தைத் தேடுகிறேன்...

என்னால் பொறுக்க முடியவில்லை

அவள் எனைப் பிரிந்த

காதலால் வாடுகிறேன்....

நான் முட்செடியில் பறித்த

ரோஜாவாய் அவளிருந்தாள்...

இன்று முட்களை விட்டுவிட்டு

முழுப் பூவாய் அவள் மறைந்தாள்...

என் மன வலியைக் காட்ட

என்னால் முடியவில்லை...

மறைந்துவிட்ட உன்னால்

பல நாளாய்த் தூக்கமில்லை....

நீ விட்டுச் சென்ற முட்களால்

என் உடலிலே வலி பதிப்பேன்...

என் உயிரின் சுவாசத்துக்காய்

பல ஆண்டு தவங்கிடப்பேன்....

என் உடல் வலியைப் பாரடி...

நீ என்னைச் சேரடி....

என் ஆசைத்தோட்டத்தில்

ரோஜாவாய் மலரடி....

இளங்கவி.....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆப்போ உங்களுக்கும் :lol:

வாழ்த்துக்கள் இளங்கவி

என் முன்னால்

முட்செடியில் ரோஜாக்கள்...

முழு நிலவாய் அவள் முகம்...

மூன்றாம் பிறை நிலவு...

நான் முனிவனா என்ன

முகங்குனிந்து செல்ல

...!

இந்த வரியில் வரியில் வரும் முனிவர் நான் இல்லைதானே

ஏனென்றால் நான் கண்குளிர பார்ப்பேன் எல்லா பொருட்களையும் :):)

நன்றி இளங்கவி ..

என் நினைவுகள் ஒருமுறை மீட்டிப்பார்க்க முடிந்தது ..

காதலில் தொலைந்தேன் ..

என்னை நானே தேடி அலைந்தேன் ..

மனித உரிமை ஆணைக்குழுவில் கூட முறைப்பாடு செய்தேன் ..

பதில் நேற்று தான் கிடைத்தது ..

காதல்... மனித உரிமை இல்லையாமே ...

  • கருத்துக்கள உறவுகள்

என் உடல் வலியைப் பாரடி...

நீ என்னைச் சேரடி....

என் ஆசைத்தோட்டத்தில்

ரோஜாவாய் மலரடி....

அவளுக்கு உங்கள் ஆசைத்தோட்டத்தில் மலர்ந்து நாலு நாளில் கசங்கி உதிர்ந்து விழ விருப்பமில்லையாம். அதனால கசங்கினாலும் மோதிரக்கையால கசங்குவம் என்று அடுத்த வீதியில "காண்ட் பாக்கோட" யாருக்காகவோ காவல் நிற்பாள் அங்கும் இங்கும் அலைந்தபடி..! அதுவும் நிச்சயம் உங்களிற்காக இருக்காது.. அவளின் பிழைப்புக்கு இன்னொருவனின் வரவுக்காக..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளுக்கு உங்கள் ஆசைத்தோட்டத்தில் மலர்ந்து நாலு நாளில் கசங்கி உதிர்ந்து விழ விருப்பமில்லையாம். அதனால கசங்கினாலும் மோதிரக்கையால கசங்குவம் என்று அடுத்த வீதியில "காண்ட் பாக்கோட" யாருக்காகவோ காவல் நிற்பாள் அங்கும் இங்கும் அலைந்தபடி..! அதுவும் நிச்சயம் உங்களிற்காக இருக்காது.. அவளின் பிழைப்புக்கு இன்னொருவனின் வரவுக்காக..! :)

நெடுக்ஸ் அண்ணா இப்படியெல்லாம் சரியா சொல்லக்கூடாது கக்கா பழக்கம் :(

ஆமா அதென்ன ஆரம்பத்திலை இருந்தே இப்ப வரைக்கும் நீங்க மாறலையா?

