Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் பாடல்களைப் பயன்படுத்தி ஐதேக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம்

Featured Replies

புலிகளின் பாடல்களைப் பயன்படுத்தி ஐதேக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம்

யாழ்மாவட்டத்தில் தேர்தல்காலப் பரபரப்புக்கள் வேட்பாளர்களிடையே தொற்றிக்கொண்டிருக்கிறது. கவனிக்கவும் வேட்பாளர்களிடையேதான். ஒவ்வொரு கட்சியும் கட்சிக்குள் நபர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் எப்படியெல்லாம் தம்மை மார்க்கெட்டிங் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருகின்றனர். வடக்கு கிழக்கில் எண்பதுகளுக்குப் பிறகான தலைமுறைக்கு மிகவும் புதியதான இந்தக் கூத்துகளில் பல சுவாரசியங்களும் நடைபெறுகின்றன.

தேர்தல் பிரச்சாரத்திற்காக தெருக்கூத்துக்களில் தொடங்கி வாகனத் தொடரணிகள் வரை “காசைக் கரியாக்குகின்ற” கைங்கரியங்களே நடைபெறுகின்றன என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்தியாவின் எந்த அரசியல் கலாசாரத்தை நாம் கைகொட்டிச் சிரித்தோமோ அதே கலாச்சாரச் சுழலுக்குள் நம்மையும் தள்ளி தாங்களும் விழுந்திருக்கிறார்கள் என்றார் இதுபற்றிச் சொன்ன பல்கலைக் கழக மாணவர் ஒருவர். இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் தேர்தலுக்காக செலவழிக்கப்படும் பணம் அனைத்தையும் திரட்டினாலே – வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு 12 தகரங்களோடு வன்னியில் ஆங்காங்கே மாட்டுக் கொட்டகை வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களதுக்கு ஒரு இயல்பான வாழ்வை அளித்திருக்கலாம் என்றார் அவர்.

இதற்கிடையில் கட்சிகளும் சுயேட்சையாளர்களும் எம்ஜிஆர் பாடல்களையும் பழைய சினிமாப் பாடல்களையும் ஒளிபரப்பி ஓட்டுக் கேட்கின்றன. நான் ஆணையிட்டால் என்ற பாடல் பலருக்கும் ஒரே பாடலாக ஒலிக்கிறது. இதிலும் ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகள் உருவாக்கிய ஒரு சில பாடல்களையும் தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துகிறது. சுனாமித் துயரத்தை அடுத்து விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அழுவதற்கென்று எவரும் வந்து பூமியில் பிறப்பதில்லை என்ற பாடலை ஒலிக்கவிட்டு ஐதேக ஓட்டுக் கேட்கிறது.

மொத்தத்தில் வேட்பாளர்கள்தான் பரபரப்பாகத் திரிகிறார்கள். வாக்காளர்கள் வழமைபோலவே எதிலும் ஆர்வமற்று பார்வையாளர்களாக இருக்கிறார்கள். யாழில் தேர்தல் கூத்துக்கள் குறித்து பொங்குதமிழ் இணையத்தில் வெளியான கட்டுரையொன்று இப்படி முடிகிறது.

நானே வேர் என்கிறார்கள் சிலர்

நானே கிளை என்கிறார்கள் வேறு சிலர்

நானே கனி என்கிறார்கள் இன்னும் சிலர்

நானே கூடு என்கின்றனர் மற்றுஞ் சிலர்

நானே காய் என்கிறார் வேறாரோ சிலர்

நானே மலர் என்கிறார்கள் சிலர்

நானே தளிர் என்கின்றனர் வேறு சிலர்

நானே மரம் என்கின்றனர் மற்றுஞ் சிலர்

நாமோ வெட்ட வெளியில் – வெயிலில் நிற்கிறோம்

யாரும் மரமுமில்லை, யாரும் கனியுமில்லை,

யாரும் பூவுமில்லை, பிஞ்சுமில்லை.

யாரும் கிளையுமில்லை. யாரும் தளிருமில்லை.

நிலமென்ற எங்கள் நெஞ்சின் ஈரமுறிஞ்சி

பூத்தும் காய்த்தும் கனிந்தும் வேர் விட்டும் துளிர்த்தும்

இலையுதிர்த்தும் தன் வாழ்வெழுப்பும் இவர் யாரும் எதுவுமில்லை

எதுவுமே இல்லை

http://www.aathavanonline.com/

கடுகு சென்ற இடம் ஆராய்வார், பூசணிக்காய் மறைஞ்சது தெரியாது.. :(

சந்தர்ப்பம் கிடைத்தால் தலைவரின் படத்தை கூட போட்டு வோட்டு கேட்பார்கள்.

