Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரித்து த.தே.கூ பேச்சு [படங்கள் இணைப்பு]

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனாதிபதி தேர்தல் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு அரிய சந்தர்ப்பம். எங்களுடைய எதிர்கால நிலைப்பாட்டை தீர்வை முழுமையாக மாற்றி அமைக்க கூடிய சந்தர்ப்பம். இதனை நாம் இழக்ககூடாது.

தமிழ்மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கள் மாலை வவுனியா வெளிவட்ட வீதியில் நடைபெற்ற சனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது குறிப்பிட்டார். நாம்

சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்த விடயம் அறிவிக்கப்பட்ட பின்னர் மலையகத்திலும் தென்னிலங்கையில் வாழுகின்ற தமிழர் மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் (?)காணப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையினையும் அவர்கள் ஏற்றுள்ளனர். தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற நிலைப்பாடு எங்கும் காணப்படுகின்றது என குறிப்பிட்ட திரு சம்பந்தன், தமிழ்மக்களுடைய வாக்குதான் இந்த நாட்டில் சனாதிபதி யார் என்பதினை தீர்மாணிக்கப்போகின்றது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

படங்கள் இணைப்பு

Edited by snegi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரித்து த.தே.கூ பேச்சு

லெக்சன் வந்தா உவய காணலாம் எண்டு சொல்லுறது உண்மைதான். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மதி,

எல்லாரையும் திட்டுகிறீர்களே, உண்மையிலேயே நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டதற்கு இன்னும் பதில் இல்லையே??

தமிழ் தேசிய கூட்டணியினரின் முடிபும், செயற்பாடுகளும் வரவேற்கத்த ஒன்றாகும். .... குரைப்பவர்கள் குரைக்க.ஊளையிடுபவர்கள் ஊளயிட ... இனி இவைகள் தான் அவர்களுக்கு இயலும்/அதுவும் புலத்தில் மட்டும்தான் .... நீங்கள் உங்கள் முயற்சிகளை தொடருங்கள்!!!

போட்ட எலும்புக்கு கருணா டக்கிளசை விட அதிகமாக வால் ஆட்டி நல்ல பலனை பெற்று சுகமாக வாழ கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள்... அவர்களுக்கு பார்வையாளர்கள் குளிர்பாணங்கள் குடுத்து உற்சாகப்படுத்துமாறு வேண்டி கொள்ள படுகிறீர்கள்..

போட்ட எலும்புக்கு கருணா டக்கிளசை விட அதிகமாக வால் ஆட்டி நல்ல பலனை பெற்று சுகமாக வாழ கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள்... அவர்களுக்கு பார்வையாளர்கள் குளிர்பாணங்கள் குடுத்து உற்சாகப்படுத்துமாறு வேண்டி கொள்ள படுகிறீர்கள்..

மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் வேல்ஸிலிருந்து அருஷ்

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளது.அரசியல் தீர்வு மனிதாபிமான நெருக்கடிகளுக்கான தீர்வு என பல விடயங்களை முன்நிறுத்தி இந்த ஆதரவுகளை வழங்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. கூட்டமைபின் இந்த முடிவானது சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட மிக நல்ல முடிவு. அண்மைக்காலத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு ஒரு முக்கிய திருப்பமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான செயற்படும் சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஆவல். இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆட்சிமாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஒரு அமைதியான சூழ்நிலையையும், அதன் அடுத்த நகர்வாக அரசியல் தீர்வுக்கான ஆரம்ப செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க முடியும்.

நன்றி - வீரகேசரி நாளேடு

http://www.pathivu.com/news/4999/68//d,art_full.aspx

:(

ஆட்சி மாற்றத்திற்காக வாக்களிக்க மக்களை உரிமையோடு கேளுங்கள்.ஏனெனில்,மகிந்த, மக்களுக்கு ஏன்? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட செய்தவற்றை நாமறிவோம்.அதனை விடுத்து,மக்கள் மத்தியில் இந்த பேய்,அதிகாரத்திலுள்ள பிசாசைவிட நல்லம் என்று வழியாதீர்கள்.

