Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த + த.தே.கூ = 150+

Featured Replies

85% மான மக்கள் சொன்ன கருத்தை புரிய முடியாதவர்கள் 15% மான மக்களின் கருத்தை ஏற்று கொள்ள வேணும் எண்டு அடம்பிடிக்கினம்...

  • கருத்துக்கள உறவுகள்

2004ல் நடைபெற்ற தேர்தலில் பின்பு அறுதிப் பெறும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய காட்டயம் வந்தபோது எதிர் அணியில் உள்ளவர்களுக்கு மந்திரிப்பதவி, பணம் கொடுத்து தனது பக்கம் இழுத்தவர் மகிந்தா. கனகரத்தினம் போன்றவர்களை நெருக்கடிகளை உண்டு பண்ணி தனது கட்சியில் போட வைத்தவர் மகிந்தா.அப்படிப்பட்டவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி மூன்றில் 2 பெரும்பான்மை பெற ஐ.தே.கட்சி உட்பட மற்றைய கட்சியில் இருப்பவர்களை பயமுறுத்தி அல்லது மந்திரிபதவி , பணம் வசதிகள் செய்து தன் பக்கம் செய்யக்கூடியவர். 3ல் 2 பெரும்பான்மை பெற்றபின்பு தமிழர்களுக்கு ஒரு வித உதவியும் செய்யமாட்டார். ஆனால் இந்த ஆட்சியின் பதவிக்காலம் முடிவடையும் போது, சிலவேளை மீண்டும் தலைவராக வருவதற்கு சனாதிபதி ஆட்சிமுறையை 3ல் 2 பெரும்பான்மையுடன் மாற்றினாலும் மாற்றுவார். சிறிலங்காவில் சனாதிபதியாக இருப்பவர் 2 முறைக்கு மேல் இருக்க முடியாது. அல்லது கோத்தபாயாவை சனாதிபதியாக ஆக்க முயற்சிப்பார்.

இது விடுதலைப்புலிகள் இல்லாத அரசியல். கஜேந்திரன் அணியினர் கூட்டமைப்பை விட்டு விலகியது பிழைதான். அவர்களும் இணைந்திருந்து ஏதாவது செய்வதற்கு முயன்றிருக்க வேண்டும்.

இப்போதும் காலம் பிந்திவிடவில்லை. தோல்விகள் எல்லோர் வாழ்வின் நிகழ்ச்சிதான்.

வாக்களிக்காதவர்கள் இன்றையநிலையில் எதையும் நிர்ணயிக்கவில்லை. அவர்கள் எதையோ சொல்லியிருக்கிறார்களென்றால், அது தமிழ்த் தேசியத்திற்கோ, அல்லது கஜேந்திரன் அணியினருக்குச் சாதகமானவர்களென்றால் அந்தத் தீர்ப்பை அவர்கள் வழங்கியிருக்க வேண்டும். மக்களை பகிஷ்கரிக்கும்படி எவரும் கோராத நிலையில் அவர்கள் எப்படித் தீர்ப்பினைச் சொல்லியிருக்க முடியும்?

இந்த விடயத்தை வைத்துக் கொண்டு கஜேந்திரகுமாரையும் கஜேந்திரன் செல்வராசாவையும் தமிழர்களின் ஏகோபித்த 85 வீத மக்களின் தலைவராக்கிவிடாதீர்கள். அவர் வாக்களித்த 15 வீத மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.

இந்தியாவுடன் இணையாது, அல்லது இந்தியா இணங்காத எந்தத் தீர்வையும் சிங்களத்தால் கூட தமிழர்களுக்கு வழங்கிவிட முடியாது. விடுதலைப்புலிகள் சில கசப்பான அநுபவங்களைப் பெற்றாலும் அவர்கள் இந்தியாவை என்றும் ஒதுக்கியதில்லை. தமிழர் பிரச்சனையின் தீர்விற்கு இந்தியாதான் வடிகால் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளது மட்டுமல்ல, அதை இறுதிக் காலம் வரை நம்பியுமிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஜேந்திர குமார் விலகியது பிழை, கயேந்திரனை வில்லக்கியது பிழை,இந்தியாவின் பாயன்பாட்டுக்குள் வருவது பிழை, இந்தியாவை பயன் படுத்தாமல் இருப்பதும் பிழை, பிழகள் திருத்தபட வேண்டும், விட்டுகொடுப்புகள் செக்ஷ்து ஒற்றுமை நிலைநாடபடவேண்டும், விட்டுகொடுப்பிகல் செய்யாது கொள்கையில் உருதியாக இருக்க வேணும். உடனடியான மக்களின் இயல்வுவாழ்கையை நிலை நிறுத்திட வேண்டும், அத்தோடு நின்ரு விடாது உறுதியுடன் தமிழருக்கான ஒரு நிரந்தர தீர்வுக்காக உழைக்க வேண்டும்.

