Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் அச்சுறுத்தல் உச்சக்கட்டம் வெளிநாடுகளில் தஞ்சம் கேரரும் சரத் பொன்சோகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி, ஜனவரி 29, 2010 14:11 | சிவதாசன், கொழும்பு

உயிர் அச்சுறுத்தல் உச்சக்கட்டம் வெளிநாடுகளில் தஞ்சம் கேரரும் சரத் பொன்சோகா

சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதியும் நடந்து முடிந்த அதிபர் தேர்த்லில் போட்டியிட்டு தோற்ற சிறீலங்காவின் முன்னாள் தரைப்படைத்தளபதி பொன்சேகா தேர்தல் தோல்வியை அடுத்து பல சர்வதேச நாடுகளிடம் தஞ்சம் கோரி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக அவர் அவுஸ்ரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் ஏற்கனவே அமெரிக்க மற்றும் பிரித்தானியாவிடம் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவுமு; தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு எதிரான போரை முன்னின்று நடாத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்து போரை வெற்றிகொண்டு கூச்சலிட்ட பொன்சேகா மகிந்த ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் தற்போது தேர்தலில் மகிந்த வெற்றி பெற்ற பின்னர் பொன்சோகவுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் படைத்தளபதிக்கு இவ் நிலைமை ஏற்படும் இடத்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்புள் சிக்கியுள்ள தமிழ் மக்களின் நிலை என்ன என்பது புரிதல் இலகு என தெரிவிக்கின்றனர் புத்தி ஜீவிகள்

pathivu

அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு இதுவரை தங்களுக்கு அப்படி ஏதும் உத்தியோக பூர்வ விண்ணப்பம் சரத் பொன்சேகாவிடம் இருந்து கிடைக்க பெறவில்லை என்று கூறி இருக்கிறது ..

Edited by அன்புச்செல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன வதந்தியும் புரளியுமாயிருக்கு. சரத்துக்குத்தானே இருக்கவே இருக்குது அமெரிக்கா. அவர் எதுக்காக வெளிநாடுகளில் தஞ்சம் கேட்க வேண்டும்.

அமெரிக்கப் பாஸ்போட் இருந்தால் எந்த நாட்டுக்கும் ஈஸியாகப் போய்விடலாமே. அங்கு போய் இருக்கும் பணத்தை வைத்துச் சந்தோசமாக வாழலாமே.

இந்தச் செய்திகளை எழுதுபவர்கள் அகதி வாழ்வைப்பற்றியும் ஏன் மக்கள் தஞ்சம் கேட்கிறார்கள் என்பதைப் பற்றியும் ஒரு மண்ணும் தெரியாதவர்கள் போல இருக்கின்றது.

கேட்கிறவர்கள் கேனையர்கள் என்கிற நினைப்போ!

அமெரிக்க பச்சையட்டை வைத்திருக்கும் ஒருத்தர் ஏன் அமெரிக்காவிடமே அரசியல் தஞ்சம் கேட்கவேண்டும்?

அமெரிக்க கடவுச்சீட்டுக்கு அவுஸ்திரேலியாவில் அனுமதி இல்லாமல் அறு மாதங்கள் வரை தங்கி இருக்கமுடியுமே... ஏன் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க வேண்டும்?

கரு சொன்னதையே தான் நானும் சொல்வேன்.. இது அண்டப்புளுகு... இவன்க்கிளின் செய்தியைப்படிபதால் அறிவு மநனரஅ

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா அமெரிக்க குடியுரிமை பெற்றவனல்ல, இன்னமும் இலங்கை குடியுரிமையில் இலங்கை கடவுச்சீட்டில் பயணம் செய்பவன். அமெரிக்க நிரந்தர வதிவிட உரிமை பொன்சேகாவுக்கு ஆண்டாண்டு சீட்டிழுப்பு மூலம் பல ஆண்டுகளுக்கு முதல் கிடைத்திருந்தது. ஆனால் அதன் நிபந்தனைகளை மீறிய நிலையில், அது பற்றி விதிவிலக்கு அளிக்குமாறு கேட்க அமெரிக்கா வந்திருந்த நேரம் கோத்தபாயவுக்கு எதிரான சாட்சியாக மாறுமாறு அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டது. அதற்கு உடன்படாமல் பொன்சேகா அமெரிக்காவை விட்டுவெளியேறி பின்னர் ஜனாதிபதி தேர்தலில் நின்று தோற்றுப்போனான். இப்போது அமெரிக்காவுக்கு விசேட அனுமதி பெற்றே வரமுடியும்.

பொன்சேகா அமெரிக்க குடியுரிமை பெற்றவனல்ல, இன்னமும் இலங்கை குடியுரிமையில் இலங்கை கடவுச்சீட்டில் பயணம் செய்பவன். அமெரிக்க நிரந்தர வதிவிட உரிமை பொன்சேகாவுக்கு ஆண்டாண்டு சீட்டிழுப்பு மூலம் பல ஆண்டுகளுக்கு முதல் கிடைத்திருந்தது. ஆனால் அதன் நிபந்தனைகளை மீறிய நிலையில், அது பற்றி விதிவிலக்கு அளிக்குமாறு கேட்க அமெரிக்கா வந்திருந்த நேரம் கோத்தபாயவுக்கு எதிரான சாட்சியாக மாறுமாறு அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டது. அதற்கு உடன்படாமல் பொன்சேகா அமெரிக்காவை விட்டுவெளியேறி பின்னர் ஜனாதிபதி தேர்தலில் நின்று தோற்றுப்போனான். இப்போது அமெரிக்காவுக்கு விசேட அனுமதி பெற்றே வரமுடியும்.

இவ்வளவு விஷயத்தை தெரிந்து வைத்திருந்து தேவை வரும்போது அறியத்தந்த உங்களுக்கு நன்றிகள்.

*** பின்குறிப்பு ***

அவுஸ்திரேலிய நாட்டில் அரசியல் புகலிடம் கோருவோர் விண்ணப்பிப்பது வெளிநாட்டமைச்சில் அல்ல.

குடிவரவு மற்றும் குடியியல் அமைச்சினால்தான்.

Edited by Sooravali

*** பின்குறிப்பு ***

அவுஸ்திரேலிய நாட்டில் அரசியல் புகலிடம் கோருவோர் விண்ணப்பிப்பது வெளிநாட்டமைச்சில் அல்ல.

குடிவரவு மற்றும் குடியியல் அமைச்சினால்தான்.

அந்த முகவரியையும் , தஞ்சம் கேட்கும் வழிகளையும் முறைகளையும் நேரமிருந்தால் போட்டு விடுங்கோ ...

அதே போல்லவே ஐரோப்பா தவிர்நத மற்றய நாடுகளைத் தெரிந்தவர்கள் இங்கு சொன்னால் ...

இந்த அவசர காலத்தில ... எல்லோரிற்கும் உதவியாக இருக்கும் எல்லோ ... ... ? நன்றிகள்.

-

புகலிடம் கொடுத்துப்போட்டு - போர்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.