Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் வேட்பாளர் அல்லது பகிஷ்கரிப்பு; இரண்டுமே தமிழருக்கு பயன்தர மாட்டா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:lol: என்னைய்யா ஒரே குழப்பாமாயிருக்கு ?! மகிந்தவுக்கு வாக்களிக்க ஏலாது. அவனைப் பழிவாங்க பொன்னருக்கு வாக்களிக்கலாமென்டால், அவரும் மகிந்தவுக்கு நிகராக தமிழ் ரத்தம் குடிச்சவர்.சிவாசி லிங்கம் கேட்கிறார் எண்டு பாத்தால் அந்தாளும் இந்தியாவின்ர பொம்மையாம். விக்கிரமபாகு கருணாரட்னவுக்குப் போடுங்கோ எண்டால் சனம் ஆர் எண்டு கேட்குது.பேசாமல் ஒரு நாயும் வேண்டாம், பகிஸ்கரிக்கலாம் எண்டு பாத்தால் அதுவும் வேண்டாமாம்.

என்ன செய்யுறது?!

  1. நாங்கள் வாக்களிச்சாலும் இல்லாவிட்டாலும் ஆரோ ஒரு நாய்தான் வரப்போகுது.

  2. இதில மகிந்த வாரது எங்களுக்கு 100 வீதம் பிடிக்காத விஷயம்.

  3. பொன்னர் வந்தால் இனவாதம் கொடிகட்டிப் பறக்கும்,

  4. ஆனால் ராணுவ ஆட்சி என்கிற பெயர் சர்வதேசத்தில வரும். green%20checkmark%20(Custom).jpg
  5. அதோட மகிந்தவை வீட்டுக்கு அனுப்பலாம்,green%20checkmark%20(Custom).jpg
  6. இந்தியாவின்ர கனவில மண்போடலாம்....green%20checkmark%20(Custom).jpg

அப்படிப் பாத்தால் பொன்னருக்குத்தான் போடவேணும்.

  1. ஆனால் அந்த நாய் செய்த இனவழிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறதாக அந்த நாய் சொல்லும், redbox.jpg

  2. அல்லது அப்படியொன்றே நடக்கவில்லை எண்டு சொல்லும்..redbox.jpg

மதுரைக்கு வந்த சோதனை !!!!!!

எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. மகிந்தவையும், இந்தியாவையும் கட்டுப்படுத்த பொன்னனை கொண்டுவாறதை தவிர வேறுவழியில்லை. பொன்னன் தன்னை தமிழர் ஆதரிக்கிறார்கள் என்று காட்டினால் அது இந்தியாவை வெளியேற்றுவதற்கு கொடுக்கும் விலை என்று பார்க்க வேண்டும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு ஓட்டுபோடுவதுதான் உலகில் ஜனநாயகம்!

எஜமானிகள் நல்லதான் பாடம் புகட்டி வைச்சிருக்கிறாங்கள். ஆனாலும் நீங்கள் நன்றி மறவாத ஒரு நல்ல பிள்ளை.

எல்லோரும் இந்த தேர்தலில் ஓட்டுபோட்டால் இலங்கைதான் உலகில் ஜனநாயகம் தலைவிரித்தாடும் முதலாவது நாடக வந்துவிடும்.

எங்களுக்கும் பெருமையா இருக்கும். பிறகு ஐக்கிய இலங்கைக்குள் கூழ்காச்சலாம்.

அக்கா....ஜனநாயகம்பற்றிமன்னாh ஆயர் கூட்டமைப்புத்தலைவர் என இருவர் ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் கடைசியாக சென்னவர் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார். இதற்குமேல் ஜனநாயம்பற்றி......... :lol::lol:

தமிழர் தமக்கு நடந்த அநியாயங்களை விரைவில் மறந்து விடுபவர்கள். எமக்கு இந்த வருடம் வந்த பேரிழப்பை ஒரு தமிழ் சந்ததியும் மறக்க முடியாது. அதற்கு பக்க பலமாக நின்று, மகிந்தவுக்கு உதவி செய்ததே இந்தியா தான் என்பதை யாவரும் அறிவார்கள். இப்போதும் மகிந்த மீண்டும் வர வேண்டும் என்றே அயல் நாடு காய் நகர்த்துகின்றது. இதனை முறியடிக்கவே சரத் வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

இந்தியா என்ன செய்யும் என்பதை வேண்டுமானால் இருந்து பாருங்கள்... அவர்களுக்கு மகிந்த வந்தாலும் சரத் வந்தாலும் இரண்டும் ஒண்றுதான்... இருவரையும் தங்களின் கைகளுக்குள் கொண்டு வருவதும் அவர்களுக்கு கடினமானதும் அல்ல...

மிக முக்கியமாக இந்தியா எப்போதும் இலங்கை விடயத்தில் பிடிவாதமான ஒரு நிலைப்பாட்டில் இருந்ததும் கிடையாது... வேண்டிய அளவு விட்டு கொடுப்போடே செயற்படும் நாடு...

