Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வளர்ப்பு நாய்க்கு ஒரு வருட திதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ப்பு நாய்க்கு ஒரு வருட திதி : ராமேஸ்வரத்தில் அதிசயம் _

வீரகேசரி இணையம் 3/26/2010 2:35:11

_

இறந்து ஒரு வருடமான தமது வளர்ப்பு நாயின் ஆன்ம சாந்திக்காக திதி செய்தனர் ஒரு குடும்பத்தினர். இந்த அதிசய நிகழ்வு நாமேஸ்வரத்தில் நடைபெற்றது.

நாயை வளர்த்த குடும்பத்தினர் திதி கொடுத்தது மட்டுமல்ல, தமது கிராமத்தினருக்கே சாப்பாடும் போட்டனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னப்பாலத்தைச் சேர்ந்தவர் மீனவர் கோட்டைமுனி (40). இவரது மகன், இரண்டு ஆண்டுக்கு முன், பிறந்து கண் திறக்காத நாய்க்குட்டி ஒன்றைத் தூக்கி வந்தார். அதற்கு 'ஜானி' என பெயரிட்டு வளர்த்தனர். ஒருமுறை, நாய்க்கு வலிப்பு நோய் வந்ததால், ராமேஸ்வரம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. .

இந்நிலையில், கடந்த 2009 மார்ச் 25ஆந் திகதி, தெருநாய்களின் தாக்குதலுக்குள்ளாகி 'ஜானி' இறந்து போனது. இறந்து ஒரு ஆண்டுக்கு பின், அதே நாளில் (நேற்று)ஆசையாக வளர்த்த நாய்க்கு குடும்பத்தினர் திதி கொடுத்தனர். .

நாய் புதைக்கப்பட்ட இடத்தில் பல்வேறு தின்பண்டங்களை வைத்துக் கும்பிட்ட கோட்டைமுனி குடும்பத்தினர், வீட்டில் நாயின் படத்திற்கு மாலையிட்டு படையல் (உணவு) போட்டு, அதன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்தனர். மேலும், நேற்று முழு கிராமத்தினருக்கும் சாப்பாடு போட்டனர்..

இது குறித்து கோட்டைமுனி கூறுகையில்,

"நான் கடலுக்குச் சென்றால் திரும்பி வரும் வரை, இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிடாமல் காத்திருக்கும். கடந்த வருடம் என் மகளுக்கு உடல் நலம் சரியில்லாததால், ஆட்டோவில் மகளுடன் ராமேஸ்வரம் சென்றேன். ஆட்டோவைத் தொடர்ந்து நாய் வந்ததைக் கவனிக்கவில்லை.

வழியில் திடீரென வலிப்பு வர, வீதியில் படுத்துவிட்ட ஜானியை, தெருநாய்கள் சூழ்ந்து கடித்துக் குதறியதில் அது இறந்து விட்டது. பிள்ளைகள் எல்லாம் இறந்த நாயை ஜானியைச் சுடுகாட்டில் புதைத்து விட்டு, மனிதர்களுக்குச் செய்வது போல் 16 நாள் காரியமும் செய்தோம். இன்று ஒருஆண்டு முடிந்ததால் திதி கொடுத்தோம்" என்றார். __

இது தான் கலிகாலம்... :lol::blink::blink::wub:

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ப்பு நாய்க்கு ஒரு வருட திதி : ராமேஸ்வரத்தில் அதிசயம் _

வீரகேசரி இணையம் 3/26/2010 2:35:11

-----

நாயை வளர்த்த குடும்பத்தினர் திதி கொடுத்தது மட்டுமல்ல, தமது கிராமத்தினருக்கே சாப்பாடும் போட்டனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?.

-----

நாய் புதைக்கப்பட்ட இடத்தில் பல்வேறு தின்பண்டங்களை வைத்துக் கும்பிட்ட கோட்டைமுனி குடும்பத்தினர், வீட்டில் நாயின் படத்திற்கு மாலையிட்டு படையல் (உணவு) போட்டு, அதன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்தனர். மேலும், நேற்று முழு கிராமத்தினருக்கும் சாப்பாடு போட்டனர்..

இது குறித்து கோட்டைமுனி கூறுகையில்,

-----

வீதியில் படுத்துவிட்ட ஜானியை, தெருநாய்கள் சூழ்ந்து கடித்துக் குதறியதில் அது இறந்து விட்டது. பிள்ளைகள் எல்லாம் இறந்த நாயை ஜானியைச் சுடுகாட்டில் புதைத்து விட்டு, மனிதர்களுக்குச் செய்வது போல் 16 நாள் காரியமும் செய்தோம். இன்று ஒருஆண்டு முடிந்ததால் திதி கொடுத்தோம்" என்றார்.

ஜானி செத்தது நல்லதுக்கே......

கோட்டை முனி மூலம் முழு கிராமத்துக்கும் வயிறு முட்ட சாப்பாடு கிடைத்திருக்குமா?

இது போல ஒவ்வொரு ஊரில் உள்ள நாய்களும், இப்படியே சாக வேண்டும்.

முழு கிராமத்துக்கும் பிரியாணி கிடைக்க வேண்டும்.

நாய்குட்டி விசர் கிராமம் என்று பெயர் சூட்டி போடுவாங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வளர்த்த நாய் மன்னிக்கவும் திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்கள்

எனக்கு தெரிந்த தமிழ்நண்பர் ஒருவர் 4 நாய்கள் வளர்க்கின்றார்.

அதில் ஒன்று இவரது மதிலைத்தாண்டி குதித்து பக்கத்து வீட்டுக்குள் சென்றுவிட்டது

பக்கத்து வீட்டு பிரெஞ்சுக்காறி காவல் துறைக்கு அறிவித்து விட்டார்

காவல் துறை இவரது வீட்டைத்தட்ட இவர் நாயைக்கூப்பிட

நாய் கம்பீரமாக பக்கத்து வீட்டு மதிலைத்தாண்டி பாய்ந்து வர...

எனது நண்பருக்கு காவல் துறைக்கு முன் சாட்சியாக அந்த வீட்டிலிருந்து வருகிறதே என்று கடுப்பேற....

விட்டார் காலால் ஒன்று நாய்க்கு.

காவல்துறை இவரை மடக்கிப்பிடித்து கைவிலங்கிட்டு கொண்டு போய் தமக்கு முன்னாலேயே மிருகவதை என்று பதிந்து 6 மாதம் உள்ளே தள்ளிவிட்டார்கள்.

சிறை மீண்டுவந்து அந்த நண்பர் சொன்னது

என்ர நாய்க்கு இல்லை திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்களுக்கு நான் அடித்ததற்கு ஆறு மாதமா..?

என்னடா உலகம் இது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.