Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறை பிரதிநிதித்துவம்

Featured Replies

அம்பாறை பிரதிநிதித்துவம்

இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் என கருதப்படும் அம்பாறை மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அங்கு இம்முறை 4 இலிருந்து 3 ஆகக் குறைந்துள்ளது.

இதேவேளை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 இலிருந்து 3 ஆக உயர்ந்துள்ளது.

ஃபேரியல் அஷ்ரப் தோல்வி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் வேட்பாளர்களாக 5 முஸ்லிம்கள், 4 சிங்களவர்கள் மற்றும் ஒரு தமிழர் என 10 பேர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிவில் பாதுகாப்பு குழு பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி சிறியானி விஜயவிக்கிரம, அமைச்சர் பீ.தயாரத்ன ஆகியோருடன் அமைச்சர் ஏ.எல். அதாவுல்லா விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரி்வாகியுள்ளார்.

இக்கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஃபேரியல் அஷ்ரப் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவுசாத் மஜீத் ஆகியோர் தெரிவாகவில்லை.

த.தே.கூட்டமைப்பில் பியசேன தெரிவு

20100410170156piyadasa203.jpg

பொடியப்பு பியசேன (த.தே.கூ)

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 முஸ்லிம்கள் 4 சிங்களவர்கள் ஒரு தமிழர் என ஐக்கிய தேசியக் கட்சியினால் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர்களில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் எச்.எம். ஹாரிஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஆகியோர் தெரிவாகியுள்னர்.

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் பொடியப்பு பியசேன இம் முறை தெரிவாகியுள்ள அதேவேளை அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன் டாக்டர் தோமஸ் வில்லியம் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/04/100410_amparapolls.shtml

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் கூட்டமைப்பில் வென்றவரின் பெயரைப் பார்த்தால் சிங்களவர் போல இருக்கிறது. ஆக அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழந்து விட்டதா?

அம்பாறையில் கூட்டமைப்பில் வென்றவரின் பெயரைப் பார்த்தால் சிங்களவர் போல இருக்கிறது. ஆக அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழந்து விட்டதா?

படத்திலை புத்தர்சிலையும் பிள்ளையார் சிலையும் இருக்கிறதை பாத்தால் குழறுபடியாத்தான் இருக்கு. தமிழ் தேசியம் எண்ட பெயரை மாத்த நேரம் வந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு,

அம்பாறை தமிழரை இழந்து கன வருஷமாயிட்டுது. நீங்கள் ஏன் பிரதிநிதித்துவத்தைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்??

அம்பாறையில் கூட்டமைப்பில் வென்றவரின் பெயரைப் பார்த்தால் சிங்களவர் போல இருக்கிறது. ஆக அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழந்து விட்டதா?

இவர்ர அப்பா சிங்களம், அம்மா தமிழ் இவர்கள் மிக நீண்ட நாட்களுக்கு முன்னரே அக்கரைப்பற்றில் குடியேறியவர்கள்.....இவர் அப்பகுதியில் தொண்டன் என அழைக்கப்படுபவர் அவ்வளவு சேவையை மக்களுக்கு செய்பவர்....அதேவேளை நேற்று இவரை இனிய பாரதி எனும் கருணா குழு உறுப்பினர் தாக்கியதில் இவர் பல்த்த காயங்களுக்கு உள்ளாயுள்ளார்.....

படத்திலை புத்தர்சிலையும் பிள்ளையார் சிலையும் இருக்கிறதை பாத்தால் குழறுபடியாத்தான் இருக்கு. தமிழ் தேசியம் எண்ட பெயரை மாத்த நேரம் வந்திட்டுது.

ஜேசுவும்,அல்லாவும் தமிழ்த்தேசியத்தின் தூண்களாக இருக்கும் பொழுது புத்தர் மட்டும் தமிழ்தேசியத்தில இருந்தால் தப்போ?

