Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்திலேயே போட்டியிடும் என்கிறார் சம்பந்தன்

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பொதுத் தேர்தலிலும் வீட்டுச் சின்னத்தில் தனித்தே போட்டியிடும் என அதன் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமது கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் வேலைகள் ஆரம்பித்து விட்டதாகவும் இந்த வேலைகள் அடுத்த வாரமளவில் பூர்த்தியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு கூட்டாகப் போட்டியிடலாம் என உடகங்கள் ஹேஸ்யம் தெரிவித்திருந்த நிலையிலேயே சம்பந்தனின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

SOURCE: http://www.eelamweb.com/

அப்ப ஏற்கனவே இருக்கும் தமிழ் எம்பிக்கள் பலருக்கு ஆப்பு இருக்கு எண்டுறீயள்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்ற முறை பெரிய்ய வீட்டு சின்னத்தில் இப்போது ஜெயிலில் இருக்கும் பயங்கரவாதி பொன்சேகாவுடன் கை கோர்த்து நொந்த படியால், இந்த முறை சின்ன வீட்டு சின்னத்தில் அடக்கி வாசிக்க தலைவர் இரவு சம்பந்தம் திட்டமிட்டிருக்கிறார் ஆக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் சொல் கேட்பவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும். புலிகளால் ததேகூட்டமைப்புக்குள் உள்வாங்கப் பட்டவர்களுக்கு ஆப்பு.அவர்களே தாயகம் தேசியம் சுயநிர்ணயம் சம்பந்தமாக இடைக்கிடையே குரல் கொடுப்பவர்கள்.இந்த முறை கூட்டமைப்பு செய்யும் குழப்பங்களால் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தாலும் ஆச்சரியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏற்கனவே இருக்கும் தமிழ் எம்பிக்கள் பலருக்கு ஆப்பு இருக்கு எண்டுறீயள்...??

அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எதுவும் செய்யாமல் நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லிக்கொண்டும், மறக்காமல் மாதச் சம்பளம் 50,000 ரூபா வாங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு ஆப்பு வைக்கத்தான் வேண்டும். 5 வருடத்தைத் தாண்டியும் பதவியில் இருந்ததால் ஓய்வூதியம் கட்டாயம் கிடைக்கும். எனவே எதிர்காலத்திற்குப் பிரச்சினையில்லை. என்.ஜி.ஓ. ஏதாவது ஒன்றில் வேலை கிடைக்காமலா போய்விடும்?

அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எதுவும் செய்யாமல் நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லிக்கொண்டும், மறக்காமல் மாதச் சம்பளம் 50,000 ரூபா வாங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு ஆப்பு வைக்கத்தான் வேண்டும். 5 வருடத்தைத் தாண்டியும் பதவியில் இருந்ததால் ஓய்வூதியம் கட்டாயம் கிடைக்கும். எனவே எதிர்காலத்திற்குப் பிரச்சினையில்லை. என்.ஜி.ஓ. ஏதாவது ஒன்றில் வேலை கிடைக்காமலா போய்விடும்?

அப்படி எண்டால் முக்கியமாக சம்பந்தனுக்கு ஆப்பு இருக்கு எண்டுறீயள்... சிங்கள குடியேற்றங்களை பற்றி பேசுவதோடை மனுசன் அடக்கமாக இருந்துடுறவர்...

50 000 சம்பளம் மட்டும் இல்லாது வசதியான வாகனங்கள் வாங்க மானிய விலை என்பதோடு பாதுகாப்பு எண்ற பெயரில் எடுபிடியள்... அதோட அதோடு தொகுதிகளின் சேவைக்கு எண்று பணமும் கிடைக்கும்...

Edited by தயா

தமிழர் விடுதலை கூட்டணியை - சட்டத்தரணிகள் கட்சி, அதுவும் நீதிமன்றங்களில் ஒரு வழக்கையும் வெல்லாத சட்டத்தரணிகள் கட்சி என்றும் கூறலாம். மாவை உட்பட இருவரைத் தவிர.

அமிர்தலிங்கமும் தனது இருக்கையை உறுதி செய்ய ஒன்றுக்கும் உதவாத சட்டதரணிகளைதான் த.வி.கூ.க்கு பொறுக்கி எடுத்தவர் என்று முந்தி கதைகள் அடிபடும். இப்ப அது உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டது. உவர்கள் தான் கூட்டமைப்பின் கையாலாகாத தன்மைக்கு காரணம். உவர்களை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.

பல்லின தன்மை காரணமாக, தமிழர்களுக்கு தற்போதும் ஒரே தெரிவாக இருக்கக் கூடிய கூட்டமைப்பை, தமிழர்களுக்கு பயனுள்ளதாக மாற்றவேண்டுமென்றால், அதில் திட்டமிட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

அதில் ஒன்று சம்பந்தர் உட்பட ஒன்றுக்கும் உதவாத பேர்வழிகள் கூட்டமைப்பின் ஆலோசகர்களாக இருந்துகொண்டு, சிந்தித்து, பயமின்றி விவேகமாக செயற்படக் கூடியவர்களை களத்தில் இறக்கவேண்டும். கூட்டமைப்பு தலைமையை அனுபவம் வாய்ந்த, மாவை அல்லது சுரேஷ் அல்லது கஜேந்திரன் பொன்னன்பலம் கைகளில் ஒப்படைக்க வேண்டும்.

