Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 வருட கால யுத்தம் ஒழிந்து துன்பியல் கலந்த வாழ்க்கை நீங்கியதற்கு இறைவனுக்கு நன்றி – யாழ் ஆயரின் நத்தார் வாழ்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது கருத்துக்கு மறுப்பு எழுதவில்லை

ஆனால்அங்குள்ள மக்களுக்காக பேசுபவர் இப்படியும் கூறுகிறார்

யாழ்ப்பாணதில் டக்கிளசின் ஆட்சிஇவவுனியாவில் புளோட்டின் ஆதிக்கம் கிழக்கில் பிள்ளயான் முதலமைச்சர்கருணா மந்திரி இதுதான் உண்மையும் யதார்த்தமும்.

அந்த மக்கள் இதற்கெதிராக எதுவுமே செய்யமுடியாது

நாங்களாவது....??

  • Replies 58
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்கள் இதற்கெதிராக எதுவுமே செய்யமுடியாது

நாங்களாவது....??

அதுதானே பலர் முன்னாள் புலி ஆதரவாளர்கள் கொழும்பு சென்று அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் சேர்ந்து செயற்படவுள்ளதாகவும் செய்திகள் சொல்கின்றனவே. எனவே நாங்களும் எம்மால் இயன்றதைச் செய்கின்றோம்.

விசுகு,

இன்றைய உண்மைநிலை அதுதான் புலம் பெயர்ந்த எங்களால் அஙு ஒரு சிறு மாற்றத்தையுமேயே ஏற்படுத்தமுடியாது.இங்கிருந்துகொண்டு வீண் தம்பட்டம் அடிப்பவர்களுக்கு முதலில் அது விளங்கவேண்டும். 30வருடங்கள் புலிகள் ஆட்சிசெய்கையில் அதைபிடிக்காத பலர் புலம் பெயர்ந்தவர்களில் இருந்தார்கள். அவர்களுக்கும் உதைத்தான் நான் சொன்னேன் சரி பிழை வேறு விடயம் புலிஆட்சி அங்கு நடப்பதென்பதுதான் உண்மை.அதுபோல்தான் இன்றும் சரி, பிழை வேறுவிடயம் .எங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ அதுதான் நாட்டு நிலைமையும் உண்மையும் கூட.

நாங்கள் இங்கிருந்து கொண்டு விடுகிறதெல்லாம் சும்மா உல்டா.அது சிங்களத்திற்கு வடிவாகத்தெரியும்,சம்பந்தனுக்கும் வடிவாகத்தெரியும்.சம்பந்தன் இப்படி கதைகின்றார் என்றால் புலியை பிழை சொன்னால் தான் இப்போது அங்கு வோட்டு விழும் நிலை.

அதுதானே பலர் முன்னாள் புலி ஆதரவாளர்கள் கொழும்பு சென்று அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் சேர்ந்து செயற்படவுள்ளதாகவும் செய்திகள் சொல்கின்றனவே. எனவே நாங்களும் எம்மால் இயன்றதைச் செய்கின்றோம்.

புலம்பெயந்த மக்களின் பிரதி நிதிகளா...?? யார் அவர்களை அங்கீகரிச்சவை...??

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயந்த மக்களின் பிரதி நிதிகளா...?? யார் அவர்களை அங்கீகரிச்சவை...??

பிரதிநிதிகள் என்று சொல்லவில்லை. முன்னாள் புலி ஆதரவாளர்கள். உதாரணத்திற்கு நோர்வே சேதுரூபன் (நிதர்சனம் இணையத்தளத்தில் "தேசியத்துக்கு" பங்காற்றியவர்) மகிந்தவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலைசெய்ய உள்ளதாகவும் சில செய்திகள் சொல்கின்றன!

பிரதிநிதிகள் என்று சொல்லவில்லை. முன்னாள் புலி ஆதரவாளர்கள். உதாரணத்திற்கு நோர்வே சேதுரூபன் (நிதர்சனம் இணையத்தளத்தில் "தேசியத்துக்கு" பங்காற்றியவர்) மகிந்தவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலைசெய்ய உள்ளதாகவும் சில செய்திகள் சொல்கின்றன!

தேசியத்துக்கு ஆதரவானவர் எண்று சொல்லிக்கொண்டவர்கள் எண்று சொல்லுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் வாழலாம்?

