Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு – கிழக்கை மீளவும் இணைக்க வேண்டிய தேவை எதுவும் தனக்கு இல்லையாம் சரத் பொன்சேகா

Featured Replies

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டிய அவசியம் எதுவும் தனக்கு இல்லை என அரச தலைவர் தேர்தலுக்கான எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளரும், சிறிலங்காத் தரைப் படையின் முன்னாள் தளபதியுமான சரத் பொன்சேகா அறிவித்திருக்கின்றார்.

தென் பகுதியில் இடம்பெற்ற – ஐ. தே.க.வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த – தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பங்குகொண்டு உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தான் விடுவித்தமையாலே தான் இரண்டு மாகாணங்களையும் பிரிப்பது சாத்தியமானது எனத் தெரிவித்த ஜெனரல் பொன்சேகா – அதனாலேயே, நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக இரண்டு மாகாணங்களும் சட்டபூர்வமாகப் பிரிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

நாட்டின் நலன்களுக்கு தான் ஒருபோதும் துரோகம் இழைக்கவில்லை; இழைக்கப்போவதுமில்லை எனவும் தெரிவித்த அவர், நாட்டின் இறைமையைத் தான் விட்டுக்கொடுக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்தார்.

வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டையும் அதன் மக்களையும் தான் விற்கத் தயாராகவில்லை என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

இதே வேளையில் – எந்தக் கட்சியுடனும் தான் எழுத்து மூல உடன்பாடு எதுவும் செய்துகொள்ளவில்லை எனவும் சரத் பொன்சேகா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே தனக்கு ஆதரவு வழங்குவதாகவும், எவருடனும் தான் எழுத்து மூல உடன்பாடு எதும் செய்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கடந்த ஞாயிறு அன்று கொழும்பில் அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

“நம்பிக்கை மற்றும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுதல், ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாமல் செய்தல் போன்ற பொது நோக்கில் தான் பல்வேறு கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

மக்கள் மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்புக்கேற்ப இன, கலாசார பேதங்களில்லாத ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதே எனது நோக்கம்.

உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்களுக்குக் கிடைத்துள்ள கடைசிச் சந்தர்ப்பம் இது” என்றும் அவர் அங்கு மேலும் கூறினார்.

ஏற்கெனவே – வடக்கு – கிழக்குப் பகுதிகளுக்குத் தன்னாட்சி உரிமை, வடக்கு – கிழக்கு இணைப்பு, இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், காவலில் உள்ள புலிகளை விடுவித்தல் போன்ற நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சரத் பொன்சேகா உடன்பாடு செய்திருப்பதாக மகிந்த ராஜக்ச தரப்பு பரப்புகைளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையிலேயே – தான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எழுத்து மூல உடன்பாடு எதுவும் செய்து கொள்ளவில்லை என்று சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

http://www.nerudal.com/nerudal.13584.html

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்காரர்கள் சரத் எழுத்து மூலம் உடன்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார்களே.

ஒரு சந்தேகம்?

நாங்கள் யாருக்காக உழைக்கிறோம்?

சரத் கொடுத்த வாக்கின் பிரகாரமோ அல்லது கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டின் மூலமாகவோ சரத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு முடிவெடுத்தது.

இதுக்கு பின்னனிகாரனங்கள் என்னவோ அது எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.

உண்மையாகவே சரத் கூட்டணிக்கு வாக்களித்தாலும் அதை அவர் செய்வாறேன்டில்லை. செய்வாராயிலும் அதை தேர்தல் பிரச்சார மேடைகளில் சொல்வாரா? அவர் அதை சொன்னால் சிங்கள வாக்குகள் அவருக்கு நிச்சயம் குறைவடையும் சாத்தியமே அதிகமாக காணப்படுகின்றது.

இது யாருக்கு சாதகமாக அமையும்? அப்போ நாங்கள் யாருக்கு உதவி செய்கின்றோம்?

சரி எது எவ்வாறானாலும்.... சிங்களவன் உங்களுக்கு ஏதாவது செய்வானேன்ர நம்பிக்கை இருந்தால் உங்களை செல்வநாயகம் சொன்னதுபோல உங்களை கடவுள்தான் காப்பற்றவேண்டும்.

பார்த்தீர்கள் உண்மையை எவ்வளவு வெளிப்படையாகச் சொல்கிறார். அதற்குள் மகிந்தவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு இவரை ஆட்சியில் இருத்தப் போகிறார்களாம். என்ன கொடுமை.

ஒரு சந்தேகம்?

நாங்கள் யாருக்காக உழைக்கிறோம்?

சரத் கொடுத்த வாக்கின் பிரகாரமோ அல்லது கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டின் மூலமாகவோ சரத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு முடிவெடுத்தது.

இதுக்கு பின்னனிகாரனங்கள் என்னவோ அது எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.

உண்மையாகவே சரத் கூட்டணிக்கு வாக்களித்தாலும் அதை அவர் செய்வாறேன்டில்லை. செய்வாராயிலும் அதை தேர்தல் பிரச்சார மேடைகளில் சொல்வாரா? அவர் அதை சொன்னால் சிங்கள வாக்குகள் அவருக்கு நிச்சயம் குறைவடையும் சாத்தியமே அதிகமாக காணப்படுகின்றது.

இது யாருக்கு சாதகமாக அமையும்? அப்போ நாங்கள் யாருக்கு உதவி செய்கின்றோம்?

சரி எது எவ்வாறானாலும்.... சிங்களவன் உங்களுக்கு ஏதாவது செய்வானேன்ர நம்பிக்கை இருந்தால் உங்களை செல்வநாயகம் சொன்னதுபோல உங்களை கடவுள்தான் காப்பற்றவேண்டும்.

தமிழர்களுக்கு எதுவுமே மாறாது எண்றால் பிறகு எதுக்கு ஆட்ச்சி மாற்றம் சம்பந்தன் குழுவுக்கு தேவைப்படுகிறது.. ???

மகிந்த ஆட்ச்சியில் இருக்கும் போது தான் இலங்கை போர் குற்றம் புரிந்த நாடு எண்று சர்வதேசத்தால் அழைக்கப்படுகிறது... அப்படி அழைக்கப்படுவதில் உங்களுக்கு ஒருவேளை உடன்பாடு இல்லையோ என்னவோ...??

சரத் ஆட்ச்சிக்கு வந்தால் முன்னாள் ஆட்ச்சியாளகள் குற்றம் இழைத்தனர் எனும் பட்டியலில் இடப்பட்டு நாளடைவில் மறைக்கப்படும்... இதைத்தானே விரும்புகிறீர்கள்...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.