"ஒன்று பட்டல் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் தமிழர் அனைவருக்கும் தீங்கே"

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் கருத்தெழுதும் சககருத்தாளனது கருத்துக்கு கருத்தெழுதாது

அவனை

முட்டாள் என்றும்

விசரன் என்றும்

பைத்தியக்காறன் என்றும்

விசுக்கோத்து என்றும்............. எப்போ எழுதத்தொடங்கினார்களோ அன்றே கருத்துக்களம் செத்துவிட்டது.

எதற்கும் அடங்காத மக்களின் தீர்ப்புகளுக்கு தலைவணங்காத மக்களின் நலனைவிட தமது தனிப்பட்ட சில தனிஆதிக்க சக்திகளின்

திணிப்புகளே இங்கே நடக்கின்றன.

இவை ஆரோக்கியமான கருத்தாடலோ அல்லது ஆரோக்கியமான பங்களிப்புகளோ அல்ல.

இவை துளியும் எமது மக்களுக்கோ எமது இலட்சியங்களுக்கோ நன்மை தராது என்பதைவிட இருப்பதையும் பிரித்து சிறுசிறு குழுக்களாக்கி அந்த குழுக்களுக்குள் தமது எழுத்துக்களின் வலிமையை தொடர்ந்து பலப்பரீட்சை செய்ய மட்டுமே உதவும்

எந்த ஆதிக்கசக்திகளுக்கும் அல்லது எந்த தனிக்குழுக்களுக்கும் அல்லது எந்த இதுபோன்ற எழுத்துக்களுக்கும் கருத்து எழுதியோ அல்லது இவர்களின் அடாவடித்தனத்துக்கு எழுதி என்னை நான் குறைத்துக்கொள்ளவிரும்பவில்லை.

எனது மக்களுக்கான எமது தாயகத்துக்கான எனது வழியில் எனது பங்களிப்பு தொடரும்.

நன்றி. வணக்கம்

கஜேந்திர குமார் விலகியது பிழை, கயேந்திரனை வில்லக்கியது பிழை,இந்தியாவின் பாயன்பாட்டுக்குள் வருவது பிழை, இந்தியாவை பயன் படுத்தாமல் இருப்பதும் பிழை, பிழகள் திருத்தபட வேண்டும், விட்டுகொடுப்புகள் செக்ஷ்து ஒற்றுமை நிலைநாடபடவேண்டும், விட்டுகொடுப்பிகல் செய்யாது கொள்கையில் உருதியாக இருக்க வேணும். உடனடியான மக்களின் இயல்வுவாழ்கையை நிலை நிறுத்திட வேண்டும், அத்தோடு நின்ரு விடாது உறுதியுடன் தமிழருக்கான ஒரு நிரந்தர தீர்வுக்காக உழைக்க வேண்டும்.

"ஒன்று பட்டல் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் தமிழர் அனைவருக்கும் தீங்கே"

நீங்கள் எப்பவில இருந்து பாப்பனன் ஆயினிங்கள்?

நான் சும்மா பகிடிக்கு எல்லாருக்கும் உந்த டைப்போ மிஸ்டேக் வாறதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எப்பவில இருந்து பாப்பனன் ஆயினிங்கள்?

நான் சும்மா பகிடிக்கு எல்லாருக்கும் உந்த டைப்போ மிஸ்டேக் வாறதுதான்.

ஈகலப்பை இருக்கும் போது நான் சூப்பராய் தட்டுவேன், ஏனோ ஈகலப்பையை கணனி ஏற்க மறுக்கிறது NHM Writer பாவிப்பதால் க்ஷூப்பராய் தட்டுகிறேன் இதில் பல மொழிகள் இருபதால் எமது வேகத்துக்கு எழுத்துகள் வர மறுக்கி்றது எழுத்து பிழைகள் அதிகம் வருகிறது பிழை திருத்த தாவு தீர்ந்து விடுகிறது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் கருத்தெழுதும் சககருத்தாளனது கருத்துக்கு கருத்தெழுதாது

அவனை

முட்டாள் என்றும்

விசரன் என்றும்

பைத்தியக்காறன் என்றும்

விசுக்கோத்து என்றும்............. எப்போ எழுதத்தொடங்கினார்களோ அன்றே கருத்துக்களம் செத்துவிட்டது.