இப்படித்தான் வாழவேண்டும் என எமது முன்னோர்கள் சில விதிகளை விதித்து வைத்துள்ளார்கள். சோம்பேறிகளுடன் சமூக முன்னேற்றம் பற்றி பேசி நேரத்தை வீணடிப்பதிலும்விட எம்மால் முடிந்த எதையாவது செய்துவிட வேண்டுமென ஐந்தோடு ஆறாக 1975துகளில் வெளிக்கிட்ட இளைஞர்களின் எழுப்பமே.................... ஓயாத அலைகளாக 2000ம் ஆண்டுகளில் ஈழ தேசத்தில் எழுந்து அடித்தது. மக்களை மனமுடைய செய்து ஒரு இனத்தை அடிமைகளாக்குவது என்பதை உலகத்தில் உள்ள எல்லா கொடியவர்களும்தான் செய்தார்கள். ஆனால் எந்த இனம் அடிமையாய் போனது? குறைந்தபட்சம் மூன்று உதராணங்களையாவது உங்களால் தரமுடியுமா? மக்களின் மனதில் இப்போது போர்பற்றிய சிந்தனை இல்லைதான். ஆனால் ஈழத்தில் உள்ள எல்லா இளைஞரின் மனதிலும் அடிமை வாழ்வில் சுகம் காணும் எண்ணமும் இல்லை. அடக்குமுறைகள் எழும்போதுதான் அதற்கெதிரான போர்கள் வெடிக்கின்றன. ஓபேரேசன் லிபேரேசன் என்று ஒட்டுமொத்த இனத்தையும் எதிரி துரத்திய போதுதான் மில்லர் பிறந்தான்................... ஆனால் நீங்கள் கூறுவதுபோல் 1000 பத்தாயிரம் என்று இளைஞர்கள் மற்றதிசையில் ஒடினார்கள்தான். ஆனால் யாருடைய ஓட்டம் அதிர்ந்தது ஒரு மில்லருடைய வாகன ஓட்டமா? பத்தாயிரம் இளைஞர்களின் புறக்கணிப்பு ஓட்டமா? இன்றோ நாளையோ நாளை மறுநாளோ மானம் ஒன்றே பெரிதென எண்ணுபவன் ஒருவன் வெடிக்கதான் போகிறான்............... நாடு அதிரத்தான் போகிறது. வேண்டியோ வேண்டாமலோ தமது ஆதரவை அவனுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு வரத்தான் போகிறது. எதை ஏன் நீங்கள் மறுக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை. ஏதோ புலத்தில் இருப்பவர்களுக்கு அங்கு இருக்கும் மக்கள் மீது அக்கறையில்லை அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த உறவும் உங்கள் ஒரு இருவரை தவிர வேறொருவருக்கும் சொந்தங்கள் அங்கு இல்லை. ஏதோ நீங்கள் ஒரு இருவர்தான் யாழ்பாணத்திற்கு தொலைபேசியில் பேசுகின்றீhகள். போன்ற எண்ணங்கள் உங்களுக்கு இருக்குமெனில்......................... நீங்கள் கிணற்றுக்குள்ளும் இல்லை கிணறே கொஞ்சம் பெரிது என்பதே எனது எண்ணம். யாருக்கும் யார்மீதும் போரை திணிக்கும் எண்ணம் இல்லை ஆனால் அடுத்த கட்ட நகர்வுக்கு தனது இனத்தை சாய்க்க வேண்டிய கடைமை உணர்வுள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் உண்டு. அவனின் இருப்பிடம் இதில் ஒன்றும் பெரிய மாற்றத்தை கொண்டுவர போவதில்லை. அன்ரன் பாலசிங்கம் குமரப்பா போன்ற பெருத்த தலைவர்கள் உட்டபட பல பேர் புலத்தில் இருந்தே இந்த போரை தமது தலைகளில் தங்குவதற்கு தாயகம் போனார்கள்.

மருதங்கேணி,

நீர் சொல்லுவதிலும் உண்மை இருக்கின்றது. அடக்கப்படும் தமிழினம் எப்படியும் மீண்டும் ஏதாவது ஒருவழியில் போராடி தமக்கான ஒரு விடுதலையை பெறவேண்டும்.அதற்கு நாம் ஏன் தடையாக இருக்க வேண்டும்.அதற்கு நாங்கள் ஒருகாலமும் தடை இல்லை.தடை போடவும் இங்கிருந்துகொண்டு எங்களால் ஏலாது.

புலம் பெயர்ந்தவர்கள் செய்யும் செயற்பாடுகளை ஏன் விமர்சிக்க வேண்டும் அந்த வழியிலும் ஒருமுறை முயன்றுபார்க்கலாம் தானே.