கடந்த இரு தேர்தல்களில் களமிறங்கிய, புதிய கிழக்கு மாகாண கூட்டமைப்பு உறுப்பினர்கள், வடக்கு உறுப்பினர்களைவிட திறமையாக செயற்பட்ட உண்மையையும் மறக்ககூடாது.

சித்தார்த்தனும், பிள்ளையானும் (காட்டிகொடுத்தல், கப்பம், தமிழின கொலைகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு) கூட்டமைப்பில் இணைந்தால் அல்லது புரிந்துணர்வுடன் செயற்பட்டால் தமிழரின் பலம் மேலும் பெருகும்.

Edited by Aasaan

தமிழர் விடுதலை கூட்டணியை - சட்டத்தரணிகள் கட்சி, அதுவும் நீதிமன்றங்களில் ஒரு வழக்கையும் வெல்லாத சட்டத்தரணிகள் கட்சி என்றும் கூறலாம். மாவை உட்பட இருவரைத் தவிர.

அமிர்தலிங்கமும் தனது இருக்கையை உறுதி செய்ய ஒன்றுக்கும் உதவாத சட்டதரணிகளைதான் த.வி.கூ.க்கு பொறுக்கி எடுத்தவர் என்று முந்தி கதைகள் அடிபடும். இப்ப அது உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டது. உவர்கள் தான் கூட்டமைப்பின் கையாலாகாத தன்மைக்கு காரணம். உவர்களை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.

பல்லின தன்மை காரணமாக, தமிழர்களுக்கு தற்போதும் ஒரே தெரிவாக இருக்கக் கூடிய கூட்டமைப்பை, தமிழர்களுக்கு பயனுள்ளதாக மாற்றவேண்டுமென்றால், அதில் திட்டமிட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

அதில் ஒன்று சம்பந்தர் உட்பட ஒன்றுக்கும் உதவாத பேர்வழிகள் கூட்டமைப்பின் ஆலோசகர்களாக இருந்துகொண்டு, சிந்தித்து, பயமின்றி விவேகமாக செயற்படக் கூடியவர்களை களத்தில் இறக்கவேண்டும். கூட்டமைப்பு தலைமையை அனுபவம் வாய்ந்த, மாவை அல்லது சுரேஷ் அல்லது கஜேந்திரன் பொன்னன்பலம் கைகளில் ஒப்படைக்க வேண்டும்.

கடந்த இரு தேர்தல்களில் களமிறங்கிய, புதிய கிழக்கு மாகாண கூட்டமைப்பு உறுப்பினர்கள், வடக்கு உறுப்பினர்களைவிட திறமையாக செயற்பட்ட உண்மையையும் மறக்ககூடாது.

சித்தார்த்தனும், பிள்ளையானும் (காட்டிகொடுத்தல், கப்பம், தமிழின கொலைகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு) கூட்டமைப்பில் இணைந்தால் அல்லது புரிந்துணர்வுடன் செயற்பட்டால் தமிழரின் பலம் மேலும் பெருகும்.

இத நான் சொன்னால் கூட்டமைப்பு சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருப்பதுதான் பலமாம் என்கிறார்கள்... ஒருவேளை நீங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கிறார்களோ தெரியாது...

கடந்த இரு தேர்தல்களில் களமிறங்கிய, புதிய கிழக்கு மாகாண கூட்டமைப்பு உறுப்பினர்கள், வடக்கு உறுப்பினர்களைவிட திறமையாக செயற்பட்ட உண்மையையும் மறக்ககூடாது.

நீங்கள் சொல்லும் புதியவர்கள் அடை மொழியில் வருபவார்கள் அனேகர் புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு சேர்க்கப்பட்டவர்கள்.... இதில் விடுதலை புலிகளின் உறுப்பினர் எண்ற முத்திரையை அரச தரப்பால் கொண்ட முன்னாள் மாணவர் பேரவை தலைவர் செல்லத்துரை கஜேந்திரனால் சிறப்பாக செயற்பட முடியாமல் போய் விட்டது என்பதும் உண்மை...

அதை தவிர கடைசி வரை வன்னி மக்களோடு இருந்த கனகரத்தினத்தார் வரைக்கும் சிறப்பாக செயற்பட்டனர்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இத நான் சொன்னால் கூட்டமைப்பு சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருப்பதுதான் பலமாம் என்கிறார்கள்... ஒருவேளை நீங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கிறார்களோ தெரியாது...

தயா

தாங்கள் கூட்டமைப்பு பற்றி இப்படி பொறுப்புடன் எழுதியது நானறிந்து இதுதான் முதல்தடவை...

எங்களுக்கும் இவை தெரியும்

அது எமது வீட்டுப்பிரச்சினை

இங்கு போட்டுத்தாக்குவதற்கு அல்ல.நன்றி

அம்பை எடுக்கமாட்டீர்கள் என்று எதிர்பார்ர்க்கின்றேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கிழடுகளை வெளியே அனுப்பி வேகமும் விவேகமும் அர்ப்பணிப்பும் உள்ள இளைஞர்களை உள்வாங்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.