Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்க் கூட்டமைப்பில் இருந்திருந்தால் போராளிகளைக் காப்பாற்றியிருப்பேன் - தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் நேற்றுத் தெரிவிப்பு

Featured Replies

தமிழ்க் கூட்டமைப்பில் இருந்திருந்தால் போராளிகளைக் காப்பாற்றியிருப்பேன் - தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் நேற்றுத் தெரிவிப்பு

:D:lol::lol::lol:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளைக் காப் பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பல கஷ்டங்கள், துன்பங்க ளிலிருந்து மீண்டு இன்றுதான் எட்டிப்பார்த்து மூச்சு விடக் கூடிய நிலையில் நிம்மதியைத் தேடி நிற்கும்போது; பல கட்சிகள்,சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இவ்வாறுகளத்தில் உள்ள சில கட்சிகள், சுயேட்சைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு ஏதோ ஒரு சக்தி தூண்டுதல் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று நண்பகல் நடை பெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் ஊடகவியலாளர் மாநாட்டிலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்கள் பல துன்பங்கள்,கஷ்டங்க ளை அனுபவித்து இன்றுதான் எட்டிப்பார்த்து மூச்சு விடக் கூடிய நிலை ஏற்பட்டு நிம்மதி யைத் தேடி நிற்கின்றனர்.இந்த நிலையில் நடைபெறப் போகும் தேர்தலில் மக்களின் நிலையைக் குலைக்கும் வகையில் பலர் தேர்தல் களத்தில் குதித் துள்ளனர்.

இதில் ஒரு சில கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தவிர்ந்த ஏனையவை ஒரு சக்தி யின் தூண்டுதலிலேயே போட்டியிடுகின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில் இந்த நிலை ஏற் படுமா? புலிகள் இல்லை. அதனாலேயே இவ்வாறு பலரும் தேர்தலில் போட்டியிடுகின் றனர் எனக் கூறுவது தவறு. யாழ்.மாநகர சபைத் தேர்தலின்போது யாழ்ப்பாணப் பத்திரிகைகள் தீமூட்டப்பட்டன. ஜனாதிபதித் தேர்தலின்போது பல குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றன. தற்போது கட்சி அலுவலகம் மீது கல் வீச்சு இடம்பெற்றது.

இவையயல்லாம் எடுத்துப் பார்க்கும் போது இன்னொரு சக்தி யாழ்ப்பாணத்தில் உள்ளது. அது மக்களுக்குப் புரியும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந் தால் விடுதலைப்புலிப் போராளிகளைக் காப் பாற்றியிருப்பேன். ஏனென்றால் அவர்களும் எமது பிள்ளை கள்தானே. பலர் தமது பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டு மற்றவர்களின் பிள் ளைகளைக் காப்பாற்றாமல் மெளனமாக இருந்து விட்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ எனக்கு ஒரு தடவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வடக்கு மாகாண ஆளுநராக நிய மித்துள்ளேன் என்றார். அதற்கு நான் ஜனாதிபதியிடம் ஒன்றைத் திருப்பிக் கேட்டேன், நான் ஆளுநரானால் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடுமா? என்று.

எனவே நான் பதவி ஆசை பிடித்தவன் இல்லை. வன்னிப் போர்க்களத்தில் மூன்று இலட்சம் மக்கள் சிக்கியுள்ளனர் என்பதை ஜனாதிபதிக்கும், சர்வதேசத்திற்கும் முதலில் நானே தெரியப்படுத்தினேன். அதுவரைக்கும் அரசு 85 ஆயிரம் மக்களே போர்க் களத்தில் சிக்கியுள்ளனர் என்றது. அந்தக் கட்டத்தில் காயமடைந்த , பலியான மக்களின் விபரத்தைத் தருமாறு அரசிடம் கோரினேன். அதனால் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்த்தேன்.

எனினும் அதனை அரசு மூடி மறைத்து விட்டது. பத்து வயது பெண் பிள்ளை ஒன்றை கையில் புலி முத்திரை குத்தி புனர்வாழ்வு முகாமில் வைத்து பாடசாலைக்கு அரசு அனுப்பியது. அதனை நான் தடுத்து அந்தப் பெண் பிள்ளையை விடுவித்தேன். அத்துடன் வன்னியில் மக்கள் பட்ட கஷ்டங்களை கூற சந்தர்ப்பம் வழங்குங்கள் என அரசிடம் கேட்டேன்.