இல்லாட்டி சும்மா அரசியலுக்கு வந்து அரச பணத்தை எடுத்து செலவு செய்த மகேஸ்வரனின் படத்தை போட்டு மனுசி வோட்டு கேட்கிறா.

சந்தர்ப்பம் கிடைத்தால் தலைவரின் படத்தை கூட போட்டு வோட்டு கேட்பார்கள்.

இல்லாட்டி சும்மா அரசியலுக்கு வந்து அரச பணத்தை எடுத்து செலவு செய்த மகேஸ்வரனின் படத்தை போட்டு மனுசி வோட்டு கேட்கிறா.

யாழ்ப்பாணத்தில் மகேஸ்வரன் எம்பி ஆனது தலைவரின் படத்தை போட்டு தானே...??

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு "தேசிய தலைவரின் எண்ணத்தில் உதித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு" எண்டு ஒலி பெருக்கியில் சொல்லினம்.....

ஐ. தே. க. தாம் யாழ் நூலகம் எரிச்ச காட்சியையும் காட்டி வாக்கு கேட்கலாம் தானே!!!

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு "தேசிய தலைவரின் எண்ணத்தில் உதித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு" எண்டு ஒலி பெருக்கியில் சொல்லினம்.....

நீங்கள் வேற புலி என்றாலே கிளி என்று வாயை கிழிக்க நிற்கிறார்கள் யாழ்பாண திருமலை மக்கள்.

நீங்கள் எங்க இருந்து இதை சொல்லுறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தலைநகரிலிருந்து தான் மருதங்கேணி

ஒன்றை மனதில் நிறுத்துவோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இதுல யாரும் வெல்லலாம்.

ஆனால் சிங்கள கட்சிகளின் பெயரில் வோட்டு கேட்கும் தமிழர்கள் துரத்த பட வேண்டும்.

அது தான் இன்றைய ஈழத்தமிழனின் கடமை.

நாங்கள் தனித்துவமான மக்கள் என்பதை காட்ட அது போதும். எந்த தமிழன் எந்த தமிழ்கட்சியில இருந்து வென்றாலும் பரவாயிலலை.

நேற்றைய தினம் வேட்பாளர் தமிழ்தேசியமுன்னனி பேராசிரியர் கென்னடி அவர்கள் சொன்னது போல் தமிழ்தேசியத்தின் பால் நின்று வென்ற அனைவருடனும் சேர்ந்தே வேலை செய்வோம் என்றார். அது சாத்தியமானது.

தமிழ்தேசிய கூட்டமைப்போ அல்லது மற்ற தமிழ் கட்சியோ ஏன் சிங்கள பிரதேசத்தில் தேர்தலில் நிற்கவில்லை.

நின்றால் சிங்களவன் வெட்டி போடுவான்.

தமிழர் கட்சியின் சார்பில் நிற்க ஒரு சிங்களவனும் முன் வரமாட்டான். ஆனால் தமிழர் எங்கும் நக்குவர் எதுலும் நக்குவர்.

சிங்கள கட்சிகளை தமிழர் பிரதேசத்தில் தோற்கடிப்பதே சிறந்தது.

புலம் பெயர் தமிழர் அதற்ற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

Edited by நேசன்

ஒன்றை மனதில் நிறுத்துவோம்.

ஆனால் சிங்கள கட்சிகளின் பெயரில் வோட்டு கேட்கும் தமிழர்கள் துரத்த பட வேண்டும்.

அது தான் இன்றைய ஈழத்தமிழனின் கடமை.

சிங்கள கட்சிகளை தமிழர் பிரதேசத்தில் தோற்கடிப்பதே சிறந்தது.

அத்துடன் கடந்த 25 வருடங்களாக ஈழத்தமிழரை அழித்துவரும் இந்திய பயங்கரவாதிகளின் அடிவருடிகளும், எந்த கட்சியில் நின்றாலும் , தோற்கடிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ஆசான்,

தங்களை இந்திய அடிவருடிகள் என்று சொல்ல வேண்டாமாம். வெட்கமாக இருக்கிறதாம்??!!!!

:blink: இந்தியாவுக்கு ஓடிப்போய், கிருஷ்னாவின்ர கைய்யக் காதலனைப் பிடிச்சமாதிரிப் பிடிச்சுக்கொண்டு போட்டோவுக்குப் போஸ் குடுக்கேக்க வெட்கமில்லை, இப்பத்தான் வெட்கம் வருதாக்கும் சம்பந்தர் பெருமானுக்கு. ஆரங்கே...!!!அந்த கண்கொள்ளாக் காட்சியை இங்கே ஒருக்கா இணையுங்கோவன் !!!!!!

ரகுநாதன்! இந்திய எஜமானர்களின் பக்தகோடிகள் என்று சொல்லலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்
:lol: இது இன்னும் நல்லாயிருக்கு. அப்படியே ஆகட்டும் !!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.