நாங்கள் பலர் எமது கையை சுட்டுக்கொண்டவர்கள்.கடந்த 30 வருட போராட்டத்தில் எவரையும் விமர்சிக்கவிடாது காசைதாருங்கள் கையில் தமிழீழம் என்பதை நம்பியவர்கள் தானே பலர்.கடைசியில் என்ன நடந்தது.(போராட்டம் தோற்றுப்போனதற்கு சும்ம சப்பு காரணங்கள் சொல்ல வேண்டாம் பிழை முழுக்க எங்கள் கையில்)

விமர்சனங்களை கூட ஏற்கும் பக்குவத்தில் எவரும் இருக்கவில்லை.இந்நிலையில் மீண்டும் காதில் பூ சுற்ற பலர் புறப்பட்டுள்ளார்கள்.கண்ணை மூடிக்கொண்டு எவரையும் நம்பவேண்டாம் என்றுதான் சொல்லுகின்றோம்.

"குமரப்பா,பாலசிங்கம் முதலியோர் புலத்தில் இருந்தே போராட போனார்கள்". நானும் புலத்தில் இருந்துதான் போராடப் போனேன்.அப்போது எனது அம்மா கூட எங்களுடன் இருந்தார்.காலை 4 மணிக்கு எனது கட்டிலடியில் வந்து தம்பி நாட்டில் இருந்து வெளிநாடு செல்ல எவ்வள்ளவு சனம் கஸ்டப்படுகின்றது.நீ படிக்கவெண்டு இவ்வளவு காசு கட்டி லண்டன் வந்து படிப்பையும் முடிக்காமல் போகப்போறியா என்று அழுவா,எல்லோரையும் ஒருவழியாக ஆறுதல் படுத்தித்தான் போனேன்.3 வருடத்தில் நம்பி போனவர்களுடன் முரண்பட்டு பயந்து எத்தனை இடங்கள் ஒளித்து தப்பிவந்தேன்.சாவிற்கு பயந்தல்ல,துரோகியாக சித்திரைவதை பட்டு சாகக்கூடது என்று.யாரின் அனுதாபத்திற்காகவும் இதை எழுதவில்லை. தான் வசதியாக இருந்துகொண்டு மற்றவனை போராடி நாடு எடுத்துதரச் சொல்லும் இனம் எங்கள் இனம். அதுதான் திரும்ப எழுதுகின்றனான் எது தேவையோ அதை அங்கிருப்பவர்கள் தீர்மானிக்கட்டும் அது சிங்களவனுக்கு அடிமையாக இருப்பதாக இருந்தால் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி,

நீர் சொல்லுவதிலும் உண்மை இருக்கின்றது. அடக்கப்படும் தமிழினம் எப்படியும் மீண்டும் ஏதாவது ஒருவழியில் போராடி தமக்கான ஒரு விடுதலையை பெறவேண்டும்.அதற்கு நாம் ஏன் தடையாக இருக்க வேண்டும்.அதற்கு நாங்கள் ஒருகாலமும் தடை இல்லை.தடை போடவும் இங்கிருந்துகொண்டு எங்களால் ஏலாது.

புலம் பெயர்ந்தவர்கள் செய்யும் செயற்பாடுகளை ஏன் விமர்சிக்க வேண்டும் அந்த வழியிலும் ஒருமுறை முயன்றுபார்க்கலாம் தானே.

நாங்கள் பலர் எமது கையை சுட்டுக்கொண்டவர்கள்.கடந்த 30 வருட போராட்டத்தில் எவரையும் விமர்சிக்கவிடாது காசைதாருங்கள் கையில் தமிழீழம் என்பதை நம்பியவர்கள் தானே பலர்.கடைசியில் என்ன நடந்தது.(போராட்டம் தோற்றுப்போனதற்கு சும்ம சப்பு காரணங்கள் சொல்ல வேண்டாம் பிழை முழுக்க எங்கள் கையில்)

விமர்சனங்களை கூட ஏற்கும் பக்குவத்தில் எவரும் இருக்கவில்லை.இந்நிலையில் மீண்டும் காதில் பூ சுற்ற பலர் புறப்பட்டுள்ளார்கள்.கண்ணை மூடிக்கொண்டு எவரையும் நம்பவேண்டாம் என்றுதான் சொல்லுகின்றோம்.