அதனையும் அரசு நிராகரித்து விட்டது. காரணம் அரசின் கெடுபிடிகளையும் மக்கள் வெளிப்படுத்தி விடுவார்கள் என்பதற்காகத் தான். இதற்கு மேலாக ஜாதிக யஹல உறுமய உள்ளிட்ட பேரினவாதக் கட்சிகள், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்துத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விவாதித்துள்ளேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி மேலும் குறிப்பிட்டார். :D:D

www.valampury.com/

http://www.lankasrinew.com/ta/link.php?3Ad4m2SeC80622cbW3Xc

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தலைவர் என்று தனக்குத்தானே பெயர் சூட்டிய அரசியல்வாதி ஒருவர், 2 மணித்தியாலம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர், தான் உண்ணாவிரதம் இருந்ததினால் தான் ஈழத்தில் சிறிலங்கா இராணுவம் போரை நிறுத்தி தமிழர்களைக் காப்பாற்றியது என்று தனது ஊடகங்களில் (சன், கலைஞர்) செய்தியை வெளியிட்டு இருந்தார். அதை விட சங்கரியார் சொன்னது பரவாயில்லை. இடைக்கிடை நகைச்சுவை அறிக்கை விட்டாலும் தமிழனத்தலைவரைப் போல தமிழர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்காதவர் சங்கரி.

சம்பந்தரின் இயலாமையையும், முயலாமையையும் சங்கரியார் வரைக்கும் கிண்டல் அடிக்கும் நிலைக்குள் இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வசனத்தை எதிர்பார்த்துத்தான் அவர் இந்த அறிக்கையை விட்டார்

வெற்றி அவருக்கு.

தோல்வி தமிழனுக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந் தால் விடுதலைப்புலிப் போராளிகளைக் காப் பாற்றியிருப்பேன். ஏனென்றால் அவர்களும் எமது பிள்ளை கள்தானே. பலர் தமது பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டு மற்றவர்களின் பிள் ளைகளைக் காப்பாற்றாமல் மெளனமாக இருந்து விட்டனர்.

:D:lol:

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் இயலாமையையும், முயலாமையையும் சங்கரியார் வரைக்கும் கிண்டல் அடிக்கும் நிலைக்குள் இருக்கிறது...

இதைத்தான் சொல்வது, "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆவது" என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவர் என்ன எழுதுறார்? மே 18 வரை தம்பிக்கு அரசியல்பாதைய தேர்ந்தெடு எண்டு எழுதினார் , காப்பாத்தச்சொல்லி கருணாநிதிக்கு கடிதம் எழுதினார் , சோனியாவுக்கு காப்பாத்தச்சொல்லி கடிதம் எழுதினார் , ஜனாதிபதிக்கு காப்பாத்தச்சொல்லி கடிதம் எழுதினார். இப்பிடி பதவியில இல்லாமலே கடிதம் எழுதி பட்டம் வாங்கி கிழிச்சார். இப்பவும் உடும்புக்கறிக்கும் கிளிநொச்சி கிழவிக்கும் ஆசைப்பட்டுத்தான் இப்பிடி அறிக்க விடுறாரோ?

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

"இப்பவும் உடும்புக்கறிக்கும் கிளிநொச்சி கிழவிக்கும் ஆசைப்பட்டுத்தான் இப்பிடி அறிக்க விடுறாரோ?"

இதை ஞாபகம் வைத்திருப்பவர்களின் எண்ணிகையை, வகைகளை பார்க்கும் போது, இதைச் சொன்னவரின் ஆளுமை மற்றும் சக்தியின் பலத்தை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்க் கூட்டமைப்பில் இருந்திருந்தால் போராளிகளைக் காப்பாற்றியிருப்பேன் - தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் நேற்றுத் தெரிவிப்பு

பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தை, அரைகுறை நிலையில்,"நான்தான் திறக்கவேண்டும்" என்று ஒற்றை காலில் நின்று, முரண்பட்டு, கூட்டமைப்பிலிருந்து விலகி, தான் திறக்க அனுமதிக்கப்படாததற்கு கீழ்தர காரணங்களை கூறித் திரிந்த இவரா இன்று உப்பிடிச் சொல்வது.

யாரும் எதிர்க்காததால் சந்தர்ப்பவசமாக கூட்டணியின் தலைவராக இருந்துவரும் இவர், அநியாயமாக சிறையில் இருக்கும் பல்லாயிரம் பேரை விடுவிக்கலாம் எல்லோ? ஏன் அதை செய்யவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.