சகிக்கமுடியவில்லை.எடுபடவும் மாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டணியினரின் முடிபும், செயற்பாடுகளும் வரவேற்கத்த ஒன்றாகும். .... குரைப்பவர்கள் குரைக்க.ஊளையிடுபவர்கள் ஊளயிட ... இனி இவைகள் தான் அவர்களுக்கு இயலும்/அதுவும் புலத்தில் மட்டும்தான் .... நீங்கள் உங்கள் முயற்சிகளை தொடருங்கள்!!!

நான் கேட்டதற்கு இன்னும் பதில் இல்லையே??

தமிழ் தேசிய கூட்டணியினரின் முடிபும் செயற்பாடுகளும் வரவேற்கத்த ஒன்றாகும்

ரகுநாதன்

அவரிடமிருந்து பதில்வராது

நான் அனேகரிடம் கேட்கும் கேள்வி இதுதான்

தங்களது விடையை முதலில் சொல்லுங்கள்அவர்களது முடிவு தெரியும்வரை காத்திருந்து கல் எறியாதீர்கள்

அப்படி மதில் பூனையாக இருந்து கல் எறிபவர்கள் தேவையில்லை எமக்கு....

தயா, on 12 January 2010 - 12:53 PM, said:

போட்ட எலும்புக்கு கருணா டக்கிளசை விட அதிகமாக வால் ஆட்டி நல்ல பலனை பெற்று சுகமாக வாழ கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள்... அவர்களுக்கு பார்வையாளர்கள் குளிர்பாணங்கள் குடுத்து உற்சாகப்படுத்துமாறு வேண்டி கொள்ள படுகிறீர்கள்..

மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் வேல்ஸிலிருந்து அருஷ்

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளது.அரசியல் தீர்வு மனிதாபிமான நெருக்கடிகளுக்கான தீர்வு என பல விடயங்களை முன்நிறுத்தி இந்த ஆதரவுகளை வழங்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. கூட்டமைபின் இந்த முடிவானது சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட மிக நல்ல முடிவு. அண்மைக்காலத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு ஒரு முக்கிய திருப்பமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான செயற்படும் சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஆவல். இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆட்சிமாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஒரு அமைதியான சூழ்நிலையையும், அதன் அடுத்த நகர்வாக அரசியல் தீர்வுக்கான ஆரம்ப செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க முடியும்.

நன்றி - வீரகேசரி நாளேடு

http://www.pathivu.com/news/4999/68//d,art_full.aspx

யாழில் எமக்கழித்த அன்புப்பட்டத்தை ... இன்று ... இந்த அருஸ் முதல் வீரகேசரி ஈறாக பதிவாருக்கும் .... யாழ்கள தூரநோக்களர்கள் வழங்குவார்களா???

பதிவார் போட்டுட்டார் .... இங்கு சிலருக்கு வெட்கம் வந்து விட்டது! .... வருகிறார்கள் இல்லை!!!!

இதை கேட்டு எழுதினாலும் ... அன்பாக யாழ் நிர்வாகத்தினரும் தூக்கிவிடுகிறார்கள்!!!???

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூ தனது வாழ்வை தக்க வைக்க வேண்டுமென்றால் சரத்தை ஆதரிக்க வேண்டும் என்பதே உண்மை. இனி சரத் தோற்று போனாலும் ஏதிராளி கதிரைகளில் இருந்து கொண்டு ஏதாவது அறிக்கைகளை விட்டுகொண்டிருக்கலாம். இந்தியா மாறுகிறது.... அமெரிக்கா சீறுகிறது என்று. யாரையும் ஆதாரிக்காது போனால் அவர்களது அரசியல் வாழ்வு காணாது போய்விடும் என்பதே உண்மை. அனால் இரண்டில் எந்த பேய்வந்தும் தமிழர்க்கு எதையும் செய்ய போவதில்லை என்பது. சிங்களவன் எழுதி வைத்த எழுத்து. எதை செய்ய முடியும் என்பதே கேள்வி?

சரத்தால் வடக்கு கிழக்கை இணைக்கமுடியுமா?

தமிழர்களுக்கு சுயஆட்சியை கொடுத்து அவனால் தொடர்ந்தும் ஜனதிபதியக இலங்கையில் இருக்க முடியுமா?

எதை சரத்தால் கொடுக்க முடியும்?

எதுவுமே சிங்கள அரசியல்வாதிகளால் விரும்பினாலும் முடியாது என்பதே உண்மை.