எதற்கும் அடங்காத மக்களின் தீர்ப்புகளுக்கு தலைவணங்காத மக்களின் நலனைவிட தமது தனிப்பட்ட சில தனிஆதிக்க சக்திகளின்

திணிப்புகளே இங்கே நடக்கின்றன.

இவை ஆரோக்கியமான கருத்தாடலோ அல்லது ஆரோக்கியமான பங்களிப்புகளோ அல்ல.

இவை துளியும் எமது மக்களுக்கோ எமது இலட்சியங்களுக்கோ நன்மை தராது என்பதைவிட இருப்பதையும் பிரித்து சிறுசிறு குழுக்களாக்கி அந்த குழுக்களுக்குள் தமது எழுத்துக்களின் வலிமையை தொடர்ந்து பலப்பரீட்சை செய்ய மட்டுமே உதவும்

எந்த ஆதிக்கசக்திகளுக்கும் அல்லது எந்த தனிக்குழுக்களுக்கும் அல்லது எந்த இதுபோன்ற எழுத்துக்களுக்கும் கருத்து எழுதியோ அல்லது இவர்களின் அடாவடித்தனத்துக்கு எழுதி என்னை நான் குறைத்துக்கொள்ளவிரும்பவில்லை.

எனது மக்களுக்கான எமது தாயகத்துக்கான எனது வழியில் எனது பங்களிப்பு தொடரும்.

நன்றி. வணக்கம்

விசுகு அ்ண்ணா நீங்கள் பொய்கையை தயா என விழித்தால் சூடாகி விட்டார் போல இருக்கு, இதுக்கு போய் மனம் உடை்யலாமோ? எங்களுக்கு எமது நோக்கம் முக்கியம் எல்லோ எத்தைனையோ பாத்து விட்டோம், இது ஜீஜிப்பி எல்லோ. தாங்க முடியாவிட்டால் முக்கோண பொத்தானை அமிழ்த்தி புகார் கொடுங்கோ, உடனடியாக இணயவன் அண்ணா நடவடிக்கை எடுப்பார், எல்லாரது நோக்கமும் ஒன்றுதான் போகும் பாதைகள்தான் வேறு வேறு. இறுதியில் ஒரு இடத்தில்தான் சந்திக்க போகிறோம். ரேக்கிட் ஈஸி பாலிசி :lol:

ததேகூ க்கு அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட அழைப்பு!

சிறீலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய ஆளும் கட்சியின் தலைவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரிடம் தம்முடன் சேர்ந்து செயற்பட வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

தேர்தலில் வெற்றியீட்டிய பின் ஆளும் கட்சியினர் நேற்று ஞாயிற்று கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஆளும்கட்சி அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:

இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் பேசத் தயாராகவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியினருடன் பேசுவதற்கு ஆளுந்தரப்பு தயாராகவிருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைத்திரிபால சிறிசேன நாம் ஏற்கனவே கூறியதுபோல் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம். இதன்மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று கூறினார்.

இதேவேளை, பொதுத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், வட மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறுமென கேள்வியெழுப்பப்பட்ட போது பதிலளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியடைய இன்னும் சில காலம் எடுக்கும். அதற்குப் பின்னரே வட மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டிவரும் என்று தெரிவித்தார்.

முடிவில் அவர் தமக்கு வாக்களித்த மக்கள், தேர்தலை நடாத்திமுடிக்க உதவிய ஆணையாளர், காவல்துறை மா அதிபர், முப்படையினர், அரச அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கூத்து....உவை என்ன கொம்போ நேரடியா காயிதம் எழுதாம ஊயக அறிக்கை விடுறதுக்கு... :lol::lol:

ஈகலப்பை???... :lol: இருக்கும் போது நான் சூப்பராய் தட்டுவேன், ஏனோ ஈகலப்பையை கணனி ஏற்க மறுக்கிறது NHM Writer ????... :lol: பாவிப்பதால் க்ஷூப்பராய் தட்டுகிறேன் இதில் பல மொழிகள் இருபதால் எமது வேகத்துக்கு எழுத்துகள் வர மறுக்கி்றது எழுத்து பிழைகள் அதிகம் வருகிறது பிழை திருத்த தாவு தீர்ந்து விடுகிறது

என்னத்தையோ தட்டுங்கோ

அனால் கடுப்பில கன்னிப் பெட்டியை தட்டாமல் இருந்தால் சரி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.