இப்போதும் மகிந்த இந்தியாவை விட சீனாவுடன் தான் அதிக நெருக்கமானவர்... சீனாவின் எதிரிகளாக இருந்தாலும் இந்தியா இலங்கையின் நட்பாகத்தான் நடத்துகிறது... ஆனால் சரத் அமெரிக்கா சார்ந்த மேற்குலக நாடுகளின் கைப்பொம்மையாக இருப்பார் என்பதில் சந்தேகம் வேண்டாம்... அதில் முக்கியமாக அமெரிக்காவோ ஐரோப்பாவோ , ஜப்பானோ இந்தியாவின் எதிரிகள் கிடையாது... போதாக்குறைக்கு இந்த இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளான இணைத்தலைமை நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்ன செய்யும் என்பதை வேண்டுமானால் இருந்து பாருங்கள்... அவர்களுக்கு மகிந்த வந்தாலும் சரத் வந்தாலும் இரண்டும் ஒண்றுதான்... இருவரையும் தங்களின் கைகளுக்குள் கொண்டு வருவதும் அவர்களுக்கு கடினமானதும் அல்ல...

மிக முக்கியமாக இந்தியா எப்போதும் இலங்கை விடயத்தில் பிடிவாதமான ஒரு நிலைப்பாட்டில் இருந்ததும் கிடையாது... வேண்டிய அளவு விட்டு கொடுப்போடே செயற்படும் நாடு...

இப்போதும் மகிந்த இந்தியாவை விட சீனாவுடன் தான் அதிக நெருக்கமானவர்... சீனாவின் எதிரிகளாக இருந்தாலும் இந்தியா இலங்கையின் நட்பாகத்தான் நடத்துகிறது... ஆனால் சரத் அமெரிக்கா சார்ந்த மேற்குலக நாடுகளின் கைப்பொம்மையாக இருப்பார் என்பதில் சந்தேகம் வேண்டாம்... அதில் முக்கியமாக அமெரிக்காவோ ஐரோப்பாவோ , ஜப்பானோ இந்தியாவின் எதிரிகள் கிடையாது... போதாக்குறைக்கு இந்த இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளான இணைத்தலைமை நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது...

தயா , இந்தியாவுக்கு சரத் வந்தாலும் ,மகிந்த வந்தாலும்.... இரண்டும் ஒன்றுதான் என்று நீங்கள் கூறிய கருத்தை மறுதலிக்கின்றேன்.

காரணம், இந்தியாவுக்கு இப்போ பெரிய நாடுகளுடன் (சீனா,பாகிஸ்தான்) சண்டை போட திராணி இல்லை.

ஸ்ரீலங்காவுடன் சீனா சினேகமாக உள்ளதால், தானும் வேண்டா விருந்தாளியாக இதற்குள் தலை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கே தெரியும் மானம் கெட்ட பிழைப்பு என்று...... ஆனால் வேறு வழி இல்லையே.....

நாங்கள் இந்தியாவுடன் எவ்வளவு நேசக்கரம் நீட்டிப்பார்த்தோம் ..... எல்லாவற்றையும் உதறித்தள்ளி விட்டு, எம்மை அழிப்பதிலேயே குறியாக நின்றார்கள்.

இப்போ அவர்களுக்கு சீனாவின் மூலம் புற்று நோய் ஆரம்பித்துள்ளதாகவே கருதுகின்றேன்.

ஜீட் , நீங்கள் ரகுநாதன் கேட்ட கேள்விக்கு மிக அழகாக வர்ணத்தில் , எல்லோரும் விளங்கும் படியாக பதில் போட்டமை நன்றாக இருந்தது. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன தேர்தலில வோட்பண்ண விட்டிருந்தா இந்தளவுக்கு மண்டைய போட்டு உடைக்கவேண்டிய தேவை வந்திருக்காது. பௌத்த சிங்கள தேர்தல் எண்டெல்லாம் சொன்னாங்க இப்ப அதே தேர்தலுக்கு மண்டைய போட்டு உடைக்கிறாங்க. :)

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா....ஜனநாயகம்பற்றிமன்னாh ஆயர் கூட்டமைப்புத்தலைவர் என இருவர் ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் கடைசியாக சென்னவர் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார். இதற்குமேல் ஜனநாயம்பற்றி......... :):lol:

ஏன நீங்கள் மருதங்கேணீயை அக்கா எனச் சொல்கிறீர்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன நீங்கள் மருதங்கேணீயை அக்கா எனச் சொல்கிறீர்கள்...

என்னக்கா கேள்வி? பொம்பிளை படத்தோட.... மருதங்கேணி ஊரிலயிருந்து??

அதுசரி உங்கள அக்கா எண்டு விழிக்கிறதில உங்களுக்கொண்டும் ஆட்சேபனை இல்லத்தானே!! :)

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

என்னக்கா கேள்வி? பொம்பிளை படத்தோட.... மருதங்கேணி ஊரிலயிருந்து??

அதுசரி உங்கள அக்கா எண்டு விழிக்கிறதில உங்களுக்கொண்டும் ஆட்சேபனை இல்லத்தானே!! :)

நான் அக்கா தான்...ஆனால் நான் நினைத்தேன் மருதங்கேணீ ஆண் என மன்னிக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.