உண்மை அதுவாக இருக்க சும்மா தமது வழ்வுக்கு ஊதுகுழல் கொண்டு ஊதுவதென்பது. ஏதோ இப்போதுதான் இலங்கையில் தமிழர்கள் முதன் முதலாக வாக்கு போட ஊரிமை கிடைத்ததுபோலவும் அதை சரியாக செய்ய துடிப்பதுபோலவும் படம் எடுப்பவர்களுக்குதான் உதவும்.

ஜேர் தொடங்கி சந்திரிகா ஏன் மகிந்தவையும் ஜனதிபதியாக்கியது தமிழர்கள்தான்.

சும்மா புலுடா விடுவதில் எந்த பயனுமில்லை.

எதிர்பாப்பதால்தான் தமிழர்கள் ஏமாற்ற படுகின்றார்கள். தேர்தலை புறக்கணித்துவிட்டு வீட்டில் இருந்தால் நேரமாவது மிச்சம். காலற கொஞ்சநேரம் வீட்டில் இருக்கலாம் தமிழ்ர்கள்.

இரண்டில் எந்த பேய் வந்தாலும் நடக்கபோவதெல்லாம் ஒன்றுதான்.

பனிபோர் முற்றி சீனாவும் இந்தியாவும் உரசும்போது. எமை தயார் படுத்தி வைத்திருந்தால் நாங்களும் அப்படியே சிங்களவனை உரசிவிடலாம். தவிர ஏதாவது ஆக வேண்டும் என்றால்............................ புலிதான் எழுந்து வரவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

தங்களிடம் சில கேள்விகள்

1- இன்றைய நிலையில் மகிந்த மீண்டும் வருவது நல்லதா?

2- மகிந்தவை பல்லுப்புடுங்க ஒரு சந்தர்ப்பம் இருக்கா?

3- மகிந்த மீண்டும் வந்தால் அதன் பின் 10 வருட ஆட்சி....?

4- குடும்ப ஆட்சி தமிழர்களுக்கு தீமையில்லையா?

5- தேர்தலில் பங்கு பற்றாவிட்டால் அந்த வாக்குகள் மகிந்தவுக்கு போய்விடும் அபாயமுண்டல்லவா?

:(

அருஸின் கட்டுரையோ...?? :lol: :lol: :lol: உவர் தானே பல்குழல் எறிகணையால் பெரிய அளவில் சேதம் வராது எண்டு எழுதின வல்லுணர்... சரியத்தான் தாயக நிலமையை மக்களுக்கு புரிய வைச்சவர்... உதை கேட்டுத்தான் நீங்களும் யாழுக்கை நிண்டு முன்னர் ஆடினீயள்...

யாழில் எமக்கழித்த அன்புப்பட்டத்தை ... இன்று ... இந்த அருஸ் முதல் வீரகேசரி ஈறாக பதிவாருக்கும் .... யாழ்கள தூரநோக்களர்கள் வழங்குவார்களா???

பதிவார் போட்டுட்டார் .... இங்கு சிலருக்கு வெட்கம் வந்து விட்டது! .... வருகிறார்கள் இல்லை!!!!

இதை கேட்டு எழுதினாலும் ... அன்பாக யாழ் நிர்வாகத்தினரும் தூக்கிவிடுகிறார்கள்!!!???

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67842

Edited by தயா

அருஸின் கட்டுரையோ...?? :lol: :lol: :lol: உவர் தானே பல்குழல் எறிகணையால் பெரிய அளவில் சேதம் வராது எண்டு எழுதின வல்லுணர்... சரியத்தான் தாயக நிலமையை மக்களுக்கு புரிய வைச்சவர்... உதை கேட்டுத்தான் நீங்களும் யாழுக்கை நிண்டு முன்னர் ஆடினீயள்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67842

இதற்கு மேலாக .... பரவ விடுகிறார், பதுங்குவது ...., .... எல்லாம் தெரியும், ....... விட்ட பூறிஸுகளையும் ... மே 15ம் அரசியல் பொறுப்பாளர் சொன்னார் "மிச்சமெல்லாம் முடிச்சுது, இனி மக்களே அவங்கலை விரட்டி அடிப்பதுதான் மிச்சம் எண்டு, ஐபிசியில்!!!! .... உதுகளையும் சேர்ந்து விடுங்கோ!!!! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.