Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும்--உதயன் நாளிதழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் சரத் வந்தால் போர் குற்ற விசாரனை நடக்கும் என எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் ...மகிந்தா ஆசியா நாடுகளையே கூட நம்புறவர் ஆனால் ரணில் மேற்குலகம் சார்ந்தவர் பொன்சேகராவை ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் மேற்குலகம் தங்கட நலனுக்கு ஏற்ப இலங்கையை ஆக்கிரமிக்க பார்ப்பார்களே வழிய யார் வந்தாலும் போர் குற்ற விசாரனை நடக்காது சில வேளை புலம் பெயர் மக்கள் திரும்பவும் போராட்டம் செய்து விசாரிக்க சொன்னால் சில நேரம் ஒப்பு சப்புக்கு ஏதாவது மக்களை ஏமாற்ற ஏதாவது செய்வார்கள்.மேற்குலகம் கடைசி வரைக்கும் பொன்செகராவை பதவியில் அமர்த்த பாடுபடும் அது முடியாவிடின் மகிந்தாவிற்கு சலாம் போட்டு அதன் காலில் விழுந்து கிடக்கும்.

ரதி,

மேற்குலகம் மட்டுமே உலகம் இல்லைதானே. இங்கே பல தரப்புக்கள் இருக்கின்றன. எல்லாத் தரப்புகளுமே தமிழருக்கு எதிராக ஒரே திசையில் எப்போது இயங்கிக் கொண்டிருப்பார்கள் என நம்புவது கடினம்.

மகிந்த ஆசிய நாடுகளை நம்புபவர் என்பதை விட, அவர் ஆசிய நாடுகளின் பிடியில் உள்ளவர் என்பதே பொருத்தமானது. அதுபோல சரத் பொன்சேகாவை மேற்குலக நாடுகள் இயக்க முற்படுபகிறார்கள் என்பதும் ஏற்கத்தகுந்தது.

சரத் பொன்சேகா வந்தால் நன்மைகள் வந்துவிடும் என்று உறுதியாக நான் கூறவரவில்லை. ஆனால் இப்போது உள்ள நிலைமைகளைக் காட்டிலும் வெளியுலக அரசியலைப் பொறுத்தவரையில் சில முன்னேற்றங்கள் வரலாம் என்றுதான் சொல்ல வருகிறேன். காரணம் மிக இலகுவானது.

எதிரி ஒருங்கிணைக்கப்பட்டு முழுமூச்சாக எமக்கெதிராக ஒரு அணியில் இருப்பது எப்போது எமக்கு ஆபத்து மிகுந்தது தானே. தற்போது மகிந்த தரப்பிடம் நாடாளுமன்ற ஆதிக்கம் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் எல்லாமே ஒருங்கிணைந்துள்ளன. இவற்றை வைத்துக்கொண்டு ஒருமுகமாக வெளியுலக அரசியலை மேற்கொண்டு வருகிறார்கள். எதிரியின் ஒருங்கிணைவு மற்றும் பலம் இரண்டாகப் பிரியும்போது எதிரி பலவீனப்படுவான் என்பது நம்பத் தகுந்த வாதமே.

இவற்றை வைத்துத்தான் சொல்கிறேன். மகிந்த தொடர்ந்தும் பதவியில் இருப்பாரானால், இப்போதுள்ள நிலைமைகள்தான் இன்னும் பலவருடங்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது.

  • Replies 84
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாவது பெரிய பிரச்சினை இத்தனை அழிவுகளை தந்த மகிந்தாவை அகற்றவேண்டும், இல்லாவிடில் பயங்கரவாதத்தை அழித்த மகிந்தாவை இலங்கை மக்கள் வெற்றிபெற வைத்து விட்டார்கள் என்று உலகம் சொல்லும்,

பொன்னனுக்கும் மகிந்தாவுக்கும் பிரச்சினை வராவிட்டால் அனைத்து தமிழர்களும் தலைகீழாக நின்றாலும் மகிந்தாவின் வெற்றியை தடுத்து இருக்கமுடியாது.