ரொம்ப நொந்திட்டிங்களோ :wub:

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அண்ணா இந்த கவிதையை யாருக்காகவோ Dedicate பண்ணுவது போல தோன்றுது :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர் ஜீ

ஆப்பு எல்லா இடத்திலும் இருக்கு... நாங்கள் தான் பார்தத்து உட்காரவேணும் இல்லாட்டி பிரச்சனையாகிடும்....

என் கவிதையில் வரும் முனிவர் உண்மையான முனிவர்.....

ஆனால் நீங்கள் பசுத்தோல் போத்திய புலியாச்சே...ச்சீ.. ச்சீ.. முனிவராச்சே.... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

அவளுக்கு உங்கள் ஆசைத்தோட்டத்தில் மலர்ந்து நாலு நாளில் கசங்கி உதிர்ந்து விழ விருப்பமில்லையாம். அதனால கசங்கினாலும் மோதிரக்கையால கசங்குவம் என்று அடுத்த வீதியில "காண்ட் பாக்கோட" யாருக்காகவோ காவல் நிற்பாள் அங்கும் இங்கும் அலைந்தபடி..! அதுவும் நிச்சயம் உங்களிற்காக இருக்காது.. அவளின் பிழைப்புக்கு இன்னொருவனின் வரவுக்காக..!

அடப்பாவி அவர் ஏதோ காதலிக்காக கவிதை எழிதியிருக்கார் நீங்கள் அதை மாற்றி காசுக்கு போற மாதிரி சொல்கிறீரே

அது சரி அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே14704255.gif :(:wub:

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ

ஆப்பு எல்லா இடத்திலும் இருக்கு... நாங்கள் தான் பார்தத்து உட்காரவேணும் இல்லாட்டி பிரச்சனையாகிடும்....

என் கவிதையில் வரும் முனிவர் உண்மையான முனிவர்.....

ஆனால் நீங்கள் பசுத்தோல் போத்திய புலியாச்சே...ச்சீ.. ச்சீ.. முனிவராச்சே.... :wub:

:(:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புச்செல்வன்

கருத்துக்கு மிக்க நன்றி...

மனிசனைக் கொன்றதுக்கே மனித உரிமையைப் பற்றிக் கதைக்க மாட்டேன் என்கிறார்கள்... நீங்கள் காதலுக்காய்.....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nedukkalapoovan

காதலிக்கு என்ன பிரச்சனையோ... சரி விடுங்கோ....

உலகத்தில் நாம் நினைப்பது போல எல்லாம் சரியாக நடந்தால் உலகமே இயங்காது... உலகத்தின் இயங்கு சக்தியே பிரச்சனைகள் தான் போலிருக்கிறது....

காதல் கவிதைக்கே இப்படியென்றால் அவளைக் கண்டால் பச்சடி தான் எண்டுறியள்.... :wub::(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணா இப்படியெல்லாம் சரியா சொல்லக்கூடாது கக்கா பழக்கம் :D

ஆமா அதென்ன ஆரம்பத்திலை இருந்தே இப்ப வரைக்கும் நீங்க மாறலையா?

ரொம்ப நொந்திட்டிங்களோ :(

ஜீவா

நெடுக்ஸை அவர் பாட்டிலே விடுங்கோ...மனதில் இருப்பதைக் கொட்டித்தீர்த்தால் தான் கவலை குறையும்...அவர் கவலையில் இருக்கிற நேரம் பார்த்து நீங்கள் இந்தப் பாட்டைப் போடுறியள்.... :wub:

அதுசரி இந்தப் பாட்டு நல்ல பிறின்ரா இருக்கு...அடிக்கடி dvd இல் ஓடுதுபோலக்கிடக்கு....சரி ..சரி ஏதோ நடக்கட்டும்.... :)

இளங்கவி அண்ணா இந்த கவிதையை யாருக்காகவோ Dedicate பண்ணுவது போல தோன்றுது :D

என்ர தொப்பி யாருக்கு அளவாயிருந்தாலும் போடுங்கோ நான் ஒண்டும் சொல்லமாட்டன்.... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.