Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் ஆதரவைப்பெற தமிழ்க் கூட்டமைப்பை பலமான அணியாக பாராளுமன்றம் அனுப்புங்கள் தமிழ் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு

Featured Replies

சர்வதேசத்தின் ஆதரவைப்பெற தமிழ்க் கூட்டமைப்பை பலமான அணியாக பாராளுமன்றம் அனுப்புங்கள் தமிழ் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு

யுத்தம் இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு உறுதியானதும் நிரந்தரமானதும் நியாயமானதும் நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்ற அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் சர்வதேச சமூகம், தனது அடுத்த நகர்வுக்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பை உன்னிப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான

அணியாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் மாத்திரமே சர்வதேச சமூகத்தின் உறுதியான ஆதரவைப் பெறமுடியும் என்பதை ஒவ்வொரு தமிழ் வாக்காளனும் உணரவேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான இரா.சம்பந்தன் மூதூர் பிரதேசம்கிளிவெட்டி மற்றும் இடங்களில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும் போது வலியுறுத்தினார்.

"தமிழ்த் தேசியப் பிரச்சினை இன்று நேற்று உருவானதல்ல. நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தமிழ்த் தேசியப் பிரச்சினை ஆரம்பமானது. அறுபது வருட வரலாறு கொண்ட இப்பிரச்சினைக்கு தந்தை செல்வநாயகம் சமஷ்டி அரசமைப்பின் கீழ் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் சுயாட்சி அதிகாரப் பகிர்வு கோரிக்கையை முன்வைத்தார். அப்போதைய அரசாங்கங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்தார். அவை எல்லாம் கிழித்தெறியப்பட்டன. சாத்வீகப் போராட்டங்களை நடத்தினார். அப்போதைய அரசுகள் தமிழ் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன. அக்கட்டத்தில் தான் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இப்போது ஆயுதப் போராட்டம் இல்லை. இலங்கைத் தமிழருக்குத் தேசியப் பிரச்சினை ஒன்று உண்டு என்பதை ஆயுதப் போராட்டம் தான் உலகிற்கு உணர்த்தியது. ஆயுதப் போராட்டம் இல்லாவிடினும் தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினைகளை உலகம் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது. யுத்தமற்ற சூழலில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு அம்மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் தாயகத்தில் சுதந்திரமாக, கௌரவமாக தங்களைத் தாங்களே ஆளக்கூடிய அதிகாரங்களைப் பெற உரித்துடையவர்கள் என்ற நிலைப்பாட்டை சர்வசேத சமூகம் சாதகமாக கவனிக்கத் தொடங்கியுள்ளது.

இச்சூழலில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமிழரசுக் கட்சியின் "வீடு%27 சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான அணியாக எதிர்வரும் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். தமிழர்களின் வாக்குகளைப் பிரித்து அவர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் வலுவைக் குறைக்கும் முயற்சியில் பேரினவாத அரசு ஈடுபட்டுள்ளது. இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இல்லாத அளவிற்கு வடக்கு,கிழக்கில் உள்ள தமிழ் மாவட்டங்களில் தனது ஒட்டுக் கட்சிகளையும் தமிழ் சுயேச்சைக் குழுக்களையும் களத்தில் இறக்கியுள்ளன. இவற்றினால் எதிர்வரும் தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாது. மாறாக தமிழ் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதே இதன் நோக்கம்%27 என்றார் சம்பந்தன்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் ஒரே அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் 2004 தேர்தலில் 2 தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தமிழர்கள் பெற்றனர். அந்த இரண்டு பிரதிநிதித்துவத்தையும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் திருமலை தமிழ் வாக்காளர்கள் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்றும் சம்பந்தன் கூறினார். திணிக்கும் அரசியல் தீர்வை மறுபேச்சின்றி ஏற்றுக் கொள்ளக் கூடிய பலவீனமானவர்கள் வடக்கு,கிழக்கிலிருந்து தமிழர் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும் என்பது தான் பேரினவாத அரசாங்கத்தின் இரகசியத் திட்டமாகும். இத்திட்டத்தைத் தவிடுபொடியாக்க தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் திரளவேண்டும் என்றும் சம்பந்தன் கூறினார்.

.http://parantan.com/

இந்திய பயங்கரவாதிகளின் ஆதரவு சர்வதேச ஆதரவாகாது!

திரு சம்பந்தன் அவர்கள் தமிழின படுகொலையாளிகளான இந்திய பயங்கரவாதிகள் பற்றிய தனது நிலைப்பாடை பகிரங்கமாக கூறும்வரை அவரை ஆதரிப்பது எந்த அடிப்படையில்?

இந்திய பயங்கரவாதிகளின் ஆதரவு சர்வதேச ஆதரவாகாது!

திரு சம்பந்தன் அவர்கள் தமிழின படுகொலையாளிகளான இந்திய பயங்கரவாதிகள் பற்றிய தனது நிலைப்பாடை பகிரங்கமாக கூறும்வரை அவரை ஆதரிப்பது எந்த அடிப்படையில்?

இந்தியா பருப்பை ஒருதரும் சாப்பிடக்குடாது சாப்பிடுறவை எல்லாம் துரோகிகள்.... பட்டுச்சீலையை உடுக்ககுடாது உடுக்கிறவை எல்லாம் துரோகிகள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவே ஆலமரங்கள பாத்து வச்சிருந்தா பின்னுக்கு உதவும். :)

இப்பவே ஆலமரங்கள பாத்து வச்சிருந்தா பின்னுக்கு உதவும். :)

இப்பதானே விதை போட்டு இருக்கு. இனித்தான் முளைக்கும்.