"குமரப்பா,பாலசிங்கம் முதலியோர் புலத்தில் இருந்தே போராட போனார்கள்". நானும் புலத்தில் இருந்துதான் போராடப் போனேன்.அப்போது எனது அம்மா கூட எங்களுடன் இருந்தார்.காலை 4 மணிக்கு எனது கட்டிலடியில் வந்து தம்பி நாட்டில் இருந்து வெளிநாடு செல்ல எவ்வள்ளவு சனம் கஸ்டப்படுகின்றது.நீ படிக்கவெண்டு இவ்வளவு காசு கட்டி லண்டன் வந்து படிப்பையும் முடிக்காமல் போகப்போறியா என்று அழுவா,எல்லோரையும் ஒருவழியாக ஆறுதல் படுத்தித்தான் போனேன்.3 வருடத்தில் நம்பி போனவர்களுடன் முரண்பட்டு பயந்து எத்தனை இடங்கள் ஒளித்து தப்பிவந்தேன்.சாவிற்கு பயந்தல்ல,துரோகியாக சித்திரைவதை பட்டு சாகக்கூடது என்று.யாரின் அனுதாபத்திற்காகவும் இதை எழுதவில்லை. தான் வசதியாக இருந்துகொண்டு மற்றவனை போராடி நாடு எடுத்துதரச் சொல்லும் இனம் எங்கள் இனம். அதுதான் திரும்ப எழுதுகின்றனான் எது தேவையோ அதை அங்கிருப்பவர்கள் தீர்மானிக்கட்டும் அது சிங்களவனுக்கு அடிமையாக இருப்பதாக இருந்தால் கூட.

நீங்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரண்படுகின்றீர்கள்.

இனமானத்தை தனது உயிரிலும் மேலாக நினைப்பவன். சும்மா சோம்பேறிகளின் கதைகளை கேட்டுகொண்டிருக்கமாட்டான். மாத்தையா கூட இடையில் முரண்பட்டார்............... கருணாவும் பிளவு பட்டார். சொந்த தேவைகள்தான் அதில் இருந்ததே தவிர. நாடு தேவை என்றோர் எல்லாம் உடனிருந்தார். பல பதவி பறிப்புகள் பணிஸ்மன்ற்கள் என்று கடந்தும் நாடு என்று நின்றே சிலரே முள்ளிவாய்காலில் மக்களை இறுதியில் வழிநடத்தினார்கள் ( யாரென்பது உங்களுக்கு புரியுமென நினைக்கிறேன்) தனிபட்ட ஆசைகளையும் எண்ணங்களையும் ஒரு விடுதலைபோராட்டத்தில் திணிக்க முடியாது. விடுதலை போராளி என்பதன் பொருள் அறியாதவர்கள்தான் தம்நிலையை முதன்மை படுத்தினார்கள் தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்தே சென்றார்கள். குமரப்பா புலேந்திரனுக்கு குப்பி அனுப்பியதென்பது ஒரு விடுதலை இயக்கத்தின் முடிவு. அது அவர்களின் கட்டமைப்பின் புனிதங்களோடு சம்மந்தபட்டது. முழுநேர வேலையாக விமர்சனம் எழுதுபவனுக்கு அது தவிர வேறேதும் தெரியாது. அவனின் விமர்சனங்களை நின்று கேட்டுகொண்டிருந்தால் நேரம்தான் வீணாகுமே தவிர வேறு என்ன பயன் தரும்?

உங்களிடம் குறைகள் இருப்பின் அதை எழுதுங்கள். எழுந்தவாரியாக விமர்சனங்களை ஏற்பதில்லை என்று பூராயம் புடுங்காதீர்கள். குளங்களை கட்டுபவன் கட்டிகொண்டே போனான்............ சும்மா இருந்த சோம்மேறிகள் நீரை மறித்து அடைத்து வைத்தால் கட்டுடைத்து ஊர் அழியும் என்று விமர்சித்து கொண்டிருந்தார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளாக விவசாயம் நடக்கின்றதே இந்த குளங்களை நம்பி.

வேலையில்லாதவனுக்கு பிழைப்பிற்கு ஓரே வழி எதையாவது செய்து கொண்டிருப்பவனிடம் குறைகாண்பது.

அதையா நீங்களும் செய்ய நினைக்கின்றீர்கள்?

அவன் சுருட்டினான் இவன் களவெடுத்தான் என்று பிதற்றி ஒன்றும் ஆகபோவதில்லை. உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எழுந்து நடவுங்கள்........... நிற்சயமாக நல்ல மனிதர்கள் உங்கள் தடங்களை தொடர்வார்கள். நாம் காதலும் வீடும் காமமும் என்றிருந்துவிட்டு இடையில் நித்திரையால் எழும்பி நாடு இல்லை என்றால் என்ன அர்த்தம். அதுகுமில்லாமல் எல்லாம் புலிதான் என்று பழியை போட்டுவிட்டு எமது அசிங்கங்களை மறைக்க நினைப்பதை போன்று அருவெருப்பு வேறொன்றும்மில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.