Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நளினியை விடுதலை செய்ய தமிழ்நாடு மறுப்பு.

Featured Replies

நளினியை விடுதலை செய்ய தமிழ்நாடு மறுப்பு.

மெலதிக தகவலுக்கு..

:rolleyes:

Edited by Panangkai

இராஜீவ் கொலையில் எந்தவிதமான சம்பந்தமும் நிரூபிக்க படாத நளினியை கூட விடுவிக்க முடியாத இந்தியா ஈழத்தமிழர்களை சிங்களவர்களிடம் இருந்து காப்பாத்தி போடும் எண்டு சொல்லி வாக்கு கேக்கிறாங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவ் கொலையில் எந்தவிதமான சம்பந்தமும் நிரூபிக்க படாத நளினியை கூட விடுவிக்க முடியாத இந்தியா ஈழத்தமிழர்களை சிங்களவர்களிடம் இருந்து காப்பாத்தி போடும் எண்டு சொல்லி வாக்கு கேக்கிறாங்கள்...

தயாண்ணா.. நளனியின் விடுதலையை எதிர்த்திருப்பது தமிழ்நாடு அரசு என்பதையும் கவனிக்க வேண்டும். இதே கருணாநிதிதான் அன்றைய அரசியலுக்கு ஏற்ப இந்தியப் படைகளை வரவேற்க போக மாட்டன் என்றவர்.

நாங்கள் ஈழத்தமிழர்களும் ஒரு கேணக் கூட்டம். இந்தியப் படைகள் மற்றும் ராஜீவ் காந்தி போன்றவர்கள் ஈழத்தில் செய்த போர் குற்றங்களை என்றுமே சர்வதேச மயப்படுத்தியதில்லை. எங்களுக்குள் வைத்துக் கொண்டதோடு சரி. அதன் விளைவுகள் கொடும் கொலைகாரனான ராஜீவ் தியாகி ஆகி இருக்கிறார். 400 பேரை கொன்றதற்காக சதாம் குசைனுக்கு மரணதண்டனை அளித்தனர். ஆனால் 6000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை அமைதி காக்கும் படை என்று ஒன்றை அனுப்பி கொன்று குவித்ததை இந்த உலகம் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை.

அதிலும் இந்தியப் படைகள் செய்த வடமராட்சிப் படுகொலைகளை வெளி உலகிற்கு ஜேர்மனி போன்ற நாடுகள் கொண்டு வந்திருந்த போதும்.. ஈழத்தமிழர்கள் அதனை போர்க்குற்றமாக்கி இந்த உலகிற்கு காட்ட அக்கறை செய்யவில்லை.

ராஜீவ் மட்டுமல்ல.. செம்மணி படுகொலைகளின் சூத்திரதாரிகளான சந்திரிக்கா.. ரத்வத்த.. சரத் பொன்சேகா போன்றவர்களும்.. 1983 இனக் கலவர சூத்திரதாரிகளான ஜே ஆர்.. பிரேமதாச.. காமினி.. லலித் அத்துலத்முதலி போன்றவர்களும்.. போர்க்குற்றவாளிகளாக இந்த உலகின் முன் வெளிக்கொணரப்படுவதை தமிழர்களே செய்ய முன்வரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

நாம் செய்யத்தவறிய காரியங்களால் தான் இந்த ராஜீவ் இன்று தியாகி ஆகி நிற்கிறார். இவரால் அழிந்த ஈழத்தமிழ் குடும்பங்கள் எத்தனை. எனக்குத் தெரிய 3 குடும்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ராஜிவ் இன்று தியாகி ஆகி நிற்பது இந்த உலகின் அநியாயமே நிலைக்கும் என்பதை சொல்கிறது. அற்குள் பிரியங்காவுக்கு கோபம் வந்திச்சாம்.. சாந்தமானாவாம். அவங்க அப்பா கொன்றொழித்த குடும்பங்களின் கோபத்தை எவர் எப்படி ஆற்றுவதாம். நீதி செத்துவிட்ட உலகில் தீவிரவாதம் நீதியை நிலைநாட்ட முற்படுகிறது. அதுதான் ராஜீவிற்கு வழங்கிய தண்டனையும் கூட..!

  • கருத்துக்கள உறவுகள்

.

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க இயலாது என்று சிறை ஆலோசனைக் குழு கூறிவிட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்பதாக தமிழக அரசு அறிவித்துவிட்டது. இதனால் அவர் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார்.

ஆலேசானைக் குழு 8 காரணங்களைக் கூறி நளினியை விடுதலை செய்ய இயலாது என கூறியுள்ளது. இதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------

------

ஆலோசனை கமிட்டி முன்பு ஆஜராகி நளினி தன்னை விடுவிக்கக்கோரி கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கை குறித்து கடந்த மாதம் 20ம் தேதி கமிட்டி கூடி விவாதித்து முடிவெடுத்தது. நளினியின் கோரிக்கையை கமிட்டி நிராகரிப்பதாக முடிவெடுத்தது. இதற்கு 8 காரணங்களையும் அந்த குழு தெரிவித்துள்ளது.

இந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று நளினியை முன்கூட்டி விடுதலை செய்வதில்லை என்று கடந்த 24ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்றார்.

இதன்மூலம் நளினி முன் கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.

முன்னதாக சிறை ஆலோசனைக் குழு தனது அறிக்கையில், நளினியின் நன்னடத்தையைக் காரணம் காட்டி அவரை முன்கூட்டியே விடுவிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக அவரை விடுவிக்க இயலாது என்றே அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஏன் விடுதலை இல்லை?-கமிட்டி சொல்லும் காரணங்கள்:

ஆலேசானைக்குழு 8 காரணங்களைக் கூறி நளினியை விடுதலை செய்ய இயலாது என கூறியுள்ளது.

அதன் விவரம்: நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.

நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.

நளினியின் தாய், தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்த தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம். நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது விஐபிகள் வசிக்கும் இடம். அமெரிக்க தூதரகம் போன்ற முக்கியமான அலுவலங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.

தன்னுடைய குழந்தைக்கு தயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கைய ஏற்க முடியாது.

18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.

இதற்கு முன்னாள் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது. அவரை பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாக கூறவில்லை.

இவ்வாறு கமிட்டியின் அறிக்கையி்ல் கூறப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியர், வேலூர் பெண்கள் சிறை கண்காணிப்பாளர், சென்னை மாவட்ட ஆட்சியர், உள்ளூர் காவல்துறை ஆகியோரின் அறிக்கையும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி : தற்ஸ் தமிழ்

நளினியை விடுதலை செய்யக்கூடாது என்று சிறை ஆலோசனைக்குழு கூறிய பரிந்துரையை,

கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு ஏற்றுக் கொண்டதை என்னவென்று சொல்வது......

இந்தக் காரணங்கள், நொண்டிக்காரணங்கள் போல் தெரியவில்லையா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.