மகிந்த வெண்றால் அதிகார மைழங்கள் மாறாது. இதே நிலமை எட்டு வருடங்கள் தொடரும், எட்டு வருடங்களின் பின் நானே இருப்பேனோ தெரியாது, எனது மக்கள் இந்த கொடுமையில் எத்தனை பேர் தப்பி பிழைப்பார்கள்.

தேர்தலை பறக்கணிப்பதன் மூலம், அல்லது வேறு ஒருவருக்கு போடுவதன் மூலம் ஒரு சிறு சந்தர்ப்பத்தைகூட மகிந்தன் வெல்ல இடமளிக்க கூடாது.

உலகம் ஆயிரம் சொல்லும் நான்கு நாட்களாயும் கெயிற்றிக்கு உதவி பொருட்கள் இன்னமும் போய் சேரவில்லை, எமது மக்கள் அழியும் வரையும் உலகம் வரவில்லை அது மெதுவாகத்தான் வரும் அது வரை எமது மக்கள் தப்பி பிழைத்து இருக்கவேண்டும்.

பொன்னன் வந்தால் அதிகாரமையம் மாறும், அதிகாரத்திற்கு வருபவர்களினது மனதில் தற்போது இருப்பவர்களினது வன்மம் இராது, பொன்னன் ஒன்று சொல்லுவான், ஜேவிபி ஒன்று சொல்லும்,ரனில் ஒன்று சொல்லுவான், எப்போதும் இழுபறி நிலைதான்,

ஜேவிபி போன்று புலிகள் அரசியலுக்கு வரும்வரை கூட்டனிமூலம் தமிழினம் தப்பி பிழைத்து இருக்கும்.காலம் இட்ட வழியில் எமது போராட்டம் தொடர வேண்டும்.

எமது போராட்டம் தொடர காலம் மகிந்த ,பொன்னன் பிரிவின் மூலம் ஒரு வழியை இட்டு இருக்கிறது.

"குதிரையை குளம் வரைதான் எம்மால் அழைத்து செல்லமுடியும், குதிரைக்கு தாகம் என்றால் அதுதான் தண்ணீர்குடிக்க வேண்டும்" , மக்கள் தான்முடிவை எடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனிவே நண்றி...

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றிகள் தயா.

சித்தன்.. இப்பாவாவது வந்தீங்களே.. கருத்துக்கு நன்றி. :D

இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூற விரும்புகிறேன். இந்த டப்ளின் போர்க்குற்ற விசாரணை என்று முதலில் செய்தி வந்தபோது, இது ஏதோ இந்தியாவின் வேலையாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வந்தது. ஆனால் இந்த விசாரணையை மேற்கொள்ளும் மக்களுக்கான நிரந்தர நீதிமன்றம் என்பது 1979 ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. நேற்று முளைத்த காளான் அல்ல. எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் எல்லாவற்றையும் நம்பிக்கெடாமலும் அதே சமயத்தில் எல்லாவற்றையும் எழுந்தமானத்துக்கு சந்தேகப்படாமலும் தீர்க்கமான ஒரு பாதையில் பயணிக்க வேண்டிய தேவை ஒன்று நமக்கெல்லாம் இருக்கிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் எம் மக்கள் படும் வேதனை மென்மேலும் இந்த தமிழ் அரசியல் வாதிகளினாலேயே அதிகரித்துக்கொண்டு போகின்றது.