என்ன பியசேனாவுக்கு துரோகி பட்டம் குடுக்கப்போறீங்களோ... உங்களுக்கு அதுதானே பழக்கம். பியசேனாவின் மக்கள் தொண்டும் தமிழ் பற்றும் எளிமையும் உங்கள் ஒருத்தருக்கும் இல்லை என்று நினைக்கிறன். திருக்கோவில் பொத்துவில் மக்களை கேட்டால் தொண்டனைப்பற்றி சொல்வார்கள். ஒவ்வொரு செத்தவீடு கல்யாணம் இன்பம் துன்பம் எல்லாத்திலையும் ஒரு தொண்டனாக அந்த மக்களோடு நிற்பவன்தான் பியசேனா. இலங்கையின் வரலாற்றில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பணத்தை செலவழிக்காது படை பட்டாளம் இல்லாது மக்களிடம் பியசேனா செய்த பிரசாரம் உங்களுக்கு தெரியாது . அவன் பாணமை முதல் கல்முனை வரை கால்நடையாக ஒரு பிள்ளையார் சிலையையும் தூக்கி கொண்டு கடவுள்தான் தனக்கு துணை எண்டு சொல்லிக்கொண்டு மக்களிடம் போய் வாக்கு கேட்டான். அவன் தன்னோடை ஒரு படைபட்டாளத்தையும் கூட்டிக்கொண்டு போகவில்லை. தன்னந்தனியாக முச்சக்கர வண்டியில ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு மக்களிடம் தன்னுடைய கருத்துக்களை சொல்லி வந்தான். ( அந்த படம் என்னிடம் இருக்கிறது) அவனிடம் இருக்கும் தமிழ் இனப்பற்றும் அம்பாறையின் எல்லையிலிருந்து தமிழ் காவலனாக அவன் ஆற்றும் பணிகளுக்கு முன்னால் வெளிநாடுகளில இருந்து பியசேனாவை பற்றி வாய் கூசாமல் விமர்சனம் செய்கிற நீங்களும் ஒரு தமிழராக என கிழக்கு மாகாண மக்கள் காறித்துப்புவார்கள். இன்றைக்கும் சிங்கள பேரினவாதிகளுடன் கொஞ்சிக்குலாவும் இனியபாரதி போன்ற அடாவடிகளை எதிர்த்து நிற்கும் ஒரு தமிழ்பற்றாளன் பியசேனா என்பது உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது. தயவு செய்து கிழக்கு மாகாணத்தை புரிந்து கொண்டு எழுதுங்கள். கருத்துச்சொல்லுங்கள். அது தெரியாவிட்டால் கிழக்கு மாகாணம் பற்றி கதைக்காமல் வாயைப்பொத்திக்கொண்டு இருங்கோ. கிழக்கு மாகாணத்தைப்பற்றி தெரிஞ்ச தம்பி தராக்கி போன்றவர்கள் எழுதட்டும்.

பியசேனாவை இங்கு யாரும் விமர்சனம் செய்யவில்லையே? பிறகு ஏன் கிழக்கு மாகாணமக்கள் புலத்துமக்களுடன் கோபமடையபோகிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ ஊ என்டால் வெளிநாட்டாக்கள் இப்படித்தான் கத்துவினம். புலத்தின் யதார்த்தம் புரிந்தவர்கள். இப்படியேல்லாம் வாய்க்கு வந்த மாதிரி கதைக்கமாட்டினம்

கிழக்கு மாகணத்திற்கு வராதவர்கள்..கிழக்கை பற்றி கதைக்க அருகதையில்லை......

  • தொடங்கியவர்

கிழக்கு மாகணத்திற்கு வராதவர்கள்..கிழக்கை பற்றி கதைக்க அருகதையில்லை......

கருணாவை விட நல்லா பின்னுறீயள்...

கிழக்கு மாகணத்திற்கு வராதவர்கள்..கிழக்கை பற்றி கதைக்க அருகதையில்லை......

பிரதேசவாதியாக உங்களை அடையாளப்படுத்தி கொண்டு ஆளமனதில் இருப்பதை வெளிப்படுத்துகிறீர்கள் போல. கடைசியில் எப்போதும் பண்றி சேத்தை நோக்கித்தான் போகும் என்பதுக்கு வேறு நல்ல உதாரணம் தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயெ பொடியப்பு பியசேன என்பவர் யார் என்று எனக்குத் தெரியாது.

அவ்ர் பற்றிய தகவ்லகளுக்கு நன்றிகள்.

எத்தனையோ சிங்கள மக்கள் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கின்றார்கள்.

அதையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

ஜி.ஜி.பொன்னம்பலம் கூட மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு தமிழரை விற்றவர் என்றும் நீங்கள் தான் கூறினீர்கள்.

இவர் எப்படியோ தெரியாது.

பதவி கிடைத்தால் இவரும் வெளியேறி விடுவாரோ?

அது சரி மகிந்தவிற்கு தெரியுமோ இந்த விடயம்?

வாத்தியார்

..................

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தேர்தல் மாவட்டத்தில் அதிக பட்சம் 14500 வாக்குகள் தான்

டக்ளஸிற்குரியது.

மற்றவை எல்லாம் கள்ள வாக்குகளே.

வாத்தியார்

............

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பியசேனாவுக்கு துரோகி பட்டம் குடுக்கப்போறீங்களோ... உங்களுக்கு அதுதானே பழக்கம். பியசேனாவின் மக்கள் தொண்டும் தமிழ் பற்றும் எளிமையும் உங்கள் ஒருத்தருக்கும் இல்லை என்று நினைக்கிறன். திருக்கோவில் பொத்துவில் மக்களை கேட்டால் தொண்டனைப்பற்றி சொல்வார்கள். ஒவ்வொரு செத்தவீடு கல்யாணம் இன்பம் துன்பம் எல்லாத்திலையும் ஒரு தொண்டனாக அந்த மக்களோடு நிற்பவன்தான் பியசேனா. இலங்கையின் வரலாற்றில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பணத்தை செலவழிக்காது படை பட்டாளம் இல்லாது மக்களிடம் பியசேனா செய்த பிரசாரம் உங்களுக்கு தெரியாது . அவன் பாணமை முதல் கல்முனை வரை கால்நடையாக ஒரு பிள்ளையார் சிலையையும் தூக்கி கொண்டு கடவுள்தான் தனக்கு துணை எண்டு சொல்லிக்கொண்டு மக்களிடம் போய் வாக்கு கேட்டான். அவன் தன்னோடை ஒரு படைபட்டாளத்தையும் கூட்டிக்கொண்டு போகவில்லை. தன்னந்தனியாக முச்சக்கர வண்டியில ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு மக்களிடம் தன்னுடைய கருத்துக்களை சொல்லி வந்தான். ( அந்த படம் என்னிடம் இருக்கிறது) அவனிடம் இருக்கும் தமிழ் இனப்பற்றும் அம்பாறையின் எல்லையிலிருந்து தமிழ் காவலனாக அவன் ஆற்றும் பணிகளுக்கு முன்னால் வெளிநாடுகளில இருந்து பியசேனாவை பற்றி வாய் கூசாமல் விமர்சனம் செய்கிற நீங்களும் ஒரு தமிழராக என கிழக்கு மாகாண மக்கள் காறித்துப்புவார்கள். இன்றைக்கும் சிங்கள பேரினவாதிகளுடன் கொஞ்சிக்குலாவும் இனியபாரதி போன்ற அடாவடிகளை எதிர்த்து நிற்கும் ஒரு தமிழ்பற்றாளன் பியசேனா என்பது உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது. தயவு செய்து கிழக்கு மாகாணத்தை புரிந்து கொண்டு எழுதுங்கள். கருத்துச்சொல்லுங்கள். அது தெரியாவிட்டால் கிழக்கு மாகாணம் பற்றி கதைக்காமல் வாயைப்பொத்திக்கொண்டு இருங்கோ. கிழக்கு மாகாணத்தைப்பற்றி தெரிஞ்ச தம்பி தராக்கி போன்றவர்கள் எழுதட்டும்.

தகவலுக்கு நன்றி DAM.எமது மக்களுக்கு சேவை செய்பவர்கள் யாராகிலும் அவர்களை உள் வாங்க வேண்டும்.உதாரணத்துக்கு பிறையன் செனவிரட்ன.எம்மவர் பலர் பச்சோந்திகளாக வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் போது இவர்கள் எவ்வளவோ மேல்.மேலும் மக்கள் பியசேனாவுக்கு வாக்களித்து தேர்ந்து எடுத்துள்ளார்கள்.பிறகு ஏன் நாம் இங்கிருந்து வாய் கிழிய கத்துகிறோம்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.