நாங்கள் விடமாட்டம்... டக்ளசு கருணா வெண்டாலும் கூட்டமைப்பு வெல்லக்குடாது....

நாங்கள் விடமாட்டம்... டக்ளசு கருணா வெண்டாலும் கூட்டமைப்பு வெல்லக்குடாது....

இந்தியனுக்கு அடிமையாக இருந்து இன்னும் ஒரு பங்களாதேசாகவோ , நேபாளமோ சேரிகளுக்குள் எங்கட மக்கள் வாழ்வதை விட சிங்களவனுக்கு கீழை இலங்கையனாகவே இருந்து போட்டு போகலாம்.

எங்கட பிள்ளை குட்டியளாவது தங்களுக்கு தேவையானதை தாங்களாக பெற்றுக்கொள்ளும்.

அதுதானே நாங்கள் இஞ்ச லண்டனிலயும் பரிசிலயும் விஷ்கி அடிச்சுக்கொண்டு வீரம் பேசிக்கொண்டிருப்பம்.... அங்க சனம் நேபாள சேரிக்க தான் இருக்க வேணும்.....

  • கருத்துக்கள உறவுகள்
:) இவ்வளவு வீரம் பேசும் நீங்கள் எந்தவூரில் இருக்கிறீர்கள்?? வன்னியிலா அல்லது யாழ்ப்பாணத்திலா??

:) இவ்வளவு வீரம் பேசும் நீங்கள் எந்தவூரில் இருக்கிறீர்கள்?? வன்னியிலா அல்லது யாழ்ப்பாணத்திலா??

:lol:

சர்வதேசம் சொதி தயாரித்து வைத்திருக்கின்றது சம்பந்தரிடம் கொடுக்க போலும் :lol:

காதில பூ கனபேர் தொடர்ந்து வைக்க போகின்றார்கள்.ஆழ்ந்த அனுதாபங்கள்.கடைசி மே 18 க்கு பிறகாவது நிப்பாட்டி இருக்கலாம்

இந்தியா பருப்பை ஒருதரும் சாப்பிடக்குடாது சாப்பிடுறவை எல்லாம் துரோகிகள்.... பட்டுச்சீலையை உடுக்ககுடாது உடுக்கிறவை எல்லாம் துரோகிகள்.....

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ..... ... ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசத்தின் ஆதரவைப்பெற தமிழ்க் கூட்டமைப்பை பலமான அணியாக பாராளுமன்றம் அனுப்புங்கள் தமிழ் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு

ஐயா நீங்கள் ஒண்டா நிண்டு சர்வதேச ஆதரவ பெற்றதா சென்னவையே இப்ப புறிஞ்சு அரசியலில நிக்கினம்....நீங்களும் விடக்குடாது. இழுத்தெண்டாலும் விழுத்திப்போடுங்கோ! :):lol:

திருகோணமலைக்கு ஒரு தமிழ்க் கட்சி தனிய வேண்டும்.

மட்டக்களப்புக்கு இப்ப இன்று இரண்டு இருக்கு.

யாழ்ப்பாணத்துக்கு தனிய எண்டு தொடங்கிட்டா சரி.

அவனவன் தங்கட தங்கட பிரச்சனைகளைப் பார்க்கட்டும்.

இந்த அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் அவலத்தில் பிழைப்பு நடத்தும் பிணந்தின்னிகள் போபர ஒரு நிலைக்கு வந்திட்டார்கள். அடியை வாங்கி மேளியாய் மெலிந்து மூச்சு விடமுடியாத நிலையில் இருக்கும்போதும் மக்களின் நிலையறிஞ்சு குரிப்பரிஞ்சு நடக்காமல் தரிகேட்டாடும் பிசாசுகள்.

சனத்தை பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலைக்கு கொணந்து விட்ட அனைவருக்கும் நன்றிகள்.

விடுதலை என்றபெயரில் வயிறு வளர்த்தோரும் உயிர் குடித்தொரும் இன்று அலைகின்றாக்கள்.

விடுதலை வேண்டி நின்ற சனத்தின் நிலை அறியாமல் பிதற்றும் இந்த தொகையினர் தமது இலாபத்துக்காத்தான் எல்லாத்தையும் போட்டு உடைக்கின்றர்கள். புலத்தில் இருந்து புலம்பாமல் தாய் நிலத்துக்கு வாங்கோ.

இங்கே வந்து பாருங்கோ... எங்களின் அழிவின் நாற்றம் எப்படி இருக்கு என்று பாருங்கோ. நாள்தோறும் இங்கொன்றுமாக அங்கொன்றுமாக நடக்கும் விடயங்காளிப் பார்க்கும் ஒருவன் இனிமேல் உரிமை பற்றி வாய் திறக்க கூசுவான்.

இங்கே வேடிக்கை இப்போது சில ஆய்வாளர்கள் சிங்களவனுக்கு கீழ சனம் நிமதியாக இருக்கட்டுமாம். இதை முன்னமே சொல்லி நின்று ஒதுங்கி இருந்தால் இன்று செத்துப்போன சனத்தை என்றாலும் காப்பற்றி இருக்கலாம்.

சிங்களமும் பாளியும் படிக்க விருப்பம் இருந்தாலே போதும் யாழிலேயே தடையின்றி கல்வி கற்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.