இது தேவையில்லாத நீட்சி. கூட்டமைப்பினரின் முடிவுகள் சரியானது என்று முடிவிற்கு நான் வரவில்லை. ஈழத்தமிழினம் தளத்தில் தனது போராட்ட சக்தியில் வலிமை குன்றியிருக்கிறது. அந்த இனம் இனிவரும் காலங்களில் இலங்கையரசில் அதிகார மையத்தைத் தீர்மானிக்கும் ஒருசக்தியாக மாற்றமடைய வேண்டும். அதன் மூலம் உரிமைகளைப் பெற முடியாவிட்டாலும் தப்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா தமிழருக்கு ஒரு கெட்ட அரசியல்வாதியே தவிர அவன் ஒரு யதார்த்தவாதி...அவன் தான் சொன்னதை செய்து முடிப்பவன் அது கெட்ட‌தாய் இருந்தாலும்.ஆனால் ர‌ணில் ஒரு குள்ள நரி...அவன் கூட‌ இருந்து கொண்டே குழி பறிப்பான் அவனோடு சேர்ந்த சர‌த்தும் அப்படித் தான்.கூட்ட‌மைப்போடு சேர்ந்து சர‌த் ஒப்பந்தம் போட்டு உள்ளான் ஆனால் அவன் பதவிற்கு வந்தால் அதை நிறைவேற்றுவானா...ஜேவிபி தடுத்தது,அவன் தடுத்தான்,இவன் தடுத்தான் எனக் கார‌ணம் சொல்வார்கள் இதற்கு மட்டும் அல்ல தமிழருக்காய் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதற்கும் முட்டுக் கட்டை போடுவார்கள்...ஆனால் மகிந்தா வந்தால் தமிழருக்கு ஒரு சின்ன நன்மை செய்யுறது என வாக்கு கொடுத்தால் அவன் செய்வான் என்பது என் தனிப்பட்ட‌ கருத்து.

என்னொரு விதத்தில பார்த்தால் மகிந்த‌ ஆட்சிக்கு வந்தால் தன்னை விட‌ மிஞ்சிய ஆள் இல்லை என்ற நினைப்பு வரும் மீண்டும் கொடுங்கோல் ஆட்சி தான் செய்வான்...இத‌னால் திரும்பவும் ஒர் போராட்டம் வெடிக்கும் சாத்தியம் உண்டு ஆனால் அது ஆயுதப் போராட்ட‌மாக இருக்க வேண்டும் என்றில்லை மக்கள் புர‌ட்சியாகவும் இருக்கலாம் ஆனால் சர‌த் வந்தால் மக்களை ஏமாற்றி,ஏமாற்றியே காலத்தை கட‌த்துவான் என்பது என் தனிப்பட்ட‌ கருத்து தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. :)

நீண்ட நாட்களின்பின் வாய்விட்டு சிரிக்க வைத்த கருத்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட நாட்களின்பின் வாய்விட்டு சிரிக்க வைத்த கருத்துக்கள்.

முள்ளிவாய்க்காலமட்டும்போய்வந்து தடுப்புக்காவலில இருந்த கூட்டமைப்பு எம்பி சதாசிவம் கனகரத்தினத்துக்கே

சிங்களவரோட பிரச்சனையில்லையாம் நாம சிங்களவரோட பிரச்சனைப்பட்டு என்னத்தை காணுறது? :):D

முள்ளிவாய்க்காலமட்டும்போய்வந்து தடுப்புக்காவலில இருந்த கூட்டமைப்பு எம்பி சதாசிவம் கனகரத்தினத்துக்கே

சிங்களவரோட பிரச்சனையில்லையாம் நாம சிங்களவரோட பிரச்சனைப்பட்டு என்னத்தை காணுறது? :):D

உமக்கும் பின்னால முன்னால துப்பாக்கிகள் சகிதமும், குடும்பத்தினரை சித்திரவதைக்கூடங்களிலும் வைத்துவிட்டு ஏதாவது கூறச்சொன்னால் என்ன கூறுவீர் நண்பரே?

உமது கருத்துக்களுக்கு சார்பாக ஒரு தமிழன் வந்துசேர்ந்தான் என்று சந்தோசபட்டுள்ளீர். ஆனால் பின்னால் உள்ள மர்மங்கள் உமக்கு தெரியாததா என்ன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமக்கும் பின்னால முன்னால துப்பாக்கிகள் சகிதமும், குடும்பத்தினரை சித்திரவதைக்கூடங்களிலும் வைத்துவிட்டு ஏதாவது கூறச்சொன்னால் என்ன கூறுவீர் நண்பரே?

உமது கருத்துக்களுக்கு சார்பாக ஒரு தமிழன் வந்துசேர்ந்தான் என்று சந்தோசபட்டுள்ளீர். ஆனால் பின்னால் உள்ள மர்மங்கள் உமக்கு தெரியாததா என்ன

என்னண்ணை பழசை ஞாபகப்படுத்துறியள். இல்லையெண்டு சொன்னா என்ன நடக்குமெண்டு தெரியாம நாமளும் ... எப்பிடி சொல்லுறது?????? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.